ஸ்டீராய்டு (Steroid) பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்!



உடனடியாக குணமடைவது உடலுக்குக் கேடா?

ஸ்டீராய்டு (Steroid) பற்றி ரிந்துக்கொள்ளுங்கள்!


டாக்டர்களின் கையெழுத்து மருந்துக் கடைக்காரருக்கு மட்டுமே புரிவது ஏன்?


“என் வசூல் முடிஞ்சிருச்சு. இப்ப உன் நேரம்'' என்று டாக்டர், மருந்துக் கடைக்காரருக்கு உணர்த்துகிறாராம்.

வாட்ஸப்பில் வந்த இது, நகைச்சுவையாக இருந்தாலும், இன்றைய நிஜமும் இதுதான்.

சேவையாக நினைத்துச் செய்யப்பட வேண்டிய மருத்துவம், இன்று பணம் கொழிக்கிற பிசினஸ்.மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்ட, மருத்துவர்கள் கையாள்கிற டெக்னிக்குகள் சொல்லி மாளாதவை.

மக்களுக்கு வேண்டியதெல்லாம் நோய் உடனடியாக குணமாக வேண்டும். அப்படிக் குணப்படுத்துகிற டாக்டர் அவர்களைப் பொறுத்த வரை கைராசிக்காரர்.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போதே நோய் குணமான உணர்வை உண்டாக்கும் மருத்துவர்கள் இன்று எக்கச்சக்கம். அதற்கு அவர்களது திறமையோ, அனுபவமோ காரணமில்லை. 

பின்னே..?

அவர்கள் தரும் ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்!

அதென்ன ஸ்டீராய்டு?


ஸ்டீராய்டு என்பது நோயைக் குணமாக்கும் மருந்தல்ல. மறைக்கும் மருந்து. ஆஸ்துமா அதிகமாகி, திணறத் திணற ஆஸ்பத்திரிக்கு போகும் ஒரு நபர், ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சராசரி நிலைக்குத் திரும்புவார். அந்த நேரத்துக்கு அவரது ஆஸ்துமா தீவிரம் மறைக்கப்பட்டதே தவிர, குணமானதாக அர்த்தமில்லை. ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உண்டாகும் பயங்கரங்கள் ஏராளம்.

# அனாபாலிக் ஸ்டீராய்டு, 

# கார்டிகோ ஸ்டீராய்டு 

என ஸ்டீராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது அவர்களுக்கு உடனடியாக ஒரு தெம்பை, உற்சாகத்தை, தசைகளுக்கு வலுவைத் தரக் கூடியது.விளையாட்டு வீரர் பென் ஜான்சன், போட்டியின் போது போதை மருந்து உட்கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சர்ச்சைக்குள்ளானது கூட இந்த வகை ஸ்டீராய்டு காரணமாகத்தான். இரண்டாவது வகை ஸ்டீராய்டு, மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுவது. இதுவும் ஆபத்தே.

இந்தி நடிகர் அம்ஜத் கானை ஞாபகம் வைத்திருப்பவர்களுக்கு அவரது மாமிச மலை போன்ற உடல் கட்டாயம் நினைவை முட்டும். உடல் நலக் கோளாறு ஒன்றுக்கு அவர் நீண்ட நாட்களாக உட்கொண்ட ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்தான் அதற்குக் காரணம் என்பது பிறகு கண்டறியப்பட்டது. நம்மூரில் நடிகர் அஜீத், முதுகுவலிக்காக உட்கொண்ட மருந்துகள் கூட ஸ்டீராய்டு கலந்தவையாம். அதனால் தான் இடையில் சில நாட்களுக்கு அவரது உடல் எக்குத்தப்பாக பெருத்துப் போனதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. 

இப்படி நிறைய உதாரணங்களைப் பட்டியலிடலாம் ஸ்டீராய்டு பாதிப்புகளுக்கு.‘‘ஸ்டீராய்டு மருந்துகள் நல்லதா, கெட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் ஸ்டீராய்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்’’ என்கிறார் இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன். 

‘‘தைராய்டு, இன்சுலின் போல நம் உடலில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன்தான் ஸ்டீராய்டு (Steroid). 
.

உடல் நலக் குறைவான அந்த நேரங்களில் ஸ்டீராய்டு ஹார்மோனின் அமைப்பில் உருவான மாத்திரைகளையோ, ஊசிகளையோ எடுத்துக் கொள்கிறோம் இவைதான் ஸ்டீராய்டு மருந்துகள். 

