குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் !


குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் !

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டாதீர்கள். வேறு வழியில்லாமல் மிரட்டும் நேரிட்டால், “கொன்னுடுவேன், தலையை திருகிடு வேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறு வர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையி லேயே “அப்பாக்கிட்ட சொல்லிடு வேன்’ என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே" போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக்கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதி க்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ”கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடா து.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


For more info visit:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

பெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....

பெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....
- Dr.ஷர்மிளா


1. குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.

2. ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.

3. யாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.

4. குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.

5. எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறையோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.

6. ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.

7. எங்கேயாவது வழி தவறிக் காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்களிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரிடமோ, பெண்களிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள்.

8. படுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந் தாலும்கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடும்.

9. குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.

10. இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

11. சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொம்பவே அதிகம். சானிட்டரி நாப்கின், ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள் வருகிற போது அது என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, அந்தப் பொருட்கள் பற்றிய அடிப்படை விவரங்களை நாசுக்காக நீங்கள் விளக்கலாம்.

12. பருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை விளக்குங்கள்.

13. பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.

14. தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்படி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட்டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.

15. திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

For more info visit:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!


‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..

‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்!

தங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..’ என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..’

- என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை.

‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.

‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.

‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.

‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.

மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.

எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.

‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.

சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..

‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.

உஷார் மம்மீஸ் உஷார்!

குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..

குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன் டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.

குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.

குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!

சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.

நன்றி - விகடன் பொக்கிஷம் மம்மீஸ் கிளப்

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்!

பிடிவாதக் குழந்தைகள்... 
வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்!

'நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்பது அந்தக் காலப் பிரசாரம். அதற்குப் பிறகு, 'நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று அது சுருங்கியது. ஆனால், அரசு கூறுகிறதோ இல்லையோ, பொதுவாகவே இப்போது இருக்கும் பொருளாதார நெருக்கடி, பள்ளியில் இடம் கிடைக்கப் போராடும் அவலம், கல்லூரிக் கட்டணங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், திருமணச் செலவுகள்... என்று குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு செலவழிக்க வேண்டிய தொகையின் கூட்டல் பூதாகரமாக எழுந்து நிற்பதால், 'நமக்கு ஒரு பிள்ளை போதும்’ என்று ஏக மனதாகத் திட்டமிட்டுவிடுகிறார்கள் பல தம்பதியர். ஆனால், அந்த 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ இருக்கிறதே... அதை வளர்ப்பதற்குள்ளாகவே விழி பிதுங்கிவிடுகிறது பலருக்கு. அதிஅற்புதமான ஐ.க்யூ., அருமையான கற்பனைத்திறன், புத்திசாலித்தனம்... இவற்றுடன் அளவு கடந்த சேட்டை, அதிமேதாவித்தனம், எடுத்ததற்கெல்லாம் கோபம், பிடிவாதம் என்ற கலவையாகத்தான் இருக்கிறது இன்றைய சுட்டிகளின் சாம்ராஜ்யம்.

எதற்கெடுத்தாலும் முரண்டுபிடிக்கும், அடம்பிடிக்கும் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலாகவே உருவாகி இருக்கிறது. அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டியது பெற்றோர்கள்தான். ஒரே குழந்தையாக இருப்பதால் விட்டுக்கொடுத்தல், பகிர்தல் எதுவுமே இல்லாமல் வளரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்காக சில வழிமுறைகளைச் சொல்கிறார் மூத்த உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்.

''ஒரே ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது சரியா, தவறா என்பது தனிமனிதரைப் பொருத்த விஷயம். ஆனால், அது குழந்தைகளை மிக மோசமாகப் பாதிக்கிறது என்பதற்கான வாழும் உதாரணங்கள் நிறையவே உள்ளன. பல வன்முறைச் சம்பவங்களில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது, இதுபோல பால்யத்தில் தனிமை, பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காமல்போதல் போன்ற விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனால், ஒரு குழந்தை என்றாலும் அதைத் தனிமையில்விடாமல் அரவணைத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை.

