ப்ளேசிபோ விளைவு (Placebo effect) Vs நோசிபோ விளைவு (Nocebo effect)




ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) 





“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!.... 
இத்தனை நாட்போல் இனியும் நின் இன்பமே
விரும்புவன், நின்னை மேம்படுத்திடவே 
முயற்சிகள் புரிவேன்….” 

- மகாகவி பாரதியார் 

    டைவிடாமல் விஞ்ஞானிகளில் பலர் ஆர்வமுடன் ஆராய்ச்சி செய்யும் ஒரு துறை மனோசக்தியின் வலிமை பற்றியது! அவர்களே எதிர்பார்க்காத பிரமிப்பூட்டும் முடிவுகளை அவர்களின் ஆராய்ச்சிகள் தந்துள்ளன.

    இந்த மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஒன்று ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) என்பது.

ப்ளேசிபோ என்றால் என்ன? 

    ஆறுதல் மருந்து என்று தமிழில் கூறலாம். ஒரு நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் வியாதி ஒன்றுக்கு உரிய அபூர்வ மாத்திரை அல்லது மருந்தைத் தருவதாகச் சொல்லி விட்டு அவருக்கு சாதாரண மாத்திரை ஒன்றைத் தருவார், ஆனால் அதன் நல்ல விளைவுகளோ நோயாளியிடம் அபாரமாக இருக்கும். இது தான் ப்ளேசிபோ எபெக்ட்!

    பெயரளவில் மாத்திரையாக இருக்கும் ஒன்று உடல் ரீதியாக நோயாளி ஒருவரிடம் அபூர்வ விளைவை ஏற்படுத்த முடியுமா? தர்க்க ரீதியாக நிச்சயம் முடியாது என்று சொல்லி விட்டாலும் சோதனை செய்து பார்த்ததில் பல நோயாளிகள் நன்கு குணமடைந்து மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

    இதன் காரணம் மிக்க எளிமையான ஒன்று! நோயாளி அந்த மாத்திரை தன் உடலில் அற்புதமாக வேலை செய்கிறது என்று நினைப்பதனாலேயே அவர் குணமாகிறார்!

    இதை நிரூபிக்கும் விதத்தில் நூற்றுக் கணக்கான சோதனைகள் உலகளாவிய விதத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

    இந்த ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றி வேடிக்கையான சோதனை ஒன்றை பிரின்ஸ்டன் பல்கலைக் கழக மாணவர்களில் சிலர் செய்து பார்த்தனர்.

    தங்கள் வகுப்புத் தோழர்களை அழைத்து ‘விசேஷமான பார்ட்டி’ ஒன்றை அவர்கள் தந்தனர். பார்ட்டி என்றாலே மதுபானம் உண்டல்லவா? அனைவரும் மனம் மகிழ்ந்து அதில் கலந்து கொண்டனர்.

    வழக்கமான பீரில் 5% ஆல்கஹால் இருக்கும். இவர்கள் கொடுத்த பானத்திலோ வெறும் 0.4% ஆல்கஹால் தான் “பெயருக்கு” இருந்தது. இந்தக் குறைந்த அளவு பானத்தை மதுபான வகையிலேயே சேர்க்க முடியாது. 

ஆனால் நடந்தது என்ன?

    இதைக் குடித்த தோழர்கள் வழக்கமான பானத்தை அருந்தியிருப்பதாக நினைத்தனர். ஆட்டமும் பாட்டமுமாக வழக்கமான பீர் பார்ட்டியின் ஆர்ப்பாட்டத்திற்கும் அதிகமாக அவர்களின் நடத்தை அமைந்தது.

    இந்த முடிவால் பதறிப் போன உலகின் பெரும் மருந்துக் கம்பெனிகள் நரம்பு மண்டலத்தில் ப்ளேசிபோ எந்த வித விளைவை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி ஆராய ஆரம்பித்து விட்டன!

    வெறும் சர்க்கரைக் கட்டிகள் பெரிய வேலையைச் செய்தால் அவர்கள் கம்பெனிகள் திவாலாகி விடுமே! உலகின் எண்ணெய் கம்பெனிகளை விட அதிகமாக விற்பனை செய்து லாபம் ஈட்டும் மருந்துக் கம்பெனிகள் பதறுவதில் வியப்பே இல்லை!

    சக் பார்க் என்பவர் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர். மனவிரக்தியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவரால் வேலை செய்யவே முடியவில்லை. அவரிடம் மருத்துவர், “இதோ இது ஒரு சர்க்கரைக் கட்டி தான். சாப்பிடுங்கள் பலன் அளிக்கும்” என்று வேடிக்கையாகக் கூறியவாறே ஒரு ப்ளேசிபோ மாத்திரையைத் தந்தார்.

    ஆனால் அதைச் சாப்பிட்ட சக் பார்க்கோ, ‘மருத்துவர் விளையாட்டாக ஏதோ கூறுகிறார், தான் சாப்பிட்ட மாத்திரை சிறந்த ஒன்று’, என்று நினைத்தார்.

    விளைவு, அவர் மனச் சோர்வு போயே போனது! “நீங்கள் உண்மையிலேயே சர்க்கரைக் கட்டியைத் தான் சாப்பிட்டீர்கள்” என்று அவரிடம் கூறிய போது அவர் வியந்தே போனார்!

    பாஸிடிவ் திங்கிங் வேலை செய்யும் என்பதை புன்முறுவல் பூத்து மருத்துவர்கள் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் பல சோதனைகள் நோயாளிகளைக் குணமாக்கியதைக் கண்டவுடன் அவர்கள் PET ஸ்கானர்கள், எம் ஆர் ஐ ஆகியவற்றின் மூலமாக இந்த சிகிச்சை முறையை ஆராய ஆரம்பித்தனர். சமீபத்திய ஆய்வு முடிவுகள் ப்ளேசிபோ மாத்திரையைச் சாப்பிட்ட ஒருவரின் மூளை அதிகமான டோபமைனைச் (Dopamine) சுரக்கிறது என்று கண்டுபிடித்துள்ளன. நோயாளிகள் ப்ளேசிபோ மாத்திரையை எடுத்துக் கொண்ட போது சரியான மாத்திரையைத் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டவுடன் இந்த அபூர்வ விளைவு ஏற்படுகிறது!

    இதனால் சரியான மாத்திரை உண்மையில் என்ன விளைவை எப்போது ஏற்படுத்தும் என்பதை ஆராய்வதும் விஞ்ஞானிகளின் கடமையாக ஆகி விட்டது.

    மனோசக்தி உடலின் மீது பெரிய ஒரு வலுவான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதையே ப்ளேசிபோ சோதனை நிரூபிக்கிறது.

    கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் டார் வேகர் (Tor Wager), “ப்ளேசிபோ மூளையில் பல செய்முறைகளைத் தூண்டி உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை விளக்க ஒரு உதாரணத்தைக் கூறலாம். இரவு நேரத்தில் வாசலில் திடீரென ஒரு நிழலுருவம் தோன்றுகிறது. உடனே உங்கள் விழிகள் விரிகின்றன. உடல் எச்சரிக்கை நிலையை அடைகிறது; உடம்பெல்லாம் வியர்க்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்த மறு நிமிடம் அது உங்கள் கணவர் தான் என்று தெரிந்தவுடன் அரை வினாடியில் மகிழ்ச்சி மேலோங்கி உடல் பூரித்து பயம் போயே போய் விடுகிறது! நம்பிக்கை மாறியவுடன் உணர்ச்சிகள் மாறுகின்றன. ஆனால் இப்போது எதிர் கொள்ள வேண்டிய விஷயம் எப்படி இந்த அபூர்வமான வலிமை வாய்ந்த ‘நம்பிக்கை மாற்றத்தை’ ஏற்படுத்துவது என்பது தான்!” என்று விளக்கமாக இது பற்றி இப்படிக் கூறினார்!

    ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தன்னார்வத் தொண்டர்களிடம் ஒரு விநோதமான சோதனை நடத்தப்பட்டது. லாரா டிப்பிட்ஸ் என்ற பெண்மணிக்கு வலது தோளிலும் கையிலும் தாங்கமுடியாத வலி. அவரை தானே நேரில் ப்ரெய்ன் வேவ்களை ஸ்கானரில் பார்க்க ஏற்பாடு செய்தனர். "வலி தசைகளில் இல்லை அல்லது காயம் அடைந்த கையில் இல்லை. அது மூளையில் இருக்கிறது” என்றார் அந்தப் பெண்மணி! “ஒரு சிக்னல் காயப்பட்ட இடத்திலிருந்து கிளம்பி மூளைக்குச் செல்கிறது. அதை மூளை வலி என்று “எடுத்துக் கூறுகிறது”! என்கிறார் அவருடைய மருத்துவர்.

    எந்த விதமான எண்ணம் வலியை உண்டாக்குகிறது, எது வலியை நீக்குகிறது என்பதையும் அவர் ஆராய ஆரம்பித்தார். மனச் சித்திரங்கள் ஓரளவு நல்ல பலனைத் தருகின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.

    ஸ்கானரில் வலி ஏற்படும் மூளைப் பகுதிகளைப் பார்த்து நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும் என்று நினைக்கும்போதே பாதி வலி போய் விடுகிறது. இது அதிசயமாக இருக்கிறது” என்றார் லாரா.

    ஆக அறிவியல் சோதனைகளின் முடிவுகளால் மருத்துவர்களும் கூட மனோசக்தி உடலின் மீது வலுவான நல்ல ஆதிக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூற ஆரம்பித்துவிட்டனர். அதாவது MIND OVER BODY என்பது நிரூபணமாகி வருகிறது! ஆறுதல் மருந்தான ப்ளேசிபோ அற்புத மருந்தாக அமைவது மனோசக்தியின் மூலமாகத் தான்!

   நன்றி : ச.நாகராஜன் மற்றும் பாக்யா இதழ்

    இப்போது புரிகிறதா எந்த வியாதியையும் குணப்படுத்த முடியாவிட்டாலும் ஆங்கில மருத்துவத்திற்கு ஏன் இவ்வளவு வாடிக்கையாளர்கள் என்று? எல்லாம் ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) இன் மகிமைதான்.
 

இந்த பதிவை வாசிக்க இங்கு 👇 செல்லவும் 

    
ஒரு குட்டிக் கதை...
 
    ஒரு விமானப் பயணத்தின்போது, 60 வயது முதியவர் ஒருவருக்குத் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் மனைவி பதறிப் போனார். செய்வதறியாது தவித்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு மத்தியில், ஒருவர் எழுந்தார். தான் ஒரு மருத்துவர் என்று கூறிக் கொண்டு முதியவருக்கு அருகில் சென்றார். சோதித்துப் பார்த்து விட்டு தன்னிடம் இதற்கு மருந்து கையிலேயே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுத்தினார். குப்பியிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்துக்கொடுத்து உடனே தண்ணீர் இல்லாமல் விழுங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். முதியவரும் பதறியபடி அதை விழுங்கினார். பத்து நிமிடத்தில் அவருக்குக் குப்பென்று வியர்த்தது. நெஞ்சு வழி நின்றிருந்தது. அந்த மருத்துவருக்கு அவர் நன்றி சொல்ல, எல்லோரும் கரவொலி எழுப்பினர். அந்த முதியவரின் மனைவி மருத்துவரிடம் வந்து தனியாக நன்றி கூறினார். அந்த மாத்திரைக்கு ஏதேனும் பணம் தர வேண்டுமா என்று வினவினார்.

    புன்முறுவலுடன் மருத்துவர், “அதெல்லாம் வேண்டாம். இது சாதாரண வைட்டமின் மாத்திரைதான். நெஞ்சு வலி மாத்திரை எல்லாம் இல்லை” என்று கூற முதியவரின் மனைவிக்கு அதிர்ச்சி.

    பெரும்பாலோனருக்கு இவ்வகை அபாயத்தின் போது நம்பிக்கை ஏற்பட்டாலே போதும், பாதி வியாதி ஓடிவிடும். நோய் பாதி என்றாலும், மீதி பாதிப்பிற்கு பதற்றமும், பயமும்தான் காரணம். உங்கள் கணவருக்கும் அதே பிரச்னைதான். நான் செய்தது முதலுதவி போலதான். ஊருக்குச் சென்றவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று முடித்தார் மருத்துவர். 