இந்த ஸ்டீராய்டு ஹார்மோன் நம் உடலில் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களுக்கு மேல் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பியிலும், இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் விதைப்பை மற்றும் கருப்பைகளிலும் தயாராகிறது. அட்ரினல் சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனை கார்டிகோ ஸ்டீராய்டு (Cortico steroid) என்கிறோம். பொதுவாக நாம் ஸ்டீராய்டு என்று சொல்வது இந்த கார்டிகோஸ்டீராய்டு ஹார்மோனைதான். உடலில் சோடியம் அளவைப் பராமரிப்பதில் கார்டிகோ ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

இதில் உற்பத்தியாகும் இன்னொரு முக்கிய ஹார்மோனான கார்டிசோல் ஹார்மோன் மன அழுத்தத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய இடம் பெறுகிறது. பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோனை Androgenic என்கிறோம். செக்ஸ் ஹார்மோன் என்று சொல்லப்படும் இந்த ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன் தான் பாலியல் சார்ந்த செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது’’ என்கிறார் சுப்ரமணியன் சுவாமிநாதன். 
.

ஸ்டீராய்டு மருந்துகள் பற்றித் பேசத் தொடங்குகிறார் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சிறப்பு மருத்துவரான ஸ்ரீதரன். 

‘‘நாள்பட்ட ஆஸ்துமாவுக்கு ஸ்டீராய்டு மருந்தை இன்ஹேலராக, நெபுலைஸராக கொடுக்கும்போது ஆஸ்துமாவிற்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது. சோரியாசிஸ், ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் மற்றும் வலி, வேதனை, வீக்கம் போன்றவற்றை தற்காலிகமாக குறைக்க ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகிறது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு இது நம் உறுப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டு புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் வேகத்தைத் தணித்து ஒவ்வாமையைப் போக்கவும் ஸ்டீராய்டு மருந்துகள் நிச்சயம் தேவை. 

(உறுப்பு மாற்று சிகிச்சைக்குப்பின் புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும் என்பதை ஆங்கில மருத்துவர்களே ஒப்புக்கொள்கின்றனர். நமது உடலானது ஒருபோதும் அந்நிய பொருட்களையோ, உறுப்புக்களையோ ஏற்றுக்கொள்ளாது.)

சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கும், வலி, வீக்கத்தைக் குறைக்கவும் ஸ்டீராய்டு ஆயின்ட்மென்ட்டாக கொடுக்கப்படுகிறது. ரத்தப்புற்று நோய்கள், ரத்த தட்டணு குறைபாடு நோய்கள், குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், குடல் அழற்சி நோய்கள், மூளையில் ஏற்படும் கட்டி ஆகியவற்றுக்கும் அறுவைசிகிச்சைக்கு முன் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மூளையில் ஏற்படும் காசநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் ஸ்டீராய்டு கொடுக்கப்படுகிறது’’ என்பவர், ஸ்டீராய்டு மருந்துகள் எப்போது பிரச்னையாகிறது என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார். 
.

‘‘ஸ்டீராய்டு மருந்துகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஸ்டீராய்டை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்கு 

# உடலில் சோடியம் அளவு அதிகமாகி உடலில் நீர் தங்கிவிடும். 

# பொட்டாசியம் அளவு குறைந்தால் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கும். 

# எடை கூடும், 

# நோய் எதிர்ப்பு சக்தியின் வேகத்தைத் தணிப்பதால் நோய்த்தொற்று எளிதில் வரும், 

# முகம் வீங்கும், 

# சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமாகும், 

# கண்புரை வரும் வாய்ப்பு அதிகம், 

# எலும்புகள் பலவீனமடைந்து முறியும். 

அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துகிற மருத்துவர்களைக்கூட நோயாளிகள் அறிந்து தவிர்க்க வேண்டும். 
.

விளையாட்டுத்துறையில் ஸ்டீராய்டு மருந்தை உடல் கட்டமைப்புக்காகவும், ஊக்க மருந்தாகவும் சிலர் தவறாகப் பயன்படுத்தி விடுகிறார்கள். ஆனால், இது சட்ட விரோதமானது மட்டுமல்ல... உயிருக்கு ஆபத்தானதும் கூட. இதனால், 

# உயர் ரத்த அழுத்தம், 

# கெட்ட கொலஸ்ட்ரால், 

# கல்லீரல் சேதம், 

# இதயம் செயலிழப்பு, 

# ஹார்மோன் குளறுபடிகள், 

# மன அழுத்தம், 

# மூர்க்கத்தனம் உண்டாவது என்று பல பிரச்னைகள் உண்டாகும். 

# விந்தணுக்கள் உற்பத்தி குறைவு, 

# மலட்டுத்தன்மை 

போன்ற குறைபாடுகளையும் நாமே விலை கொடுத்து வாங்கியதுபோல் ஆகிவிடும்’’ என்கிறார் ஸ்ரீதரன்.
.

