சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை!




இந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/ALDygR


நீரிழிவு (சர்க்கரை) நோய் என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவில் உள்ள Carbohydrate வளர்சிதைமாற்றம் metabolism ஆன பிறகு glucose ஆக மாறுகிறது. அந்த glucose தான் நம் உடலுக்கு தேவைப்படும் current மாதிரி வேலை செய்கிறது. அந்த current மூலம் தான் நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் இயங்குகிறது. அந்த glucose தரமானதா என சோதனை செய்து அனுப்பும் வேலையை நம் கணையம் (Pancreas) பார்கிறது. சரியாக ஜீரணமான glucoseக்கு (HDG - High Density Glucose) இந்த கணையம் கொடுக்கும் சான்றிதல் தான் இன்சுலின். அந்த இன்சுலினிடம் வரும் glucose ஐ மட்டும் நமது உடலில் உள்ள செல்கள் ஏற்றுக் கொள்ளும். இது தான் நம் உடலில் நடக்கும் செயல்முறை.

இந்த கணையம் (Pancreas) சரியாக இன்சுலின் சுரக்கவில்லையென்றால் நம் உண்ட உணவில் உள்ள glucose உடலில் உள்ள செல்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் நம் இரத்தத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும். பிறகு நமது சிறுநீரகத்தால் கழிவாக வெளியேற்றப்படும். இந்த நிலையை தான் நீரிழிவு (சர்க்கரை) நோய் என ஆங்கில மருத்துவத்தால் அழைக்கப்படுகிறது. இதற்கு தான் நமது இரத்தத்தையும் சிறுநீரையும் மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள்.

ஒருவேளை ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு அவரது கணையம் (Pancreas) பாதிக்கப்படும் பட்சத்தில் அதனால் இன்சுலினை சுரக்க இயலாமல் போகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தை நாடலாம். ஒரு தற்காலிக தீர்வாக அமையும். ஏனென்றால்  நம் கணயத்தால் சுரக்க முடியாத இன்சுலினை எலிகளிடம் இருந்தோ அல்லது செயற்கையான முறையிலோ நம் உடலில் செலுத்தலாம் என வைத்துக்கொள்வோம்.

இன்று நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள அனைத்து நீரிழிவு  (சர்க்கரை) நோயாளிகளும் விபதுக்குள்ளானவர்களா என்று கேட்டால்? நிச்சயமாக பதில் இல்லை என்று தான் வரும். 


சர்க்கரை நோய்க்குப் பரிந்துரைக்கப்படும் பரிசோதனை சுகர் டெஸ்ட் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கும் பரிசோதனை. 

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை எங்கிருந்து வருகிறது?
நம் உடலில் ஜீரணமாகும் உணவுகளில் இருந்து கடைசியாகப் பிரிக்கப்படும் பல பொருட்களில் குளுக்கோசும் ஒன்று. இந்த குளுக்கோசைத்தான் இரத்தத்தில் நாம் பரிசோதிக்கிறோம். 

செரிமானம் முடிந்து உணவிலிருந்து பிரிக்கப்பட்ட குளுக்கோஸ் இரத்தத்திற்குத் தள்ளப்படும். அப்படித் தள்ளப்பட்ட குளுக்கோசை நம்முடைய உள்ளுறுப்புகளுக்காக அதன் செல்கள் உட்கொள்ளும். (செல்கள் குளுக்கோசை உட்கொள்ள வேண்டும் என்றால் குளுக்கோஸ் அளவிற்கு இணையாக கணையம் சுரக்கும் இன்சுலின் தேவை. இன்சுலினும், குளுக்கோசும் இணைந்துதான் செல்களுக்குள் புக முடியும். வெறும் குளுக்கோஸ் செல்களால் கிரகிக்கப்படாது. இது ஒரு புறம் இருக்கட்டும். நாம் குளுக்கோசைத் தொடரலாம்). 

உணவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட குளுக்கோஸ் இரத்தத்தில் இருந்து செல்களுக்குச் செல்கிறது. இதுதான் சர்க்கரைச் சுற்றியக்கம் என்று அழைக்கப்படுகிறது. செல்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகும் குளுக்கோஸ் மிஞ்சியிருக்கிறது என்றால் மீதமுள்ளவை கிளைக்கோஜன் என்ற செறிவு மிகுந்த குளுக்கோசாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும்.

உடலிற்கு அவசியமான தேவை ஏற்படும் போதும், உணவுகளில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் தடைபடும் போதும் இந்த கிளைக்கோஜன் மறுபடியும் குளுக்கோசாக மாற்றப்படுகிறது. அப்படி மாற்றப்படும் குளுக்கோசும் இரத்தத்தில்தான் கலக்கும். 

இரத்தம் என்பது அடிப்படையில் ஒரு ஊடகம். உள்ளுறுப்புகளுக்கு, அதன் செல்களுக்குத் தேவையான சத்துக்களைச் சுமந்து செல்வதும், செல்களில் இருக்கும் கழிவுகளைப் பெற்று அதை மறுபடியும் சுமந்து வருவதும்தான் இரத்தத்தின் வேலை. இரத்தம் ஒரு உயிர்ப்பான தொடர்பு சாதனம். 

இப்போது நாம் பரிசோதனைக்கு வருவோம். 

உணவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் குளுக்கோஸ் இரத்தத்திற்கு எப்போது வரும்?

  இங்கு குளுக்கோஸ் என்பது நாம் எளிமையாகப் புரிந்து கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட உதாரணம் தான். உணவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எல்லா சத்துக்களும் இதே விதத்தில் தான் இரத்தத்தில் கலக்கின்றன. இப்போது மறுபடியும் கேள்விக்கு வருவோம். 

உணவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்துக்கள் எப்போது இரத்தத்திற்கு வருகின்றன?

செரிமானம் முடிந்த பிறகு என்பதுதான் நமக்குத் தெரியுமே. 

செரிமானம் எப்போது முடியும்? 

இதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் பார்க்கலாம். 

ஒரு மனிதர் பசியெடுத்து உணவு உட்கொள்கிறார். அவருக்கு ஆங்கில மருத்துவம் சொல்வது மாதிரி ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்குள் சத்துக்கள் பிரித்தெடுக்கப்பட்டு இரத்தத்திற்கு வந்துவிடும். அப்புறம் இன்சுலின் சுரந்து செல்களுக்குள் சென்றுவிடும். 

இந்த பொது மாதிரியைக் கொண்டுதான் நம்முடைய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணக்கிட வேண்டுமென்றால் அவர் வெறும் வயிற்றில் பரிசோதிப்பது ஒரு முறை. அப்படி பரிசோதிக்கும் போது அவர் இரத்தத்தில் கூடுதல் சர்க்கரை இருக்காது என்ற பொது விதியின் படி நாம் பரிசோதிக்கிறோம். குறிப்பிட்ட அந்த நபர் உணவு உண்ணாமல் இருக்கும்போது உள்ளுறுப்புகளின் தேவையை ஒட்டி அவருடைய கிளைக்கோஜன் சேமிப்பில் இருந்து குளுக்கோஸ் உருவாகி இரத்தத்தில் கலக்க வாய்ப்புண்டு. அப்படி கலந்தால் நாம் நினைப்பது மாதிரி குளுக்கோசின் அளவு இல்லாமல் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

அதே போல, சர்க்கரை அளவு பரிசோதனையில் இன்னொரு முறை - சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்குள் பார்ப்பது. நாம் உணவு உண்ட பிறகு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்திற்குள் இரத்தத்தில் சர்க்கரை கலந்து விடும் என்ற பொது விதியின் கீழ்தான் இப்பரிசோதனை நடைபெறுகிறது.

செரிமானம் என்பது ஒவ்வொருவரின் பசியை, தேவையைப் பொறுத்தும், உண்ட உணவின் தன்மையைப் பொறுத்தும், அவருடைய உள்ளுறுப்புகளின் தன்மையைப் பொறுத்தும் மாறுபடும்தானே? 

எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒரு நேரத்தைக் கணக்கிட்டு நாமாக பரிசோதித்தால் அதற்கு உடல் என்ன செய்யும்?

இப்படி பிரித்தெடுக்கப்பட்ட குளுக்கோஸ் இரத்ததிற்கு எந்த நேரத்தில் வந்து சேரும் என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். அதே போல, இரத்தத்தில் இருந்து செல்களுக்குள் போகாமல் அங்கேயே தங்கியிருக்கவும் வாய்ப்புண்டு. அல்லது மிக விரைவாக, நாம் எதிர்பார்த்த நேரத்திற்கும் முன்னதாகவே செல்களுக்குள் சென்று விடவும் வாய்ப்புண்டு. 

