நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)






நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்றுஅருந்தும் தண்ணீர்உண்ணும் உணவுதோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள்வைரஸ்கள்நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளதுஅதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:
  • நமது உடலில்இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity),
  • தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),
  • உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) 
என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளனஇந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி  (Innate Immunity)
இந்த எதிர்ப்பு சக்திபிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவதுமனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோஅதைப் போலவே மூக்குதொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றனஇந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.

அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனஇவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)
இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்திநம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகதாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும்இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)
மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போதுஇன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல்உதாரணமாகதாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறதுமஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?
நோய்க் கிருமிகள் நுழையும்போதுஅதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறதுஇந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள்திசுக்கள்நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றனநாளமில்லா சுரப்பிகள்மண்ணீரல்எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றனரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றனவெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும்சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றனஇவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்துநோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றனசில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல்எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றனகாய்ச்சல்சளிமூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறதுசளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண்கட்டிரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றனஇவைஅந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils)ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய் எப்போது ஏற்படுகிறது?உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றனஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.

நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு காரணங்கள் என்ன?
நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளனஅவற்றில் சில:
  • பலகீனமான உடலமைப்பு
  • மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்
  • அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது
  • மதுபோதைப்பொருள் பழக்கம்
  • புகைப்பழக்கம்
  • தூக்கமின்மை
  • சர்க்கரை நோய் 
இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடைகழிவு நீர் தேங்குதல்சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றனஅதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல்தொலைபேசி உபயோகித்தல்கதவின் கைப்பிடியை தொடுதல்வாய்மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளதுஇந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும்தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்றுஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால்தயிர்நெய்சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்முட்டையின் வெள்ளைக்கருமீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும்காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவைஇவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளதுகடலைசூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள்மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள்பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாதுஅவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறதுசர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபிடீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல்சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியதுநம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும்அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

நோய் திர்ப்பு மருந்துகளால் ற்படும் தீமை
  • ன்டி பயாடிக் எனப்படும் நோய் திர்ப்பு க்தி மருந்துகளால்உடலில் ள்ள நோய் திர்ப்பு க்தி பாதிக்கப்படுவது ம்மில் பலருக்கும் தெரியாதுஒரு செ‌‌ற்கையான நிக‌‌ழ்வினால்உடலில் இயற்கையாக ள்ள நோய் திர்ப்பு க்தி குன்றுகிறது.
  • மேலும்ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் லின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறதுஇதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்குறையும்.
  • வாய் துர்நாற்றம்தொண்டையில் அல்சர்நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோய் திர்ப்பு க்தி மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகிறது.
  • சிலருக்கு நோய் திர்ப்பு க்தி மருந்துகளை சாப்பிட்டதும்உடலால் அதனைத் தா‌‌ங்கிக் கொள்ள இயலாத போது உடல் நடுக்கம் ற்படுகிறது.
  • மேலும்உடலில் நோய் திர்ப்பு க்தி ன்பதே ல்லாமலேப் போய் விடும் ஆபத்தும் ‌‌ள்ளது


For More Info Contact:


No comments:

Post a Comment