‘‘ஸ்டீராய்டு மாத்திரைகள் என்றால் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒரு மாத்திரையைப் பார்த்த உடனே இது ஸ்டீராய்டு என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியாது. தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்கள் அது ஸ்டீராய்டா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதிலும் தவறில்லை. முக்கியமாக மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்துகள், மாத்திரைகள் வாங்கும் பழக்கம் நம்மிடம் நிறைய உண்டு. இதுபோல ஓவர் தி கவுன்டராக மாத்திரை வாங்கும்போதும் ஸ்டீராய்டு மருந்துகளை மருந்துக்கடைக்காரர்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

அதனால், மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை வாங்குவதை முழுவதும் தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஸ்டீராய்டை ஒருமுறை பரிந்துரைத்தால், அடுத்த முறை மருத்துவரைப் பார்க்காமலே தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் சிக்கலை உண்டாக்கும். தொடர்ச்சியான ஃபாலோ அப் அவசியம்’’ என்று சொல்லும் சுப்ரமணியன், இன்னொரு முக்கியமான பிரச்னை பற்றியும் குறிப்பிட விரும்புகிறார்.
.

‘‘மருத்துவத்தைப் பொறுத்த வரை வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. வெளிநாடுகளில் நோயாளியையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள், கற்றுக் கொடுப்பார்கள், விவாதிப்பார்கள். நோயாளிக்கு இத்தனை விளக்கம் ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. இதனால் நோயாளிகளுக்கும் என்ன நோய், எந்த நிலையில் இருக்கிறது, என்ன மருந்துகள் சாப்பிடுகிறோம், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும். 

இந்தியாவில் இதுபோல் நோயாளிக்குக் கற்றுக் கொடுக்கிற மருத்துவர்கள் மிகவும் குறைவு என்பது வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். ஸ்டீராய்டு மருந்துகள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய மருந்து என்பதால் நோயாளிக்கும் கற்றுக் கொடுத்தல் மிகவும் அவசியம். அப்போதுதான் ஸ்டீராய்டை ஒரு தற்காலிக மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும். இல்லாவிட்டால், ஸ்டீராய்டு உடனடியாக நல்ல பலனைக் கொடுக்கிறது என்று பழக்கமாகிக் கொண்டுவிடுவார்கள். ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்தும் மருத்துவர்களிடமும் தெளிவான திட்டம் இருக்க வேண்டும். முடிந்தவரை ஸ்டீராய்டு மருந்துகளின் வீரியத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.

மாற்று மருந்துகளைப் பயன்படுத்தி ஸ்டீராய்டு பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். நோயாளிகளும் டாக்டரே மறந்துவிட்டால் கூட ‘பவரை குறைக்கிறேன்னு சொன்னீங்க டாக்டர்’ என்று மருத்துவருக்கு நினைவுபடுத்த வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார் சுப்ரமணியன் சுவாமிநாதன்.
.

மருந்துச்சீட்டு இல்லாமல் வாங்கும்போதும் ஸ்டீராய்டு மருந்துகளை மருந்துக்கடைக்காரர்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை வாங்குவதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.
.

குழந்தைகளுக்கு கூடவே கூடாது!


# ஆஸ்துமா, 

# வீசிங், 

# அலர்ஜி, 

# சருமப் பிரச்னைகள் 

போன்றவற்றிற்கு பல மருத்துவர்களும், இந்தப் 
பிரச்னைகளின் ஆரம்பக் கட்டத்திலேயே உடனடி நிவாரணம் தேவை என்பதற்காக ஸ்டீராய்டு கொடுத்து விடுகிறார்கள். சில நிமிடங்களிலேயே நோயாளிக்கு குணம் தெரியும். 

குழந்தைகளுக்கு ஸ்டீராய்டு தரவே கூடாது. ஒரு முறை மருத்துவரிடம் போய் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுக் குணம் தெரிந்ததும், அடுத்தடுத்த முறைகள் அதே பிரச்னை வரும் போது தாமாகவே மருந்துக் கடைகளில் ஸ்டீராய்டு கலந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிடும் நபர்கள் நிறைய பேர். இப்படி நீண்ட நாட்களுக்கு ஸ்டீராய்டு எடுத்துக் கொள்கிற போது, அது 

# ஹைப்பர் டென்ஷன், 

# இதயக் கோளாறு, 

# உடல் பெருத்துப் போதல், 

# குறிப்பாக முகம் ஊதிப் போவது, 

# கல்லீரல் பழுது, அதன் விளைவாக மஞ்சள் காமாலை, 

# பெண்களுக்கு உடலெங்கும் ரோம வளர்ச்சி, 

# மார்பகங்கள் சிறுத்துப் போதல், 

# கிளிட்டோரிஸ் எனப்படுகிற அந்தரங்க உறுப்பின் ஒரு பகுதி விரிவடைதல், 

# குரலில் மாற்றம், 

# மாதவிலக்குக் கோளாறு, 

# அதிக கோபம், 

# படபடப்பு, 

# தற்கொலை எண்ணம், 

# புற்றுநோய், 

# நீரிழிவு நோய், 

# சிறுநீரகக் கோளாறு, 

# பக்கவாதம், 

# ஆண்மைக் குறைபாடு, 

# முகம், கழுத்துப் பகுதிகளில் பருக்கள், 

# வழுக்கை, 

# ஆண்களுக்கு மார்பகங்கள் பெருத்துப் போவது... 

இப்படிப் பல பயங்கர பின் விளைவுகளை உண்டாக்கும். இவற்றில் சில ஸ்டீராய்டை நிறுத்தியதும் குணமாகலாம். பல உபாதைகள் அதற்குப் பிறகும் நிற்காமல் தொடர்வதும் உண்டு. 