    இந்தக் கதையின் நம்பகத்தன்மை, மருத்துவ தர்க்கம் படி இது சரியா, இப்படி எல்லாம் நடக்குமா என்று நாம் ஆராயத் தேவையில்லை. ஆபத்தின் போது பதற்றமும் பயமும் வேண்டாம் என்ற செய்தியைச் சொல்ல மட்டுமே இந்தக் கதை பேசப்படுகிறது. சரி, இங்கே எதற்கு இந்தக் கதை?

    அந்த முதியவருக்கு அளிக்கப்பட்ட அந்தச் சாதாரண வைட்டமின் மாத்திரை ஒரு பிளாசிபோ போலதான். ஒரு நோய்க்கான மாத்திரையாக அளிக்கப்படும் இது உண்மையில் அந்த நோய்க்குத் தொடர்புடையதே அல்ல. நோயாளியின் மனத்திருப்தி, நாம் மாத்திரை சாப்பிட்டு விட்டோம், நமக்கு எந்த பாதிப்பும் இனி வராது என்ற நம்பிக்கையை விதைக்க மட்டுமே இது பயன்படுகிறது. பிளாசிபோ மாத்திரைகள் மட்டுமில்லை, டானிக் மருந்துகள் கூட இருக்கின்றன. இவ்வகை பிளாசிபோ மருந்துகளால் ஏற்படும் இந்த வகை பாசிட்டிவ் தாக்கத்தைத் தான் பிளாசிபோ எஃபக்ட் (Placebo Effect) என்கிறார்கள். இதன் மூலம் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

இந்த முறை வெற்றியா?

    பொதுவாக, “டாக்டர் நைட் தூக்கமே வர்றதில்லை. ஏதாவது மாத்திரை குடுங்களேன்” என்று மருத்துவரிடமே நச்சரிப்பவர்களுக்கு, மருத்துவர்கள் ஒரு சில சமயம் பரிந்துரைப்பது பிளாசிபோ வகை மாத்திரைகளைத்தான். பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் இதில் எந்த வகை மருந்தும் கலந்திருக்க மாட்டார்கள். இதனால் எந்த பாதிப்பும் வராது. அவர்களும் மாத்திரை சாப்பிட்டு விட்டோம், நிச்சயம் தூக்கம் வந்துவிடும் என்று படுப்பதால்  தூக்கமும் வந்து விடும். உங்கள் மூளை ’இது சரியான மருத்துவம், உன்னை நீ சரி செய்துகொள்’ என்று உடலுக்குக் கட்டளையிட்டு விட்டால் போதும், உங்கள் உடல் தானாகவே சரி ஆகிவிடும். இதனாலே பிளாசிபோ வகை மருத்துவ முறை உளவியல் சார்ந்ததாகி விடுகிறது. இந்தக் கட்டுரை பிளாசிபோ வகை மருத்துவத்தைக் குறித்து விளக்க மட்டுமே.

    நன்றி - விகடன்

  

நோசிபோ எபெக்ட் (Nocebo effect) 

.


மனம் என்பது சக்தி வாய்ந்த ஒரு கருவி. வியாதிக்கு எதிரான இந்தப் போராட்டமானது அணு அணுவாக உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஆக இரண்டினாலும் ஆனது

 – டேவ் லினிகர்

    னோசக்தியின் வலிமைக்கு உதாரணமாக ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றிக் கூறும் போதே அதற்கு எதிர்ப் பக்கமான நோசிபோ எபெக்ட் (Nocebo effect) பற்றியும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

    18ஆம் நூற்றாண்டில் உருவான ப்ளேசிபோ என்ற சொல்லுக்கு “நான் இன்பம் தருவேன்” (I will please) என்று அர்த்தம். இதற்கு எதிர்மாறாக நெகடிவ் மனோநிலை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பது நோசிபோ விளைவு என்று கூறப்படுகிறது. நோசிபோ என்ற லத்தீன் வார்த்தைக்கு அர்த்தம் ‘நான் தீங்கு விளைவிப்பேன்’ (I will harm) என்பதாகும். 

    கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டோர் கீமோதெராபிக்கு முன்னர் வாந்தி எடுப்பதையும் ஒரு சாதாரண செடியைத் தொட்டவுடன் விஷச் செடியைத் தொட்ட பாதிப்பு வந்தது போல் சிலர் அலறுவதும் இதற்கு உதாரணங்கள். 

    இதனால் பாதிக்கப்படுவோர் ஏராளம். உதாரணமாக, அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கேஸ் உலகெங்கும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இந்தச் சம்பவம் நியூ ஸயின்டிஸ்ட் இதழில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.

    அலபாமாவைச் சேர்ந்த வான்ஸ் என்பவர் கல்லறை ஒன்றுக்குச் சென்று மந்திரவாதி ஒருவரைப் பார்த்தார். மந்திரவாதி, வான்ஸிடம் ‘நீ சீக்கிரமே சாகப் போகிறாய்’ என்று கூறி விட்டார். இதை நம்பி விட்ட வான்ஸுக்கு உடல்நலம் சில வாரங்களிலேயே படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. இறக்கும் நிலைக்கு வந்து விட்ட வான்ஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் உடல்ரீதியாக அவருக்கு எந்த நோயும் இல்லை என்று உறுதியாகக் கூறினர். வான்ஸின் மனைவி டாக்டர்களிடம் வான்ஸ் கல்லறைக்குச் சென்று மந்திரவாதியைச் சந்தித்ததையும் அவன் வான்ஸை சீக்கிரமே இறக்கப் போகிறாய் என்று கூறியதையும் சொன்னார். 

    டாக்டர்களின் ஒருவரான டாக்டர் டோஹெர்டிக்கு ஒரு யோசனை உதித்தது. மறுநாள் வான்ஸ் தம்பதிகளை அழைத்த டாக்டர் டோஹெர்டி, தான் முதல் நாளன்று கஷ்டப்பட்டுத் தேடி மந்திரவாதியைச் சந்தித்ததாகவும் என்ன செய்தாய் என்று அவனை மிரட்டியதாகவும், கடைசியில் அவன் பயந்து போய் நடந்ததைக் கூறி விட்டான் என்றும் கூறினார். மந்திரவாதி ஒரு பல்லியை வான்ஸின் உடலுக்குள் செலுத்தி விட்டதாகவும், உடலின் உள்ளே இருக்கும் பல்லி படிப்படியாக வான்ஸின் உடலை அரிப்பதாகவும் டாக்டர் டோஹெர்டி கூறினார். அதற்கு மாற்று மருந்தைத் தான் தயாரித்திருப்பதாகவும் அந்த இஞ்ஜெக்‌ஷனை இப்போது போடப் போவதாகவும் கூறினார். வான்ஸுக்கு இஞ்ஜெக்‌ஷன் போடப்பட்டது. என்ன ஆச்சரியம், கஷ்டப்பட்டு பச்சையான பல்லி ஒன்றை வான்ஸின் உடலிலிருந்து எடுத்த அவர் அதை வான்ஸ் தம்பதியினரிடம் காண்பித்து இனி மந்திரவாதியின் பல்லி ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தோஷத்துடன் உரக்கக் கூவினார்.

    வான்ஸ் அமைதியாக அன்று இரவு உறங்கினார். மறுநாள் காலையில் எழுந்த வான்ஸுக்கு ஒரே பசி. உடலில் வியாதியே இல்லை. சில நாட்களிலேயே பழையபடி ஆனார் வான்ஸ். டாக்டர் சொன்னது முழுப் பொய். பல்லியும் பொய், மாற்று மருந்தான இஞ்ஜெக்‌ஷனும் பொய், உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறிய பச்சைப் பல்லியும் பொய். பெரிய டிராமாவை நன்கு ‘செட்-அப்’ செய்து போட்டிருந்தார் டாக்டர்.

    இந்த சம்பவத்தை வேறு நான்கு பேரும் உறுதி செய்த பின்னர் இது அந்த பிரபல விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டது. வூடு என்னும் மந்திரவாத வித்தை இப்படித் தான் மனதளவில் ஒருவரை வாட்டி வதைத்துக் கொல்கிறது. இந்த விளைவைத் தான் நோசிபோ எபெக்ட் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ப்ளேசிபோ விளைவு சர்ஜரியைத் தவிர்க்கிறது. பருக்கள் மற்றும் தோல் மீது வரும் கட்டிகளைப் போக்குகிறது. காயங்களைக் குணப்படுத்துகிறது. இதற்கு மாறான நோசிபோ எபெக்ட் எதிரமறையான மனோசக்தியைத் தூண்டி விட்டு வாந்தி, காதில் இரைச்சல், பயம், நரம்புத் தளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு போன்றவற்றைத் தருகிறது.

    இன்னொரு ஆய்வில் இறக்கப் போகிறோம் என்று நினைத்தவர்களையும், வியாதியினால் இறக்க மாட்டோம், மீண்டு வீட்டுக்கு போவோம் என்பவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இறக்கப் போகிறோம் என்று நம்பியவர்கள் இறந்தே போயினர்.

    இதய நோய் வந்துவிட்டது என்று நம்பும் பெண்களுக்கு சாதாரண இதய நோய் உள்ளவர்களை விட நான்கு மடங்கு அதிகம் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது. சீரான இரத்த அழுத்தம் மற்றும் நல்ல உடல்நிலையைக் கொண்டிருந்தாலும் இறப்பதன் காரணம் எதிர்மறை மனோசக்தியாக தாங்கள் இறக்கப் போகிறோம் என்ற அவர்களது (அவ)நம்பிக்கையே இதற்குக் காரணம்!

    சாஸ் என்ற பெண் மருத்துவரின் சகோதரர் ஸ்டீவ். நுரையீரலில் கட்டி இருப்பதைக் கண்டு பிடித்த அவரது டாக்டர் தற்போது பயமில்லை என்றும் இன்னும் ஐந்து வருடங்கள் அவர் உயிர் வாழ்வார் என்றும் ஆறுதலாகக் கூறினார். ஸ்டீவ் டாக்டரை நம்பினார். சரியாக ஐந்து வருடங்கள் கழித்து ஒரு நாள் அவர் மாவி என்ற கடற்கரையில் நினைவின்றிக் கிடந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் நான்கு நிமிடங்கள் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லாமல் இருந்ததால் இறந்து போனார். அவரது நம்பிக்கையே அவரை ஐந்து வருடங்கள் உயிர் வாழ வைத்தது. அதுவே ஐந்து வருடங்கள் முடிந்தவுடன் அவரை “வழி அனுப்பி” வைத்தது.

    இப்படி “நாள் குறித்துஆறுதல் சொல்லும் டாக்டர்கள் நோயாளிக்கு நல்லது செய்வதில்லை. பொதுவாக அவர்கள் தீங்கையே விளைவிக்கிறார்கள்.

    இன்ஸ்டிடியூட் ஆஃப் நோயடிக் ஸயின்ஸஸ் (The Institiute of Noetic Sciences) ஆராய்ந்து பதிவு செய்த 3500க்கும் மேற்பட்ட கேஸ்கள் கூறுவது ஒரே ஒரு உண்மையைத் தான்! தீர்க்க முடியாத வியாதி என்று ஒரு வியாதி உலகத்திலேயே இல்லை. ஆனால் நமக்கு இந்த வியாதி குணமாகாது என்று மனிதன் நம்பும் நம்பிக்கையே அவனது வியாதியைக் குணமாக்காது செய்து விடுகின்றது.

    டாக்டர் லிஸா ரான்கின் என்பவர் மைண்ட் ஓவர் மெடிசின்: ஸயிண்டிஃபிக் ப்ரூஃப் தட் யூ கேன் ஹீல் யுவர்செல்ஃப் (Mind Over Medicine: Scientific Proof That You Can Heal Yourself – Dr Lissa Rankin) என்ற தனது நூலில் மனத்தின் ஆதிக்கம் உடலில் அதிகம் உண்டு; அது தீராத வியாதிகளையும் தீர்த்து வைக்கும். நம்புங்கள், குணப்படுவீர்கள் என்கிறார்.