எந்தக் குழந்தையும் பிறந்து, வளர்ந்து வரும்போதே 'நான் மட்டும்தான்... எனக்கு மட்டும்தான்’ என்று சொல்வது இல்லை. 'தான் மட்டும்’ என்ற அந்த மனோபாவத்தைக் குழந்தைக்கு ஊட்டுவதும் பெற்றோர்கள்தான். என்ன வாங்கி வந்தாலும், 'இது எல்லாமே உனக்குத்தாண்டா செல்லம்’ என்று சொல்லிச் சொல்லியே, அப்படி ஒரு மனோபாவத்தைச் சிறுவயது முதலே வளர்த்துவிடுகிறோம். எனவே, குழந்தைகளிடம் நமது அணுகுமுறை கவனமாக இருக்கவேண்டும்.

இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில், தங்களுடைய 'இல்லாமையை’ சமரசம் செய்வதற்காகவே, குழந்தை என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, பக்கத்து வீட்டில் ஏதாவது ஒரு பொருள் வாங்கிவிட்டால், அதைவிடக் கொஞ்சம் விலை உயர்ந்ததாக தன் பிள்ளைக்கு வாங்கித் தருவது நிகழ்கிறது. இதனால் குழந்தைக்கு அந்தப் பொருளின் மதிப்பே தெரியாமல் போய்விடும். இது எல்லாமேதான், பூமராங் போல பின்னாளில் அவர்களையே நோக்கித் திரும்பி வருகிறது.

குழந்தைகள் எதையாவது கேட்டு அடம்பிடிக்கும்போது, மிகக் கடுமையாக எதிர்க்கவும் கூடாது. அதேசமயம், 'என்கிட்ட காசே இல்ல'' என்று அன்னக்காவடி போலப் புலம்பவும் கூடாது. 'ஏன் அந்தப் பொருள் அப்போதைக்கு வேண்டாம்’ என்பதை யதார்த்தமாக எடுத்துச் சொல்லி, வேறு ஏதாவது பொருளை வாங்கித் தரலாம். என்னதான் அழுது அடம்பிடித்தாலும், அதற்கு இடம்கொடுக்காமல் உறுதியாக இருந்து பழகிவிட்டால், பிறகு, உங்களிடம் 'பாச்சா பலிக்காது’ என்று தெரிந்து, அவர்களே வழிக்கு வருவார்கள். பிள்ளைகளிடம் கோபப்படுவதோ, எரிச்சல்படுவதோ இல்லாமல், உண்மையான அக்கறையோடு செய்ய வேண்டும். இதற்கு நிறையப் பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவை.

ஒற்றைக் குழந்தையாக இருக்கும்போது, அதற்கு பிரைவேட் - ஹோம் டியூஷன் என்றெல்லாம் ஏற்பாடு செய்யக் கூடாது. குழுவினரோடு பழகுவதுபோல, பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு அனுப்பவேண்டும். விளையாட்டுகளிலும், பாஸ்கெட் பால், ஃபுட்பால் போன்ற குழு விளையாட்டுகளில் சேர்த்துவிடவேண்டும். பாட்டு, நடன வகுப்புகளுக்குப் போகும்போது, மற்றவர்களுடன் கலந்து பழகவும், சூழ்நிலையை அனுசரிக்கவும், விட்டுக்கொடுக்கவும் குழந்தை பழகும்' என்றவரிடம், ''வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், டிவி என்று நவீன 'காட்ஜெட்ஸ்’ உடன் வளரும் குழந்தைக்கு மனதளவில் உண்டாகும் பாதிப்புகள் என்ன? அதை எப்படிச் சரிசெய்வது?'' என்று கேட்டோம்.