*மருத்துவர்களிடம் செல்லும் போதே ஸ்டீராய்டு கலந்த மருந்துகளைத் தவிர்க்குமாறு சொல்லலாம். எந்தப் பிரச்னைக்கும் சரியான மருத்துவரிடம் சிகிச்சை 
பெறுவது பாதுகாப்பானது. 
.

சித்த மருத்துவத்திலும் ஸ்டீராய்டா?

அலோபதி மருந்துகளைப் பொடி செய்து சித்த மருந்து என்கிற பெயரில் கொடுக்கும் சில போலி சித்த மருத்துவர்களும் இருக்கிறார்கள். அது போன்ற போலி மருத்துவர்கள் சிலர் இப்படி ஸ்டீராய்டு கலந்த அலோபதி மருந்துகளை சித்தா உடன் சேர்த்துக் கொடுப்பதுண்டு. 

நம்பிக்கையான சித்த மருத்துவர்கள் தவறு செய்வதில்லை. சித்த முறையில் தயாரிக்கப்படுகிற சில மருந்துகள், உதாரணத்துக்கு தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் மாதிரியான உலோகத் தயாரிப்புகளில் மூலிகைகள் கலந்து செய்யப்படுகிற போது இயற்கையாவே சில ஸ்டீராய்டுகள் உருவாகும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், இப்படிப்பட்ட மருந்துகளைப் பரிந்துரைக்கிற சித்த மருத்துவர், பக்க விளைவுகள் வராமல் இருக்க பத்தியம், உணவுக் கட்டுப்பாடு என சில விஷயங்களையும் சொல்லித் தருவார். 

பத்தியம்இல்லாத, பக்க விளைவில்லாத சித்த மருத்துவம் என வரக்கூடிய விளம்பரங்கள் போலியானவையாகவே இருக்கும். உணவுக் கட்டுப்பாடு, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்கிற மாதிரி சில விஷயங்களை சரியாக செய்தால், பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். 

எல்லாத் துறைகளிலும் புல்லுருவிகள் இருக்கிற மாதிரி, சித்த மருத்துவம் என்ற பெயரில் போலித்தனம் செய்கிற ஆட்களும் இருக்கிறார்கள். மக்கள்தான் எச்சரிக்கையாகி, சரியான, நம்பிக்கையான டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
.

நன்றி

# இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்

# ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சிறப்பு மருத்துவரான ஸ்ரீதரன்

# டாக்டர் குங்குமம் இதழ்
.

(பொதுநலன் கருதி சில அத்தியாவசிய மாற்றங்களுடன் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது)

.

குறிப்பு:
.

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். 
.

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)
.

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:
.

.

Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

நோசிபோ எபெக்ட் (Nocebo effect)


நோசிபோ எபெக்ட் (Nocebo effect)

நன்றி - ச.நாகராஜன்


“மனம் என்பது சக்தி வாய்ந்த ஒரு கருவி. வியாதிக்கு எதிரான இந்தப் போராட்டமானது அணு அணுவாக உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஆக இரண்டினாலும் ஆனது" 

 – டேவ் லினிகர்


மனோசக்தியின் வலிமைக்கு உதாரணமாக ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றிக் கூறும் போதே அதற்கு எதிர்ப் பக்கமான நோசிபோ எபெக்ட் (Nocebo effect) பற்றியும் அறிய வேண்டியது அவசியமாகிறது.


18ஆம் நூற்றாண்டில் உருவான ப்ளேசிபோ என்ற சொல்லுக்கு “நான் இன்பம் தருவேன்” (I will please) என்று அர்த்தம். இதற்கு எதிர்மாறாக நெகடிவ் மனோநிலை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பது நோசிபோ விளைவு என்று கூறப்படுகிறது. நோசிபோ என்ற லத்தீன் வார்த்தைக்கு அர்த்தம் ‘நான் தீங்கு விளைவிப்பேன்’ (I will harm) என்பதாகும். 


கான்ஸர் நோயால் பாதிக்கப்பட்டோர் கீமோதெராபிக்கு முன்னர் வாந்தி எடுப்பதையும் ஒரு சாதாரண செடியைத் தொட்டவுடன் விஷச் செடியைத் தொட்ட பாதிப்பு வந்தது போல் சிலர் அலறுவதும் இதற்கு உதாரணங்கள். 


இதனால் பாதிக்கப்படுவோர் ஏராளம். உதாரணமாக, அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கேஸ் உலகெங்கும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இந்தச் சம்பவம் நியூ ஸயின்டிஸ்ட் இதழில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.