இந்த புத்தகத்தை வாசிக்க 👇


    ஆக ப்ளேசிபோ எபெக்ட் மற்றும் நோசிபோ எபெக்ட் பற்றி அறிந்து கொண்டோர் தெரிந்து கொள்ளும் ஒரு அறிவியல் உண்மை – மனோசக்தி மூலம் ஒருவர் சீரான உடல்நலத்தைப் பெற்று ஆக்கபூர்வமாக முன்னேறலாம் என்பதையே!

நன்றி : ச.நாகராஜன் மற்றும் பாக்யா இதழ்

நோயின்றி ஆரோக்கியமாக வாழ புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!



"கழிவின் தேக்கம் வியாதி; கழிவின் வெளியேற்றம் குணம்"


திருக்குறள் (அறிவுடைமை#0423)

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

தெளிவுரை:

    எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.


    மது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.   நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 


    நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.

பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம். 




உணவு [நிலம்] [இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]


1. பசி:
    • பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும்.
    • பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி மற்றும் உடலெங்கும் வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம், புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மூலம், மாரடைப்பு,... போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுத்தும். அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும்.
    • நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும். பல் முளைத்த குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுப்பதை நிறுத்தினாலே நன்கு பசி எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிடும்.

2. உணவின் அளவு:
    • நாம் எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்கிற சந்தேகம் பலருக்கு உள்ளது. சாப்பிடும்போது நாம் உண்ணும் உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு (திகட்டுதல்) வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு.
    • விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதிகமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக மெதுவாக மென்று சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் உண்ணும்போதே 10 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது, நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும். 
    • இவற்றை முயற்சி செய்து பார்த்ததில் எனக்கு (விழிப்புணர்வு வினீத்) சில மாதங்களில் 20 கிலோ (From 93 to 73) வரை எடை குறைந்து விட்டது.

3. உணவை உண்ணும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:
    • சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது நமது உள்ளுறுப்புக்கள் தூண்டப்பட்டு அவை உணவை கிரகித்துக்கொள்ள தயாராகிவிடும்.
    • உணவில் ஆறு சுவைகள் [இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். யாருக்காகவும் எந்த சுவையையும் தவிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
    • திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். சுவை நாக்கால் உறிஞ்சப்பட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். சுவையாகவே இரைப்பைக்கு செல்லும் உணவு தான் நமது உடலுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.
    • திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி அதன் வெப்ப தன்மை அல்லது குளிர்ச்சி தன்மை (Hot or Cold) நம் நாவிலே சமப்படுத்தப்பட வேண்டும். நம் தொண்டைக்கு செல்லும்போது வெப்பமாகவோ குளிர்ச்சியாகவோ இருக்கக் கூடாது. (வெப்பமாக சென்றால் இரைப்பையை பாதிக்கும் குளிர்ச்சியாக சென்றால் மாரடைப்பை ஏற்படுத்தும்)
    • சாப்பிடும்பொழுது நமது கவனம் சிதறாமல் இருப்பதற்கு நமது கண்களை மூடி, உதட்டை மூடி உண்ணலாம். பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    • முடிந்தவரை சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். கால்களைத் தொங்க வைத்துக் கொண்டோ, நின்றுக் கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    • முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் (10 நிமிடமாவது) முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் (உணவில் காரமோ உப்போ அதிகமானால்) சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி.
    • குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகோ அல்லது நன்கு பசித்த பிறகோ சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.
    • மொத்தத்தில் நமக்கு பிடித்த உணவை பசிக்கும்போது ரசித்து ருசித்து உண்டால் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.


நீர் [நீர்] [சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 


    • நீரை வடிகட்டி குடிப்பதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுக்காக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.
    • மண்பானையில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அது காலிட்டராக ஆகும் வரைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும் பொழுது அந்த நீர் உடலில் பலவித நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருந்தாக மாறுகிறது. 
    • தண்ணீரை எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திரங்களில் ஊற்றி கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. அப்படிக் குடிக்கும்பொழுது அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ஆவியாகிவிடுகிறது. இந்த நீரால் உடலுக்குத் தீங்கு தான் விளையும்.
    • தண்ணீரில் உள்ள நீர்ச்சத்து தாகத்தைப் போக்குவதோடு ஆரோக்கியத்தையும் நம் உடலில் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவோம்.
    • மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தினால் அதிலுள்ள நீர்ச்சத்துக்களை இழக்க நேரிடும். அப்படி குடிக்க நேர்ந்தால் நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [பிரெஷ் ஜூஸ்] போன்றவற்றை பருக வேண்டும். 
    • தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல் தாகம் எடுக்கும்போது உடனே தேவையான அளவு தண்ணீரை நிதானமாக வாய்வைத்துக் குடிக்க வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக்கூடாது (அப்படி குடிக்கும்போது தேவையை விட பலமடங்கு நீரை குடிக்க நேரிடுவதால் நமது சிறுநீரகம் பாதிக்கப்படும்).
    • சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
    • நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,... ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். 
    • பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
    • நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும் (Osteoporosis, Low Bone Mineral Density), எலும்புத் தேய்மானம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள், தலை முடி உதிர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
    • இயற்கை காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கும்போதும், இரசாயண கொசுவிரட்டிகள் இருக்கும் இடத்தில் தூங்கும்போதும், நாம் சுவாசிக்கும் காற்றையே மறுபடியும் மறுபடியும் சுவாசிக்கும் சுழலில் (பூட்டிய அறையில், தலையை போர்த்திக்கொண்டு தூங்குவது) தூங்கும்போது விஷக்காற்று நமது உடலில் பரவி சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு, கர்ப்பையில் தொந்தரவுகள், விதைப்பையில் தொந்தரவுகள், ஆண்மை மற்றும் பெண்மை இழப்பு, மலட்டுத்தன்மை, மூட்டு வலிகள், உடல் சோர்வு,... போன்ற பல இன்னல்களை உருவாக்கும்.

ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

    • அலாரம் வைத்து எழுந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி எழுந்தால் நாம் எப்போதுமே களைப்பாகவும், எரிச்சலுடனும், உடல் வலியுடனும் வாழவேண்டியிருக்கும்.
    • இரவு சீக்கிரமாக படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது சாத்தியப்படும். நாம் இரவு கண்விழித்து தொலைக்காட்சி, கணினி, செல்போன் மற்றும் சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது போன்ற தேவையில்லாத காரியங்களை இரவு 1 மணி வரை பார்த்துவிட்டு காலதாமதமாகப் படுப்பது நமது தவறு தானே.
    • எனவே நாம் எந்த நேரங்களில் எழுந்திருக்கவேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல் நாம் ஒரு 8 மணி நேரத்திற்கு முன்பாக நாம் படுக்கைக்கு செல்லவேண்டும்.
    • முடிந்தவரை இரவு 10 மணிக்குள் தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.
    • இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
    • படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள் அமர்ந்துகொண்டு தூங்கினால் அல்லது தூங்க முயற்சி செய்தால் மனதும், புத்தியும் மிகவிரைவாக அடுக்கி வைத்துவிட்டு உடனே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.
    • தெற்க்கு அல்லது கிழக்கில் [South or East] தலை வைத்துப்படுப்பது மிகவும் நல்லது. அப்படி படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும். வடக்கே [North] தலை வைத்து படுப்பது நல்லதல்ல. அப்படி படுத்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலில் கழிவுகள் தேங்கிவிடும் அதனால் உடலில் ஆங்காங்கே வலிகள் ஏற்படும்.
    • தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
    • புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். 
    • படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
    • குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். 
    • இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். 
    • தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
    • நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும் மற்றும் இருதயம் தொடர்பான தொந்தரவுகள் மற்றும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.
    • இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. 
    • தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
    • டுவா தூக்கம் எனும் ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
    • நமக்கு தூக்கம் வரவில்லை என்றால், குப்புறப்படுத்து கண்களை மூடி நமது இரு மணிக்கட்டுகளையும் தாடைக்கு சப்போர்ட் கொடுத்து சினிமா படங்களில் நடிகைகள் படுத்திருப்பதுபோல காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாக தூங்கிவிடுவோம்.
    • இரவு தூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உங்களது ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக்கொடுப்பதன் மூலமாக நன்றாக தூங்கமுடியும். இந்த இடத்திற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் DU 20 என்று கூறுவார்கள்.
    • இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.



காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]


    • புகைபழக்கம், கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். 
    • கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க] 
    • வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். 
    • தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க] 
    • தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்க கூடாது [நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க] 
    • மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் தரமான கொசுவலையை வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள். 
    • சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா... போன்ற பல வியாதிகள் உண்டாகும். 
    • சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.


உழைப்பு [நெருப்பு] [இருதயம், சிறுகுடல், இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 


    • பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். 
    • உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும். 
    • தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். 
    • இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். 
    • உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம். 
    • தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. 
    • காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும். 
    • காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். 
    • எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை. 


மருத்துவம் என்றால் என்ன?

 நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.


ஆரோக்கியம் என்றால் என்ன?

 நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.


எல்லா வகை வியாதிகளிருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?

  • நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  
  • பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
  • மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
  • உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.
  • இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை. 
    • டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.) 


மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது!

நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 
  • அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 
  • பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 
  • பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  
  • பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,
  • பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 
  • பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,
  • பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 
  • நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
  • அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 
  • நேர்மையாக வாழும்போதும்,
  • சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,
... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


முக்கிய குறிப்பு:

    இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

    ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +91 98 40 98 02 24, +91 97 50 95 63 98 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும் படியுங்கள் / கேளுங்கள். நிச்சயம் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவற்றை காண / பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு







    நலம் நலமறிய ஆவல் - 11. மருத்துவ உலகின் மனசாட்சி

     

       

        

     இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகள், மேற்கோள்கள் எல்லாம் Dissenting Diagnosis: Voices of Conscience from the Medical Profession நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த புத்தகத்தை இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.


        
        வர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவர் தன் காரில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு விபத்து ஏற்பட்டது. எதிரே சென்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்று திடீரென்று நிற்கவும், இவருடைய கார் ட்ரக்கின் மீது லேசாக மோதி நின்றது. அந்த லேசான மோதலில், காரின் ஸ்டீயரிங் அவருடைய வயிற்றிலும் நெஞ்சுப் பகுதியிலும் குத்தியது. ஆனால், அவருக்கு அப்போது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. காரை ஓட்டிக்கொண்டே வீட்டுக்குப் போய்விட்டார். ஆனால், கொஞ்ச நேரம் கழித்து கடுமையான வியர்வையும் நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனே பக்கத்து நகரத்திலிருந்த ஒரு மல்ட்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவருக்கு ஆன்ஜியோக்ராஃபி செய்யப்பட்டு, உடனே ஆன்ஜியோப்ளாஸ்டியும் (கையில் செருகப்பட்ட ஊசி மூலமாக இதய அடைப்பை நீக்குதல்) செய்யப்பட்டது.

        மறுநாள், தன் அடிவயிற்றுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாக நோயாளி சொன்னார். ஆனால் அதுபற்றி ஐ.சி.யு.வில் இருந்த யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்று பகல் அங்கு அவரைப் பார்க்க வந்த அவர் நண்பர் ஒருவரிடம் விஷயம் சொல்லப்பட்டது. அவர் ஒரு ஜெனரல் சர்ஜன். உடனே அவர் அங்கிருந்த ட்யூட்டி டாக்டரிடம் நண்பருக்கு நடந்த விபத்து பற்றியும், அவர் நெஞ்சில் கார் ஸ்டீயரிங் அடித்தது பற்றியும் சொல்லிவிட்டு, உடனே அடிவயிற்றை ‘அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ (Sonography) செய்து அந்த அறிக்கையை சீனியர் டாக்டரிடம் காட்டும்படியும் சொல்லிவிட்டுச் சென்றார்.