நம்முடைய கடிகார நேரத்திற்குத் தான் இரத்தத்தில் குளுக்கோஸ் கலக்க வேண்டும் என்றும், செல்களுக்குள் அவை செல்ல வேண்டும் என்றும் எந்தக் கட்டாயமும் இல்லை. நாம் குறித்த நேரத்தில் இவ்வளவு அளவுதான் இரத்தத்தில் இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. 

இரத்தத்தில் எந்தப் பொருளும் நிரந்தரமாகத் தங்கி விடுவதில்லை. அது செல்களுக்குள் போவதும் அல்லது கழிவாக நீக்கப்படுவதும் எந்த நிமிடமும் நிகழலாம். ஏற்கனவே சேமிக்கப்பட்ட சத்துப் பொருட்கள் மறுபடியும் இரத்தத்திற்கு வரவும் வாய்ப்புண்டு. நாம் நிச்சயிக்கிற நேரத்தில், இந்த அளவுகள் தான் இருக்கும் என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. 

அறிவியல் பூர்வமாகவே இரத்தம் என்பது மாறுதலுக்கு உட்பட்டதுதான். எனவே தான் இந்தப் பரிசோதனை முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு எந்த விதமான சிகிச்சைக்கும் சென்று விடக்கூடாது. 

பொதுவாக இரத்தப் பரிசோதனைகளுக்குச் செல்வதற்கு சில நாட்கள் முன்பாக நோயாளிக்குப் பரிந்துரைக்கப்பட்ட எல்லா இரசாயன மருந்துகளும் நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால் மருந்துகளின் விளைவாக இரத்தத்திலுள்ள பொருட்களின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். 

உதாரணமாக, சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டுமானால் சர்க்கரையை இரத்தத்தில் குறைக்கும் தன்மையுள்ள இரசாயன மருந்துகளை இரண்டு நாட்களுக்கு முன்பே நிறுத்திவிட வேண்டும். இல்லையென்றால் மருந்துகளோடு வினைபுரிந்து சர்க்கரை அளவு குறைத்துக் காட்டப்படும். 

இப்படி எந்தப் பரிசோதனை செய்தாலும் இரசாயன மருந்துகளில் இருந்து வினைமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக அவற்றை நிறுத்துவது முன்பெல்லாம் கட்டாய நடைமுறையில் இருந்தது. இப்போது அவை பின்பற்றப் படுவதில்லை. ஆய்வுக்கூட முடிவுகளில் ஏற்படும் குழப்பங்களுக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
நன்றி - அ. உமர் பாருக் 

சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய்

சர்க்கரை நோய் பல பேருக்கு இருக்கிறது என்று முத்தரை குத்தப்பட்டுள்ளது. சிலருக்கு இல்லை. இப்பொழுது உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை. எப்படியும், எங்கேயாவது 'இலவசச் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்' ஒன்றைப் பார்க்க வாய்ப்புள்ளது. நீங்கள் அதில் சோதனை செய்து பார்க்கும் நாள் முதல் நீங்கள் சர்க்கரை நோயாளியாக்கப்படுவீர்கள். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களோ, இல்லாதவர்களோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை முழுவதுமாகப் படியுங்கள்!

நாம் சாப்பிடுகிற உணவில் மாவுச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்து, உயிர்ச் சத்து, தாதுப் பொருட்கள் போன்றவை உள்ளன. இவற்றுள் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) சர்க்கரையாக மாறுகிறது.

நம் உடம்பிலுள்ள செல்கள் இரத்தத்திலுள்ள சத்துப் பொருட்களைத் தன் தேவைக்காக எடுத்துக் கொண்டு உடலைச் செயல்பட வைக்கின்றன. ஒரு செல் கால்சியம், இரும்பு, சோடியம், மக்னீசியம் போன்ற எல்லாப் பொருட்களையும் சுலபமாக உள்ளே எடுத்துக் கொள்ளும். ஆனால், சர்க்கரையை மட்டும் நேரடியாக எடுத்துக் கொள்ளாது.

செல்கள் சாக்கரையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மட்டும் அது நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா என்று ஆராய்ச்சி செய்யும்.

உணவிலுள்ள மாவுச் சத்து வாயிலே, வயிற்றிலே, சிறுகுடலிலே ஒழுங்காக ஜீரணம் ஆனால் கிடைப்பது நல்ல சர்க்கரை. ஒழுங்காக ஜீரணமாகாமல் அரைகுறையாக ஜீரணமாகி வரும் சர்க்கரை கெட்ட சர்க்கரை. நல்ல சர்க்கரையென்பது வீரியம் அதிகமுள்ள சர்க்கரை. கெட்ட சர்க்கரையென்பது வீரியம் குறைந்த சர்க்கரையென்றும் எடுத்துக் கொள்ளலாம்.

செல் சர்க்கரையிடம் நீ நல்லவனா, கெட்டவனா என்று கேட்கும். சர்க்கரையோ, நாயகன் படத்தில் வரும் கமல்ஹாசனைப் போல, "தெரியலையேப்பா!" என்று கூறி விடும். செல்களுக்கு நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை எனப் பிரித்துப் பார்க்கும் அறிவு கிடையாது. எனவே, செல்கள் சர்க்கரையிடம், "நமது உடலில் கணையம் (Pancreas) என்ற உறுப்பு இருக்கிறது. அவரிடம் செல்! நீ நல்ல சர்க்கரையாக இருந்தால் அவர் உனக்கு இன்சுலின் (கணைய நீர்) கொடுப்பார்" என்று கூறி விடும். இரத்தத்திலுள்ள சர்க்கரை நேரடியாக எந்தச் செல்லுக்குள்ளேயும் போக முடியாது.

கணையம் இரத்தத்திலுள்ள ஒவ்வொரு சர்க்கரையாக எடுத்து ஆராய்ச்சி செய்யும். நல்ல சர்க்கரையாக இருந்தால் அதற்கு இன்சுலின் என்கிற முத்திரை கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. ஆக, கணையம் சர்க்கரையின் தரத்தைச் சோதனை செய்யும் ஒரு தரக் கட்டுப்பாட்டு அலுவலர். எந்தச் சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகிறதோ அந்தச் சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் என்கிற முத்திரை கிடைக்கிறது. செல்கள் இரத்தத்திலிருக்கும் சர்க்கரையை எடுத்துப் பார்க்கும். அந்தச் சர்க்கரையில் இன்சுலின் என்கிற முத்திரை இருந்தால் மட்டுமே நல்ல சர்க்கரையென்று முடிவு செய்து உள்ளே எடுக்கும். இதனால், தரம் குறைந்த சர்க்கரை செல்லுக்குள் செல்லமுடியாது. இப்படி, உடலிலுள்ள செல்கள் அனைத்தையும் நோயிலிருந்து காப்பாற்ற, ஆரோக்கியமாக வைத்திருக்க, கணையம் பேருதவியாக இருக்கிறது.

“என்ன இது புதுக் குழப்பமாக இருக்கிறது! நான் பத்து வருடமாகச் சர்க்கரை நோயாளியாக இருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவரிடம் சென்றிருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். இது வரை யாரும் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையென்று சொல்லவே இல்லையே? நீங்கள் என்ன புதிதாக உளறுகிறீர்கள்" என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

உண்மையில், இதுவரை நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் 10 ஆண்டுகளாக உங்கள் நோய் குணமாகாமல் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்ற வேறுபாட்டை எப்பொழுது தெரிந்து கொள்கிறீர்களோ, அந்த நிமிடம் முதல் உங்கள் சர்க்கரை நோய் குணப்படுத்தப்படும்.
சர்க்கரையில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அளவு மாறாமல் வேவ்வேறு இடங்களுக்கு மாறி அமைவதால் சர்க்கரையின் வகை மாறுகிறது. லேக்டோஸ், மேனோஸ், ஒற்றைச் சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை - இப்படிச் சர்க்கரையில் பல வகைகள் உள்ளன.

சர்க்கரை ஒரு ஐசோமர். உயிர்ம வேதியியல் (Bio – Chemistry) படித்தவர்களுக்கு நன்றாகப் புரியும் என நினைக்கிறேன். ஒரே பொருளில் நிறைய வகைகள் (Type) இருந்தால் அதை ஐசோமர் என அழைக்கிறோம்.

லேக்டோஸ், மேனோஸ், ஒற்றைச் சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை - இப்படிச் சர்க்கரையில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு கட்டமைப்பு (STRUCTURE) உள்ளது. 

