இரத்த அழுத்தத்தைக் கண்டு பயப்பட தேவையில்லை!



"இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கட்டுப்படுத்துவது என்பது சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல என்பதைப் புரிந்து கொண்டு, நமது முறைப்படி எளிமையாகக் குணப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வோம்!"

இரத்தம் இருதயத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்குள்ளேயும் சென்று வரும். அப்பொழுது உறுப்புகளிலிருந்து சில பொருட்கள் இரத்தத்தில் கலக்கும். சில பொருட்கள் இரத்தத்திலிருந்து உறுப்புகளுக்குள் சேரும்.

இப்படிச் சென்று வரும் இரத்தத்தை நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜைகள் ஆகியவை சுத்தம் செய்கின்றன. எலும்பு மஜ்ஜைகள் இரத்தத்தைப் புதிதாக உருவாக்கும் பணியையும் செய்கின்றன. சரி, இதயம் என்னதான் செய்கிறது என்றால், உடலெங்கும் சுற்றிச் சுழன்று ஓய்ந்து போய் வரும் இரத்தத்திற்கு இரத்த அழுத்தத்தை (பிரஷரை) இதயம் அளிக்கிறது.

ஒரு மணி நேரம் அமைதியாக, உடல் அசைவின்றித் தியானம் செய்யும்பொழுது இரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பாருங்கள்! குறை இரத்த அழுத்தம்தான் (Low BP) இருக்கும். குறை இரத்த அழுத்தம் என்பது ஒரு நோய் என்றால் தியானம் செய்வதை நோய் என்று கூற முடியுமா? எனவே, குறைந்த இரத்த அழுத்தம் என்பது ஒரு நோயே கிடையாது.

தியானம் முடித்தவுடன் மெதுவாகக் கண்ணைத் திறந்து ஒரே ஒரு கையை மட்டும் லேசாக மேலும் கீழும் ஆட்டுங்கள். இப்பொழுது இரத்த அழுத்தம் அதிகரிக்குமா அல்லது குறையுமா? அதிகரிக்கத்தான் செய்யும்.

முதலில், இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஒரு செல் இரத்தத்திலுள்ள ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட்டால், அந்தச் செல் என்ற குழந்தை இதயம் என்ற அம்மாவிடம், “அம்மா நான் ஒரு பொருளைச் சாப்பிட்டு விட்டேன். எனக்கு ஒரு இரத்த அழுத்தம் கொடுங்கள்” என்று கேட்கும். இப்படி, எத்தனை குழந்தைகள் சாப்பிடுகின்றனவோ அத்தனை இரத்த அழுத்தம் அதிகமாகும்.

இப்பொழுது இரு கைகளையும் மேலும் கீழுமாக வேகமாக ஆட்டுங்கள். உங்கள் இரத்த அழுத்தம் ஏற்கெனவே இருந்ததை விட அதிகமாகிறதல்லவா? ஏன்? இரண்டு கைகளிலுள்ள அனைத்து செல்களும் இரத்தத்திலுள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் இதயம் அதிகமாக உணவு விநியோகம் செய்கிறது.

இப்பொழுது வேகமாக ஓடுங்கள். ஏற்கெனவே இருந்த இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். இதிலிருந்து என்ன புரிகிறதென்றால், இரத்த அழுத்தம் சீராக (நார்மலாக) இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரத்த அழுத்தம் என்றால் அது அதிகமாகவோ, குறைவாகவோ சீராகவோ மாறி மாறித்தான் இருக்கும். நம் உடலுக்கு எப்பொழுது எவ்வளவு இரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறு அது அதிகப்படுத்தி கொள்ளும், குறைத்துக் கொள்ளுமே தவிர, நாம் அதைக் கட்டுப்படுத்தக் கூடாது!

"சரி, ஓடினால் இரத்த அழுத்தம் உயரும், தியானம் செய்யும்பொழுது இரத்த அழுத்தம் குறையுமென்று எங்களுக்கும் தெரியும். நான் ஓடவேயில்லை. வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதும் எனக்கு இரத்த அழுத்தம் உயர்ந்துவிட்டது. இதற்குக் காரணமென்ன?" என்று கேட்பீர்கள். "நான் தியானம் செய்யவேயில்லை; வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தேன். எனக்குக் குறை இரத்த அழுத்தம் வந்து விட்டது. இதற்கு என்ன காரணமென்று கேட்பீர்கள்.