அலபாமாவைச் சேர்ந்த வான்ஸ் என்பவர் கல்லறை ஒன்றுக்குச் சென்று மந்திரவாதி ஒருவரைப் பார்த்தார். மந்திரவாதி, வான்ஸிடம் ‘நீ சீக்கிரமே சாகப் போகிறாய்’ என்று கூறி விட்டார். இதை நம்பி விட்ட வான்ஸுக்கு உடல்நலம் சில வாரங்களிலேயே படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. இறக்கும் நிலைக்கு வந்து விட்ட வான்ஸை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் உடல்ரீதியாக அவருக்கு எந்த நோயும் இல்லை என்று உறுதியாகக் கூறினர். வான்ஸின் மனைவி டாக்டர்களிடம் வான்ஸ் கல்லறைக்குச் சென்று மந்திரவாதியைச் சந்தித்ததையும் அவன் வான்ஸை சீக்கிரமே இறக்கப் போகிறாய் என்று கூறியதையும் சொன்னார். 


டாக்டர்களின் ஒருவரான டாக்டர் டோஹெர்டிக்கு ஒரு யோசனை உதித்தது. மறுநாள் வான்ஸ் தம்பதிகளை அழைத்த டாக்டர் டோஹெர்டி, தான் முதல் நாளன்று கஷ்டப்பட்டுத் தேடி மந்திரவாதியைச் சந்தித்ததாகவும் என்ன செய்தாய் என்று அவனை மிரட்டியதாகவும், கடைசியில் அவன் பயந்து போய் நடந்ததைக் கூறி விட்டான் என்றும் கூறினார். மந்திரவாதி ஒரு பல்லியை வான்ஸின் உடலுக்குள் செலுத்தி விட்டதாகவும், உடலின் உள்ளே இருக்கும் பல்லி படிப்படியாக வான்ஸின் உடலை அரிப்பதாகவும் டாக்டர் டோஹெர்டி கூறினார். அதற்கு மாற்று மருந்தைத் தான் தயாரித்திருப்பதாகவும் அந்த இஞ்ஜெக்‌ஷனை இப்போது போடப் போவதாகவும் கூறினார். வான்ஸுக்கு இஞ்ஜெக்‌ஷன் போடப்பட்டது. என்ன ஆச்சரியம், கஷ்டப்பட்டு பச்சையான பல்லி ஒன்றை வான்ஸின் உடலிலிருந்து எடுத்த அவர் அதை வான்ஸ் தம்பதியினரிடம் காண்பித்து இனி மந்திரவாதியின் பல்லி ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தோஷத்துடன் உரக்கக் கூவினார்.


வான்ஸ் அமைதியாக அன்று இரவு உறங்கினார். மறு நாள் காலையில் எழுந்த வான்ஸுக்கு ஒரே பசி. உடலில் வியாதியே இல்லை. சில நாட்களிலேயே பழையபடி ஆனார் வான்ஸ். டாக்டர் சொன்னது முழுப் பொய். பல்லியும் பொய், மாற்று மருந்தான இஞ்ஜெக்‌ஷனும் பொய், உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறிய பச்சைப் பல்லியும் பொய். பெரிய டிராமாவை நன்கு ‘செட்-அப்’ செய்து போட்டிருந்தார் டாக்டர்.


இந்த சம்பவத்தை வேறு நான்கு பேரும் உறுதி செய்த பின்னர் இது அந்த பிரபல விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டது. வூடு என்னும் மந்திரவாத வித்தை இப்படித் தான் மனதளவில் ஒருவரை வாட்டி வதைத்துக் கொல்கிறது. இந்த விளைவைத் தான் நோசிபோ எபெக்ட் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


ப்ளேசிபோ விளைவு சர்ஜரியைத் தவிர்க்கிறது. பருக்கள் மற்றும் தோல் மீது வரும் கட்டிகளைப் போக்க்குகிறது. காயங்களைக் குணப்படுத்துகிறது. இதற்கு மாறான நோசிபோ எபெக்ட் எதிரமறையான மனோசக்தியைத் தூண்டி விட்டு வாந்தி, காதில் இரைச்சல், பயம், நரம்புத் தளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு போன்றவற்றைத் தருகிறது.


இன்னொரு ஆய்வில் இறக்கப் போகிறோம் என்று நினைத்தவர்களையும், வியாதியினால் இறக்க மாட்டோம், மீண்டு வீட்டுக்கு போவோம் என்பவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இறக்கப் போகிறோம் என்று நம்பியவர்கள் இறந்தே போயினர்.


இதய நோய் வந்து விட்டது என்று நம்பும் பெண்களுக்கு சாதாரண இதய நோய் உள்ளவர்களை விட நான்கு மடங்கு அதிகம் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது. சீரான இரத்த அழுத்தம் மற்றும் நல்ல உடல்நிலையைக் கொண்டிருந்தாலும் இறப்பதன் காரணம் எதிர்மறை மனோசக்தியாக தாங்கள் இறக்கப் போகிறோம் என்ற அவர்களது (அவ)நம்பிக்கையே இதற்குக் காரணம்!


