காய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை!

காய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை!

காய்ச்சலுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தால் உடல் வலி மற்றும் கேன்சர் கட்டிகளை தவிர்த்திடலாம்!




வியாதிகள், கிருமிகள், சத்துக்கள் பெயரை சொல்லி பலவித வியாபாரங்கள் நம்மைச்சுற்றி நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொண்டால் எதைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை என்கிற கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பதே இந்த பதிவின் நோக்கம்.

இந்த பதிவை Printable Format இல் நகல் எடுக்க விரும்பினாலோ நண்பர்களிடம் Pdf file ஆக பகிர்ந்துகொள்ள விரும்பினாலோ இந்த https://goo.gl/3cLYUZ முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் நபருக்கு எந்த விதமான உதவிகள் 
  • முதலில் காய்ச்சல் வருவதைக் கண்டு பயப்பட தேவையில்லை. ஏனென்றால் எல்லா காய்ச்சல்களுமே உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகள் மற்றும் கழிவுகளுக்கு எதிராக நம் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுதான்.
  • காய்ச்சல் ஏற்பட்ட நபருக்கு செரிமான சக்தி குறைந்து போயிருக்கும். ஏனென்றால் உடலின் முழு சக்தியும் திரட்டப்பட்டு நோயெதிர்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும். அதனால் பசி இருக்காது. காய்ச்சல் முழுமையாக குறையும் வரை எந்த உணவையும் கட்டாயப்படுத்தி கொடுக்கக்கூடாது. ஒருவேளை காய்ச்சல் ஏற்பட்ட நபர் ஏதேனும் உணவையோ பானத்தையோ விரும்பிக் கேட்டால் தாராளமாகக் கொடுக்கலாம்.
  • காய்ச்சல் என்பதே நமது உடலின் பராமரிப்பு வேலை தான். எனவே அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக செல்போன், டிவி போன்றவற்றை தவிர்த்துவிட்டு நம் உடலிற்கு முழு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம்.
  • காற்றை மாசுபடுத்துவதால் ரசாயன கொசுவிரட்டிகளை ஒருபோதும் பயன்படுத்க் கூடாது.
  • நமது உடலின் பராமரிப்பிற்காகத் தான் உடல் வெப்பமடைகிறது. எனவே காய்ச்சலின்போது ஈரத் துணியால் உடலில் பத்து போடவோ ஒத்தடம் கொடுக்கவோ கூடாது. அதே போல் உடலின் வெப்பத்தை எந்தக் கருவி கொண்டும் அளக்கக் கூடாது.
  • தாகம் முழுமையாக ஏற்பட்ட பின்பு மெதுவாக பசியுணர்வு தெரிய ஆரம்பிக்கும். பசி ஏற்பட்ட பின்பு நீர்த்த உணவுகளில் துவங்கி, அடுத்தடுத்த வேளைகளில் படிப்படியாக திட உணவுகள் கொடுக்கலாம்.
  • கண்களில் வலி, எரிச்சல் போன்றவை ஏற்பட்டாலோ நாக்கு கசந்தாலோ நமது கல்லீரலிற்கு போதிய ஆற்றல் இல்லை என்று அர்த்தம். அத்தகைய நேரத்தில் ஆரஞ்சு பழச்சாறு வெள்ளை சர்க்கரையுடன் கலந்து அருந்தலாம். இதன் மூலம் நம் கல்லீரலிற்கு போதிய ஆற்றல் கிடைக்கும்.

இம்முறையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம். ஒவ்வொரு முறையும் காய்ச்சல் ஏற்படும் போது இவற்றைக் கடைப்பிடித்தால் ஆரோக்கியம் நிலையானதாக மாறும். நோய் என்ற பயத்திற்கே இடமில்லை.

காய்ச்சலின் போது சிலருக்கு வலிப்பு ஏற்படக் காரணம்

எப்போதும் நமக்கு சுத்தமான காற்றோட்டம் தேவைப்படும். குறிப்பாக காய்ச்சல் என்னும் பராமரிப்பு பணி முழுவீச்சில் நடைபெறும்போது சுத்தமான காற்று என்பது அத்தியாவசியம். இது தெரியாமல் சிலர்
  •  தலையை போர்த்திக்கொண்டு தூங்கும்போதும்,
  •  ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தும்போதும்,
  • அசுத்த காற்றை மட்டும் மறுபடியும் மறுபடியம் சுவாசிக்கும் சூழலில் இருக்கும்போதும்,
  • பசியை உணராமல் உணவை உண்ணும்போதும் வலிப்பு ஏற்படும்.