        அவர் சென்ற மூன்றாவது நாள், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த ஆயுர்வேத மருத்துவ நண்பர் மிகவும் சீரியஸாக இருப்பதாகவும், அவரது ரத்த அழுத்தம் நார்மலுக்கு மிகவும் கீழே இறங்கிவிட்டதாகவும், அவரது நாடித்துடிப்பு விகிதமும் ரொம்ப அதிகமாக இருப்பதாகவும், அவரது அடிவயிறு பெருத்து வீங்கியிருப்பதாகவும் செய்தி சொன்னது அது.

        உடனே மருத்துவமனைக்கு விரைந்த ஜென்ரல் சர்ஜன், தன் நண்பரின் நிலையைப் பார்த்து அதிர்ந்து போனார். மூன்று நாளாகியும் அவர் கேட்டுக் கொண்டபடி ஸ்கேன் எதுவும் எடுக்கப்படவில்லை! ஏன் எடுக்கவில்லை என்று கோபமாக அவர் அங்கிருந்த இதயவியல் மருத்துவரிடம் கேட்டபோது, ‘அதெல்லாம் ஆன்ஜியோக்ராஃபி செய்ததன் பின்விளைவுகள்’ என்று சாதாரணமாக அந்த ‘இதய நிபுணர்’ சொன்னார். ஆனால், நம் சர்ஜன் நண்பர் அவருடன் மிகவும் கடுமையாகப் பேசிய பிறகு வேண்டா வெறுப்பாக ஸ்கேன் எடுக்கப்பட்டது.

        நோயாளியின் அடிவயிற்றில் இரண்டு லிட்டர் ரத்தம் தேங்கியிருந்தது ஸ்கேன் ரிபோர்ட்டில் தெரியவந்தது. உடனே, அதற்கான சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும், ஆயுர்வேத டாக்டர் பிழைக்கவில்லை. அதுமட்டுமா? அவர் குடும்பத்துக்கு எட்டு லட்ச ரூபாய்க்கு ‘பில்’ கொடுத்தது மருத்துவமனை!

        கடுப்பாகிப்போன சர்ஜன் நண்பர், மருத்துவமனை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். எல்லாம் சரியாக நடந்ததாகவே அவர்கள் ‘பேப்பர்’களைக் காட்டினார்கள்! மருத்துவமனை மீது வழக்குத் தொடுக்க, இறந்தவரின் மனைவி விரும்பவில்லை. அந்த மனநிலையில் அப்போது யார்தான் இருப்பார்கள்? கடைசியில், எட்டு லட்சமாக இருந்த பில் தொகை பேச்சுவார்த்தைகள் மூலம் நான்கு லட்சமாகக் குறைந்தது, அவ்வளவுதான்!

        ஒரு மனிதனின் உயிரையும் கொடுத்து, அவன் உடலை மீண்டும் பெறுவதற்குப் பெரும் தொகையையும் கொடுக்கவேண்டி இருப்பதைவிட பெரிய மானிட சோகம் வேறு எதுவும் உண்டா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி இறந்துவிட்டாரென்றால், அவர் குடும்பத்தாரிடம் ஒரு பைசாவும் கேட்கக்கூடாது என்று இந்த உலகில் எந்த அரசாவது அறிவித்துள்ளதா? அப்படி ஒரு அதிசயம் நடக்காதா என்று என் மனம் ஏங்குகிறது!

        எந்த மருத்துவத் துறையானாலும் மனசாட்சி உள்ள மனிதர்கள் சிலராவது இருக்கத்தான் செய்வார்கள். அலோபதியும் அதற்கு விதிவிலக்கல்ல. டாக்டர் ஹெக்டே, டாக்டர் தீபக் சோப்ரா போன்றவர்களின் கருத்துகளை ஏற்கெனவே பார்த்தோம். அந்த வரிசையில் இப்போது மேலும் இரண்டு பேர்.


        அலோபதி டாக்டர்களான டாக்டர் அருண் காத்ரே, டாக்டர் அபய் ஷுக்லா ஆகிய இருவரும், மேலே விவரித்த மாதிரியான பல நிகழ்வுகளை ஒரு நூலில் பதிவு செய்திருக்கின்றனர். மருத்துவமனைகள், மருந்துக் கம்பனிகள், மருத்துவர்கள் – இந்த முக்கோணம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது, எப்படியெல்லாம் மக்களைச் சுரண்டுகிறது என்பதை தங்களுக்குத் தெரிந்த நேர்மையான, துணிச்சலான டாக்டர்களிடம் நேர்காணல்கள் செய்து, அதை ஒரு நூலாக இருவரும் வெளியிட்டனர். Dissenting Diagnosis என்ற அந்த நூலைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். ‘‘Voices of Conscience from the Medical Profession” என்று அதற்கு உப தலைப்பும் உண்டு. ஆரோக்கியம் பற்றி எழுத்தில் உருவான சத்யமேவ ஜயதே என்று அந்த நூலைச் சொல்லலாம்.

        மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடக்கும் பரிசோதனைகளில் இருக்கும் குளறுபடிகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். மருத்துவமனைகள், மருந்துக் கம்பனிகள், மருத்துவர்கள் என்ற முக்கோணம் செய்யும் கோணல்களை இங்கே கொஞ்சம் பார்க்க இருக்கிறோம். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகள், மேற்கோள்கள் எல்லாம் மேலே சொன்ன நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

        மருத்துவ உலகம் முழுக்க முழுக்க வணிகமயமாகிவிட்டது. ஆயிரத்தில் ஒருவர்கூட மனித உயிருக்கு மதிப்பு கொடுப்பதில்லை. ஒரு பக்கம் தீவிரவாதிகள், ஜாதி, மத வெறியர்களின் வன்முறை என்றால், இன்னொரு பக்கம் வணிகமயமாகிவிட்ட மருத்துவ உலகின் நுட்பமான, அதிநவீன தொழில்நுட்பக் கொலைகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன, அன்றாடமும். அதைப் புரிந்துகொள்வது நம் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, நம் உயிருக்கும் நல்லது என்பதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில முக்கியமான தகவல்களையும் நிகழ்வுகளையும் இங்கே பகிர விரும்புகிறேன்.

        டாக்டர் அருண் காத்ரே, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் பணியாற்றிவரும் ஒரு கைனகாலஜிஸ்ட் (மகளிர் நல மருத்துவர்). டாக்டர் அபய் ஷுக்லா, பொதுமக்கள் ஆரோக்கியத் துறையில் உள்ளவர். ‘சாத்தி’ என்ற அமைப்பின் உதவியோடு (Support for Advocacy and Training to Health Initiatives), 78 மனசாட்சியுள்ள நேர்மையான டாக்டர்களைப் பேட்டி கண்டு அவர்களது வாக்குமூலங்களையும், அனுபவங்களையும் அந்த நூலில் பதிவு செய்துள்ளனர். ஹிந்தியில் ‘சாத்தி’ என்றால் ‘நண்பன்’ என்றுதான் அர்த்தம்!
     
        மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, நாசிக், புனே, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பல டாக்டர்கள், துணிச்சலாகப் பேட்டி கொடுத்துள்ளனர். சரி, அவர்கள் நேர்மையானவர்கள், மருத்துவ ஒழுக்கம் தவறாதவர்கள் என்று எப்படித் தெரியும்? ரொம்ப சிம்பிள். நீங்கள் நேர்மையானவராக இருக்கும்பட்சம், உங்கள் நண்பர்களில் யார் நேர்மையானவர் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அப்படித்தான். தங்களின் நெருங்கிய, நேர்மையான நண்பர்களை அந்த இருவரும் முதலில் பேட்டி எடுத்தனர். பின், அவர்கள் மூலமாக மற்றவர்கள். ஒரு நேர்மைச் சங்கிலித் தொடர்போல. அதில் ‘சாத்தி’யின் பங்கும் உண்டு. இது ‘சாத்தி’யம்தானே?

        ஆனால், அதிலும் சில பிரச்னைகள் இருந்தன. சிலர் உண்மையைச் சொல்ல விரும்பினர். ஆனால், அதனால் அவர்களுக்குப் பிரச்னைகள் வரும் என்ற நிலை இருந்தது. உதாரணமாக, அதில் 66 பேர் தனிப்பட்ட முறையில் ‘ப்ராக்டீஸ்’ செய்பவர்கள். பலர் மல்ட்டி-ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள். தான் யார், பணிபுரியும் மருத்துவமனையின் பெயர் முதலிய விவரங்களையெல்லாம் சொன்னால், அவர்கள் சோற்றில் மண் விழுந்துவிடலாம்! எனவே, அவர்களில் 37 டாக்டர்கள் மட்டுமே தங்கள் பெயர்களை வெளியிட அனுமதி கொடுத்தனர். ஆனால், தங்கள் பேட்டிகளைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று அனைவருமே எழுத்தில் அனுமதி கொடுத்தனர். அவர்கள் சொன்னதெல்லாம் முறையாகப் பதிவு செய்யப்பட்டது.

        உதாரணமாக, அவர்கள் அனைவரிடமும் ஒன்பது கேள்விகள் கேட்கப்பட்டன.
      1. தனியார் மருத்துவமனைகள் / நிறுவனங்கள் செயல்படும் விதம் உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா?
      2. இல்லைனெனில், எந்தெந்த விஷயங்களில் தரம் குறைந்துபோயுள்ளது? எங்கேயெல்லாம் பிரச்னைகள் எழுந்துள்ளன?
      3. உங்கள் அனுபவங்களில் இருந்து, மருத்துவத் துறையின் முறைகேடான செயல்கள் தொடர்பான சில உதாரணங்களைச் சொல்ல முடியுமா?
      4. நோயாளிகளுக்குப் பிரச்னையையும் துன்பத்தையும் ஏற்படுத்திய மருத்துவத் துறையின் முட்டாள்தனமான செயல்பாடுகள் பற்றி உங்கள் அனுபவம் சார்ந்த உதாரணங்கள் கொடுக்க முடியுமா?
      5. மருத்துவச் சேவைக்காக அநியாயமாக, கொடுப்பவர் தகுதிக்கு மேல் மிக அதிகமாகப் பணம் பிடுங்கப்பட்டது பற்றிச் சொல்ல முடியுமா?
      6. மருத்துவத் துறையில் மல்ட்டி-ஸ்பெஷாலிடி மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?
      7. மருத்துவமனைகளின் இயக்கத்தில் இன்சூரன்ஸின் பங்கு என்ன?
      8. மருத்துவமனைகள் இயங்குவதன் பின்னணியில், மருந்துக் கம்பனிகளின் தாக்கம் என்ன?
      9. நிகழ்கால நிலைமையை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
        இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் கொடுத்த பதில்களையும், அவர்களது அனுபவங்களையும் நூலாக வெளியிட்டுள்ளனர்.

        பிணத்தின் ஒரு பாதத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு அட்டையைக் காட்டும் புத்தகத்தின் முகப்பு வரைபடம் என்னென்னவோ சொல்கிறது. 

        பெயர் சொல்ல விரும்பாத ஒரு டாக்டர் சொன்ன அனுபவம்தான் மேலே விவரிக்கப்பட்டது. அதனால்தான், பக்கங்களைக் கொடுத்துள்ளேன்.