இவற்றுள், ஒரு சில வகைச் சர்க்கரைகள் மட்டுமே மனித உடம்பிலுள்ள செல்களுக்குப் பொருந்தும். ஒரு சில சர்க்கரைகள் பொருந்தாது. எந்தெந்த வகைச் சர்க்கரை மனித உடம்புக்குப் பொருந்துமோ அவை அனைத்தும் நல்ல சர்க்கரைகள்.
     


எவையெல்லாம் பொருந்தாதோ அவை அனைத்தும் கெட்ட சர்க்கரைகள். கணையம், எந்த வகைச் சர்க்கரை மனித உடம்புக்கு ஒத்து வருமோ, அதற்கு மட்டுமே இன்சுலின் கொடுக்கும். மனித உடலுக்கு நோயை உண்டு பண்ணுகிற, ஒத்து வராத, தேவைப்படாத சர்க்கரைகளுக்கு இன்சுலின் கொடுக்காது.

நாம் மருத்துவமனைகளில் சென்று சர்க்கரைச் சோதனை செய்கிறோம். அதில் 100 இருக்கிறது, 200 இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த அளவில் எந்தெந்த சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று யாரும் அளந்தது கிடையாது. இப்படி, மொத்தமாகச் சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. நாம் பார்க்கும் சர்க்கரையின் அளவில் எந்தெந்த வகைச் சர்க்கரை எந்த அளவு இருக்கின்றது எனப் பார்ப்பதற்குத் தனியாக ஒரு கருவி உள்ளது. அதன் பெயர் IR STUDY மற்றும் UV Spectrum Study. இந்த வசதி உள்ள கருவிகளில் மட்டுமே இரத்தத்திலுள்ள சர்க்கரை வகைகளைக் கண்டறிய முடியும். இந்தக் கருவிகள் எந்த மருத்துவமனையிலும் கிடையாது. பெரிய பெரிய ஆராய்ச்சிக்கூடங்களில் மட்டுமே உள்ளன. எனவே, சர்க்கரையைப் பொதுவாகச் சோதனை செய்து பார்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை. எந்தப் பயனும் கிடையாது.

மருத்துவமனையில் நீரிழிவுச் சோதனை முடிந்ததும் அறிக்கையில் (ரிசல்ட்) 'இரத்தத்தின் சர்க்கரை அளவு' (Blood Glucose Level) என்று எழுதிக் கொடுக்கிறார்கள். உண்மையில், இரத்தத்தின் சர்க்கரை அளவை யாரும் பார்ப்பது கிடையாது. இப்பொழுது பார்க்கப்படும் அளவு Plasma Glucose Level ஆகும். Plasma Glucose Level என்பது வேறு. இரத்தத்தின் சர்க்கரை அளவு என்பது வேறு.

உண்மையில் சர்க்கரை நோயென்று நமது காதில் பூ சுற்றுகிறார்களே அது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினையே கிடையாது. நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உள்ள சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகாததால் கணையம் இன்சுலின் கொடுக்க மறுக்கிறதே தவிர, கணையம் தவறு செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

எப்பொழுது உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அப்போது நாம் உணவை ஒழுங்காக ஜீரணம் பண்ணவில்லை என்றுதான் அர்த்தமே தவிர, கணையத்தில் குறை கிடையாது. இதற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. கணையம் இன்சுலின் வைத்துக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்குத் தராமல் வேறு யாருக்குக் கொடுக்கும்? 

முன்பே பார்த்தபடி, நாம் சாப்பிடுவது நல்ல சர்க்கரையாக இருந்தால் மட்டுமே கணையம் இன்சுலினைக் கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்பவை என்ன என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள மேற்கொண்டு சில எடுத்துக்காட்டுகளையும் விளக்கங்களையும் பார்க்கலாம்.


நாம் குழந்தையாக இருக்கும்பொழுது நாம் சாப்பிடுகிற உணவு நல்லபடியாக ஜீரணம் ஆகிறது. ஏனென்றால், குழந்தைக்கு டென்சன், கோபம், பயம் ஏதும் கிடையாது. அதனால், நல்லபடியாக ஜீரணமாகி நல்ல சர்க்கரை மட்டுமே இரத்தத்தில் கலக்கிறது. உதாரணமாக, ஒரு குழந்தை சாப்பிடுகிறது. அதில் 500 சர்க்கரை இரத்தத்தில் கலக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை நல்லபடியாக ஜீரணம் செய்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, ஒழுங்காக ஜீரணமான 500 சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது. இந்த 500 நல்ல சர்க்கரையும் செல்லுக்குள் செல்வதற்கு முயற்சி செய்யும். ஆனால், என்னதான் நல்ல சர்க்கரையாக இருந்தாலும், இன்சுலின் இல்லையெனும் காரணத்தால் செல்லுக்குள் நுழைய முடியாது. இந்த 500 சர்க்கரையும் கணையத்திற்குச் செல்லும். கணையம் இந்த 500 சர்க்கரைகளையும் சோதித்துப் பார்த்து நல்ல சர்க்கரைகளாக இருப்பதால் 500 இன்சுலினைச் சுரக்கும். ஒரு சர்க்கரைக்கு ஒரு இன்சுலின்தான் கிடைக்கும். அதுவும் நல்ல சர்க்கரையாக இருந்தால் மட்டுமே. இந்த 500 சர்க்கரைகளும் நல்ல சர்க்கரைகளாக இருப்பதால், அனைத்திற்கும் இன்சுலின் கிடைத்து விட்டது. இப்பொழுது குழந்தையின் இரத்தத்தில் 500 நல்ல சர்க்கரைகள், இன்சுலின் என்ற சாவியுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

குழந்தையின் உடம்புக்கு 300 சர்க்கரை தேவைப்படுகிறது என வைத்துக் கொள்வோம். செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைகளைத் தனது வேலைக்காக, தேவைக்காக, நோயைக் குணப்படுத்துவதற்காக எடுத்துக் கொள்கின்றன. இப்பொழுது 300 சர்க்கரைகள் செல்களுக்குள் புகுந்து விட்டன. மீதமுள்ள 200 சர்க்கரைகள் இரத்தத்தில் மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வரும். செல்கள் தேவைக்கு அதிகமான பொருட்களை ஒருபொழுதும் உள்ளே எடுத்துக் கொள்ளாது. "இரத்தத்தில் 500 சர்க்கரை இருப்பதால் நாம் சேர்த்து வைத்துக் கொள்வோம்; பிறகு தேவைப்படுமென்று செல்கள் எடுக்காது. இப்பொழுது, தேவையில்லாத ஆனால் நல்ல தரம் வாய்ந்த 200 சர்க்கரைகள் இரத்தத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றன. இந்தச் சர்க்கரைகள் என்னவாகும்? நம் வீட்டிற்கு 500 ரூபாய் சம்பாதித்து எடுத்துப் போகிறோம். குடும்பச் செலவுக்கு 300 ரூபாய் தேவைப்படுகிறது. மீதமுள்ள 200 ரூபாயை அளவுக்கு அதிகமாகச் சம்பாதித்து விட்டோமென்று கிழித்துக் குப்பையில் போடுவோமா? என்ன செய்வோம்? பத்து, பத்து ரூபாயாக இருந்தால் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களாக மாற்றி பீரோவில் சேர்த்து வைப்போம். அதே போல், குழந்தை சம்பாதித்தது 500 சர்க்கரை, செலவு 300 சர்க்கரை. மீதமுள்ள 200 சர்க்கரையை, அதாவது குளுக்கோசை ஒன்று சேர்த்து ஒரு பொருளாக மாற்றும் நமது கல்லீரல். அதன் பெயர் கிளைகோஜன்.


கிளைகோஜன்

குளுக்கோஸ் என்பது ஒற்றைச் சர்க்கரை. கிளைகோஜன் என்பது நிறையச் சர்க்கரைகளை ஒன்று சேர்த்தால் கிடைக்கும் ஒரு பொருள். நாம் எப்படி 10 ரூபாய் நோட்டை 100 ரூபாயாக மாற்றிச் சேமித்து வைக்கிறோமோ, அதே போல் தனித் தனிச் சர்க்கரைகளாக இருப்பவற்றை ஒன்று சேர்த்து கிளைகோஜன்னாக அதாவது செறிவூட்டப்பட்ட சர்க்கரையாக மாற்றிக் கல்லீரல், தசை நார்கள், மூளை ஆகிய இடங்களில் உடம்பு சேமித்து வைக்கிறது. இப்பொழுது அந்தக் குழந்தைக்குச் சர்க்கரை நோய் கிடையாது.