சாஸ் என்ற பெண் மருத்துவரின் சகோதரர் ஸ்டீவ். நுரையீரலில் கட்டி இருப்பதைக் கண்டு பிடித்த அவரது டாக்டர் தற்போது பயமில்லை என்றும் இன்னும் ஐந்து வருடங்கள் அவர் உயிர் வாழ்வார் என்றும் ஆறுதலாகக் கூறினார். ஸ்டீவ் டாக்டரை நம்பினார். சரியாக ஐந்து வருடங்கள் கழித்து ஒரு நாள் அவர் மாவி என்ற கடற்கரையில் நினைவின்றிக் கிடந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் நான்கு நிமிடங்கள் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லாமல் இருந்ததால் இறந்து போனார். அவரது நம்பிக்கையே அவரை ஐந்து வருடங்கள் உயிர் வாழ வைத்தது. அதுவே ஐந்து வருடங்கள் முடிந்தவுடன் அவரை “வழி அனுப்பி” வைத்தது.


இப்படி “நாள் குறித்து” ஆறுதல் சொல்லும் டாக்டர்கள் நோயாளிக்கு நல்லது செய்வதில்லை. பொதுவாக அவர்கள் தீங்கையே விளைவிக்கிறார்கள்.


இன்ஸ்டிடியூட் ஆஃப் நோயடிக் ஸயின்ஸஸ் (The Institiute of Noetic Sciences) ஆராய்ந்து பதிவு செய்த 3500க்கும் மேற்பட்ட கேஸ்கள் கூறுவது ஒரே ஒரு உண்மையைத் தான்! தீர்க்க முடியாத வியாதி என்று ஒரு வியாதி உலகத்திலேயே இல்லை. ஆனால் நமக்கு இந்த வியாதி குணமாகாது என்று மனிதன் நம்பும் நம்பிக்கையே அவனது வியாதியைக் குணமாக்காது செய்து விடுகின்றது.


டாக்டர் லிஸா ரான்கின் என்பவர் மைண்ட் ஓவர் மெடிசின்: ஸயிண்டிஃபிக் ப்ரூஃப் தட் யூ கேன் ஹீல் யுவர்செல்ஃப் (Mind Over Medicine: Scientific Proof That You Can Heal Yourself – Dr Lissa Rankin) என்ற தனது நூலில் மனத்தின் ஆதிக்கம் உடலில் அதிகம் உண்டு; அது தீராத வியாதிகளையும் தீர்த்து வைக்கும். நம்புங்கள், குணப்படுவீர்கள் என்கிறார்.


அந்த புத்தகத்தை வாசிக்க 
https://drive.google.com/open?id=0B2zArLcXi4WtTXZuREpENUdLNkE


ஆக ப்ளேசிபோ எபெக்ட் மற்றும் நோசிபோ எபெக்ட் பற்றி அறிந்து கொண்டோர் தெரிந்து கொள்ளும் ஒரு அறிவியல் உண்மை – மனோசக்தி மூலம் ஒருவர் சீரான உடல்நலத்தைப் பெற்று ஆக்கபூர்வமாக முன்னேறலாம் என்பதையே!


நன்றி : பாக்யா 4-9-2015 பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை




ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றி வாசிக்க இங்கே செல்லவும்...


http://reghahealthcare.blogspot.com/2016/02/placebo-effect.html



இப்போது புரிகிறதா ஏன் மருத்துவ வியாபாரிகள் நம்மை பயமுறுத்துகின்றனர் என்று?



குறிப்பு:


நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.


சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.


உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். 


ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?


இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.


மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.


(குறிப்பு : தயவு செய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


http://reghahealthcare.blogspot.in/

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/groups/reghahealthcare
https://www.facebook.com/groups/811220052306876


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect)




ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) 

நன்றி - ச.நாகராஜன்

“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!.... 
இத்தனை நாட்போல் இனியும் நின் இன்பமே
விரும்புவன், நின்னை மேம்படுத்திடவே 
முயற்சிகள் புரிவேன்….” 


- மகாகவி பாரதியார் 

இடைவிடாமல் விஞ்ஞானிகளில் பலர் ஆர்வமுடன் ஆராய்ச்சி செய்யும் ஒரு துறை மனோசக்தியின் வலிமை பற்றியது! அவர்களே எதிர்பார்க்காத பிரமிப்பூட்டும் முடிவுகளை அவர்களின் ஆராய்ச்சிகள் தந்துள்ளன.

இந்த மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஒன்று ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) என்பது.

ப்ளேசிபோ என்றால் என்ன? 