இது தெரியாமல் தான் காய்ச்சல் காரணமாக குழந்தைகளின் மூளை பாதிப்படையும், வலிப்பு ஏற்படும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். 

சரி காய்ச்சல் ஒரு நோயா?

காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காகவும் உடம்பில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றவும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் செயல்முறைதான் காய்ச்சல். 

புற்று கட்டி (கேன்சர்) ஏற்பட காரணம்

தினசரி நமது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்ற நமது அறியாமை காரணமாக போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கும்போது கழிவின் தேக்கம் ஏற்படும். அவ்வாறு தேங்கும் கழிவுகளின் வெளியேற்றத்தை வியாதி என கருதி அதை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம். அத்தகைய சூழலில் இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக் கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் கரைத்துவிடும்.

இந்த கட்டியை தான் இன்றைய மருத்துவ உலகம் புற்று கட்டி (கேன்சர்) என்று பெயர்சூட்டி நம்மை அச்சுறுத்துகிறது. நமக்கு கற்பிக்கப்பட்டது போல கேன்சர் என்பதும் நோயல்ல கழிவின் தேக்கம்தான். கேன்சர் கட்டிகளை கூட புற்று கட்டி என்று குறிப்பிடாமல் புற்றுநோய் என்று குறிப்பிடுவதால் அதனை நாம் நோய் என்று தவறாக புரிந்துகொள்கிறோம். இதுவும் ஒரு மருத்துவ அரசியல் தான் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இப்போது புரிகிறதா ஏன் இன்றைய வியாபார மருத்துவ உலகம் உடலில் ஏற்படும் சாதாரண காய்ச்சலிற்கு டெங்கு, மலேரியா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா, எபோலா,... என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது பெயர் வைத்து தொடர்ச்சியாக நம்மை அச்சுறுத்தி வருகிறார்கள் என்று?


உடலில் வலி ஏற்பட காரணம்

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தியும் ஜீரண சக்தியும் தேவைப்படும். அப்போதுதான் பசியின்மை மற்றும் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குத்தான் தலைவலி ஏற்படுகிறது. பசிக்கவில்லை என்றால் நாம் உணவை உண்ணாமல் இருப்போம். அப்போதுதான் அந்த ஜீரண சக்தியையும் உடலின் பராமரிப்பிற்கு எடுத்துக்கொள்ளும்.

இதைப் புரிந்துகொள்ளாமல் தலைவலி ஏற்பட்டதும் டீ / காப்பி போன்றவற்றை அருந்துகிறோம் அல்லது மாத்திரையின் உதவியை நாடுகிறோம். இவற்றை எடுத்துக்கொள்வதால் நமது பராமரிப்பு சக்தி இயக்கசக்தியாக மாறிவிடுகின்றது. இவ்வாறு செய்வதால் உடலின் பராமரிப்பு வேலையும் தடைபடுகிறது. இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் கேன்சர் கட்டிகள் ஏற்படுகிறதில்லை. யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு டெங்கு, மலேரியா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா, எபோலா, Coma (விபத்துக்களால் ஏற்படும் Coma அல்ல), Cancer, Blood Cancer போன்ற உபத்திரவங்கள் ஏற்படுவதில்லை.

மேலும் காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தி அதிக Antibodyக்களையும், வெள்ளையணுக்களையும் உருவாக்குகிறது.

பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். எனவே நமது உடலே தேவைகேற்ப உடலின் வெப்ப நிலையை சிறிது அதிகப்படுத்தி இந்த கிருமிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் தடுப்பூசி ரூபத்தில் கிருமிகளை உடலில் செலுத்தியதும் உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது. (இதுபற்றி இந்த https://youtu.be/iR3Q-TrkXyw முகவரியில் “தடுப்பூசி அவசியம்தானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

எல்லா வகை வியாதிகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?

  • நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.
  • பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
  • மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில் “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)
  • உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.
  • இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.



மனதுக்கும் உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது

நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா?

  • அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும்,
  • பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும்,
  • பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,
  • பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,
  • பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும்,
  • பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,
  • பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும்,
  • நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
  • அடுத்தவர்களுக்கு உதவும்போதும்,
  • நேர்மையாக வாழும்போதும்,
  • சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 



நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும் படியுங்கள் / கேளுங்கள். நிச்சயம் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவற்றை காண / பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:






"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!" 
Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ


"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/LetUsThinkPositive

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/OurBodyItselfaDoctor


இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

No comments:

Post a Comment