''அது, அந்த சாதனங்களைக் குழந்தைகள் எந்த அளவுக்கு உபயோகிக்கிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது. எந்த ஒரு விஷயமுமே அளவோடு இருக்கும்போது தீங்கு தராது. அளவுக்கு அதிகமாகி அதில் மூழ்கும்போது, அவர்கள் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். தங்களின் தனி உலகத்தில்தான் மட்டுமே பயணிப்பார்கள். இதைத் தடுக்க, கம்ப்யூட்டர், டி.வி, வீடியோ கேம்ஸ் எல்லாவற்றுக்குமே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவிட வேண்டும். ''நீ சமத்தா படிச்சு முடிச்சேன்னா, இன்னிக்கு போனஸா ஒரு மணி நேரம் நீ கேம்ஸ் விளையாடலாம்’ என்று சொன்னால், குழந்தை படிக்கவும் செய்யும். விளையாட்டில் கட்டுப்பாடும் வரும். இது போல நேர எல்லையை வகுத்து, அதன்படி சீராகப் பராமரித்தாலே போதும்; அவர்களே அந்த ஒழுங்குக்கு வந்து விடுவார்கள். அதிக நேரம் அதில் உட்கார்ந்தால் என்ன ஆகும் என்று சொல்லி, அதன் விளைவுகளையும் அவசியம் புரியவைக்க வேண்டும்'' என்றார்.

''ஒற்றைக் குழந்தை வைத்துள்ள பெற்றோர்களுக்கு டிப்ஸ்...!''

3 வயது வரையுள்ள குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றி குழந்தைகள் சிறப்பு நிபுணர் ஜனனி ஷங்கர் பேசியபோது, அவருடைய விரலும் பெற்றோர்களை நோக்கித்தான் நீண்டது.

''பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் சூழலில், குழந்தைக்காகக் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். இரண்டு பேருமே பிஸி என்றால், ஒருவர் இல்லாதபோது இன்னொருவர் வீட்டில் இருப்பது போல மாற்றிக்கொள்ளலாம். சனிக்கிழமை ஒருவர் இருந்தால், ஞாயிற்றுக்கிழமை இன்னொருவர் இருக்கலாம். ஒருவர் ஆபீஸ் போனால், மற்றவர் வீட்டில் இருந்து பணி செய்யலாம். இது போன்ற திட்டமிடலில் ஆரம்பித்து, எல்லாவற்றிலுமே குழந்தையை முதன்மைப்படுத்திச் செய்யவேண்டும்.

தனிக்குடித்தனமாக இருந்தாலும் யாராவது பெரியவர்களை உடன் வைத்துக்கொள்வது நல்லது. நம் அப்பா, அம்மா, மாமியார் போன்ற சொந்தங்களிடம் விட்டுச் செல்லும்போது குழந்தைக்கு நல்ல பழக்கவழக்கங்களும் வரும். சுத்தமான, ஆரோக்கியமான உணவும் கிடைக்கும்.

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கண்டிப்பாக கிரெச்சில் விடக் கூடாது. 3 - 4 வயதுக்குள் தான் ஒரு குழந்தையிடம் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு உருவாகிறது. அதற்கு முன்பே காப்பகத்தில் விடும்போது, மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில், எல்லா வகையான நோய்த்தொற்றும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறைந்தது, 3 வயது வரையிலுமாவது குழந்தையை வீட்டில் வைத்து வளர்ப்பது அதன் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. கிரச்சில் உள்ள கேர்டேக்கர்களின் சுத்தம், சுகாதாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி நமக்குத் தெரியாது. அது அப்படியே குழந்தைக்கு வரலாம். பெற்றோர் இல்லாத தனிமை, கோபம் எல்லாம் சேர்ந்து, குழந்தைக்கு மனதினுள் புதைந்த கோபமாக இருக்கும். அது வளர்ந்து பெரிதாகும்போது, அந்தக் கோபம் வெடிக்கும். 