        ‘‘மருத்துவத் துறையில் நேர்மையை நாம் கைவிட்டுவிட்டோம். அது வியாபாரமாகிவிட்டது… முன்பெல்லாம், மாத்திரைகளல்லாத வெறும் ‘ப்ளேசிபோ’க்களைக் கொடுத்துக்கூட குணப்படுத்திக் கொண்டிருந்தோம். மக்களும் குணமடந்தனர். காரணம், அப்போதெல்லாம் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நம்பிக்கை என்ற ஒன்று இருந்தது… கொஞ்ச நேரம் நோயாளியோடு நான் அன்பாகவும் அரவணைப்போடும் பேசிக்கொண்டிருந்தாலே, அவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைவதை என்னால் காண முடிந்தது… மருந்துகள் மட்டும் உதவுவதில்லை. டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையே உள்ள உறவு மிக முக்கியமானது… இப்போதெல்லாம் நாங்கள் மனிதர்களுக்கு வைத்தியம் செய்வதில்லை. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் அறிக்கைகள் ஆகியவற்றுக்குத்தான் வைத்தியம் செய்துகொண்டிருக்கிறோம்… மருத்துவப் படிப்பின் பயிற்சியில்கூட, நாங்கள் ஒரு மனிதனை முழுமையாகப் பார்ப்பதே இல்லை. உறுப்பு உறுப்பாகத்தான் பார்க்கக் கற்றுக்கொள்கிறோம்

    (ப்ளேசிபோ விளைவு (Placebo effect) Vs நோசிபோ விளைவு (Nocebo effect) பற்றி தெரிந்துகொள்ள இங்கு 👇 செல்லவும்



        இப்படிச் சொன்னவர், பேட்டி எடுக்கப்பட்ட முதல் டாக்டர். மும்பையில் இருக்கும் மூத்த சர்க்கரை நோய் நிபுணர், டாக்டர் விஜய் அஜ்கோன்கர். மருத்துவ உலகின் மனசாட்சிபோல, சில முக்கியமான விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். ஒரு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே இருக்க வேண்டிய அன்னியோன்யமான உறவு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார். அதுமட்டுமல்ல, அலோபதியின் அடிப்படைத் தவறே மனிதனை முழுமையாகப் பார்க்க அது மறுப்பதுதான். அடிப்படைத் தத்துவம், பயன்பாடு இரண்டிலும் உள்ள முக்கியக் குறைபாடுகளை அவர் அடையாளப்படுத்தியுள்ளதாக நான் உணர்கிறேன்.

        என் மாமனார் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மருத்துவமனை வாசலில் காத்திருந்தோம். வெளியே வந்த டாக்டரிடம், அவருக்கு என்ன பிரச்னை என்று நான் கேட்டேன். ‘ஹீ இஸ் சிக்’ என்று ஒரு காப்பியம் எழுதக்கூடிய அளவுக்கு விளக்கமான விவரங்களைக் கூறிவிட்டு, ஒரு கணம்கூட நிற்காமல், என்னை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், அந்த இளம் புது மருத்துவர் சென்றார்! என் ‘குட்டியாப்பா’ கதையில்கூட இந்நிகழ்ச்சியை நான் குறிப்பிட்டிருந்தேன்.

        அலோபதி மருத்துவத்தின் மூலமாக வரும் எல்லாப் பிரச்னைகளுக்குமே இந்த இரண்டுதான் காரணம். படித்துவிட்டோம் என்ற திமிர். நோயாளிகளை நோக்கிய ஒரு அலட்சியம். லட்சம் லட்சமாகக் கொடுத்து வாங்கிய படிப்பு. கோடி கோடியாகச் சம்பாதித்தால்தான் கணக்கு சரியாகும். அந்தக் கணக்கை நோக்கித்தான் பெரும்பாலான டாக்டர்கள் விரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும், அதை நாம் வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், வேதம் ஓதுவதெல்லாம் ‘டிகிரி’ வாங்கிய சாத்தான்கள் என்பதுதான் பிரச்னையே!

        ‘‘ஒரு நோயாளி இரண்டாம் மருத்துவரைப் பார்க்கும்போது, முதல் மருத்துவர் கொடுத்த அதே மருந்தைத்தான் இரண்டாம் மருத்துவரும் கொடுப்பார். ஆனால், கம்பெனியை மாற்றிவிடுவார்! அவர் வேறு ஏதோ புதியதைக் கொடுப்பது மாதிரியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடுவார்!... சக மனிதர்களின் நோயைப் பயன்படுத்தி பணம் பண்ணுவது நமது நோக்கமே அல்ல. ஆனால், அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. செத்துவிடுவார் என்று நன்றாகத் தெரிந்தும், எழுபது எண்பது வயதுடைய முதியவரை ஐ.சி.யு.வில் வென்ட்டிலேட்டர்களில் வைத்திருக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? வேண்டாமே, அந்த முதிய நோயாளி வீட்டுக்குப் போய் தன் குடும்பத்தினர் சூழ நிம்மதியாக உயிர் விடட்டுமே, விட்டுவிடுங்களேன்… இன்றைக்கு சாகப்போகிறவரை நாளைவரை உயிர் வாழவைப்பதன் நோக்கம் என்ன? பொருளாதார ரீதியில் அவருக்குப் பிரச்னை கொடுக்கலாம், குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம் என்பதைத் தவிர?...” என்று கேட்கும் டாக்டர் அஜ்கோன்கர், நம் மரியாதைக்கு உரியவராகிறார்.

        குடிப்பதற்கான சமாசாரங்களை டாக்டர்களுக்கு மருந்துக் கம்பெனிகள் இலவசமாக வாங்கிக் கொடுத்து, தம் கம்பெனி மருந்துகளையே அவர்கள் நோயாளிகளுக்கு எழுதிக்கொடுக்குமாறு வற்புறுத்துகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அவர்! ‘கிக்’ ஏற்றப்பட்ட டாக்டர்களால் சிபாரிசு செய்யப்படும் மருந்துகளால் மக்களுக்கு என்னாகுமோ என்று நினைத்தால் ‘பக் பக்’ என்று மனம் அடித்துகொள்கிறது!

        ஒரு நீதிபதிக்குப் பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், அதற்காக சில மருத்துவப் பரிசோதனைகளையெல்லாம் செய்து சான்றிதழையும் அவர் காட்டவேண்டி இருந்தது. அதற்காக அவர் ஒரு மருத்துவரிடம் சென்றார். அவர் அரசு நியமித்த மருத்துவர் என்பது சொல்லாமலே தெரிந்திருக்கும். ஆனால், நீதிபதி புதிய பதவியை வகிக்கத் தகுதி இல்லாதவர் என்றும், அவருடைய ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் அந்த மருத்துவர் சொன்னார்.

        உண்மையிலேயே நீதிபதிக்கு ரத்தம் கொதித்தது! வேறு ஒரு மருத்துவரிடம் காட்டிய நீதிபதி, தன் ரத்த அழுத்தம் நார்மலாகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். ஏன் இப்படி தவறாகச் சொல்கிறாய் என்று அந்த அரசு மருத்துவரைக் கேட்டபோது, சரியான அறிக்கையைக் கொடுப்பதானால் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கேட்டிருக்கிறார்! வென்றது நீதிமானா புத்திமானா என்று பட்டிமன்றம் நடத்தலாம்! இந்த நிகழ்ச்சியையும் டாக்டர் அஜ்கோன்கர்தான் குறிப்பிடுகிறார்.

    இன்னும் இருக்கிறது, பார்க்கலாம்.




    நோயறிதலில் நடக்கும் தவறுகள்

        சிறுவயதில் கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடுவோம். அதற்கேற்றவாறு சட்டி, பானை, அடுப்பெல்லாம் வைத்து விளையாடுவோம். எல்லாமே குழந்தைகளைப் போலவே குட்டி குட்டியாக இருக்கும். அதே மாதிரி நமது ரத்தத்திலும் குட்டித் தட்டுகள் உண்டு. நம் ரத்தத்தில் உள்ள அநேக சமாசாரங்களில் ப்ளேட்லெட் என்பதும் ஒன்று. ப்ளேட் என்றால் தட்டு அல்லவா? தட்டு மாதிரி இருப்பதால் அவற்றுக்கு அந்தப் பெயரோ என்னவோ. ப்ளேட்லெட்டுகள் குட்டி ரத்தத்தட்டுகள். தட்டணுக்கள் என்றும் அவை சொல்லப்படுகின்றன. சரி, அவற்றைப் பற்றி இங்கு ஏன் பேசுகிறேன்? உங்களுக்காகத்தான், ஐ மீன், நமக்காகத்தான்.

        இந்தக் குறுந்தட்டுகள் ரத்தத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தால் அது ‘நார்மல்’ என்று சொல்லப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதரின் ரத்தத்தில் இத்தனை ப்ளேட்லெட்டுகள் இருக்க வேண்டும் என்று ஒரு அலோபதி கணக்கு உண்டு. அதை வைத்துத்தான் நாம் ஆரோக்கியமானவரா இல்லையா என்பதை அது முடிவு செய்யும்! நம்மை நோயாளியாக்கும் கணக்கு என்றுகூட அதைச் சொல்லலாம்.

        எத்தனை ப்ளேட்லெட்டுகள் இருந்தால் நாம் ஆரோக்கியமானவர் என்ற கணக்குக்குள் போவதற்கு முன், இந்தச் சராசரிகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம். நமக்கு எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும், எவ்வளவு ரத்தம் இருக்க வேண்டும், ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும், ரத்தத்துக்குள் இருக்கும் சமாசாரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும், நாடித்துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், புரோட்டின், விட்டமின், கால்சியம், கார்போஹைட்ரேட், அயன் போன்ற சத்துகளெல்லாம் உணவில் எந்த அளவில் இருக்க வேண்டும் – இப்படி சராசரிக் கணக்கு நம்மைச் சுற்றி எல்லாப் பக்கமும் வியாபிக்கிறது. எது சராசரி அளவு, எது அளவு மீறல், எது சராசரியைவிடக் குறைவு என்றெல்லாம் கணக்குகள் உள்ளன. ஒரு சின்ன அட்டவணை தருகிறேன் பாருங்கள்.

    நார்மல் பற்றிய அட்டவணை

        
        இது ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, வயதானவர்களுக்கு என்றெல்லாம் போகும்போது, இந்த அட்டவணையில் மாற்றங்களும் இருக்கும்! 


        ஒரு அட்டவணைப்படி மனிதனால் வாழமுடியுமா? அது சாத்தியம்தானா?

        120/80-ல் ரத்த அழுத்தத்தை வைத்துக்கொண்டு ஒருவர் ஒலிம்பிக்ஸில் ஓடிவர முடியுமா? காதல் வசப்படும்போது, காதலியோடு கண்ணால் பேசும்போது, கட்டியணைக்கும்போது – இந்த மாதிரியான எசகுபிசகான சூழ்நிலைகளிலெல்லாம் 120/80-ல் நம் ரத்த அழுத்தத்தை வைத்திருக்க முடியுமா?! அப்படி வைத்திருப்பது பற்றி அந்த நேரத்தில் யோசித்தால், காதலிக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படாதா?! ஒரு பெண் குழந்தையை ஒருவன் பாலியல் வன்முறை செய்வதைப் பார்க்க நேர்ந்தாலோ, அப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டாலோ ரௌத்ரம் பழகியவர்களின் தார்மிகமான கோப நிலையில் 120/80 எங்கே போகும்? கடன் கொடுத்தவன் கண்ணில் படாமல் அவனது ரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டு நாம் ஓடி ஒளியும்போது, நமக்கும் ரத்த அழுத்தம் அப்படியே இருக்குமா? கபாலி படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக, மலேசியாவில் அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து குதித்து உயிரை விட்டானே ஒரு ரசிக முட்டாள், அவனது ரத்த அழுத்தம் குதிக்கும்போது எந்த நிலையில் இருந்திருக்கும்?

        இவ்வளவு வேண்டாம். எல்லாவற்றுக்கும் நானே பதில் சொல்லிவிடுகிறேன். நாம் சாப்பிடும்போது, பட்டினி கிடக்கும்போது, தூங்கும்போது, கவலைப்படும்போது, சிந்தனை செய்யும்போது, தியானம் செய்யும்போது - இப்படி வாழ்வின் பல நிலைகளிலும் நமக்குப் பலவிதமான ரத்த அழுத்தம் இருக்கும். காந்திக்குக்கூட 200/140 தான் பெரும்பாலும் இருந்ததாகவும், அதுவே அவருக்கு நார்மலாக இருந்ததையும் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.

        மாற்றமே அடையாத ஒரு யந்திரமாக மனிதன் இருக்கும் பட்சத்தில்தான் இந்தச் சராசரிகள் சாத்தியம். மனிதன் மனிதனாக இருக்கும்வரை இந்தச் சராசரிக் கணக்குக்குள் வரவே முடியாது.

        சரி, இந்தச் சராசரிக் கணக்கை யார், எப்போது, எப்படிக் கண்டுபிடித்தார்கள்? யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனின் உடல் உஷ்ணம் ஏன் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டில் இருக்க வேண்டும் என்று ஒரு டாக்டரிடம் கேட்டுப்பாருங்கள். அவராலும் விளக்க முடியாது. அவருக்கு அப்படித்தான் சொல்லப்பட்டது.