ஒரு செல்லுக்கு ஏதாவது ஒரு நோய் வந்தால் மொத்தம் நான்கு விஷயங்களைக் கேட்கும்.
  • இரத்த அழுத்தம்
  • சர்க்கரை
  • ஆக்ஸிஜன்
  • நோயைக் குணப்படுத்தத் தேவையான தாதுப் பொருட்களும் வைட்டமின்களும்.
இந்த நான்கு பொருட்கள் ஒரு செல்லுக்குள் நுழைந்தால் அந்தச் செல்லுக்கு எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும். ஆக, ஒரு செல்லுக்கு நோய் வந்தால் முதன் முதலில் அது கேட்பது இரத்த அழுத்தம்.

ஏனென்றால், இரத்த அழுத்தம் அதிகமானால்தான் பொருட்களைச் சாப்பிட முடியும். அப்பொழுதுதான் நோயைக் குணப்படுத்த முடியும். 10.000 செல்களுக்கு நோய் வந்துவிட்டால் 10,000 செல்களும் முதலில் இரத்த அழுத்த்தைக் கேட்கும். இரத்த அழுத்தம் அதிகமாகும். 10,000 செல்கள் தங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளும். இதற்கு அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ, நாலு மணி நேரமோ தேவைப்படலாம். இப்படி, உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்தால் அதைக் குணப்படுத்த ஆரம்பிக்கும் விநாடி முதல் குணப்படுத்தி முடிக்கும் விநாடி வரை இரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகத்தான் இருக்கும். யாருடைய உடலில் நாம் சொன்னது போல,
  • இரத்தத்திலுள்ள பொருட்களின் தரம்
  • இரத்தத்திலுள்ள பொருட்களின் அளவு
  • இரத்தத்தின் அளவு
  • மனம்
  • உடல் அறிவு
இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறதோ அவர்களுடைய இரத்த அழுத்தம் நோய் வரும்பொழுது அதிகமாகும். நோய்கள் குணமானதும் சீராகி விடும். ஒரு வேளை, மேலே சொன்ன ஐந்து விஷயங்களில் ஏதாவது ஒன்றோ இரண்டோ சரியாக இல்லையென்றால் நம் உடலில் நோயைக் குணப்படுத்த முடியாது.

உதாரணமாக, ஒரு நோயைக் குணப்படுத்தத் தேவையான ஒரு பொருளின் தரம் இரத்தத்தில் குறைந்திருந்தால் தரம் குறைந்த அந்தப் பொருளைக் கொண்டு நோயைக் குணப்படுத்த முடியாமல் அந்தச் செல் தவிக்கும்பொழுது அது இரத்த அழுத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தப் பொருளின் தரம் சரியாகி, செல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் காலம் வரும் வரைக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கும். ஆக, இரத்த அழுத்தம் அதிகரித்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்துவிட்டது; அதைக் குணப்படுத்த முடியாமல் உடல் தவிக்கிறது என்பதைத்தான். மாறாக, இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது; இதயத்தில் கோளாறு என்று தவறாக நினைக்கக் கூடாது.

அதனால் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் ஒருவருக்கு இதயத்தில் சிகிச்சை செய்தோ, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சை செய்தோ எந்தவிதப் பயனும் இல்லை. உடலிலுள்ள செல்களுக்கு உண்டான நோய்களைக் குணப்படுத்துவதற்கு மேலே கூறப்பட்ட காரணங்களைச் சரி செய்ய வேண்டும். இந்த ஐந்து காரணங்களையும் சரி செய்து உடல் செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்துவதன் மூலமாகத்தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். அதுவே சரியான தீர்வு! 

இதயமும் திசுக்களாலானதுதான். அந்தத் திசுக்களுக்குள்ளும் செல்கள் உள்ளன. அந்த இதயச் செல்கள் சாப்பிடக்கூடிய பொருள் இரத்தத்தில் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது இல்லாமல் போயிருந்தாலோ இதயச் செல்கள் பாதிக்கும். இதனால் ஏற்படுவதே குறை இரத்த அழுத்தம். 