''என் ஃப்ரெண்ட் ஆகாஷ் அம்மா எல்லாம் எப்படி அவனைப் பார்த்துக்கிட்டாங்க? 

நீ என்னைப் பார்த்துகிட்டியா?''

என்று ஒப்பிடச் சொல்லும்.

குழந்தையும் நன்றாக வளரவேண்டும், சம்பாதிக்கவும் வேண்டும் என்றால், சிற்சில சமரசங்களைச் செய்துகொண்டு, உறவினர்களையே வீட்டில் வைத்துக்கொள்ளலாமே! இல்லையெனில், உடல்ரீதியாக, மனரீதியாகப் பாதிக்கப்பட்டு, போதிய ஊட்டச்சத்தும் இல்லாமல் போகும். குழந்தையின் எதிர்காலம் ஆரோக்கியமான அமையவேண்டுமென்றால், அதற்குத் தேவை பணத்தைத் தாண்டி, உங்கள் அருகாமையும் அன்பான அரவணைப்பும்தான்!''

- பிரேமா நாராயணன்

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ர.சதானந்த்

நன்றி - vikatan.com


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

குழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்

குழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்

- சித்த மருத்துவர் அருண் சின்னையா (98840 76667)

நன்றி - சிறகு.காம்


சில நேரங்களில் இட்லியும், தோசையையும் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதே நாம் தான் என்று சொல்லலாம். தரமான உணவுகளை நிறைய கொடுத்து பழக்கலாம். பழங்கள் கலந்த உணவுகளை நிறைய கொடுத்து பழக்கலாம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி உணவாக Lays, Kurkure போன்றவற்றை தராமல் இருப்பது மிகவும் நல்லது. அதற்குப் பதிலாக பழங்களை நறுக்கி சிற்றுண்டி நேரங்களில் கொடுத்து பழக்கலாம். பள்ளி நிர்வாகமும் அதை ஊக்குவிக்கலாம். அதுமாதிரி செய்யும் பொழுது வரக்கூடிய இளைய தலைமுறைகளை, நல்ல ஆரோக்கியமான தலைமுறையாக நாம் கண்டிப்பாக மாற்ற முடியும். மூலிகைகளைக் கொடுத்து சளி, இருமல் போன்றவற்றை விரட்டுவதற்கான வேலைகளைச் செய்யலாம்.

Tonsils பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 

Tonsil Operation அந்த வயதில் தேவையா?

6 வயதில் 7 வயதில் Tonsil Operation செய்தால் கூட மறுபடியும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது, கூல்டிரிங்ஸ் சாப்பிடும் பொழுது மறுபடியும் Tonsils வரக்கூடிய வாய்ப்பு உள்ளது, அது Primary Complex ஆக மாறலாம். Primary Complex என்றால் சிறுவர்களுக்கு உண்டாகக்கூடிய மூச்சு ஒவ்வாமை நோய். இதனால் நிறைய குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். 

ஒரு சில பெற்றோர்கள் தன்னுடைய தகுதியை விட்டுக்கொடுக்காமல் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு ஏற்றார்போல் நல்ல வகையாக தலையாட்டக் கூடிய பெற்றோர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தங்களுடைய தகுதிக்காகவே தன்னுடைய குழந்தைகளை பெரிய பெரிய மருத்துவமனையில் சேர்த்து அங்கு பார்த்து தன்னுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய பெற்றோர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். 

எனவே நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக எளிமையான முறை நான் சொன்னது. துளசி, தூதுவலையைப் பயன்படுத்தலாம். கற்பூரவல்லி என்பது சாதாரணமாக வீட்டிலேயே தொட்டியிலேயே வளர்க்கலாம். கற்பூரவல்லி இலையில் மூன்று இலையை எடுத்து நன்றாக பிழிந்து சாறெடுத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள் எப்பேற்பட்ட சளியாக இருந்தாலும் கண்டிப்பாக முழுமையாக சரியாகிவிடும்.