        உடலில் பிரச்னை இல்லாதபோது எந்த டிகிரி ஃபாரன்ஹீட்டில் இருக்க வேண்டுமோ அந்த ஹீட்டில் உடல் இருக்கும். அது 98.6-ஆக இருக்கலாம் அல்லது வேறு எதாவதாகக்கூட இருக்கலாம். ஆனால், உடலில் சளி போன்ற கழிவுகள் அதிகமாகத் தேங்கிவிடும்போது, உஷ்ணத்தை ஏற்படுத்தி உடலில் இருந்து அந்தக் கழிவுகளை நீக்கும் இயற்கையான வைத்தியத்துக்குப் பெயர்தான் காய்ச்சல்! அப்போது உடலின் உஷ்ணநிலை இயல்பான உஷ்ணநிலையைவிட அதிகமாகத்தான் இருக்கும். மாத்திரை மருந்து சாப்பிட்டு உஷ்ணத்தை நாம் குறைப்போமானால், கழிவுகள் வெளியேறாமல் வேறுவிதமான பிரச்னைகள் ஏற்படும்.

        ரத்தத்தில் உள்ள ப்ளேட்லெட் கணக்கைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு மைக்ரோலிட்டர் ரத்தத்தில் 1,50,000-லிருந்து 4,50,000 வரை ப்ளேட்லெட்டுகள் இருக்க வேண்டுமாம்! பொதுவாக, ஏதாவது ஜுரம், குறிப்பாக வைரல் ஃபீவர், வரும்போது ப்ளேட்லெட்டுகளின் அளவு கணிசமாகக் குறையும் என்று சொல்லப்படுகிறது. (இதுவும் அஞ்சுவதற்குரிய விஷயமே இல்லை என்பதை பின்னால் பார்க்கலாம்). ஆனால் ப்ளேட்லெட்டுகளை கணக்கிட்டு, ‘உங்களுக்கு 1.5 லட்சம்தான் இருக்கிறது. ஆனால் 2 லட்சம் இருக்க வேண்டும்’ என்று சொல்லி, ஆள் வசதியான ஆளாக இருந்தால், அவருக்கு ‘சலைன் ட்ரிப்’ ஏற்றி, ஐ.சி.யு.வில் படுக்கவைத்து 25,000-லிருந்து 30,000 வரை பிடுங்கிய பிறகுதான் வெளியே விடுவார்கள்’ என்கிறார் ஒரு டாக்டர்.

        புதிதாகப் பிறந்த குழந்தைகள் பலருக்கு மஞ்சள் காமாலை வருவது சாதாரணமானதுதான். ஆனால், பல மருத்துவமனைகளில் அதையே காரணம் காட்டி, உங்கள் குழந்தைக்கு 10 mg ’பிலிரூபின்’ உள்ளது. ஒரு ‘பிலிரூபி’னுக்கு மேல் இருந்தால் அது கெடுதியாகும் என்று சொல்லி, தெளிவாக ‘பிரின்ட்’ செய்யப்பட்ட ‘ரிப்போர்ட்’டை காட்டுவார்கள். ஆனால், அந்தக் கணக்கு வளர்ந்தவர்களுக்குரியது. குழந்தைகளுக்கு 14 முதல் 16 வரை ‘பிலிரூபின்’ என்ற ஒரு சமாசாரம் உடலில் இருக்கலாம். அதற்கு மேல் போனால்தான் பிரச்னை (என்று சொல்லப்படுகிறது). ஆனால், வளர்ந்தவர்களுக்கான அறிக்கையைக் காண்பித்து குழந்தைகளை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்று அங்கலாய்க்கிறார் அதே டாக்டர் (அதே பக்கம்). நமது ரத்தத்தில் உள்ள வயசான சிவப்பணுக்களை உடலை விட்டு நீக்கும்போது உருவாகக்கூடிய ஒன்றுதான் ‘பிலிரூபின்’. உடலுக்குள் கணந்தோறும் லட்சக்கணக்கான சமாசாரங்கள் உருவாகும். அவற்றின் பெயர்களையும் அளவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஆனால் புரியாத, ‘விஞ்ஞானப்பூர்வமான’ பெயர்களைச் சொன்னால்தானே நம்மை பயமுறுத்த முடியும்?

    தேவையற்ற பரிசோதனைகள்

        உங்களுக்கு மலேரியா வந்துவிட்டது என்று ‘லேப் ரிப்போர்ட்’டை வைத்து டாக்டர் சொல்லுவார். அதற்கான மருந்து மாத்திரைகளையும் கொடுப்பார். ஆனால், நோயாளியாக்கப்பட்டவருக்கு எந்தக் குணமும் ஏற்படாது. அதன்பிறகு அவருக்கு இன்னொரு ‘டெஸ்ட்’ எடுக்கப்படும். அதன் விளைவாக, அவருக்கு வந்தது ‘மலேரியா’ அல்ல, ‘டைஃபாய்டு’ என்று சொல்வார்கள்! கேட்கின்ற கமிஷனை கொடுத்துவிட்டால், டாக்டர்கள் விரும்புகின்ற அறிக்கைகள் கிடைக்கும் என்கிறார் சட்டீஸ்கர் நகரின் ஷாஹித் மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர் ஜனா!
     
        ‘ஒன்று அல்லது இரண்டு லேப் ரிபோர்ட்டுகள் மட்டுமே வைத்திருக்கும் நோயாளிகள் மிகக் குறைவானவர்களே. நான் அன்றாடம் பார்க்கும் பலரிடத்தில், ஒவ்வொருவரும் தேவையில்லாத பல அறிக்கைகளைக் கொத்துக்கொத்தாக வைத்திருக்கின்றனர்’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சீனியர் சர்ஜனான டாக்டர் அர்ஜுன் ராஜகோபாலன்.
     
        ஒரு ஜுரம் வந்த ஐந்து நாட்களுக்கு முன் ஆய்வுக்கூடப் பரிசோதனை செய்தால், அது என்ன ஜுரம் என்று தெரியாது. ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அது டைஃபாய்டு என்றோ, டெங்கு என்றோ தெரியும் (இதுபற்றியும் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்). ஆனால், ஜுரம் வந்தவருக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் ‘டெஸ்ட்’ எடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்கிறார் ஒரு பெருநகர நோய்க்குறி வல்லுநர். இவர்கள் நோய்க்குறி வல்லுநர்கள் மட்டுமல்ல. பரிசோதிக்காமலே நோய்க்குறிகளை வாஷ் பேசினிலோ சிங்க்-கிலோ எறிந்துவிடும் குறி-எறி வல்லுனர்களாகவும் உள்ளனர்!

        ஒரு பெண் குழந்தை உண்டானால், அவளுக்குத் தேவையே இல்லாமல் முழு ரத்த அணுக்கள் எண்ணிக்கைக்கான ‘ஹீமோக்ரம் டெஸ்ட்’, சிறுநீரகம், கல்லீரல் போன்றவை ஒழுங்காக இயங்குகிறதா என்று அறியும் டெஸ்ட்டுகளெல்லாம் எடுக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் ஒரு கைனகாலஜிஸ்ட்.

        மனச்சிதைவு கொண்டவர்களைக்கூட மனநல மருத்துவர்கள் விட்டுவைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு தலைவலி வரத்தான் செய்யும். அது அவர்களைப் பொருத்தவரை சாதாரணமானதே. ஆனால், அதற்குக்கூட எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் எல்லாம் எடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று அங்கலாய்க்கிறார், கொல்கத்தாவைச் சேர்ந்த மனநல மருத்துவரான டாக்டர் சுமித் தாஸ்.
     
    தேவையற்ற அறுவை சிகிச்சைகளும் மருந்துகளும்

        ஒரு படத்தில் கார்த்திக் நடித்திருப்பார். அதில் வீட்டு வாடகை கேட்க வரும் வீட்டுக்காரர், அறையில் இருக்கும் ஒரு கட்டிலில் உட்காருவார். உடனே கட்டில் விழுந்து உடைந்துவிடும். அதைப்பார்க்கும் நாயகன், ‘சார் இது கட்டில் இல்லை, கட்டில் மாதிரி’ என்று சொல்வார். அதைப்போல இப்போதெல்லாம் மருத்துவமனைகளில் ஆபரேஷன் மாதிரிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ‘ஹெர்னியா’ (குடலிறக்கம்) இல்லாத ஒருவருக்கு, ஆய்வுக்கூட பரிசோதனை அறிக்கைகளின்படி ‘ஹெர்னியா’ என்று சொல்லி, அவருக்கு ‘அனஸ்தீஸியா’வும் கொடுத்து, சில தையல்களை மட்டும் போட்டுவிட்டு, ‘ஹெர்னியா ஆபரேஷன்’ செய்த மாதிரி காண்பித்து, அதற்குரிய ‘பில்’லை வாங்கிவிடுகிறார்கள் என்கிறார் ஒரு டாக்டர்.

        இன்னொருவருக்கு முதுகுத்தண்டில் ஒரு தட்டு நழுவிவிட்டது என்று சொல்லி, ஆபரேஷன் செய்த மாதிரி காண்பித்து, ஆபரேஷனுக்கான முழு சார்ஜையும் வாங்கிகொண்டார்கள் ஒரு பெருநகரில்.
    ஒவ்வொரு நாளும் வயதான இரண்டு அல்லது மூன்று பேரை நான் பார்க்கிறேன். அவர்களின் பிரச்னையெல்லாம் அவர்களுக்கு ஒரு மூக்குக்கண்ணாடி தேவைப்படுவதுதான். ஆனால், அவர்களுக்கு அநியாயமாக ‘காடராட்க் ஆபரேஷன்’ செய்யப்பட்டு 40,000 ரூபாய்கள் வரை பெறப்படுகிறது என்று குமுறுகிறார் ஒரு கண் மருத்துவர்.

        எங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் லேசர் சிகிச்சை பற்றி சொல்லித் தரப்படுவதில்லை. ஆனால், நாங்கள் அதை நோயாளிகளை வைத்து பரிசோதித்துக் கற்றுக்கொள்கிறோம். தவறுகள் நடக்கும்தான். ஒரு லேசர் யந்திரத்தை வாங்கிவிட்டால், போட்ட முதலை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற அவசரம்தான் அங்கே வேலை செய்கிறது. அவசியமே இல்லாவிட்டாலும், நோயாளிகளை யந்திரத்துக்குள் அனுப்புவது நடக்கத்தான் செய்கிறது என்கிறார் இன்னொருவர்.

        ஒரு நாலு வயதுப் பெண் குழந்தைக்கு கண்கள் அடிக்கடி சிவந்துபோயின. அக்குழந்தையின் அம்மா, மகளை ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அவர் ஸ்டீராய்டு சொட்டுகளை போடச் சொன்னார். ஒரு ஆண்டு ஆகியும் அதே சொட்டுகள்தான் பலமுறை பயன்படுத்தப்பட்டன. ஆனால், நீண்ட காலத்துக்கு ஸ்டீராய்டு சொட்டுகள் கொடுத்தால், கண்களில் ‘காடராக்ட்’ ஏற்பட வாய்ப்புண்டு. அந்தச் சின்னப்பெண்ணை என்னிடம் அழைத்து வந்தார்கள். கண் பார்வை சரியாகத் தெரியவில்லை என்று. அந்த நான்கு வயதுக் குழந்தைக்கு நான் ‘காடராக்ட்’ அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்தது என்கிறார் ஒரு கண் மருத்துவர்.

    பணத்தின் பின்னால்

        ஒரு ஆட்டோவில் ஏறி இந்த மருத்துவமனைக்குப் போ என்று சொன்னால், அவன் வேறு ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிப் போகிறான். ஏன்? அந்த மருத்துவமனை அவனுக்கு ஏற்கெனவே அதற்கான ‘டிப்ஸ்’ கொடுத்துள்ளது என்கிறார் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த கைனகாலஜிஸ்ட் டாக்டர் சுபாஷ் பாட்டில்.

        ஒரு பல்லை எக்ஸ்ரே எடுத்தால் போதும் என்ற நிலையில், ஏன் பத்து பற்களுக்கு எக்ஸ்ரே எடுக்கிறார்கள்? அப்போதுதான் 50 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் சம்பாதிக்கலாம் என்கிறார் ஒரு டாக்டர்!.

