''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா!''


 


வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறை’யை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.

 உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக் காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் ரத்தத்தில் அனைத்து சத்துகளும் இருக்கும். மேலும், பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கி, நாக்கால் சுவையை ருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும். மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன. இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன. இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.



அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு  இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்...

''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது. இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம். சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன? காலை தொங்கப் போட்டபடி நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்...  





''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''

நன்றி - ஹீலர் பாஸ்கர்


For more info visit:


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

சீழ் என்பது என்ன தெரியுமா?


உடலில் எங்காவது காயம் ஏற்படும் போது சரியாக கவனிக்கவில்லை என்றால் சில நாட்களிலேயே சீழ் பிடிக்க ஆரம்பித்து விடும். 

சரி இந்த சீழ் என்பது என்ன… தெரியுமா? 

அநேகமாக உங்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் தசை நார்கள் கிழிந்து வடிந்தோடிய ரத்தம் கெட்டுப்போய் இருக்கும் என நினைப்பீர்கள். ஒரளவுக்கு நீங்கள் நினைப்பது சரி… அதாவது கெட்டுபோன ரத்தம் தான் அது, ஆனால் முழுமையான காரணம் வேறு. 

உடலில் காயம் ஏற்படும் போது அதன் வழியாக கிருமிகள் உள் நுழைகிறது, கிருமிகளை எதிர்க்கவே நம் உடலில் காவலர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தான் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், இந்த வெள்ளை அணுக்களின் கடமையே நோய் பரப்பும் கிருமிகளுடன் சண்டை இடுவது தான். காயத்தின் காரணமாக உட்புகும் கிருமிகளை, வெள்ளை அணுக்கள் எதிர்த்து சண்டையிடுகின்றன, சண்டையில் உயிர் நீத்த போராளி வெள்ளை அணுக்கள் தான் இந்த சீழ். உடலுக்கு தேவை இல்லாத கழிவு என்பதால் உடலை விட்டு அது தானாக வெளியேறுகிறது.

மேற்கொண்டு ரத்தம் பற்றிய சில தகவல்கள்:

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். 

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

  • கட்டை விரல் - நெருப்பையும் 
  • சுட்டுவிரல் - காற்றையும் 
  • நடுவிரல் - ஆகாயத்தையும் 
  • மோதிர விரல் - நிலத்தையும்
  • சுண்டு விரல் - நீரையும் 
                               குறிக்கின்றன. 

தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.



தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.



மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.

காது நன்கு கேட்க!


காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த (Shunya) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.



மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.



இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.



உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.



நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.



இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங் (Ling) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.



நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(Apan Vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....

வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை

இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான (Vyana) முத்திரை என்று இதற்குப் பெயர்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.

