மஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை!




மஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை!

(குறிப்பு: Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது. ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவின் நோக்கம்.)



மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள்:

# சோர்வு, 

# பலவீனம், 

# உடல் அரிப்பு, 

# வாந்தி, 

# குமட்டல், 

# பசியின்மை, 

# மலக்கட்டு, 

# கழிச்சல், 

# சுரம், 

# மஞ்சள் நிறத்தில் சிறுநீர் 

போன்ற அறிகுறிகள் காணப்படும்.


மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்களாவன:

# பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. 

# சில வகை ஆங்கில மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது. 

# இரவு தாமதமாக தூங்குவதாலும் ஏற்படுகிறது. 

# உடலுக்கு போதிய ஓய்வின்றி உழைப்பதாலும், ஓய்வு கொடுக்காமல் இருப்பதாலும் ஏற்படுகிறது. 

# பால் கலந்த காப்பி, பால் கலந்த தேனீர்(டீ), செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை அடிக்கடி பருகுவதாலும் ஏற்படுகிறது. 


மஞ்சள் காமாலைக்கு நிரந்தர தீர்வுகள்:

# பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம். அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு தான் விழுங்க வேண்டும்.

# பசியை நன்கு உணர்ந்தபின்னரே நமக்கு பிடித்த உணவை மட்டும் போதும் என்கிற உணர்வு வரும்வரை உட்கொள்ள வேண்டும். உணவை நிதானமாக மென்று அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு விழுங்க வேண்டும். சிறிது நேரம் களித்து தண்ணீரை வாய் வைத்து அருந்தலாம்.

# நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தூக்கம் வந்தால் தூங்க செல்வது அல்லது ஓய்வு எடுப்பது நல்லது.

# முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை தற்காலிக நிவாரணத்தையும் நிரந்தர துன்பத்தையும் தரக்கூடியவை.

# இரவ முடிந்தவரை விரைவாக தூங்க செல்லவேண்டும். 9 மணி அளவில் தூங்கச் சென்றால் சிறப்பாக இருக்கும். 

# தூங்கும் இடம் இயற்கை காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். கொசு தொந்தரவிருந்தால் காற்று வரக்கூடிய கொசுவலையை ஜன்னலில் மாட்டிக்கொள்ளலாம். குறிப்பாக கொசுவிரட்டிகள் உபயோகப்படுத்தக் கூடாது. 
.

இவற்றை பின்பற்றுவதால் பித்தம் நல்ல முறையில் சுரந்து நம் ரத்த குழாயில் படிந்துள்ள LDL (Low-density lipoprotein) கெட்ட கொழுப்புக்களையும் இலவசமாகவே கரைத்துவிடும். இதனால் மாரடைப்பும் பக்கவாதமும் தடுக்கப்படும். பித்த நரையும் மன அழுத்தமும் வராது.


சித்த மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கான எளிய தற்காலிக தீர்வுகள்:

# கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

# அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.

# அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.

# கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

# சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.

# வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.

# வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

# நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.

# 15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.

# ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.

# சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.

# செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.

# சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.

# மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.

# அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.

# நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.

# பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.


நம் உணவில் சேர்க்க வேண்டியவை:

# சின்ன வெங்காயம், 

# மோர், 

# இளநீர், 

# பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், 

# மொந்தன் வாழைப்பழம், 

# வெண் பூசணி, 

# தர்பூசணி, 

# மாதுளம்பழம், 

# வெள்ளரிக்காய்.


நம் உணவில் தவிர்க்க வேண்டியவை:

# அசைவ உணவுகள், 

# எண்ணெய், 

# நெய், 

# காரம்.

.

நன்றி - மருத்துவர் எஸ். சுஜாதா ஜோசப் (சித்த மருத்துவ குறிப்புகள்)
.

மஞ்சள் காமாலை குறித்து சட்டம் என்ன சொல்கிறது:
.

நம் உடலில் ஏற்படும் தொந்தரவுகளின் அடிப்படை காரணம் (தவறான வாழ்க்கைமுறை) தெரியாமல் அவற்றை குணப்படுத்த முடியாது என நமது அரசாங்கம் சட்டம் கூட இயற்றியுள்ளது. மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940) 


Schedule J

33. Jaundice/Hepatitis/Liver disorders (Yellow fever, hepatitis and all diseases related to liver)

மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்

50. Stones in gall-bladder, kidney, bladder (Kidneys, Gall bladder and Urinary bladder stones)

சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப்பை கற்கள்

அந்த பட்டியலில் கல்லீரல் தொடர்பான நோய்களும் பித்தப்பை கற்களும் அடக்கம். எனவே ஆங்கில மருந்துகளை கொண்டு இந்த பிரச்சினைகளை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என்கிற உண்மையை அறிந்துகொள்ளுங்கள். 

எனவே ஆங்கில மருந்துக்களை கொண்டு கல்லீரல் தொடர்பான நோய்களுக்கும் பித்தப்பை கற்களுக்கும் சிகிச்சை கொடுப்பதால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். இனியாவது சிந்தித்து செயல்படுங்கள் மக்களே.


குறிப்பு:

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது. சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். 

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ / வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

நான் முழுமையான விபரங்கள் இல்லாமல் வரும் இமெயில்கள் / Commentகள் மற்றும் போதிய விபரங்கள் இல்லாமல் ஒரே வரியில் கேள்வி கேட்கும் நபர்களுக்கு பதில் கூற விரும்புவதில்லை.)

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

.


Thanks & Regards,      Vineeth.S
  +91 98409 80224
  +91 97509 56398

      Regha Health Care
(A Non-Profit Organization) 

Whatsapp No. 9840980224
Telegram No.   9840980224

No comments:

Post a Comment