        ‘விருப்பமில்லாமல் போருக்குத் தள்ளப்பட்ட ஒரு ராணுவ வீரன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக சகட்டுமேனிக்குச் சுட்டுக்கொண்டே முன்னேறுவதுபோல, தனியார் மருத்துவத் துறைக்குள் நுழையும் ஒவ்வொரு டாக்டரும், தன் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த சர்ஜன் டாக்டர் சஞ்சய் நக்ரால்.
     
        ஒரு சாதாரண சலைன் பாட்டிலைத் திருடும் டாக்டர்கள்கூட இருக்கிறார்கள் என்கிறார் இன்னொருவர்! ஆனால், குழந்தைக்குத் தாய்ப்பால் தேவையில்லை, கொடுக்க வேண்டாம், தான் எழுதிக்கொடுக்கும் பால் ‘பாக்கட்’டையே பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் டாக்டர்கள் இருப்பது வணிகமயமாக்கட்ட சேவையின் உச்சகட்டம் என்று சொல்லலாம்!

        உங்களுக்கு கேன்சர் உடல் முழுவதும் பரவிவிட்டது. இனி ஆபரேஷன் செய்ய முடியாது என்று சொல்லப்பட்ட ஒரு நோயாளி, தனியார் மருத்துவமனையை அணுகுகிறார். அங்கே இனிக்க இனிக்க அவரிடம் பேசி, அவருக்கு தேவையில்லாத, நிச்சயம் பலன்கொடுக்காத ஒரு ஆபரேஷனை செய்து பணம் மட்டும் சம்பாதிக்கின்றனர் என்று வருத்தப்படுகிறார் டெல்லி AIIMS-ல் அறுவை சிகிச்சைப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் எல்.ஆர். மர்மு.

        இன்னும் உள்ளது…


        ரு சோப்பு வாங்க வேண்டுமென்றால், நமக்குப் பிடித்த சோப்பையே நாம் வாங்குவோம். எதை வாங்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்வோம். ஆனால், மருந்து விஷயத்தில் மட்டும் இது நேர்மாறாக உள்ளது. நம்முடைய பணத்தில் நாம் எந்த மருந்தை வாங்க வேண்டும் என்பதை மருத்துவரே முடிவு செய்கிறார்.

    காசு, பணம், துட்டு, மணி மணி

        Dissenting Diagnosis என்ற நூலில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்தைத்தான் மேலே கொடுத்துள்ளேன். ஆனால் எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! நமக்கான பொறுப்பை ஒரு மருத்துவர் எடுத்துக்கொள்ளும்போது அவர் எவ்வளவு பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும்! ஆனால், இந்த உலகில் பொறுப்புணர்வும் மனிதாபிமானமும் உள்ள மருத்துவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதைத்தான் அந்த நூல் காட்டுகிறது. டாக்டர்களெல்லாம் மருந்துக் கம்பெனிகளின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என்று டெல்லியைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் கொசைன் சொல்வது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
     
        ஒரு மாநாட்டுக்கு வாருங்கள் என்று சொல்லி ஒரு மருந்துக் கம்பெனி என்னை வெளிநாட்டுக்கு அழைத்தது. ஆனால் நான் செல்லவில்லை. அவர்கள் தரும் மருந்துகள் எதையும் நான் நோயாளிகளுக்கு எழுதிக்கொடுக்கவில்லை என்று தெரிந்ததும் என்னிடம் வருவதை அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள் என்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுசித்ரா.

        தங்கள் மருத்துவமனைகளின் வருமானத்தைப் பெருக்க உதவும் டாக்டர்களை மட்டுமே கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்கின்றன. அங்கே ஒரு நோயாளியிடம் 1,50,000 ரூபாய் வசூலிக்கப்பட்டால், அதில் 15,000 மட்டுமே டாக்டருக்குக் கொடுக்கப்படுகிறது என்று கூறுகிறார் புனேயைச் சேர்ந்த டாக்டர் சஞ்சய் குப்தா.

        ஒரு பெரிய மருத்துவமனையில் நிகழ்ந்த மாரடைப்பு சிகிச்சையில் ஒரு நோயாளி இறந்துபோனார். ‘மருத்துவத் துறையில இதெல்லாம் சகஜமப்பா’ என்பதுபோல எளிமையான அந்த சிகிச்சைக்காக, 16 லட்ச ரூபாய் ‘பில்’ இறந்தவரின் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது! ஆனால், நோயாளியின் உறவினர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே, ‘ரமணா’ படத்தில் வரும் காட்சிபோல, அந்த மருத்துவமனை அந்த நோயாளியின் உடலைக் கொடுக்காமல் மறைத்துவிட்டது! கடைசியில், ஒரு டி.எஸ்.பி. நண்பர் வந்து சோதனை செய்யவேண்டி இருந்தது என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு டாக்டர்.
     

        ‘மும்பையில் இருக்கும் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் எனக்கொரு எளிமையான ஆன்ஜியோப்ளாஸ்டி செய்யப்பட்டது. காலையில் 10 மணிக்கு சேர்க்கப்பட்ட எனக்கு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் எல்லாம் முடிந்துவிட்டது. நாலு லட்ச ரூபாய் ‘பில்’ கட்டச் சொல்லி சொன்னார்கள். அதுவும் நான்கு மணி நேரத்தில். செக், ட்ராஃப்ட் எதுவும் வாங்கமாட்டார்களாம். ரொக்கப்பணம் மட்டும்தான்! எப்படியோ சமாளித்து பணத்தை நான் கட்டினேன். எல்லோராலும் இப்படிச் செய்ய முடியுமா என்ன’ என்று அங்கலாய்க்கிறார், டாக்டர் ராஜேந்த்ர மலோஸ்.

        ‘இங்கே இருக்கும் டாக்டர்களில் 90 சதவீதம் பேர் அலோபதி டாக்டர்களே அல்ல. எல்லோருமே ஹோமியோபதி அல்லது ஆயுர்வேத டாக்டர்கள்தான். ஆனால், அலோபதி டாக்டர்களாக அவர்கள் வலம் வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் தொடர்பும் செல்வாக்கும் உள்ளது. என்னை எப்படியாவது இந்தத் துறையிலிருந்து தூக்கிவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

        ‘நான் ஒரு நோயாளியிடம் 40 ரூபாய்கள் மட்டுமே வாங்குகிறேன். ஒரு நாளைக்கு 150 நோயாளிகளைப் பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அந்த டாக்டர்களோடு எனக்குப் பிரச்னைதான். தேவையில்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் எழுதிக்கொடுத்த சீட்டுகளைக் கொண்டு வந்து நோயாளிகள் என்னிடம் காட்டுவார்கள். நான் அவற்றையெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போங்கள், உங்களுக்கு ஒன்றுமில்லை என்று சொல்லி அனுப்பிவிடுவேன். எனவே, என்னால் அந்த டாக்டர்களுக்கு ஒரு நாளைக்கு 20,000 முதல் 30,000 வரை இழப்பு ஏற்படுகிறது. அதனால்தான் அவர்கள் என்னைத் தூக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

        அச்சமூட்டும் நிஜம் இதுதான். ஆனால் நான் விடப்போவதில்லை. என்னைப்போல இன்னொரு டாக்டர் இருப்பார் என்று சொல்லமுடியாது. அவர் அடங்கிப் போய்விடலாம். ஆனால் அவரை நான் குறைசொல்லமாட்டேன்’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு டாக்டர்.

        என் க்ளினிக்குக்கு ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். அக்குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சும்மா வயிற்றில் காற்று இருந்தது. அவ்வளவுதான். எந்த மருந்தும் அதற்குத் தேவையில்லை என்று நான் சொன்னேன். அன்று மாலை எனக்கு வேறொரு டாக்டரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னிடம் ஒரு குழந்தையை அனுப்புவதாகவும், அது ரொம்ப சீரியஸான நிலையில் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஆனால் நான் பார்த்து ஒன்றுமில்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிய அதே குழந்தைதான் அது!

        அந்தக் குழந்தைக்குக் குடல்கள் திருகிக்கொண்டு இருந்ததாக ஸ்கேன் அறிக்கை சொன்னது. ஆனால், உண்மையில் அக்குழந்தைக்கு அப்படி எதுவும் இல்லை. அது சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருந்தது. ஒரு நாள் குழந்தையை என் க்ளினிக்கில் சேர்த்துவைத்து மறுநாள் வீட்டுக்கு அனுப்பினேன். குழந்தைக்குப் பெற்றோரே அவர்கள் இஷ்டத்துக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள்’ என்று கூறுகிறார் மஹாராஷ்ட்ரா டாக்டர் ராஜீவ் தமன்கர்.

    நார்மல் டெலிவரியா? அப்படீன்னா?

        மகப்பேறு மருத்துவர்கள் பலருக்கு ‘நார்மல் டெலிவரி’ என்றால் என்னவென்றே தெரியவில்லை! ‘நார்மல் டெலிவரி’ என்றவுடன் பயந்து, அவர்கள் ‘அப்நார்மலாக’ ஆகிவிடுகிறார்கள்! உடனே ‘சிசேரியன் செய்ய வேண்டும்’ என்று சொல்லி தப்பித்துவிடுகிறர்கள். அவர்களைப் பொறுத்தவரை, வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்படுதான் ‘நார்மல்’!

        ஒரு பெண், குழந்தை உண்டாவது சந்தோஷமான இயற்கையான நிகழ்வுதானே? ஒரு நோய் வந்தால்தானே டாக்டரைப் பார்க்க வேண்டும்? ஒரு பெண், குழந்தை உண்டாவது ஆரோக்கியமான நிகழ்வுதானே? அதற்கு ஏன் டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள் ஹீலர் உமர், ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள்! இந்த நியாயமான கேள்வி நமக்கு எப்போதாவது உரைத்திருக்கிறதா?
     
        இல்லை, குழந்தை வளர்ச்சிக்கான மருந்து மாத்திரைகள், ஊசிகள் கொடுப்பார்களல்லவா? அப்போதுதானே குழந்தை கொழுகொழுவென வளரும் என்று நாம் சொல்லலாம். ஆனால் நம் கொழுகொழு முன்னோர்களெல்லாம் கைனகாலஜிஸ்ட்டுகளின் தொடர்ந்த கவனிப்பில் உருவானவர்களா? கைனகாலஜிஸ்ட் சமுதாயம் உருவாவதற்கு முன்னர் உருவான குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவில்லையா? வள்ளுவன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன் போன்றவர்களெல்லாம் அப்படிப் பிறந்தவர்களா என்ன?

        குழந்தை உண்டாவது எப்படி இயற்கையானதோ, அதேபோல குழந்தை வளர்வதும், பிறப்பதும் இயற்கையானதுதான். இன்றைக்கு ஹீலர்களின் புண்ணியத்தால் நூற்றுக்கணக்கான நார்மல் டெலிவரிகள் நடந்தேறியுள்ளன. இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் கொண்ட பல தாய்மார்கள் உருவாகியுள்ளனர். ‘அப்பா’ என்ற சமீபத்தைய திரைப்படத்தில்கூட இவ்விஷயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


        ஆனால் இதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடந்துகொண்டுள்ளது. இதற்கு வேண்டிய தெளிவும் தைரியமும் இன்னும் நம்மிடம் வரவில்லை. குழந்தைப்பேறு என்பது செத்துப் பிழைப்பது, மறுபிறப்பைப் போன்றது என்று சொல்லி அச்சமூட்டவும், அச்சப்படவுமே நாம் விரும்புகிறோம். ஒனக்கென்ன, நீ ஆம்பள, ஈஸியா சொல்லிட்டுப் போயிடுவ, எங்களுக்கல்லவா அந்தக் கஷ்டம் தெரியும் என்று பலர் நினைக்கலாம். ஆனால் ‘நார்மல் டெலிவரி’, அதுவும் ‘ஹோம் டெலிவரி’ செய்துகொண்ட பெண்களிடம் பேசிப்பார்த்தால் உண்மை தெரியும். ஏனெனில், மருத்துவமனைகளில் உண்மை சொல்லப்படுவதே இல்லை. பணம் நிறைய பிடுங்குவதற்கான அச்சமூட்டும் செய்திகள் மட்டுமே சொல்லப்படுகின்றன.