For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

மூளைக்கு சுய அறிவில்லை

கோமா என்னும் சுய நினைவு இல்லாமல் இருக்கும் ஒரு நோயாளியைப் பற்றி டாக்டரிடம் விவரம் கேட்டால் அவர் சொல்லும் பதில் மூளை செயல்படவில்லை என்பது தான்அதன் பொருள் மூளை செயல்படவில்லை அதனால்தான் அவர் கோமா நிலைக்கு வந்துவிட்டார் என்பதாகும்.
மூளை செயல்படவில்லையே அப்படியானால் அதை உடலை விட்டு அகற்றிவிடலாமா என்று கேட்டால்?பல உறுப்புக்களை அறுத்து எறியும் இவர்கள் அதற்கு துணிவதில்லைகாரணம் மூளையை அப்புறப்படுத்தினால் அடுத்தது மரணம் தான்செயல்படாத மூளையை அப்புறப்படுத்தினால் மரணம் ஏன் ஏற்படுகின்றது?
கோமாவிற்கு அர்த்தம் தவறாக புரிந்துக் கொண்டு செயல்படுவதால் தான் இந்த குழப்பம்மூளை செயல்படாத காரணத்தினால் தான் கோமாவா?
மூளைக்கு ஒன்றும் தெரியாதுகண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறீர்கள் ஒருவர் உங்கள் கையை கிள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்இந்த சம்பவத்தில் என்னென்ன நடக்கின்றதுமூளைக்கு கிள்ளுவதால் ஏற்படும் சிரமத்தை செல்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றதுமூளை உடனே கண்களுக்கு கட்டளை இடுகின்றது திறந்து பார்க்கச் சொல்லி.கண்கள் பார்த்தவுடன் ஒருவர் கிள்ளுவதை மூளைக்கு தகவல் அனுப்புகின்றதுமூளை உடனே அடுத்த கட்டளையை பிறப்பிக்கின்றதுசூழ்நிலைக்கு தகுந்தார் போல் அதாவது மீண்டும் கிள்ளும்படியோதட்டிவிடும்படியோ அல்லது அலட்சியப்படுத்தும்படியோ.
நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கின்றீர்கள். AK47 உடன் உங்கள் அருகில் ஒருவன் தயாராக இருக்கின்றான்.இது உங்களுக்கு தெரியுமாதெரியாதுதப்பியோட முயற்ச்சி செய்வீர்களா?செய்ய மாட்டீர்கள்ஏன் இதை உங்கள் கண்கள் பார்த்து மூளைக்கு தகவல் அனுப்பினால் மட்டுமே மூளை அடுத்த கட்டளையை பிறப்பிக்கும் தப்பி ஓடு அல்லது எதிர்த்து தாக்கு என்று.
கண்ணை மூடி படுத்திருக்கிறீர்கள் மல்லிகை வாசம் உங்கள் மூக்கை துளைக்கின்றதுதகவல் மூளைக்கு பறக்கின்றதுமூளை கட்டளையிடுகின்றது கண்களுக்குகண்கள் திறந்து அழகான பெண்கண்கள் மூலம் மீண்டும் தகவல் விறைகின்றது மூளைக்குமீண்டும் மூளை கட்டளையிடும்.
அந்த கட்டளை அந்த பெண்ணைப் பற்றி கவிதை எழுதவும் சொல்லலாம், பாவம் துரோகம் என்று ஒதுங்கவும் சொல்லலாம் (இது அந்த மூளையின் யோக்கியத்தைப் பொறுத்தது).
மேற்கண்ட உதாரனங்கள் போல 1000-ம் உதாரனங்களை கூறிக் கொண்டே போகலாம்இதிலிருந்து என்ன தெரிகின்றதுமூளைக்கு சுயமாக இயங்க அறிவதில்லைதகவல் கிடைத்தாலே செயல்படும்தகவல் கிடைக்காவிட்டால் அதனால் செயல்பட முடியாது.
உடல் உறுப்புக்கள் அனைத்தும் தகவல் தராமல் செய்யும் ஸ்டிரைக் தான் கோமாமூளைக்கும் மற்ற அனைத்து உறுப்புக்களுக்கும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் ஏற்படும் நிலையே கோமாமூளை செயல்பட காத்திருந்தும் தகவல்கள் வராத காரணத்தினால் உடலில் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்படும் நிலையே கோமா.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்மூளை செயல்படாத காரணத்தினால் தான் கோமா என்று சொல்வது எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்றுகோமாவில் பாதிக்கப்பட்டிருப்பவருக்கு சிகிச்சை என்ற பெயரில் மூளை ஸ்கேன், MRI ஸ்கேன் என்று எடுத்து நேரத்தை பொருளை வீனாக்குவதை விட்டு விட்டு பழங்கால அக்குபஞ்சர் முறையில் நாடி பிடிப்பதன் மூலம் விவரம் அறிந்து சிகிச்சை அளித்தால் நோயாளி விரைவில் குணம் பெறலாம் இன்ஷா அல்லாஹ்.
மூளையில் பிரத்தியோகமாக விபத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ நேரிடையாக சேதம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் ஒழிய வேறு காரணங்களுக்காக மூளையை காரணமாக்கி தப்பித்துக் கொள்ள பார்ப்பது உண்மையான மருத்துவம் ஆகாதுஉணர்ச்சியின் பாகுபாடுகள் கூட உடல் உறுப்புகளின் பிரதிபலிப்பேஅதற்கு மூளை காரணமல்லஉதாரணமாக ஒருவனுடைய இதயம் நன்றாக இருந்தால் அடிக்கடி பாட்டு வரும்விசில் வரும்எப்போதும் சந்தோஷமாக இருப்பான்.
சந்தோஷம் இதயம் சம்பந்தப்பட்டது (இப்போது புரிகிறதா காதல் இதயம் சம்பந்தப்பட்ட விஷயம்).
ஒரு பையனை பயம் காட்டினால் அவன் உடனே சிறுநீர் கழித்துவிடுவான்பயம்-சிறுநீரகம் (சிறுநீர் பை) சம்பந்தப்பட்டது.
குடிகாரனுக்கு கோபம் அதிகம் வரும்காரணம் குடித்து குடித்து கல்லீரல் கெட்டுப் போயிருக்கும்கல்லீரல் கெட்டதனால் கோபம் அதிகம் வரும்பித்தம் அதிகமானாலும் வரும்கோபம்-கல்லீரல் பித்தப்பை சம்பந்தப்பட்டது.
நன்றாக பசியோடிருப்பீர்கள்அப்போது உடனே சாப்பிட வேண்டும் போலிருக்கும்அந்த நேரத்தில் துக்கமான செய்தி வருகின்றதுஉடனே பசி மறந்து போகும்துக்கம்-வயிறு மண்ணீரலோடு சம்பந்தப்பட்டது.
நாணம்கூச்சம்வெட்கம் இவைகள் நுரையீரல்-பெருங்குடல் சம்பந்தப்பட்டவைஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு குணாதியசங்களை தாம் பெற்று தனித் தனி டிபார்ட்மென்டுகளாக செயல்படுகின்றது.இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் தலைமையகமே மூளை.
தனக்கு கீழே உள்ள உறுப்புகளின் ஒத்துழைப்பு இல்லாமல் மூளையால் செயல்பட முடியாதுமூளைக்கு தனியாக இயங்க அறிவு கிடையாது.
பிறந்த குழந்தைக்கு தாய் யார் தந்தை யார் என்று தெரியாதுநாம் பல முறை சொல்லிக் கொடுத்து செவி மூலமும் விழி மூலமும் தகவலை அனுப்பி பதிய வைப்பதன் மூலமே மூளைக்கு தெரிகின்றதுஇது போன்றதே ஒவ்வொரு தகவலும்ஒரு குழந்தை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறுதல் பதிய வைக்கும் தகவலைப் பொறுத்ததே.
ஒரு சில பெண்கள் குதிரை போல நிமிர்ந்து கொஞ்சம் கூட நானம் இல்லாமல் ஆண்களைப் போன்று நடை,பேச்சு இருக்கும் (பாரதியின் புதுமைப் பெண் என்று இவர்களுக்கு வேறு வேற பெயர்இது வியாதி என்பதே உண்மை). இதற்கு எதிர்மறையாக சில ஆண்களின் பேச்சுசிரிப்பு இவற்றையெல்லாம் பார்த்தால் பெண்களைப் போல் தோன்றும்இதற்குக் கூட மூளை காரணமல்ல.
டாக்டர் A. ஷேக் அலாவுதீன் 
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) 
(Chinese Traditional Medicine)