குழந்தையின் ஜீரணத்தை முதன் முதலில் கெடுப்பது அதன் அம்மாதான்

இந்தக் குழந்தையின் ஜீரணத்தை முதன் முதலில் கெடுப்பது அதன் அம்மாதான். மனதிற்குப் பிடித்தவாறு விளையாடிக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையை முதன் முதலில் நாம் பள்ளிக்கு அனுப்புகிறோம். "8 மணிக்கு ஸ்கூல் வேன் வந்து விடும்! உடனே தயாராகு!" என்று தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி, விருப்பமில்லாமல் குளிப்பாட்டி, விருப்பமில்லாமல் பசியில்லாமல் சாப்பாடு ஊட்டுகிறோம். தாய்மார்கள் சிலர் குழந்தை சாப்பிடவில்லையென்றால் அடிக்கிறார்கள். ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்து நடுநடுவே ஊற்றி ஊற்றி விழுங்க வைக்கிறார்கள்.

இது போலக் குழந்தைக்கு விருப்பமில்லாதபோது, பசியில்லாதபோது உணவு கொடுத்தால் அந்த உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவது கிடையாது. இப்பொழுது அந்தக் குழந்தைக்கு 300 சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகி 200 சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகவில்லை என்று வைத்துக் கொள்வோம். என்னாகும்? இரத்தத்தில் 300 நல்ல சர்க்கரையும், 200 கெட்ட சர்க்கரையும் உள்ளன. குழந்தையின் கணையம் 300 இன்சுலின் மட்டுமே சுரக்கும். கெட்ட சர்க்கரைகளுக்கு இன்சுலின் சுரக்காது. எனவே, கணையம் குறைவாக இன்சுலின் சுரப்பது கணையத்தின் தவறு கிடையாது. ஜீரணத்தின் குறைபாடே என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்!

இந்த இன்சுலின் பெற்றுக் கொண்ட 300 நல்ல சர்க்கரைகள் செல்லுக்குள் செல்லும். ஆனால், இன்சுலின் கிடைக்காத 200 கெட்ட சர்க்கரைகள் இரத்தத்தில் சுற்றிச் சுற்றி வரும். இவை செல்லுக்குள்ளும் நுழைய முடியாது. கிளைகோஜன்னாகவும் மாற முடியாது. எந்தக் கல்லீரல் அளவுக்கதிகமான நல்ல சர்க்கரைகளை பீரோவில் சேமிப்பது போல் ஆங்காங்கே கொண்டு சேர்த்ததோ, அதே கல்லீரல் இன்சுலின் இல்லாத சர்க்கரைகளை, 'இவை கெட்ட சர்க்கரைகள்; இவற்றால் நம் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை' என்று முடிவெடுத்து அவற்றைச் சிறுநீரகத்திற்கு அனுப்பி வைக்கும். சிறுநீரகம் இந்தக் கெட்ட சர்க்கரைகளை சிறுநீர்ப் பைக்கு அனுப்பி வைக்கும். கெட்ட சர்க்கரை சிறுநீராக வெளியேறும்.

சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு அதிகமாகச் சிறுநீர் செல்வதற்கும், அந்தச் சிறுநீரில் சர்க்கரை இருப்பதற்கும் காரணம் கணையமோ, கல்லீரலோ, சிறுநீரகமோ, சிறுநீர்ப் பையோ கிடையாது. ஒரு கம்பெனியில் தயாரிக்கப்படும் தரம் குறைந்த பொருட்களை எப்படி வெளியே வீசுகிறார்களோ அதே போல் உணவு ஒழுங்காக ஜீரணமாகாததால் கிடைத்த கெட்ட சர்க்கரையை நம் உடம்பு வேண்டாமென்று வெளியே கழிவாக அனுப்புகிறது.

இந்தச் சிறுநீரைச் சோதித்து அதில் இருக்கும் சர்க்கரையின் அளவை வைத்து உங்களைச் சர்க்கரை நோயாளி என்று கூறுகிறார்கள். இது ஒரு தவறான கருத்தாகும். சிறுநீராகச் செல்லும் சர்க்கரை அனைத்தும் தேவையில்லாத சர்க்கரையென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

நம் உடலுக்கு அறிவுள்ளது என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். சிறுநீரகமும், சிறுநீர்ப்பையும் அறிவு கெட்டத்தனமாக நல்ல சர்க்கரையை என்றுமே வெளியேற்றுவதில்லை. கிளைகோஜன்னாக மாறும் அனைத்தும் நல்ல சர்க்கரைகள். சிறுநீராக வெளியேறும் அனைத்தும் கெட்ட சர்க்கரைகள். எனவே, சிறுநீரில் சர்க்கரை வருகிறதென்று தயவு செய்து பயப்படாதீர்கள்! அது சாக்கடைக்குச் செல்ல வேண்டிய சர்க்கரை.

ஆனால், இப்பொழுதும் இந்தக் குழந்தைக்குச் சர்க்கரை நோய் கிடையாது. இந்தக் குழந்தை படித்துப் பெரிய ஆளாகி ஒரு நிறுவனத்திற்குத் தலைவராகிறது என்று வைத்துக் கொள்வோம். முதலாளிகள் என்றுமே காலையில் ஒழுங்காகச் சாப்பிட மாட்டார்கள். மதியம் பசியெடுக்கும்பொழுது சாப்பிடாமல் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இரவு 11 மணி, 12 மணி போல வீட்டுக்கு வந்து தேவையில்லாமல் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவார்கள். இப்படித் தவறான உணவுப் பழக்க வழக்கம் ஏற்படும்பொழுது ஜீரணம் ஒழுங்காக ஆகாமல் கெட்ட சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

உதாரணமாக, ஒருவருக்கு 300 கெட்ட சர்க்கரையும், 200 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறதென்று வைத்துக் கொள்வோம். 200 நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் கிடைத்தவுடன், செல்லுக்குள் புகுந்து விடும். 300 சர்க்கரை இன்சுலின் கிடைக்காததால் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். ஆனால், அவருக்கு இன்று உடலுக்கு 300 சர்க்கரை தேவைப்படுகிறது. 200 மட்டுமே உள்ளே சென்றுள்ளது. 100 பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உடல் என்ன செய்யும்?



அட்ரினல் சுரப்பி

நம் வீட்டில் 500 ரூபாய் சம்பாதித்து வருகிறோம். அதில் 300 ரூபாய் கள்ள நோட்டு, 200 ரூபாய் நல்ல நோட்டு. 200 ரூபாயைக் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துவோம். 300 ரூபாயை, அவை கள்ள நோட்டுகள் எனத் தெரிந்தவுடன் கிழித்துக் குப்பையில் போடுவோம். அதே போல், எப்பொழுது கள்ளச் சர்க்கரை உடலுக்குள் செல்கிறதோ, உடல் சிறுநீராக வெளியில் அனுப்புகிறது. ஆனால், உங்கள் குடும்பத்துக்கு 300 ரூபாய் பணம் தேவைப்படுகிறது. 200 ரூபாய் மட்டுமே நல்ல நோட்டாக இருந்ததால் பயன்படுத்த முடிந்தது. இப்பொழுது 100 ரூபாய் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது.

இப்பொழுது என்ன செய்வீர்கள்?

ஏற்கெனவே சம்பாதித்து வைத்த 100 ரூபாயை பீரோவிலிருந்து எடுத்து வந்து செலவு செய்வீர்கள் இல்லையா?

அதே போல், எப்பொழுது செல்களுக்கு நல்ல சர்க்கரை இரத்தத்தில் இல்லையோ இரு புருவங்களுக்கு இடையிலிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி ACTH என்ற நீரைச் சுரக்க ஆரம்பிக்கும். இந்த நீர் சிறுநீரகத்துக்கு மேலே அட்ரினல் சுரப்பியை (தொப்பி சுரப்பி) வேலை செய்ய வைக்கும். இந்த அட்ரினல் சுரப்பி ஏற்கெனவே கிளைகோஜன்னாக மாற்றிக் கல்லீரல், தசை நார்கள், மூளை ஆகிய பகுதிகளில் சேமிக்கப்பட்ட சர்க்கரைகளை எடுத்து வந்து செலவு செய்யும். இப்படிச் சிறு வயது முதல் நாம் நிறையச் சர்க்கரையைச் சம்பாதிக்கும்பொழுது பீரோவில் சேர்த்து வைக்கிறோம். சர்க்கரைப் பற்றாக்குறை ஏற்படும்போது பீரோவிலிருந்து எடுத்துச் செலவு செய்கிறோம்.

எனவே, ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்!
லோ சுகரால் உலகத்தில் யாருக்கும் மயக்கம் வராது. சர்க்கரையின் அளவு குறைந்த உடனே சேமித்து வைத்த சர்க்கரையை எடுத்துச் செலவு செய்யும் இப்படியோர் அமைப்பு நம் உடம்பில் இருக்கும் பொழுது லோ சுகரால் மயக்கம் வரும் என்பது ஒரு தவறான கருத்தாகும். உடலில் கிளைகோஜன் இருக்கும் வரை யாருக்கும் மயக்கம் வரவே வராது!