ஆறுதல் மருந்து என்று தமிழில் கூறலாம். ஒரு நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் வியாதி ஒன்றுக்கு உரிய அபூர்வ மாத்திரை அல்லது மருந்தைத் தருவதாகச் சொல்லி விட்டு அவருக்கு சாதாரண மாத்திரை ஒன்றைத் தருவார், ஆனால் அதன் நல்ல விளைவுகளோ நோயாளியிடம் அபாரமாக இருக்கும். இது தான் ப்ளேசிபோ எபெக்ட்!

பெயரளவில் மாத்திரையாக இருக்கும் ஒன்று உடல் ரீதியாக நோயாளி ஒருவரிடம் அபூர்வ விளைவை ஏற்படுத்த முடியுமா? தர்க்க ரீதியாக நிச்சயம் முடியாது என்று சொல்லி விட்டாலும் சோதனை செய்து பார்த்ததில் பல நோயாளிகள் நன்கு குணமடைந்து மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இதன் காரணம் மிக்க எளிமையான ஒன்று! நோயாளி அந்த மாத்திரை தன் உடலில் அற்புதமாக வேலை செய்கிறது என்று நினைப்பதனாலேயே அவர் குணமாகிறார்!

இதை நிரூபிக்கும் விதத்தில் நூற்றுக் கணக்கான சோதனைகள் உலகளாவிய விதத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றி வேடிக்கையான சோதனை ஒன்றை பிரின்ஸ்டன் பல்கலைக் கழக மாணவர்களில் சிலர் செய்து பார்த்தனர்.

தங்கள் வகுப்புத் தோழர்களை அழைத்து ‘விசேஷமான பார்ட்டி’ ஒன்றை அவர்கள் தந்தனர். பார்ட்டி என்றாலே மதுபானம் உண்டல்லவா? அனைவரும் மனம் மகிழ்ந்து அதில் கலந்து கொண்டனர்.

வழக்கமான பீரில் 5% ஆல்கஹால் இருக்கும். இவர்கள் கொடுத்த பானத்திலோ வெறும் 0.4% ஆல்கஹால் தான் “பெயருக்கு” இருந்தது. இந்தக் குறைந்த அளவு பானத்தை மதுபான வகையிலேயே சேர்க்க முடியாது. 

ஆனால் நடந்தது என்ன?

இதைக் குடித்த தோழர்கள் வழக்கமான பானத்தை அருந்தியிருப்பதாக நினைத்தனர். ஆட்டமும் பாட்டமுமாக வழக்கமான பீர் பார்ட்டியின் ஆர்ப்பாட்டத்திற்கும் அதிகமாக அவர்களின் நடத்தை அமைந்தது.

இந்த முடிவால் பதறிப் போன உலகின் பெரும் மருந்துக் கம்பெனிகள் நரம்பு மண்டலத்தில் ப்ளேசிபோ எந்த வித விளைவை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி ஆராய ஆரம்பித்து விட்டன!

வெறும் சர்க்கரைக் கட்டிகள் பெரிய வேலையைச் செய்தால் அவர்கள் கம்பெனிகள் திவாலாகி விடுமே! உலகின் எண்ணெய் கம்பெனிகளை விட அதிகமாக விற்பனை செய்து லாபம் ஈட்டும் மருந்துக் கம்பெனிகள் பதறுவதில் வியப்பே இல்லை!

சக் பார்க் என்பவர் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர். மனவிரக்தியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவரால் வேலை செய்யவே முடியவில்லை. அவரிடம் மருத்துவர், “இதோ இது ஒரு சர்க்கரைக் கட்டி தான். சாப்பிடுங்கள் பலன் அளிக்கும்” என்று வேடிக்கையாகக் கூறியவாறே ஒரு ப்ளேசிபோ மாத்திரையைத் தந்தார்.

ஆனால் அதைச் சாப்பிட்ட சக் பார்க்கோ, ‘மருத்துவர் விளையாட்டாக ஏதோ கூறுகிறார், தான் சாப்பிட்ட மாத்திரை சிறந்த ஒன்று’, என்று நினைத்தார்.

விளைவு, அவர் மனச் சோர்வு போயே போனது! “நீங்கள் உண்மையிலேயே சர்க்கரைக் கட்டியைத் தான் சாப்பிட்டீர்கள்” என்று அவரிடம் கூறிய போது அவர் வியந்தே போனார்!

பாஸிடிவ் திங்கிங் வேலை செய்யும் என்பதை புன்முறுவல் பூத்து மருத்துவர்கள் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் பல சோதனைகள் நோயாளிகளைக் குணமாக்கியதைக் கண்டவுடன் அவர்கள் PET ஸ்கானர்கள், எம் ஆர் ஐ ஆகியவற்றின் மூலமாக இந்த சிகிச்சை முறையை ஆராய ஆரம்பித்தனர். சமீபத்திய ஆய்வு முடிவுகள் ப்ளேசிபோ மாத்திரையைச் சாப்பிட்ட ஒருவரின் மூளை அதிகமான டோபமைனைச் (Dopamine) சுரக்கிறது என்று கண்டுபிடித்துள்ளன. நோயாளிகள் ப்ளேசிபோ மாத்திரையை எடுத்துக் கொண்ட போது சரியான மாத்திரையைத் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டவுடன் இந்த அபூர்வ விளைவு ஏற்படுகிறது!