எனவே, உயர் இரத்த அழுத்தம் என்பதும் குறை இரத்த அழுத்தம் என்பதும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே கிடையாது. அவை இரத்தத்திலுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். குறிப்பாக, மேலே சொல்லப்பட்ட ஐந்து விஷயங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். எனவே, உயர் இரத்த அழுத்தத்துக்கும், குறை இரத்த அழுத்தத்துக்கும் இதயத்தில் சிகிச்சை அளிக்கக் கூடாது! இரத்தத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும். 

இது தெரியாத மருத்துவரிடம் செல்லும்பொழுது அவர் நமது இரத்தழுத்தத்தை மட்டுமே சோதிக்கிறார். அளவுக்கு அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். குறைவாக இருந்தால் குறை இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இரத்த அழுத்தத்தின் அளவை மட்டுமே சோதிக்கிறார்களே தவிர, அது ஏன் அதிகமாகின்றது, ஏன் குறைகிறது என்ற விஷயத்தை யாரும் இதுவரை ஆராய்ச்சி செய்து பார்க்கவில்லை. மாறாக, மருத்துவர்கள் அதற்கு ஒரு மருந்து அல்லது மாத்திரை தருகிறார்கள். இந்த மருந்து, மாத்திரைகள் என்ன செய்கின்றன? நேராக, இதயத்தின் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகின்றன. உடம்பு சில காரணங்களுக்காக, நோயைக் குணப்படுத்துவதற்காக அல்லது இயக்க சக்திக்கு தேவையான உணவைச் சாப்பிடுவதற்காக அதிகப்படுத்தியிருக்கும் இரத்த அழுத்தத்தை நாமாகக் கட்டுப்படுத்துவது சரியா? சற்று யோசித்துப் பாருங்கள்! 

இப்படி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நமது உடலில் நோய்கள் அதிகமாகுமே தவிர, குறைவதற்கு வாய்ப்பேயில்லை. இப்படி யார் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அந்தக் காலகட்டத்தில் உடலில் வரும் எந்த நோயையும் உடல் குணப்படுத்தவே செய்யாது. 

ஒருவர் இரத்த அழுத்தத்துக்கு மூன்று மாதம், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மூன்று மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மருந்து மாத்திரை சாப்பிடாமலிருந்தால் என்னாகும்? இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். நாம் என்ன செய்கிறோம்? மூன்று மாதம் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு வந்ததால் இரத்த அழுத்தம் சீராக இருந்தது. நாம் நன்றாக இருந்தோம். ஒரு நாள் சாப்பிடவில்லையென்றதும், இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. நமக்கு நோய் வந்து விட்டது என்ற பயத்தில் கையில் எப்பொழுதுமே இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரைகள் வைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். முதலில் 10,000 செல்களுக்கு நோய் ஏற்பட்டபொழுது அதைக் குணப்படுத்துவதற்காக இரத்த அழுத்தம் அதிகரித்தது. நாம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்து மாத்திரைகள் சாப்பிட்டோமே தவிர, அந்தப் 10,000 செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்த எந்தவொரு வேலையும் செய்யவில்லை. 

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திய இந்த மூன்று மாதத்தில் தினமும் புதிதாக 10,000 அல்லது 20,000 செல்களுக்கு நோய் வந்திருக்குமே அதை யார் குணப்படுத்துவது? இப்படி, 10,000 செல்களுக்கு இருந்த நோய் மூன்று மாதத்தில் இப்பொழுது 20,000 செல்களுக்குப் பரவி குணப்படுத்தப்படாமல் இருக்கிறது. அதனால்தான் ஒரு நாள் இரத்த அழுத்த மாத்திரையை நிறுத்தினால் உடனே இரத்த அழுத்தம் கன்னா பின்னாவென்று அதிகமாகிறது. இதற்கு, உடலில் நோய்கள் அதிகரித்து விட்டன என்றுதான் பொருள். 20,000 செல்களுக்கும் வந்துள்ள நோயைக் குணப்படுத்துவதற்கு இதயம் முயற்சிக்கும்பொழுது, நமது இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகிறது. 

இப்பொழுது சொல்லுங்கள்! இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நோய்கள் அதிகரிக்குமா, குறையுமா? நமது சிகிச்சையைப் பொறுத்த வரையில், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால்தான் நோய். இரத்த அழுத்தத்தை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. 