ஒரு காலக்கட்டத்தில் நம் உடம்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளைகோஜனும் தீர்ந்து விடும். அப்பொழுது, பெட்ரோல் தீர்ந்த கார் போல, மின்சாரம் இழந்த காற்றாடி போல உடனே நம் இயக்கம் நின்று போகும். ஆக, சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு மயக்கம் வருவதற்குக் காரணம் சர்க்கரை அதிகமாக இருப்பதோ, குறைவாக இருப்பதோ கிடையவே கிடையாது. சர்க்கரைப் பற்றாக்குறை ஏற்படும்பொழுது, சேமித்து வைக்கப்பட்ட கிளைக்கோஜனும் இல்லாவிட்டால் மட்டுமே மனிதனுக்கு மயக்கம் வரும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் மயக்கம் போடுவது கணையத்தின் குறைபாடும் கிடையாது. சர்க்கரை நோயும் கிடையாது. உடலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரை தீர்ந்து விட்டதென்று மட்டுமே அதற்கு அர்த்தம்.


ஹை சுகர் (High sugar), லோ சுகர் (Low sugar) இரண்டு பிரச்சினைகளும் ஒன்றுதான். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. உதாரணமாக, ஒருவர் சாப்பிடும் உணவில் 500 சர்க்கரைகள் இருக்கின்றன. இந்த ஐந்நூற்றில் 100 நல்ல சர்க்கரை, 400 கெட்டசர்க்கரையென வைத்துக் கொள்வோம். இவை இரத்தத்தில் கலக்கின்றன. அவர் உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கிளைகோஜென் (Glycogen) தீர்ந்து விட்டதென வைத்துக் கொள்வோம். 

இப்பொழுது என்னாகும்? 

100 நல்ல சர்க்கரை இன்சுலின் வாங்கிக்கொண்டு செல்லுக்குள்ளே புகும். 400 கெட்ட சர்க்கரை இன்சுலின் கிடைக்காததால் சிறுநீர் வழியாக வெளியேறும். அட்ரினல் சுரப்பி, கிளைகோஜனைத் தேடும். ஆனால், கிளைகோஜன் இல்லையென்பதால் இரத்தத்தில் தேவையான அளவு சர்க்கரை விநியோகம் (குளுக்கோஸ் சப்ளை) செய்ய முடியாது. எனவே, செல்களுக்குள் சர்க்கரை போகாததால் செல்கள் மயக்கமடையும். நோயாளி மயக்கமடைந்து விடுவார்.

இந்த நேரத்தில் அவர் இரத்தத்தில் சர்க்கரை அளவைச் சோதனை செய்தால் குறைவாக இருக்கும். மருத்துவர்கள் உடனே "லோ சுகரால் மயக்கம் வந்து விட்டது" என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவருக்கு மயக்கம் வரவில்லை. உடலில் கிளைகோஜன் இல்லையென்பதால்தான் மயக்கம் வந்தது.

உதாரணம் இரண்டு, இரத்தத்திலுள்ள 100 நல்ல சர்க்கரை செல்களுக்குள் போய்விட்டது; ஆனால், 400 கெட்ட சர்க்கரை இரத்தத்திலேயே இருக்கிறது; இன்னும் சிறுநீராக வெளியே செல்லவில்லை என வைத்துக் கொள்வோம். இந்த நிலையிலும், செல்களுக்குச் சர்க்கரை தேவைப்படும் பொழுது கிளைக்கோஜன் இல்லையென்ற காரணத்தினால் மயக்கம் வரும். இப்பொழுது அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரை 400 இருக்கும். மருத்துவர்கள் சர்க்கரை அதிகமாக இருந்ததால்தான் இவருக்கு மயக்கம் வந்து விட்டது என்று கூறுவார்கள். ஆக, சர்க்கரை கூடுவதாலோ, குறைவதாலோ ஒருவருக்கு மயக்கம் வருவதில்லை.

உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கிளைகோஜன் என்கிற செறிவூட்டப்பட்ட சர்க்கரை தீரும்பொழுது மட்டுமே மயக்கம் வருகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியே போனால் அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. உடலில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும். எனவே, சர்க்கரைப் பரிசோதனை என்பது ஒரு தேவையில்லாத வேலை.

சிலருக்குச் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். ஆனால், மயக்கம் போட மாட்டார். ஏனென்றால், கிளைக்கோஜென் சப்ளை ஆகி விடும். சிலருக்குச் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். மயக்கம் போட மாட்டார். ஏனென்றால், அது நல்ல சர்க்கரையாகவும் இருக்கலாம். சிலர் மருத்துவமனைக்குச் சென்று சர்க்கரைப் பரிசோதனை செய்வார்கள். பரிசோதனை செய்வதற்கு முன்பு தெம்பாக இருப்பார்கள். பரிசோதனை ரிப்போர்ட்டில் 300 இருக்கிறது, 400 இருக்கிறது என்று தகவல் அறிந்தவுடன் உடம்பில் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்படும். இதற்குக்காரணம் என்னவென்றால், சர்க்கரை அளவு மிதமாக இருக்க வேண்டுமென்று நாம் புத்தியில் பதிவு செய்துள்ளோம். இதற்கு மேலேயும், கீழேயும் அளவு காட்டும்பொழுது நமது புத்தி நம் மனதைக் கெடுத்து, மனம் உடலைக் கெடுத்து நோய் உண்டாக்குகிறது.

உலகத்தில் யாருக்கும் சர்க்கரை மிதமாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது; இருக்காது; இருக்கத் தேவையில்லை. சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் கிடைக்கும். கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் கிடைக்காது. தேவையான சர்க்கரைகள் செல்லுக்குள்ளே போகும். கெட்ட சர்க்கரைகள் சிறுநீராகப் போகும். அளவுக்கதிகமான சர்க்கரைகள் கிளைக்கோஜென்னாக மாறும்.

இந்த வேலைகள் உடலில் நடந்து கொண்டிருக்கும்போது சர்க்கரையை யார் அளந்து பார்த்தாலும் அது முன்பின் முரணாகத்தான் இருக்குமேதவிர, சீராக இருக்காது.

சில நேரங்களில், உடலுக்கு நோய்கள் வரும்பொழுதோ, உடலில் வேறு சில முக்கியமான வேலைகள் இருக்கும்பொழுதோ கெட்ட சர்க்கரையை சிறுநீராக அனுப்புவது, நல்லசர்க்கரையை கிளைக்கோஜென்னாக மாற்றுவது ஆகியவை தாமதமாகவும் வாய்ப்புள்ளது. இந்தச் சமயங்களில் நாம் சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்து அதிகமாக உள்ளது, குறைவாக உள்ளது என்று பயப்பட்டால் இந்த பயம்தான் நோயே தவிர, இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு நோய் கிடையாது.

செல்களுக்குச் சர்க்கரையின் அளவு அதிகமாகத் தேவைப்படும்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். செல்களுக்குச் சர்க்கரையின் அளவு குறையும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகும். இதை யாரும் ஒரு குறிப்பிட்ட அளவு வைத்து ஆராய்ச்சி செய்யக் கூடாது!

நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்கள் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. ஒரு பாம்பை உங்கள் மடியில் போட்டால் பாம்பைப் பார்த்து பயப்பட்ட அடுத்த விநாடி உங்கள் சர்க்கரை அளவைச் சோதித்துப்பாருங்கள். ஹைசுகர் எனச் சொல்லப்படும் அளவையும் தாண்டியிருக்கும்.

உடலுக்கு அறிவில்லையா?

தேவையில்லாமல் ஏன் இப்படி அதிகப்படுத்துகிறது?


ஏனென்றால், ஒரு வேளை பாம்பு கடித்தால், விஷத்தைத் தூக்கி வெளியே வீசுவதற்கு உடம்பிலுள்ள அனைத்து செல்களுக்கும் சர்க்கரை தேவைப்படும். அதனால், சேர்த்து வைக்கப்பட்ட சர்க்கரையை இரத்தத்தில் அனுப்புகிறது. பாம்பு வெளியில் சென்ற பிறகு 'அப்பாடா' என்று உங்கள் மனதிலுள்ள பயம் தெளிவடைந்தால் ஒரு 10 நிமிடத்திற்குப் பிறகு சர்க்கரையின் அளவு ஒழுங்காகி விடும்.

இப்பொழுது சொல்லுங்கள்!

சர்க்கரை ஏறி இறங்கியதால் உங்களுக்கு நோய் வந்ததா இல்லை, பாதுகாப்பு வந்ததா?