அதேபோல் சுக்கு, சாதாரணமாக கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்கு, மற்றும் சித்தரத்தை, அதிமதுரம் இம்மூன்றையும் சம அளவிற்கு (50 கிராம் அளவிற்கு) வாங்கி அதை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொண்டு அதில் சிறிது எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பனவெல்லம் சேர்த்து அதை வடிகட்டி குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள், பழக்கப்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக இருமல், சளி அனைத்துமே முழுமையாக சரியாகிவிடும். இதெல்லாம் நாம தான் செய்ய வேண்டும். முதலில் இதை பிடிக்கவில்லை என்ற சூழல் இருக்கும், இதைக் குடித்தால் சரியாகும் என்று எடுத்துக் கூறும்பொழுது கண்டிப்பாக கேட்பார்கள். 

குழந்தைகளுக்கு தெளிவான பேச்சு வரவேண்டும் என்றால் சுத்தமான தேன் கொடுத்து பழக்கவேண்டும். நிறைய குழந்தைகளுக்கு தேன் கூட கொடுப்பது கிடையாது. ஜாம் வேண்டுமென்றால் நாம் குப்பி குப்பியாக வாங்கிக் கொடுப்போம் ஆனால் தேன் தரமாட்டோம். சுத்தமான தேனை வாங்கி நாக்கில் தடவிவிடுவது ஒரு அற்புதமான முறை.

Tonsils பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம். கரிசிலாங்கன்னி கீரையின் பொடியையும், அதிமதுரத்தையும் சம அளவு கலந்து வைத்துக்கொண்டு இதை அரை தேக்கரண்டி அளவு தேனில் கலது காலை, இரவு என்று இரண்டு வேளை குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டே வந்தோம் என்றால் Tonsils முழுமையாக சரியாகிவிடும், முழுமையாக குணமாகும். 

Primary Complex என்று சொல்லக்கூடிய மூச்சு ஒவ்வாமை நோய்க்கு குழந்தைகளுக்கு தூதுவலை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, அதிமதுரம், சித்தரத்தை இந்தப் பொருட்களை சமஅளவு கலந்து தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு மூலிகைக் கூட்டுப் பொடியாக இதை வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் அரைத்தேக்கரண்டி, இரவு அரை தேக்கரண்டி தேனில் கொடுத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் கண்டிப்பாக Primary Complex சரியாகிவிடும்.

இல்லையென்றால் சித்தமருத்துவக் கடைகளில் கிடைக்கக் கூடியது திப்பிலி ரசாயனம். திப்பிலி ரசாயனம் என்பது அதே சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கரஞ்சீரகம், காட்டுச்சீரகம், வெள்ளை மிளவு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, மாசிக்காய் இதெல்லாம் சேர்த்து செய்யக்கூடிய ஒரு அற்புதமான லேகியம். நல்ல காரமாக இருக்கும், இந்த லேகியத்தை ஒரு குழந்தைக்கு தொடர்ந்து கொடுத்தீர்கள் என்றால் மூச்சுத்திணறல் (Wheezing) சரியாகும்.

அம்மா, அப்பாவிற்குத்தான் தன்னுடைய குழந்தை Wheezing வரும்பொழுது தான் என்னாச்சோ, ஏதாச்சோ என்ற பதறல், பயம் எல்லாமே பெற்றோருக்கு வரத்தான் செய்யும். எனவே வரும் முன் காப்பதற்குத்தான் மூலிகை. வரும் முன் காப்பதற்குத்தான் சித்தமருத்துவம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து, வருவதற்கு முன்பே கொடுக்க வேண்டும். எப்பொழுதுமே வளரக் கூடிய குழந்தைக்கு என்னவேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று சொல்லி கண்டதைக் கொடுத்து உடம்பைக் கெடுப்பதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது. அதே போல் குழந்தைகள் நலமேம்பாடைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கக் கூடிய food suppliments ஐ தயவுசெய்து தராதீர்கள். 