        எனக்குத் தெரிந்த ஹீலர் நண்பர் ஒருவரின் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. குழந்தை வெளியில் வந்து பாதியில் நின்றுகொண்டிருந்தபோது அந்தத் தாய்க்கு மயக்கம் வந்து நினைவிழந்தார். என்ன செய்தீர்கள் என்று கேட்டேன். ஒன்றுமே செய்யவில்லை, குழந்தையை வெளியே தள்ளும் அளவு அவருக்கு சக்தி இல்லாததால், அதுவரை அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தேவையான சக்தியைத் திரட்டிக் கொண்டிருந்தது அவரது உடல். ஒரு கால் மணி நேரம் கழித்து அவருக்கு மீண்டும் நினைவு வந்தது. பிறகு குழந்தையும் நல்லபடியாகப் பிறந்தது என்று வெகு சாதாரணமாகக் கூறினார்.

        அதே சூழ்நிலை மருத்துவமனையில் ஏற்பட்டிருந்தால் பிரச்னை பெரிதாக்கப்பட்டு, வாழ்வா சாவா என்று சொல்லப்பட்டு, ரொம்பக் கஷ்டப்பட்டுக் காப்பாத்தினோம் என்று சொல்லி நிறைய பணம் பிடுங்கப்பட்டிருக்கும். இயற்கையான விஷயங்களுக்கு இயற்கையே பொறுப்பேற்றுக் கொள்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டி உள்ளது. எனினும், இக்காலத்தில் ‘நார்மல் டெலிவரி’ செய்ய விரும்பும் பெண்கள் மிக அரிதாகவே இருக்கின்றனர்.

        ‘கொஞ்ச நாளைக்கு முன்னால், ஒரு எம்.டி. டாக்டர் என்னிடம் பேசினார். அவர் ஒரு பணக்கார தனியார் மருத்துவமனையில் படித்து எம்.டி. பட்டம் பெற்றிருந்தார். அவருக்கு அனுபவமும் கிடையாது. ஒரு பணக்காரப் பெண், அவர் வேலை பார்த்த பெரிய மருத்துவமனைக்கு வந்து கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவரும் செய்து அனுப்பியிருக்கிறார். ஆனால், சில வாரங்கள் கழித்து, உதிரப்போக்கு அதிகமாக இருக்கிறது, வயிற்று வலியும் உள்ளது என்று அவர் திரும்பி வந்திருக்கிறார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது கர்ப்பப் பைக்குள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்தது தெரிய வந்தது. சரியாக ‘அபார்ஷன்’ செய்யப்படவில்லை.

        ‘இது நடப்பதுதான் என்று சொல்லி, செய்ய வேண்டியதைச் செய்து அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்தப் புது எம்.டி. மருத்துவர், அந்தப் பெண்ணுக்கு ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் நிறைய கொடுத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்கிறார்! மேலும் மேலும் ஆன்ட்டிபயாடிக்ஸ்!

        ‘கடைசியில் ‘செப்டிக்’ ஆகி, ஜுரம், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு எல்லாம் அபாயகரமான நிலைக்குச் சென்றுவிட்டது. கர்ப்பப்பையை நீக்கிவிட வேண்டும் என்ற நிலை வந்த பிறகுதான், அந்த எம்.டி.யிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

        ‘கொஞ்சம் முன்னாடியே என்னிடம் சொல்லியிருக்கலாமே என்று கேட்டதற்கு, ‘இப்போதுதான் சொல்கிறேனல்லவா?’ என்று பதில் வந்தது! அனுபவம் இல்லை என்பதோடு, திமிரும் சேர்ந்துகொண்டிருந்தது.

        நாங்களெல்லாம் ஒரு பிரச்னை வந்தால் உடனே எங்களது சீனியர்களை கலந்து ஆலோசிப்போம். இப்போதெல்லாம் சீனியாரிட்டிக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது’ என்று தன் அனுபவத்தை விவரிக்கிறார் ஒரு பெரு நகர மகப்பேறு மருத்துவர்.

    சுமந்தா முகர்ஜிக்கு நடந்தது என்ன?

        அவர் பெயர் சுமந்தா முகர்ஜி. இருபது வயது இளைஞர். எலக்ரிகல் இன்ஜினீயரிங் மாணவர். தன் ‘பைக்’கில் ட்யூஷன் வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கொல்கத்தா நகரப் பேருந்து ஒன்று இடித்துக் காயமடைந்தார். அங்கு நின்றுகொண்டிருந்த சில மனிதநேயமுள்ள மக்கள் அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். 65,000 ரூபாய்க்கு மெடிகல் பாலிஸியும் சுமந்தா வைத்திருந்தார். உணர்வோடு இருந்த அவர், அந்த பாலிஸியையும் எடுத்து மருத்துவமனை அதிகாரிகளிடம் காட்டியுள்ளார். சிகிச்சையைத் தொடங்கும்படியும், பணம் எப்படியும் கிடைத்துவிடும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், ஆரம்பகட்டமாக 15,000 ரூபாய் கொடுத்தால்தான் சிகிச்சை செய்யமுடியும் என்று மருத்துவமனை அதிகாரிகள் சொல்லினர். கூடச் சென்றவர்கள் சேர்ந்து 2000 ரூபாய் திரட்டிக் கொடுத்துள்ளனர். ஆனாலும், நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளாமல், கொடுத்துக் கொண்டிருந்த சிகிச்சையையும் நிறுத்தினர். வேறு வழியில்லாமல், சுமந்தாவை ஏழெட்டு கிலோமீட்டர் தள்ளி இருந்த இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துபோனார்.

        எமர்ஜென்ஸி ட்ரீட்மென்ட் கொடுக்க மறுத்த அந்த மருத்துவமனை மீது ‘நேஷனல் கன்ஸியூமர் டிஸ்பியூட்ஸ் ரெட்ரஸல் கமிஷன்’ மூலமாக சுமந்தாவின் தந்தை ஒரு வழக்கு தொடர்ந்தார். சுமந்தாவின் குடும்பத்துக்கு அந்த மருத்துவமனை பத்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.

        எத்தனை லட்சம் வந்தாலும், சுமந்தாவின் உயிர் போனது போனதுதானே? எனினும், நஷ்ட ஈட்டிலிருந்து தப்பிப்பதற்காகவாவது இனிமேல் அந்த மாதிரி மருத்துவமனைகள் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ளலாம்.

    தேகமா வேகமா?

        இது நடந்தது மும்பையில். அங்கே ஒரு பெரிய மருத்துவமனையில் இருந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மிக வேகமாக அறுவை சிகிச்சை செய்வதற்குப் பெயர் போனவர். மனித உடலை வேகவேகமாக அறுத்து, வேலையை முடிப்பதில் அவர் நிபுணர். வாயு வேகம், மனோ வேகம் மாதிரி அவருக்குக் கத்தி வேகம்.

        ஒரு நோயாளிக்குக் கிட்னியில் கல் இருந்தது. அதற்கான அறுவை சிகிச்சையை அவர் செய்யவேண்டி இருந்தது. தோலைக் கிழித்து உள்ளே சென்று கிட்னியில் இருந்த கல்லை நீக்கிவிட்டு, கத்தியை வெளியில் எடுத்து மீண்டும் தோலைத் தைப்பதற்கும் சேர்த்து பத்து நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அவர் சங்கல்பம் செய்துகொண்டார்! மனித உயிருக்கு செய்யப்படும் அவமரியாதைகளின் உச்சம் என்று அதைச் சொல்ல வேண்டும். யார் உடலை வைத்து யார் விளையாடுவது?

        ஆபரேஷனும் தொடங்கியது. விரைந்து முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், கிட்னியோடு தொடர்புகொண்ட ஒரு முக்கியமான தமனியை அவர் அறுத்துவிட்டார். அது இல்லாமல் கிட்னி வேலை செய்யாதுபோலும். தப்பு செய்துவிட்டோமே என்று தெரிந்ததும், வேறு வழியின்றி கிட்னியில் இருந்த கல்லோடு சேர்த்து கிட்னியையும் அவர் நீக்கிவிட்டார்!

        அதுமட்டுமின்றி, தான் செய்த குற்றத்தை மறைத்து, அந்தக் கல்லினால் கிட்னி பாழாகி இருந்ததாகவும், கிட்னியை எடுத்திருக்காவிட்டால் நோயாளி இறந்திருப்பார் என்றும் அவரது உறவினர்களிடம் மனசாட்சியே இல்லாமல் பொய்களை அள்ளிவிட்டார். நோயாளியின் உயிரைக் காப்பாற்றியதற்காக நோயாளியின் உறவினர்கள் அவரை பெரிதும் பாராட்டினார்கள்!
     

        அமெரிக்கன் பீன்ஸ் அரை கிலோ வாங்கி வந்து, அதிலுள்ள விதைகளையெல்லாம் எடுத்துவிட்டு, சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக்கொண்டு, இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து காஸ் அடுப்பில் ‘சிம்’மில் வைத்து சூடு பண்ணி, மிக்ஸியில் போட்டுக் கூழ் மாதிரி அரைத்து, அது ஆறியவுடன் அப்படியே குடித்துவிட வேண்டும். முழுதும் குடிக்க முடியாவிட்டால் முடிந்த அளவு குடிக்கலாம். குடித்து முடித்த இரண்டு மணி நேரத்துக்குள் மூன்று லிட்டர் தண்ணீரை விட்டு விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் காலையில் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் டீ, காபி என்று வேறெதுவும் சாப்பிடக்கூடாது. மூன்று மணி நேரம் கழித்து, பசி எடுத்தால், வழக்கம்போல சாப்பிட்டுக்கொள்ளலாம். இந்த இடைவெளியில் சிறுநீர் வந்தால், அதை ஒரு கோப்பையில் பிடித்துப் பார்த்தால், அதில் சிறுநீரகக் கற்கள் வெளியில் வந்திருப்பது தெரியும். சிலருக்குக் கொஞ்சம் வலியோ சிறுநீர் வெளிவரும் பாதையில் சிறு புண்களோ ஏற்படலாம். ஆனால், இரண்டு நாள் கழித்து நீங்கள் ஸ்கேன் செய்து பார்த்தால், நிச்சயமாக எல்லா சிறுநீரகக் கற்களும் வெளியேற்றப்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார் ஹீலர் பாஸ்கர்.
     
        இப்படியெல்லாம் எளிமையான வழிகள் இருக்கும்போது, பணத்தையும் கொடுத்து பிணமாக வேண்டிய அவசியம் நமக்கென்ன இருக்கிறது?

        தவறான அறுவை சிகிச்சைகள், வேண்டுமென்றே பணம் பிடுங்குதல், சிகிச்சை செய்யாததால் ஏற்பட்ட இறப்புகள் என மருத்துவ உலகம் செய்து கொண்டிருக்கும் எல்லா அயோக்கியத்தனங்களையும் ஆதாரத்துடன் அந்த நூல் எடுத்துக் காட்டியுள்ளது. மருத்துவ உலகின் மனசாட்சியாக செயல்பட்டுள்ளது அந்த நூல் என்றே சொல்லலாம். அதிலிருந்து கொஞ்சம் மட்டும் இதுவரை நாம் பார்த்தோம்.

        கிருமிகளால் நோய்களும் மரணமும் உண்டாகின்றன என்று மருத்துவ உலகம் கூப்பாடு போட்டுக்கொண்டுள்ளது. உண்மையான நோய்க் கிருமிகள் மேலே சொன்ன மாதிரியான மருத்துவமனைகளும், மருந்துகளும், அவற்றை சிபாரிசு செய்யும் மருத்துவர்களும்தான். நோயை உண்டாக்குவதாகச் சொல்லப்படும் கிருமிகள் உண்மையில் நோயை உண்டாக்குவதே இல்லை! கிருமிகள்தான் உண்மையில் நமது நோய்களை குணப்படுத்துகின்றன! கிருமிகளைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை.

        எப்படி என்று பார்க்கத்தானே போகிறோம்?


    தொடரும்...