இதே போல் சர்க்கரை அளவு சரியாக இருக்கும் ஒருவரின் கையில் ஒரு கத்தியால் சிறியதாக ஒரு காயத்தை ஏற்படுத்தினால் அடுத்த விநாடி, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

ஏன்?

காயம்பட்ட இடத்திலுள்ள செல்கள் தங்களைக் குணப்படுத்திக் கொள்வதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

உடலிலுள்ள செல்கள் வேலை செய்வதற்காக அல்லது நோயைக் குணப்படுத்துவதற்காக சர்க்கரை, B.P ஆகியவற்றின் அளவு அதிகரிக்கும்.

அந்த நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சோதித்துப் பார்த்து அதிகமாகியிருக்கிறது இது நோயெனக்கூற முடியுமா?



சீரான சர்க்கரை அளவு (Normal Sugar level) என்பது ஆபரேஷன் செய்யும்பொழுதும், அவசரக் காலத்திலும் மட்டுமே செல்லுபடியாகும் என்று பார்த்தோம். ஏன் என்று கேட்டால், சில அவசரக் கால சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கே கணையத்தில் அடிபட்டு இருக்கிறதா என்று கவனிக்க வேணடும். கல்லீரல் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் வைத்தால் உயிரைக் காப்பாற்றலாம் என்பதுதான் அறிவியல். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் சீரான சர்க்கரை அளவு என்பது.

இதற்காகத்தான் மருத்துவர்களுக்கு இது அவர்கள் படிப்பில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டவைதான் சர்க்கரை மருந்து மாத்திரைகள்.

சரி, ஹை சுகர், லோ சுகர் போன்றவற்றால் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டால், அவரை என்னிடம் கூட்டிக் கொண்டு வந்தால், நான் அவர் காதில் "சர்க்கரை என்பது நோயே அல்ல! எழுந்து உட்காருங்கள்" என்று சொன்னால் உட்காருவாரா? மாட்டார்.

அவருக்கு மருந்து, மாத்திரை, இன்சுலின் கொடுக்கத்தான் வேண்டும். அப்போதுதான் உயிரைக் காப்பாற்ற முடியும். எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரைகள் உயிரைக் காப்பாற்றும் அற்புதமான கண்டுபிடிப்பு. ஆனால், அதை இப்படிப்பட்ட அவசரக் காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாழ்க்கை முழுவதும் பயன்படுத்துவது தேவையில்லாத ஒன்று. சரி,

சர்க்கரை மருந்து, மாத்திரை என்ன செய்கிறது?

சர்க்கரை 400 இருக்கும்பொழுது, அதாவது ஹை சுகரில் மயக்கம் போட்ட ஒரு நோயாளி சர்க்கரை மாத்திரை சாப்பிட்டவுடன் அந்த மாத்திரை நேராகச் சென்று கணையத்திடம் “அந்த 400 கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் கொடு” என்று கேட்கும். கணையம் சொல்லும், “நான் தர மாட்டேன். என்னிடம் இன்சுலின் உள்ளது. ஆனால், அந்தச் சர்க்கரைகள் ஒழுங்காக ஜீரணமாகவில்லை என்பதால் நான் கொடுக்கவில்லை. ஏனென்றால், கெட்ட சர்க்கரை செல்லிற்குள் சென்றால் உறுப்புகளுக்கு நோய் வரும்” என்று. மாத்திரை இந்தக் கணையத்திடம் வலுக்கட்டாயமாக இன்சுலின் வாங்கி இந்த 400 கெட்ட சர்க்கரைக்குக் கொடுத்து விடும். மருந்து, மாத்திரை கெட்ட சர்க்கரையை நல்ல சர்க்கரையாக மாற்றுவது கிடையாது. அவை கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரையென்ற போலிச் சான்றிதழை வாங்கிக் கொடுத்து விடுகின்றன. எனவே, சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை அவசரக் காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் அவை.

உங்களுக்குப் பெரிய அறிவியல் எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. சிறிய, அடிப்படையான ஒரு விஷயத்தை மட்டும் யோசியுங்கள்!

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரையின் அளவு போகப் போக அதிகமாகிறதா, குறைகிறதா?

எப்பொழுது அதிகமாகிறதோ அப்பொழுது உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டு வருகிறது என்று அர்த்தம். ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா அதிகப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா?

ஏன் மருந்தின் அளவு அதிகமாகிறதென்றால், கெட்ட சர்க்கரைகள் எல்லா உறுப்புகளுக்குள்ளும் செல்லும்போது எல்லா உறுப்புக்களும் பாதிப்படைகின்றன. கணையமும் பாதிப்படைகிறது.

சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோயும் வருமென்று கூறுவார்கள். இது தவறான கருத்து. சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டால்தான் எல்லா நோயும் வருமென்பதுதான் ஆணித்தரமான உண்மை.

சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் முதலில் மாத்திரை சாப்பிட்டால், பிறகு அளவு அதிகமாகிக் கொண்டே போகும். பிறகு, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். கண்ணில் பாதிப்பு ஏற்படும். பிறகு கண் சம்பந்தப்பட்ட நோய்க்குத் தனி மருந்தும், சில அறுவை சிகிச்சைகளும் செய்ய வேண்டி இருக்கும். பிறகு சிறுநீரகத்தில் கல் வரும். அதற்குத் தனி மருந்தும், அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியதிருக்கும். உடல் சோர்வு ஏற்படும். புதுப் புது நோய்கள் வரும். ஆனால், எல்லா மருத்துவர்களும் சாக்கரையை நீங்கள் ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் நோய்கள் வந்து விட்டன என்று கூறுவார்கள். உண்மையில், சர்க்கரையை ஒழுங்காக வைத்திருந்ததால்தான் நோய் வந்தது என்பதுதான் உண்மை.

இப்படி, மருந்து மாத்திரை கம்பெனிகள் குழந்தையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டுவது போல நல்லது செய்வது போல் நமக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்து நமக்கு அனைத்து நோய்களையும் வர வைத்து அனைத்து மருந்து, மாத்திரைகளையும் விற்பதற்காக, அறுவை சிகிச்சைகள் செய்து சம்பாதிப்பதற்காகப் போட்ட அற்புதமான திட்டம்தான் சர்க்கரை நோயென்ற ஒரு வியாபாரத் திட்டம்!



உணவில் சர்க்கரை இருக்கிறது என்பதற்காகத்தான் நாம் உணவைச் சாப்பிடுகிறோம். நமது உடலுக்குச் சர்க்கரை தேவை என்பதால்தான் சாப்பிடுகிறோமே தவிர, வேறு ஒரு காரணமும் இல்லை. சுகர் ப்ரீ என்பது குப்பையில் கொட்ட வேண்டிய ஒரு பொருள். எப்பொழுது ஒரு உணவில் கார்போஹைட்ரேட் என்ற சர்க்கரை இல்லையோ, அது உடலுக்குத் தேவையே கிடையாது. எனவே, தயவு செய்து, சுகர் ப்ரீ என்ற பெயரில் எதையுமே சாப்பிடாதீர்கள்!


சர்க்கரை என்றால் என்ன, செல்கள் என்றால் என்ன, உடல் எவ்வாறு இயங்குகிறது என்பவை தெரியாதவர்கள், புரியாதவர்கள் பேசும் பேச்சு அது. ஒரு உணவில் சர்க்கரை இருந்தால் மட்டும்தான் அது உணவு. சர்க்கரை இல்லாத எந்தவொரு பொருளும் உணவே கிடையாது.

"அரிசிச் சாதம் சாப்பிடாதீர்கள்; அதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. சப்பாத்தி சாப்பிடுங்கள்" என்று கூறுகிறார்கள். அரிசிச் சாதத்திலும் சர்க்கரைதான் உள்ளது, சப்பாத்தியிலும் சர்க்கரைதான் உள்ளது. சரி, வட இந்தியாவில் அனைவரும் சப்பாத்தி சாப்பிடுகிறார்களே, அவர்களுக்கு ஏன் சர்க்கரை நோய் வருகிறது?

வட இந்தியாவில் போய்ப் பாருங்கள்! "சப்பாத்தி அதிகம் சாப்பிடாதீர்கள்! அதனால்தான் சர்க்கரை நோய் வருகிறது. அரிசி உணவு எடுத்து கொள்ளுங்கள்" என்று கூறுகிறார்கள். அனைத்து உணவுகளிலும் சர்க்கரைதான் இருக்கிறது. எதைச் சாப்பிட்டாலும் சர்க்கரையாகத்தான் மாறும். இனிப்புக்கும், சர்க்கரை வியாதிக்கும் சம்பந்தமே கிடையாது. மருந்து வியாபாரத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த சர்க்கரை (நீரிழிவு) நோய். இதைப் புரிந்து கொண்டால் சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் இந்த நிமிடம் முதல் இனிப்பு சாப்பிடலாம்.