Food Suppliments ஐ நாமே பண்ணலாம். 

நவதானியங்கள் எள், கொள்ளு, பச்சைப்பயிறு, காராமணி, சுண்டல், வரகு, தினை, குதிரைவாலி, பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூப்ட் இதெல்லாமே சேர்த்து ஒரு நவதானிய சத்து மாவுமாதிரி, சிறுதானிய சத்துமாவு மாதிரி நீங்கள் தயார் செய்து அதை உங்களுடைய குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தலாம். நீங்கள் கவர்ச்சி கரமான புட்டிகளில் வரக்கூடியவற்றை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதில் செயற்கையாக சில இராசாயனபொருட்கள், செயற்கையாக இருக்கக் கூடிய சில வைட்டமின்கள் எல்லாவற்றையும் கலந்து கொடுக்கும் பொழுது ஒவ்வாமை என்பது மிக எளிதாக உருவாகும். 

அதில் காபி சுவை, வெண்ணிலா சுவை இருக்கிறதால் மற்றும் இன்னும் சில சுவைகள் எல்லாம் சேர்ப்பதனால் குழந்தைகள் லயமாக சாப்பிடும், அப்படியே சாப்பிடுவேன் என்று சாப்பிட்டு அப்படியே வயிறு உபாதை உண்டாகி வயிறு கழிச்சலுக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கையை நான் அறிவேன். அந்தமாதிரி எல்லாம் இருக்கக்கூடாது. இந்த மாதிரி நவதானிய சத்துமாவு, சிறுதானிய சத்துமாவு தயார்செய்து அதை குழந்தைகளுக்கு இனிப்பு உருண்டையாக பணவெல்லம் சேர்த்து தொடர்ந்து செய்து கொடுக்கலாம். அந்த மாதிரி செய்து கொடுக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். 

சூடான பாலில் இந்த மாவை சேர்த்து நன்றாக காய்ச்சி, மறுபடியும் காய்ச்சி கஞ்சி மாதிரி கொடுத்து பழக்கலாம். ஆரோக்கியம் சார்ந்த முறைக்கு நல்ல active ஆன நல்லசத்து தரக்கூடிய ஊட்டமான உணவுகளைக் கொடுக்கும் பொழுது குழந்தையின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும், எந்தத் தடங்கலும் இல்லாமலும் இருக்கும்.

10 வயது வரைக்கும் ஒரு குழந்தையை வளர்ப்பதற்குத்தான் நாம் சிரமப்பட வேண்டும். 10 வயதிற்குப்பிறகு அந்தக் குழந்தைக்கு endocrinology சிறிது சிறிதாக அபிவிருத்தியாக ஆரம்பித்துவிடும். அதாவது ஒரு குழந்தை மழலைக்குரலில் கீச்சுக்குரலில் அம்மா,அப்பா என்று ஒரு பெண் பேசுவது போல பேசிய ஒரு பையன் திடீரென்று குரல் உடையக் கூடிய சூழல் 10 வயதிற்குப் பிறகு பார்த்தோம் என்றால் அந்த மழலைக்குரல் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து முகத்தில் லேசாக மீசை அரும்புவது இந்த மாதிரி முடியெல்லாம் வளர ஆரம்பிக்கும் பொழுது நாளமில்லா சுரப்பு மண்டலம் தூண்டப்படுகிறது. 

அந்த மாதிரி நாளமில்லா சுரப்பி தூண்டும்பொழுது அவனுக்கென்று தனியாக ஒரு ஆளுமை வரும் வரைக்கும் ஒரு குழந்தையை குழந்தையாக வளர்ப்பது, குழந்தைக்கான ஆரோக்கியத்திற்கு நல்ல உணவுகளையும், நல்ல மூலிகைகளையும் மருந்தாக மாற்றிக் கொடுப்பது எல்லாமே பெற்றோர்கள் செய்யக்கூடிய கடமை. 