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தத்தான் முடியும். குணப்படுத்த முடியாதென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக, இரத்த அழுத்தத்துக்காக மாத்திரை சாப்பிட்டால் அளவு அதிகமாகிக் கொண்டேதான் போகும். எப்பொழுது மாத்திரையின் டோஸ் அதிகமாகின்றதோ, உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறதென்று அர்த்தம். உங்கள் நோயைக் குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா, பெரிதுபடுத்துவதற்கு மருத்துவர் தேவையா? மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் நோய்கள் குணமாகின்றனவா, பெரிதாகின்றனவா? சற்றுச் சிந்தியுங்கள்! எப்பொழுது உங்கள் மருந்து மாத்திரையின் அளவு அதிகமாகின்றதோ வெற்றிகரமாக உங்களது நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். 

ஒரு மருத்துவரென்றால் முதலில் அதிக வீரியமுள்ள மாத்திரை தர வேண்டும். சில மாதங்களுக்குப் பிறகு அதன் அளவைக் குறைக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு "நோயைக் குணப்படுத்தி விட்டேன். நீங்கள் இனி எந்த மருந்து மாத்திரையும் சாப்பிட வேண்டாம்" என்று உறுதி கூறி மாத்திரையை நிறுத்த வேண்டும். இதற்குப் பெயர்தான் வைத்தியம். ஆனால், இரத்த அழுத்தம் என்ற நோய்க்கு முதலில் தரும் மாத்திரையின் அளவு போகப் போக அதிகமாகிறது. அதுவும் வாழ்க்கை முழுவதும் சாப்பிட வேண்டுமென்று கூறுகிறார்கள். அதைக் குணப்படுத்த முடியாதென்றும் கூறுகிறார்கள். ஒரு நோயைக் குணப்படுத்த முடியாதென்று சொல்வதற்கு மருத்துவர் தேவையா? அதற்கு ஏன் படிக்க வேண்டும்? 

இந்தச் சிகிச்சையில் நாம் முக்கியமாகச் சொல்கிற ஐந்து விஷயங்களைச் சரி செய்வது மூலமாக ஒரு நிமிடத்தில் நமது உடலில் 300 கோடி செல்கள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கின்றன. 

இவ்வாறு நமது சிகிச்சையின் மூலமாகச் சில விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்களுக்கு நான்கு மாதத்தில் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த முடியும். எந்தவொரு மருந்து மாத்திரையுமில்லாமல் இந்த ஐந்து விஷயங்களை ஒழுங்காக வைத்துக் கொண்டால் ஏற்கெனவே சாப்பிடும் இரத்த அழுத்த மாத்திரையின் அளவு ஒவ்வொரு மாதமும் படிப்படியாகக் குறைந்து நான்காவது மாதத்திலிருந்து நீங்கள் இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட வேண்டிய தேவையே இல்லாமல் போய்விடும். பிறகு, இரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. இரத்த அழுத்தம் அதிகமானாலும், குறைந்தாலும் நீங்கள் தெம்பாக இருப்பீர்கள். 

ஆக, உடலிலுள்ள அனைத்துச் செல்களையும் குணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த முடியுமே தவிர, மருந்து மாத்திரைகளாலும் இதயத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாலும் முடியாதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! 

இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கட்டுப்படுத்துவது என்பது சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல என்பதைப் புரிந்து கொண்டு, நமது முறைப்படி எளிமையாகக் குணப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வோம்!

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)

மேலும் படிக்க 

உவர்ப்பு (உப்பு) சிகிச்சை (உப்பு சாப்பிட்டே ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தலாம்)
http://reghahealthcare.blogspot.in/2014/12/blog-post_16.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 1 - நீரிழிவு ஒரு அறிமுகம்
http://reghahealthcare.blogspot.com/2010/12/diabetes.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 2 - கிளைகோஜன் மற்றும் அட்ரினல் சுரப்பியின் பங்கு
http://reghahealthcare.blogspot.com/2014/12/2.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 3 - High Sugar(ஹை சுகர்), Low Sugar (லோ சுகர்) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/3.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 4 - Sugar Free (சுகர் ப்ரீ) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/4.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 5 - அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம் 
http://reghahealthcare.blogspot.com/2014/12/5.html

இனிப்பு சிகிச்சை (இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்)
http://reghahealthcare.blogspot.in/2014/12/blog-post.html

For more info visit:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

No comments:

Post a Comment