இட்லி என்பது சர்க்கரை. சப்பாத்தியில் சர்க்கரை உள்ளது. உருளைக்கிழங்கு போண்டாவில் சர்க்கரை உள்ளது.

இட்லி இனிக்கிறதா?

சப்பாத்தி, உருளைக்கிழங்கு போண்டா இனிக்கிறதா?

இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம்?


சர்க்கரை இனிக்காது. இனிப்பு என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருள். இது நாக்கால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரையென்பது கண்ணுக்குத் தெரியும் பொருள். இது வயிற்றால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரை இனிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எனவே, தயவு செய்து இனிப்புகளைப் பார்த்து பயப்படாதீர்கள்!

நாம் சொல்லுவது சில பேருக்குப் பயத்தை ஏற்படுத்தும்; இவர் பேச்சைக் கேட்டு நாம் சர்க்கரை மருந்து, மாத்திரையை நிறுத்திவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்படுமோ என்று.

ஒன்று செய்யுங்கள்!

இன்சுலின், மருந்து, மாத்திரை போட்டுக்கொள்ள வேண்டாம்!

ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை (இனிப்பு பண்டங்கள் முதற்கொண்டு பழங்கள் வரை) பசி எடுக்கும்போது மட்டும் உண்ணுங்கள்! காலையில் சாப்பிட்ட பின் இன்சுலின், மருந்து, மாத்திரை எதுவும் போட்டுக் கொள்ளாமலே மதியம் மீண்டும் பசி எடுத்தாலே உங்கள் கணையம் இன்சுலின் சுரந்து விட்டது என்று அர்த்தம்!

நாம் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரத்தில் அல்லது மூன்று மணி நேரத்தில் இன்சுலின் சுரக்க வேண்டும். இல்லையென்றால் மயக்கம் வந்து விடும். எப்பொழுது ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு மயக்கமே வரவில்லையோ உங்களுக்குக் கணையம் கெட்டுப் போகவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

ஒரு சிலருக்கு மட்டும் தான் விபத்து போன்ற காரணங்களால் கணையத்தில் பிரச்சினை ஏற்படும். ஆனால், அது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும்தான். ஒரு நாள் முழுவதும் மயக்கம் வரவில்லையென்றால் உங்கள் மருத்துவர் கூறுவதுபோல் கணையம் இன்சுலினை சுரப்பதில் எந்தவித சிக்கலும் கிடையாது என்றும் ஜீரணம் கெட்டுப் போனதைத்தான் வியாபாரத்திற்காக சர்க்கரை (நீரிழிவு) வியாதி என்று நம் தலையில் மிளகாய் அரைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இது உறுதியானதும் உங்கள் மருந்து மாத்திரைகளை நிறுத்தி விட்டு சந்தோஷமாக, சௌக்கியமாக இருங்கள்!


முதலில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை பிறகு டோஸ் அதிகமாகிக்கொண்டே போகும். பிறகு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பிறகு அனைத்து உறுப்புககளிலும் புதுப்புது நோய் வரும். இப்படி உடலில் வந்த நோய்களுக்குக் கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது. அந்த உறுப்பை குணப்படுத்துவது தான் வைத்தியம். கடைசியாக மாத்திரையின் டோஸ் அதிகமாகி பிறகு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் டோஸ் கொடுக்க முடியாது என்ற போது இன்சுலின் என்ற திரவத்தை ஊசி வழியாக செலுத்தச் சொல்வார்கள்.

மாத்திரைக்கும் இன்சுலினுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மாத்திரை கணையத்திடம் சென்று கணையத்திடம் இருக்கும் இன்சுலினை எடுத்து கெட்ட சர்க்கரைக்கு கொடுக்கும். இன்சுலின் என்ன செய்யும் என்றால் கணையத்திடம் போகாது, கேட்காது. நேரடியாக இரத்தத்திலுள்ள கெட்ட சர்க்கரைகளுக்கு இன்சுலின் கொடுத்து விடும்.

எலி, பன்றி போன்ற விலங்குகளிடமிருந்து சுரக்கும் இன்சுலினை எடுத்து கடைகளில் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி நமது உடம்புக்குள் செலுத்திக் கொள்கிறோம். இப்படி சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, இன்சுலின் யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறோமோ அவர்கள் எல்லாமே கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரை என்ற சர்டிபிகேட் கொடுத்து உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் கெடுக்கிறோமே தவிர இதனால் எந்தவொரு நன்மையும் கிடையாது.

போகப்போக நோய் அதிகமாகிக் கொண்டே வருகிறதா?

இல்லை குணமாகிக் கொண்டு வருகிறதா?


சர்க்கரை நோயாளிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் தொடர்ச்சியாக மருத்துவர்கள் பரிந்துரைத்தது போல உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிதுக் கொண்டு மருந்துக்களையும் இன்சுலின் ஊசிகளையும் எடுத்துக் கொள்பவர்களின் காலில் மத மதப்பு, எரிச்சல், குத்துதல், குடைதல் போன்றவை ஏற்படும்.

இது ஏன் ஏற்படுகிறது என்றால் ஒரு பாட்டிலின் அடிப்பகுதியில்தான் அதிக நேரம் தண்ணீர் இருக்கும். பாட்டிலின் மேல் பக்கத்தில் குறைந்த நேரம்தான் தொட்டுக் கொண்டிருக்கும். அதை போல நமது உடல் ஒரு பாட்டில் போன்றது. இரத்தம் நீர் போன்றது. உடலிலுள்ள இரத்தம் முதலில் உள்ளங்காலை நோக்கித்தான் பாய்ந்து செல்லும், புவியீர்ப்பு விசையின் காரணமாக நமது உடலின் உள்ளங்கால்தான் இரத்தத்தில் உள்ள பொருட்களை முதன் முதலில் எடுக்கும்.

பிறகு மூட்டு, பிறகு இடுப்பு, பிறகு வயிறு, இப்படி மேல் நோக்கி செல்லும். எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரை இன்சுலினின் மூலமாகக் கிடைக்கும் கெட்ட சர்க்கரைகளை முதன்முதலில் உள்ளங்கால்தான் சாப்பிடுகிறது. கெட்ட சர்க்கரையைச் சாப்பிடுவதால் உள்ளங்காளலுக்கே முதன்முதலில் நோய் ஏற்படுகிறது. இது உள்ளங்காலில் இருக்கும் செல்கள் கெட்டுப் போவதால் ஏற்படுவதில்லை. உள்ளங்காலில் இருக்கும் செல்கள் செத்துப் போவதால் ஏற்படுகிறது.

கெட்டுப் போவதற்கும் செத்துப் போவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், நாம் உள்ளங்காலில் வலி வந்தவுடன் யோகா, மூச்சுப்பயிற்சி, முத்ரா, ரெய்க்கி போன்ற மருந்தில்லா மருத்துவத்திற்குச் செல்வோம். ஆனால், மருந்து மாத்திரையை மட்டும் விடமாட்டோம்.

சிறிது காலத்திற்குப் பிறகு இந்த மருந்தில்லா மருத்துவத்தை நாம் திட்டுவோம். நான் யோகாவுக்குச் சென்றேன். அக்குபஞ்சருக்குச் சென்றேன். ஆனால், கால் வலி குறையவில்லை என்று...

ஆனால் நீங்கள் மருந்து மாத்திரையை நிறுத்தி விட்டீர்களா?

இல்லையா?


சர்க்கரை மருந்து, மாத்திரைகளை நிறுத்தாத வரையில் எந்த மருந்தில்லாத வைத்தியத்தாலும் உங்கள் நோயைக் குணப்படுத்த முடியாது.

மருந்து மாத்திரைகள் மூலமாக உடலைக் கெடுக்கும் வேலையை மட்டும் சரியாக செய்து விட்டு மருந்தில்லாத வைத்தியத்திற்க்குச் சென்று ஏன் அதைக் குறை கூறுகிறீர்கள்?

கால் மதமதப்பு, எரிச்சல் உள்ள நோயாளிகள் சிறிது காலத்திற்குப் பிறகு காலில் புண் தோன்றும். உடலில் எந்த இடத்தில் புண் வந்தாலும் ஆறிவிடும். ஆனால், உள்ளங்காலில் வந்த புண் மட்டும் ஆறாது.

ஏனென்றால், உயிரைக் காப்பாற்றி கொள்ளவே முடியாத செல்கள் புண் வந்தால், நோய் வந்தால் எப்படித் தன்னை குணப்படுத்தும்?