கண்ட கண்ட மருந்துகளைக் கொடுப்பது, அடிக்கடி குழந்தைக்கு காய்ச்சல் வருகிறது என்பதற்காக நிறைய ஊசிகள் போடுவது இதெல்லாம் தேவையில்லாத ஒரு செயல். எப்பொழுதுமே ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வருவது, தலைவலி வருவது, வாந்தி-பேதியாவது இயல்பாக வரக்கூடிய ஒன்று. இது எல்லாமே வருகிறது என்றால் அந்தக் குழந்தைக்கு ஏதோ ஒரு ஒவ்வாமை இருக்கிறது என்று தான் அர்த்தம். அந்த ஒவ்வாமை என்பது உணவு ரீதியாகத்தான் வருகிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் முழுமையாக தெளிவாக உணர்ந்துகொண்டு அவர்களுக்குத் தரவேண்டிய உணவுகளை முறையாக பட்டியலிடவேண்டும்.

# ஒரு குழந்தைக்குத் தரக்கூடிய உணவில் கண்டிப்பாக கீரை அவசியம் இருக்க வேண்டும்.

# ஒரு குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய உணவில் உலர் பருப்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். 

# ஒரு குழந்தைக்குத் தரக்கூடிய உணவுகளில் கோதுமை சார்ந்த உணவுகள் நிறைய வரவேண்டும், 

# சிறுதானியம் சார்ந்த உணவுகள் நிறைய வரவேண்டும்.

# இட்லி ஓரளவிற்கு வரலாம். இடியாப்பம் வரலாம், அதீதமாக தரக்கூடிய தோசையின் அளவை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. 

மிக எளிமையாக வேலை முடியவேண்டும் என்பதற்காக வாரத்திற்கு ஒரு நாள் தோசைக்கு மாவை ஆட்டி அதை ஒரு வாரம் பயன்படுத்தக் கூடிய தாய்க்குலங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உண்டு. எப்பவுமே காலை என்றாலே இரண்டு தோசை. இரண்டு கரண்டி மாவை லேசாக எண்ணெய் போட்டு தடவிக் கொடுத்தால் அதற்குப் பெயர் தோசை என்று கொடுத்தோம் என்றால் கண்டிப்பாக அதில் சத்து வராது.

பள்ளிக்குக் கொடுக்கக்கூடிய சிற்றுண்டிகள், புளித்த மாவில் செய்த தோசை, மதியம் கொண்டு சென்ற தயிர்சாதம் எல்லாமே சேர்ந்து கபத்தை அதிகப்படுத்தும். கபம் அதிகமாகும் பொழுது கண்டிப்பாக குழந்தைகள் தடுமாறுவார்கள், திணறுவார்கள், செறிவு (concentration) மாறும், எனவே நிறைய சிக்கல்கள் வரக்கூடிய ஒரு சூழல் உண்டு. ஆக நான் சொன்ன உணவுப் பொருட்களையும், மருந்துப்பொருட்களையும் பெற்றோர்கள் பழக்கப்படுத்துங்கள். 

பத்து வயது வரையும் அவர்கள் குழந்தைகள் தான். அந்த மழலை அமுதத்தை ஒழுங்காக முறையாக பாவித்து ஆரோக்கியமான ஒரு வாழக்கைக்கு அடித்தளம் செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் பருவத்துக்கு போகும் பொழுது நல்ல தெளிவான மனநிலையோடு ஆரோக்கியமான சூழலோடு அவர்களுக்கான எதிர்காலத்தை அவர்களே நிர்ணயிக்கக் கூடிய சூழல் கண்டிப்பாக உண்டாகும். 

எனவே குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்கள் நினைத்தால் கண்டிப்பாக சாத்தியமாகும். நிறைய மருந்துகள் சொல்லியிருக்கிறேன், தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

நன்றி

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94 வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667

குழந்தை வளர்ப்பு - முதல் பாகம்
http://reghahealthcare.blogspot.com/2015/07/blog-post_22.html


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com