இதனால் சரியான மாத்திரை உண்மையில் என்ன விளைவை எப்போது ஏற்படுத்தும் என்பதை ஆராய்வதும் விஞ்ஞானிகளின் கடமையாக ஆகி விட்டது.

மனோசக்தி உடலின் மீது பெரிய ஒரு வலுவான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதையே ப்ளேசிபோ சோதனை நிரூபிக்கிறது.

கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் டார் வேகர் (Tor Wager), “ப்ளேசிபோ மூளையில் பல செய்முறைகளைத் தூண்டி உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை விளக்க ஒரு உதாரணத்தைக் கூறலாம். இரவு நேரத்தில் வாசலில் திடீரென ஒரு நிழலுருவம் தோன்றுகிறது. உடனே உங்கள் விழிகள் விரிகின்றன. உடல் எச்சரிக்கை நிலையை அடைகிறது; உடம்பெல்லாம் வியர்க்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்த மறு நிமிடம் அது உங்கள் கணவர் தான் என்று தெரிந்தவுடன் அரை வினாடியில் மகிழ்ச்சி மேலோங்கி உடல் பூரித்து பயம் போயே போய் விடுகிறது! நம்பிக்கை மாறியவுடன் உணர்ச்சிகள் மாறுகின்றன. ஆனால் இப்போது எதிர் கொள்ள வேண்டிய விஷயம் எப்படி இந்த அபூர்வமான வலிமை வாய்ந்த ‘நம்பிக்கை மாற்றத்தை’ ஏற்படுத்துவது என்பது தான்!” என்று விளக்கமாக இது பற்றி இப்படிக் கூறினார்!

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தன்னார்வத் தொண்டர்களிடம் ஒரு விநோதமான சோதனை நடத்தப்பட்டது. லாரா டிப்பிட்ஸ் என்ற பெண்மணிக்கு வலது தோளிலும் கையிலும் தாங்கமுடியாத வலி. அவரை தானே நேரில் ப்ரெய்ன் வேவ்களை ஸ்கானரில் பார்க்க ஏற்பாடு செய்தனர். வலி தசைகளில் இல்லை அல்லது காயம் அடைந்த கையில் இல்லை. அது மூளையில் இருக்கிறது” என்றார் அந்தப் பெண்மணி! “ஒரு சிக்னல் காயப்பட்ட இடத்திலிருந்து கிளம்பி மூளைக்குச் செல்கிறது. அதை மூளை வலி என்று “எடுத்துக் கூறுகிறது”! என்கிறார் அவருடைய மருத்துவர்.

எந்த விதமான எண்ணம் வலியை உண்டாக்குகிறது, எது வலியை நீக்குகிறது என்பதையும் அவர் ஆராய ஆரம்பித்தார். மனச் சித்திரங்கள் ஓரளவு நல்ல பலனைத் தருகின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.

“ஸ்கானரில் வலி ஏற்படும் மூளைப் பகுதிகளைப் பார்த்து நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும் என்று நினைக்கும் போதே பாதி வலி போய் விடுகிறது. இது அதிசயமாக இருக்கிறது” என்றார் லாரா.

ஆக அறிவியல் சோதனைகளின் முடிவுகளால் மருத்துவர்களும் கூட மனோசக்தி உடலின் மீது வலுவான நல்ல ஆதிக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூற ஆரம்பித்துவிட்டனர். அதாவது MIND OVER BODY என்பது நிரூபணமாகி வருகிறது!
ஆறுதல் மருந்தான ப்ளேசிபோ அற்புத மருந்தாக அமைவது மனோசக்தியின் மூலமாகத் தான்!

நன்றி : பாக்யா 28-8-2015 பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை

இப்போது புரிகிறதா எந்த வியாதியையும் குணப்படுத்த முடியாவிட்டாலும் ஆங்கில மருத்துவத்திற்கு ஏன் இவ்வளவு வாடிக்கையாளர்கள் என்று? http://reghahealthcare.blogspot.in/2012/09/1940.htmlஎல்லாம் ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) இன் மகிமைதான்.

மனோசக்தியின் வலிமைக்கு உதாரணமாக ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றிக் கூறும் போதே அதற்கு எதிர்ப் பக்கமான நோசிபோ எபெக்ட் (Nocebo effect) பற்றியும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

நோசிபோ எபெக்ட் (Nocebo effect) பற்றி வாசிக்க இங்கே செல்லவும்...
http://reghahealthcare.blogspot.in/2016/02/nocebo-effect.html

குறிப்பு:

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். 

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : தயவு செய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in/
https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/groups/reghahealthcare
https://www.facebook.com/groups/811220052306876

Thanks & Regards,
   Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com