பிறகு அந்த புண்ணிற்கு ஆப்பரேஷன் செய்வதற்கும், நாம் அதே மருத்துவரிடம்தான் செல்கிறோம். சில பேருக்கு உள்ளங்கால் மோசமாக பாதித்து பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். அதன் பிறகு, கட்டை விரலிலுள்ள செல்கள் அழுகிப் போய் கட்டை விரலுக்கு நோய் ஏற்படும். மருத்துவரிடம் சென்று காண்பித்தால் உங்களுக்கு சுகரினால்தான் கட்டை விரல் அழுகிப் போச்சு என்று கட்டை விரலை அறுத்து எடுப்பதற்கு ஆபரேசனுக்கு நாள் குறிப்பார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று நான் ஆரம்பத்தில் இருந்து உங்களிடம்தான் வந்தேன்.

# நீங்கள்தான் சர்க்கரை நோய் வந்துவிட்டதென்று சிறிய மாத்திரையைக் கொடுத்தீர்கள். நானும் சாப்பிட்டேன்.
# சுகரை டெஸ்ட் செய்ய சொல்லி எனக்குக் கற்று கொடுத்தீர்கள். நானும், தினமும் டெஸ்ட் செய்து வந்தேன்.

# மருந்து மாத்திரையின் டோஸ் அதிகமானது. நானும், அதிகப்படுத்திக் கொண்டேன். அன்று முதல் இன்றுவரை தினமும் சரியாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.

# பிறகு உடலில் பல உறுப்புகளில் நோய் வருகிறதென்று புதுப்புது மருந்து மாத்திரையைக் கொடுத்தீர்கள்.

# பிறகு இன்சுலின் என்ற ஊசியும் கொடுத்தீர்கள்.

# தினமும் வாக்கிங் போகச் சொன்னீர்கள். நான் போய் கொண்டிருக்கிறேன்.

# இனிப்பு சாப்பிடக் கூடாதென்று கூறினீர்கள். நான் கடந்த பாத்து வருடமாக இனிப்பு சாப்பிடுவதில்லை.

# நீங்கள் சொன்ன அனைத்தையும் ஒழுங்காகச் செய்தேனே,

பிறகு என்னுடைய கட்டைவிரல் ஏன் அழுகிப் போனத் என்று யாராவது உங்கள் மருத்துவரிடம் கேட்டீர்களா?

உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்கிறேன். உங்கள் மருத்துவர் சொன்ன அனைத்தையும் ஒழுங்காக நீங்கள் செய்ததால்தான் உங்கள் கட்டை விரல் அழுகிப் போய் விட்டது.

கட்டை விரலை எப்பொழுது வெட்டி எடுக்கிறீர்களோ, தயவு செய்து இப்போதிருந்தே பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் காலை வெட்டியெடுக்க வேண்டியது வரும். ஏனென்றால், நீங்கள் சர்க்கரை மாத்திரையை மட்டும் விடுவதில்லையல்லவா?

அடுத்து மூட்டு காலை வெட்ட வேண்டியது வரும். அடுத்தது தொடை அருகே வெட்ட வேண்டியது வரும். இப்படி எத்தனையோ பேர் தொடைகளை, கால்களை வெட்டி வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள்.

இன்னுமாங்க புரியல இல்லாத சர்க்கரை நோயை எந்த மருந்து மாத்திரையாலும் குணப்படுத்த முடியாது என்று. சர்க்கரை நோய் என்று ஒரு நோயே கிடையாது.

சர்க்கரை நோய்க்கும், இனிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

எனவே, சர்க்கரை அதிகமாக உள்ளதென்று தயவு செய்து பயப்பட வேண்டாம். யாருடைய உடம்பில் நிறைய சர்க்கரைகளைச் சேர்த்து வைக்கிறீர்களோ, உங்கள் உயிர் காப்பாற்றப்படும். ஒருவர் இரவு 10 மணிக்கு ஒரு காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளாகி ரோட்டில் கீழே விழுந்து கிடக்கிறார். அவரைக் காப்பாற்ற யாரும் கிடையாது. காலை பத்து மணிக்கு அவரை பார்த்து காப்பாற்றினால் அவருடைய உடம்பில் கிளைக்கோஜன் என்ற சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்திருந்தால் அவர் இரவு பத்து மணி முதல் காலை பத்து மணி வரை அந்த சர்க்கரை இரத்தத்தில் விநியோகம் செய்வது மூலமாக உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

யாருடைய உடம்பில் அதிக சர்க்கரை சேமித்து வைக்கப்படுகிறதோ, அவர்களுக்குப் பல மணி நேரம் ஆபத்தின் பொழுது உயிரை காப்பாற்ற முடியும்.

இப்படி சர்க்கரை நார்மல் என்ற பெயரில் யார் யாரெல்லாம் சர்க்கரையை ஒழுங்காக வைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ உங்கள் உடம்பில் சேமித்து வைக்கப்பட்ட சர்கரையே இருக்காது. சர்க்கரைக்குப் பல வருடங்கள் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவமனையின் முன்பாக விபத்து ஏற்பட்டால் உள்ளே செல்வதற்குள் உயிர் போக வாய்ப்புள்ளது.

ஏனென்றால், நீங்கள் உங்கள் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு நகை வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு இடம், சொத்து வைத்திருக்கிறீர்கள் என்பது வெளி உலகத்திற்கான சொத்து. உடலில் எவ்வளவு கிளைகொஜன் என்ற சேமிக்கப்பட்ட சர்க்கரை இருக்கிறதோ, அதுதான் உயிரின் சொத்து.

எனவே, தயவு செய்து நன்றாக சாப்பிடுங்கள். சர்க்கரை உள்ள பொருட்களை நிறையாக சாப்பிடுங்கள். கிளைக்கோஜன் நிறைய சேர்த்து வையுங்கள். உங்கள் உயிர் காப்பாற்றபடுமே தவிர உங்களுக்கு நோய் வராது. சர்க்கரை அதிகமானால் நோய் அன்று கூறுகிறார்களே அவசர காலத்தில் யாரவது உடலுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றால் வெளியில் வரும் பொழுது பெருமையாக சொல்கிறீர்களே மருத்துவமனையில் எனக்கு 16 பாட்டில் குளுகோஸ் டப்பா மாட்டினார்கள் என்று.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உயிரை காப்பது குளுகோஸ் டப்பாதானே! அப்பொழுது உயிரைக் காப்பது சர்க்கரைதானே. ஒவ்வொரு செல்லுக்கும் அடிப்படை தேவையான ஒரு சர்க்கரையை சேர்த்து கொள்ள கூடாதென்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

 நன்றி - பாஸ்கர்



உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல. ஆனால் எந்த நோய்க்கும் மூல காரணம் தெரியாத ஆங்கில மருத்துவம் ஒவ்வொரு நோய்க்கும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைக்கிறது. நாமும் சற்றும் சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.


சரி இதற்கு என்ன தான் தீர்வு?

# எப்போது பசி எடுக்கிறதோ, அப்போது உங்கள் மனதிற்கு பிடித்த உணவுகளை நன்றாக ருசித்து, மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுங்கள்.


# தாகம் எடுக்கும்போது நன்றாக சப்பி உதடும், நாக்கும் நனையுமாறு நீர் பருகுங்கள்.

# டீ மற்றும் காப்பி போன்றவற்றை தவிர்த்திடுங்கள்.

உடல் ஓய்வு கேட்கும்போது ஓய்வும், தூக்கம் கேட்கும்போது தூக்கமும் கொடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம்!


பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம்!!


நன்றி –  கு. நா. மோகன்ராஜ்




இந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/ALDygR




# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  

# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.



நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 

# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

# அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 

# நேர்மையாக வாழும்போதும்,

# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876


முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளின் தொகுப்பைக் காண மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!" 
Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT


"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Telegram குழுவின் முகவரி
 https://telegram.me/OurBodyItselfaDoctor

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" 
Telegram குழுவின் முகவரி
 https://telegram.me/LetUsThinkPositive

நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ்வோம். ஆரோக்கியமாக வாழ நம் உடலின் அடிப்படையை புரிந்து கொண்டு அதற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும். இதனை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் நாம் தேவையில்லாமல் வியாதிகள் மற்றும் கிருமிகள் பற்றி பயந்து கொண்டு இருக்கிறோம். 

ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் தினசரி பழக்கவழக்கங்களில் தான் அடங்கி உள்ளது. இதனை புரிந்துக்கொள்ளாததால் தான் நாம் பல மருத்துவ வியாபாரிகளிடம் சிக்கித் தவிக்கிறோம்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

17 comments:

  1. நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! >>>>> Download Now

    >>>>> Download Full

    நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! >>>>> Download LINK

    >>>>> Download Now

    நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete