மருந்துகளிலிருந்து விடுதலை


மருந்துகளிலிருந்து விடுதலை


மருத்துவர்.அ.உமர் பாரூக்
(ஜூலை மாத இறுதியில் நடைபெற உள்ள தஞ்சை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மாநாட்டில் வெளியிடப்படவுள்ள மலருக்கான கட்டுரை)

மருந்தில்லா மக்கள் இயக்கம் – பெயரைக் கேட்கவே புதுமையாக இருக்கிறது. மருந்தில்லாத, மருந்துகளைப் பயன்படுத்தாத மக்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கிறார்களா? அவர்களெல்லாம் நோய் வந்தால் என்ன செய்வார்கள்? உயிர்காக்கும் என்று நம்பப்படுகிற மருந்துகளை ஏன் புறக்கணிக்கிறார்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மத்தியில் தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் மருந்தில்லா மக்கள் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

1890 களில் இங்கிலாந்தில் ஒரு மக்கள் அமைப்பு உதயமானது. அதன் பெயர் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் ( Anti Vaccination League) இது எதற்காக தோன்றியது என்பதை அறிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளமாட்டோம் என்றுதான். அப்படியானால் அவர்கள் எல்லாம் எதாவது தீவிர மதநம்பிக்கையாளர்களோ? என்று கேட்க நினைப்போம். 1880 களில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளின் காரணமாக ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணமடைந்தனர். இத்தடுப்பூசி மரணங்கள் குறித்து விசாரிக்க ராயல் கமிஷன் ( நம்மூர் கமிஷன் மாதிரி இல்லை) நிறுவப்பட்டது. விரிவான விசாரணைக்குப் பின்பு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடும், தடுப்பூசியின் மீதான தடையும் அங்கு கொண்டுவரப்பட்டது.

தடுப்பூசி வழக்குகளை விசாரிப்பதற்கான தனி நீதி மன்றமும் ( Vaccination Court) ஏற்படுத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் துவக்கியதுதான் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம். இது இப்போது 112 நாடுகளில் அமைந்துள்ளது. தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் விரிவடைந்துள்ளது. நம் நாட்டில் எந்தவிதமான மருந்துகள் பற்றியும் விழிப்புணர்வின்றி இருக்கிறோம். ரசாயன மருந்துகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த அமைக்கப்பட்ட இயக்கம் தான் மருந்தில்லா மக்கள் இயக்கம்.

தமிழகத்தின் பசுமைப்புரட்சிக்குப் பின்னால் விவசாயம் குறித்து நமக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாம் வேளாண்மையில் பயன்படுத்திய ரசாயன உரங்கள் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்களை இழந்தது மட்டுமல்லாமல், நம்முடைய வளமிக்க மண் தன் சுயத்தை இழந்து ரசாயன உரங்களால் சாகத்துவங்கியுள்ளது. பசுமைப்புரட்சிக்கு 40 ஆண்டுகள் கழித்து ரசாயன உரங்கள் நம் மண்ணிற்கு செய்த தீமையை உணர்ந்துள்ளோம். உலகம் முழுவதுமே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கேரளா, தமிழகத்தில் எண்டோசல்பான் தடை கோரிய இடதுசாரிகளின் போராட்டங்களும் இக்காலத்தில் குறிப்பிடத்தக்கது. ரசாயன விழிப்புணர்வின் ஒரு மைல் கல்.

எந்த ரசாயனங்களைப் போட்டால் நிலம் கெட்டு அதன் சத்துக்கள் நாசமடைந்ததோ அதே ரசாயனங்களை மருந்து என்ற பெயரில் நம் வயிற்றில் போடுவது குறித்து இப்போதும் நாம் பிரக்ஞையற்று இருக்கிறோம். தினசரி தொலைக்காட்சியிலும், பிற ஊடகங்களிலும் நம் உயிர் வாழ்தல் பற்றிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி சில சத்துக்களை, சில மருந்துகளை நமக்கு பரிந்துரைக்கின்றன மருந்து நிறுவனங்கள். நாமும் எவ்விதமான கேள்வி கணக்குமின்றி வாங்கி, வாங்கி ரசாயனங்களை நாமும் சாப்பிட்டு நம் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றோம்.
நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் சத்துக்களின் பெயராலேயே நம் தலையில் கட்டப்படுகின்றன. குறைந்த பட்சம் சத்துக்கள் குறித்த அறிவியல் புரிதல் இருந்தாலே அவற்றைத் தவிர்த்துவிட முடியும்.

ஒரு மனிதனுக்கு அவனுடைய இயக்கத்திற்காக அன்றாடம் சில சத்துக்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன என்று நவீன விஞ்ஞானம் ஒரு பட்டியலை நம்மிடம் நீட்டுகிறது. அந்தப் பட்டியல் என்ன கூறுகிறது?

  • கால்சியம் 200 மி.கி.
  • குரோமியம் 120 மி.கி.
  • மாங்கனிஸ் 2 மி.கி.
  • போலிக் அமிலம் 400 மி.கி.
  • அயர்ன் 7 மி.கி
  • பாஸ்பரஸ் 45 மி.கி
  • ஜிங்க் 70 மி.கி.
  • விட்டமின்களில் 2 மி.கி. 
முதல் தனித்தனியான அளவுகளில். இன்னும் பல சத்துக்கள் நம் உணவில் அல்லது மருந்துகளில் தினசரி இருந்தே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சரி. இச்சத்துக்களை தனித்தனியாக தயார் செய்து ஒரு பொடியை வைத்துக் கொள்ளலாம் அல்லவா? அப்படி தயார் செய்த அந்த ரசாயனப் பொடியை மாத்திரம் தினசரி விஞ்ஞானப் பூர்வமாக உண்டு வந்தால் போதுமல்லவா? உணவு தனியாக தேவைப்படாது தானே? நாம் சாப்பிடுகிற உணவு செரித்து கடைசியில் இவ்வகை சத்துக்களாக மாற்றப்படுவதாக நம் விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் இந்த சத்துக்களை மட்டும் உண்டு உணவில்லாமல் நம்மால் உயிர்வாழ முடியாது என்பதை நாம் அறிவோம்.

உணவிலிருந்து உடலே தயாரித்து நமக்கு அளிக்கும் இயற்கையான சத்துக்களுக்கும், வேதி வினைகள் மூலமாக ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்படும் செயற்கை ரசாயனச் சத்துக்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. இவ்விதமான ரசாயனங்கள் நம் உடலிற்கு தேவையற்றது; ஊறு விளைவிப்பது.

அதிலும் இந்த ரசாயனச் சத்துக்களை சந்தையில் கூவி விற்கும் மருந்து நிறுவனங்கள் ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன. அதாவது நம் உடலில் சத்துக்கள் குறையுமாம்; ஆனால் கூடாதாம். உதாரணமாக கால்சியம் இருக்கிறது என்றால் கால்சியம் குறைவு பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். கால்சியம் கூடிவிட்டது என்று எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? “மிகினும் குறையினும் நோய்” என்கிறது வள்ளுவம். ஒரு பொருள் குறையும் என்றால் அதிகமாகவும் செய்யும் தானே? ஆனால் கால்சியம் மட்டும் ஏன் அதிகமாவதில்லை? அதெல்லாம் ஒன்றுமில்லை. குறைவு என்று நிறுவனம் சொன்னால் மருந்து விற்பனையாகும். கூடுதல் என்று சொன்னால் என்ன லாபம்?

சமீபத்தில் வெளியான அமெரிக்க புள்ளி விபரம் கூறுகிறது. தேவையற்ற ஊட்டச்சத்து மருந்துகளால் இறந்தவர்கள் பத்து ஆண்டுகளில் பத்து லட்சத்து ஒன்பதாயிரம் பேர். இது யாரோ வெளியிட்ட விபரம் அல்ல. அமெரிக்க முதுநிலை ஆங்கில மருத்துவர்கள் ஐந்து பேர் இணைந்து செய்த ஆய்வில் வெளியான அறிக்கை.

நம் உடல்நலத்திற்காக என்று சொல்லி யாரோ விற்கும் ரசாயனங்களை நம்புவதை விட நம் உடலை நம்புவது நம் தலைமுறைகளைக் காப்பாற்றும். உடலின் இயற்கையான தேவைகளை உணர்ந்து பசி, தூக்கம், தாகம், ஓய்வு போன்றவற்றை தேவைக்கேற்ப உடலிற்கு அளித்து வந்தோமானால் ரசாயன மருந்துகளின் தேவையின்றி முழுமையான உடல்நலம் பெற முடியும்.



For More Info Contact:

உணவின்றி அமையாது உலகு



”ராணி” வார இதழில் 23.3.2011 அன்று வெளியான நேர்காணலின் முழுமையான வெளியீடு
மருத்துவர்.அ.உமர் பாரூக்,M.Acu, D.Ed (Acu)


உணவு – நம் ஆரோக்கியத்தின் அடிப்படை அம்சமாக இருக்கிறது. ஆரோக்கியம் – நம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் ஏற்ற உணவுகளை நாம் சரியாகப் புரிந்து பயன்படுத்தத் துவங்குவோமானால் ஆரோக்கியக்கேடும், பொருளாதாரச் சீர்குலைவும் ஏற்படாத ஒரு வாழ்க்கைமுறையை கண்டடையலாம்.

இன்றைய வியாபார உலகத்தில் நம் தலையில் கட்டப்படுகிற ஒவ்வொரு பொருளும் ஆரோக்கியத்தின் பலனைச்சொல்லியே விற்கப்படுகிறது. ”நீண்ட காலம் வாழ இந்த டானிக்கைப் பயன்படுத்துங்கள்” என்ற பழைய கால விளம்பரங்கள் எல்லாம் அழிந்து புதிய உத்திகள் இப்போது படையெடுக்கத் துவங்கியுள்ளன. குட்டையாக உள்ள குழந்தை உயரமாக வளரவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற நினைவாற்றலை பெருக்கிக்கொள்ளவும், இதய நோய் வந்துவிடாமல் இருக்கவுமான விளம்பரங்கள் நம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நம் மீது பீதி விதைகளைத் தூவிய வண்ணம் இருக்கின்றன.

உண்மையில் நாம் பொறுமையாக யோசித்துப்பார்த்தால் இந்த வகை விளம்பரங்களின் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளலாம். குட்டையாக உள்ளவரை உயரமாக வளர வைக்கும் சத்துணவை ஏன் இந்தியக் குழந்தைகளிடம் மட்டும் பரிந்துரைக்கிறார்கள்? பெரியவர்களிடமோ அல்லது சராசரி உயரம் குறைவான சீன, ஜப்பான் நாட்டு குழந்தைகளிடமோ இந்த சத்துணவை பரீட்சித்துப் பார்க்க வேண்டியது தானே? இன்னொரு விளம்பரம் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் பேஸ்ட்டில் கால்சியம் இருப்பதாகச் சொல்லி விற்கிறது. கால்சியம் என்ற சத்துப்பொருளை ஆங்கில மருத்துவ அடிப்படையில் பார்த்தால் கூட அக்குறிப்பிட்ட சத்தை சாப்பிடுவதால் அது உடலில் சேருமா அல்லது துப்புவதால் உடலில் சேருமா? ஆரோக்கியம் பற்றி வெளியிடப்படும் விளம்பரங்களில் அடிப்படை அறிவிற்கும், அறிவியலுக்கும் பொருத்தமற்ற பொய்கள் மறுபடி, மறுபடி சொல்லப்படுகின்றன. இவ்வகயான பொய்கள் அனைத்தும் நம் தினசரி உணவுகளில் தான் தங்கள் வியாபாரத்தை அரங்கேற்றுகின்றன.


இப்படி போலியான அறிவிப்புகளோடு நம் தலையில் கட்டப்படும் பொருட்களை வாங்கி ஏமாறுவது நம் உணவு பற்றிய அறியாமையால் தான். ஒவ்வொருவரும் தன் உடலுக்கு எவ்வகையான உணவு ஏற்றது என்பதைப் புரிந்து கொள்வோமானால் ஆரோக்கியமும், பொருளாதாரமும் நம் கையிலேயே இருக்கும்.

முதலில், உணவை - யாருக்காக, அல்லது எதற்காக நாம் எடுத்துக் கொள்கிறோம்? நம் உடலிற்காக. அப்படியானால், உடலின் தேவையறிந்து உணவு தருவது நல்லதா? அல்லது நம் இஷ்டத்திற்கு நாம் தேர்வு செய்யும் நேரத்தில் உணவு தருவது நல்லதா? உணவுத் தேவை ஏற்படும் போது உடல் கேட்குமா? அல்லது கேட்காதா? உடல் தன்னுடைய உணவுத் தேவையை பசியுணர்வு மூலமும், தண்ணீர் தேவையை தாகம் மூலமும் நமக்கு அறிவிக்கிறது. இது தான் உணவிற்கான நேரம். நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வேலை நேரம் போக மிச்ச நேரத்தில் தான் உணவு சாப்பிட முடியும் என்றால் அந்நேரத்தை உடல் அங்கீகரிக்க வேண்டுமே? நாம் பசியற்றுச் சாப்பிடும் உணவு உடலின் உண்மையான தேவையைத் தீர்க்காது. மாறாக, கழிவுகளாக மாறி உடலிற்கு தொந்தரவுகளையே தரும். ஆக, உணவு முறை என்பது உணவுகளின் வகைகளால் ஆனது இல்லை. உடலின் தேவையின் அடிப்படையிலானது.

உடலின் தேவைக்குத் தகுந்தாற்போல் தேவையான அளவிற்கு உணவை எடுத்துக் கொள்வோமானால் உடல் ஆரோக்கியத்தை நிலைப்படுத்திக்கொள்ளும். இதைத்தான் நம்மவர்கள் ”பசித்துப்புசி” என்றும், “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றும் உடல் தேவையை வலியுறுத்தினார்கள். உணவு முறையின் அடிப்படை அம்சமே உடலின் தேவையறிந்து கொடுப்பதுதான். பசியற்று இருக்கும் போது சாப்பிடாமல் இருப்பதும், பசியோடு இருக்கும் போது தேவையான அளவு சாப்பிடுவதும் நோய்கள் உருவாகாமல் தடுக்கும் உபாயங்கள். சித்தர் பாடல்களில் “ உற்ற சுரத்திற்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டாதே” என்று வந்த நோய்களில் இருந்து விடுபடவும் பசி வரும் வரை காத்திருத்தலையே சிகிச்சையாகக் கூறுகிறார்கள்.

சரி. பசித்துச் சாப்பிட வேண்டும். எதைச் சாப்பிட வேண்டும்?
நாம் உணவு வகைகளை சத்துக்களின் அடிப்படையில் பிரித்து மிகப் பெரிய பட்டியல் ஒன்றை வைத்திருக்கிறோம். அதில் எதைச் சாப்பிடுவது என்பதுதான் நம் குழப்பமே.

இயல்பாக நம் உடல் இயங்குவதற்கு 100 கிராம் குளுக்கோசும், 50 கிராம் புரோட்டீனும், 20 கிராம் வைட்டமின்களும், 10 கால்சியம் போன்ற இன்னபிற சத்துக்களும் தேவை என்று (சும்மா ஒரு கணக்கிற்கு) வைத்துக்கொள்வோம். இன்றைய நவீன உணவியல் கூறுகிறது இந்தச் சத்துக்கள் அடங்கிய கலவையான சமச்சீர் உணவைச் சாப்பிடுவதே ஆரோக்கியம் என்று. இது சரியானதாக இருக்கிறதா? நாம் உடலை ஒரு உயிரற்ற இயந்திரமாகவே பார்த்துப் பழகியிருக்கிறோம். மோட்டார் பைக்கிற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 60 கிலோமீட்டர் ஓடும் என்பது போல, நம் உடலில் இந்தச் சத்துக்களைப் போட்டால் ஆரோக்கியம் என்று புரிந்து வைத்திருக்கிறோம். அப்படியானால் நம் உடலிற்கு இந்த குறிப்பிட்ட சத்துக்களை அளிப்பதற்காகவே தினசரி உணவை உண்கிறோம். அதற்குப் பதிலாக குளுக்கோசும், கால்சியமும், புரோட்டீனும், பிற சத்துக்களும் அடங்கிய மாத்திரைகளையோ அல்லது செயற்கைத் தயாரிப்புக்களையோ உணவிற்குப் பதிலாக எடுத்துக்கொண்டால் போதுமல்லவா?
இவ்வாறு உணவிற்குப் பதிலாக செயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட / பிரித்தெடுக்கப்பட்ட சத்துக்களை நாம் சாப்பிட்டு வந்தால் நோய் வாய்ப்படுவோமே தவிர ஆரோக்கியமாக இருக்கமுடியாது என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் இதே சத்துக்களை உணவு மூலம் எடுத்துக்கொள்ளலாம் என்று உடலை இயந்திரமாக யோசிக்கும் அதே தன்மையில் பட்டியலை வைத்திருக்கிறோம்.

அப்படியானால், தேவைக்குத் தகுந்த சத்தான உணவுகளை எப்படித் தேர்வு செய்வது? இதைப்புரிந்து கொள்ள கால்சியத்தை எடுத்துக் கொள்வோம். நம் உடலில் கால்சியம் உள்ள பகுதிகள் எவை? பற்கள், எலும்புகள் இன்னும் பல. இந்த எலும்புகள் நமக்கு முதன்முதலில் எவ்வாறு தோன்றின? தாயின் வயிற்றில் சிசுவாக இருந்தபோது ஸ்கேன் மூலமாக எலும்பு வளர்வதைக் கண்டுபிடித்து கிலோக் கணக்கில் கால்சியம் கொடுத்தோமா? தசை வளர்வதற்கு புரோட்டீனும், உடல் சக்திக்கு குளுக்கோசும் அளந்து அளந்து கொடுத்துக் கொண்டிருந்தோமா? அப்படி நாம் கொடுத்துத்தான் சிசுவை வளர்க்க வேண்டும் என்று இருந்தால் கால்சியத்தை கண்டுபிடிக்காத நூறு வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் எல்லாம் எலும்புகள் இல்லாமலா பிறந்தன?


உடல் தன்னுடைய தேவைகளை தானே உருவாக்கிக் கொள்கிறது. அப்படி உருவாக்கிக் கொள்வதற்காக உணவு அவசியம். உணவில் இருக்கும் சத்துக்களை நாமே தீர்மானித்துக் கொண்டு உடலுக்குத் தரவேண்டிய அவசியமில்லை. உடலின் தேவைக்குத் தகுந்தாற்போல் உணவை உண்டு வந்தால் – உடல் அதன் தேவைகளை தானே உருவாக்கிக் கொள்ளும். உதாரணமாக நாம் கால்சியம் சத்துத் தேவைக்காக என்ன வகையான உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்கிறோம்? பால் , முட்டை போன்றவற்றைத்தான் நாம் கால்சியத்திற்காக உண்டுவருகிறோம். பாலில் கால்சியம் இருப்பது உண்மைதான். ஆனால் அந்தப் பாலை நமக்குத் தந்த மாட்டிற்கு யார் கால்சியம் தந்தது? தினசரி மாட்டின் உணவுகளில் கால்சியம் சத்துள்ள உணவை கொடுத்துத்தான் நாம் கால்சியம் உள்ள பாலைப் பெறுகிறோமா? மாடு அதிகமாக உண்ணும் புல்லில் மெக்னீசியம் தான் இருக்கிறது. மெக்னீசியத்தை மாட்டின் உடல் தன் தேவைக்கு கால்சியமாக மாற்றிக்கொள்கிறது. அதே போல முட்டையில் கால்சியம் இருப்பது உண்மைதான். ஆனால் முட்டையிடும் கோழிக்கு நாம் கால்சியம் தந்தோமா? இல்லை. தன்னுடைய அன்றாட உணவுகளில் இருந்து கால்சியத்தை உற்பத்தி செய்துகொள்கிறது கோழியின் உடல். தாவரங்கள் தங்களுடைய தேவைகளுக்காக சூரிய ஒளியில் இருந்து ஸ்டார்ச்சை தயாரித்துக் கொள்ளும் என்பதை பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம். அப்படியானால், கால்சியத்தை தானே தயாரித்துக் கொள்ளும் மாட்டின், கோழியின் உடல் அறிவை விடவும், ஸ்டார்ச்சை தானே தயாரித்துக் கொள்ளும் தாவரத்தின் அறிவை விடவும் மனித உடல் அறிவு குறைவானதா? 1959 ஆம் ஆண்டு இவற்றை ஆய்வு செய்த உயிரியல் விஞ்ஞானி டாக்டர். லூயி கேர்வரான் மனித உடலுக்கு தனக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றல் உண்டு என்பதை தன் ஆய்வுகள் மூலம் நிரூபித்தார்.

உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை நாம் ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் வேதியியலை விட, உடல் தேவைகளை தானே உருவாக்கிக்கொள்ளும் உயிர் வேதியியல் இயற்கையானது. உடலின் தேவை கருதி, தேவையான அளவிற்கு நமக்குப் பிடித்த உணவுகளை உண்டு வந்தால் போதும். உடல் தனக்குத் தேவையான எல்லா சத்துக்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ளும். ஒவ்வொருவரும் அவரவருடைய உடலின் தேவையைப் பின்பற்ற வேண்டுமே தவிர பொதுவான உணவுகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு அவற்றைப் பின்பற்றுவது ஆரோக்கியத்தப் பெற வழிவகுக்காது.

For More Info Contact:

உடலின் மொழி - A must Read book for Every Human Being


உடலின் மொழி - A must Read book for Every Human Being


Audio Book link to download



E-Book link to download


இந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் ,M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி. 


உடலின் மொழிஉமர்பாரூக்குடன் ஒரு சந்திப்பு - ம. காமுத்துரை.

இது, ‘மாற்றுகளின் காலம். மாற்றுக் கலாசாரம், மாற்றுப் பொருளாதாரம், மாற்று சினிமா... என, சீரழிவுகளுக்கு உள்ளாகி இருக்கும் சமூகக் காரணிகளை நெறிப்படுத்துகிற சிந்தனைகள் பெருகி வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட மருத்துவத்திலும் மாற்று காணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரங்கள் அனைத்தும் வணிகமயமாகிப்போன சூழலில் சமூக உணர்வோடு எழுதப்பட்டிருக்கும் நூல், ‘உடலின் மொழி’. அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களில் மூன்றே மாதத்தில் இரண்டாம் பதிப்பு கண்ட புத்தகம், ‘உடலின் மொழி’. அதுவும் இரட்டிப்பு பிரதிகளாய் அச்சாகிறது. நூலக உதவி இல்லாமல் என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது. இதனை எழுதியவர் கவிஞர் உமர்பாரூக். இவர் ஏற்கனவே கவிதை, சிறுகதை என ஆறேழு நூல்கள் எழுதி உள்ளார். எந்தப் பிரபலமுமில்லாத இவரது புத்தகத்தின் பிரத்தியேக தன்மை குறித்தான உரையாடலே இச்சந்திப்பு. அ. உமர்பாரூக். தமுஎகச வின் மாநிலக் குழு உறுப்பினரும் கூட.

உடல்மொழிக்கும் - உடலின் மொழிக்கும், பௌதீக ரீதியில் வேறுபாடுகள் உள்ளனவா?

உடல்மொழி புறவயமானது. உடலின் மொழி அகம் சார்ந்தது. உடல்மொழி உடல் உறுப்புகளின் புறவயப்பட்ட அசைவுகளால் தோன்றும் இயக்கத்தைக் குறிப்பது. திரைப்படம் நாடகம் மற்றும் நிகழ்த்து கலைகளிலும் புழங்கிவரும் சொல் இது. ஆனால் உடலின் மொழி என்பது அகவயப்பட்டது எனச் சொல்லி இருக்கிறோம் அல்லவா. அது ஒவ்வொரு மனிதனின் உடலினுள் இயங்கும் இயக்கத்தை உணர்வுகளின் மூலம் பிரத்தியேகமான உணர்ச்சிகளின் மூலம் கண்டு கொள்வது. உதாரணமாக எனக்கு பசி ஏற்படுவதை, தாகம் எடுப்பதை நீங்கள் உணர முடியுமா... அதை நானேதான் உணர வேண்டும் அதுதான் அந்த மொழிதான் உடலின் மொழி. நமது உடல் விடுக்கிற குரலை உணர்கிற எவரும் உடலின் மொழியை அறிந்திட முடியும். இந்த மொழியை உணரத் தெரியாத மக்களைத்தான் நோய்களும், மருந்துகளும் சுற்றி வளைக்கின்றன.

இந்நூல் மருத்துவர்களுக்காக எழுதப்பட்டதா... அல்லது மக்களுக்காக எழுதப்பட்டதா?

யாருக்கெல்லாம் தன்னுடைய உடலைப் பற்றிய அறிவும், உடலின் மொழியும் தெரியாதோ அவர்களுக்காகத்தான் எழுதப்பட்டது. முன்பெல்லாம் உடலின்மொழி தெரிந்த மருத்துவர்கள் நிறைய இருந்தார்கள். மக்களும் நன்றாக இருந்தார்கள். இப்போது கருவிகளின் மொழியைத்தான் அறிந்திருக்கிறார்கள். நம்முடைய பாட்டனும் பூட்டனும் அறிந்திருந்த உடல் ரகசியங்களும், உடலின் மொழியும் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. அறிவியல் பார்வையோடு அவற்றை நினைவூட்டுவதற்குத்தான் இந்நூல்.

இதனுடைய தேவை என்று எதனை உணர்கிறீர்கள்...?

இயற்கையான மனிதனின் உணர்வுகளை அழித்தொழிக்கிற வியாபாரத்தை மட்டுமே மையமாகக் கொண்ட மருத்துவ வணிக கலாசாரம்தான் இந்தத் தேவையினை ஏற்படுத்தி இருக்கிறது.உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய் எது என்று சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. எதுவாக இருக்குமென நீங்கள் யூகிக்கிறீர்கள்....? எய்ட்ஸா....? கான்சரா...? சர்க்கரை நோயா...? இல்லை இப்போது வந்திருக்கும் பன்றிக்காய்ச்சலா....இவற்றில் ஏதாவது ஒன்றாக இருந்தால் நல்லது என்று பிரார்த்தனை செய்தார்கள் பெருமுதலாளிகள். மருந்துகள், தடுப்பூசிகள் என்று உலகப் பொருளா-தாரத்தை ஏப்பம் விடலாமே அதற்காகத்தான்.கணக்கெடுப்பின் முடிவு சொன்னதோ  ‘அனிமியாஎனும் ரத்த சோகைநோய்.மூன்றுவேளை சோற்றுக்கு வழியில்லாமல் உலகமெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலோருக்கு ரத்தசோகை பீடித்திருக்கிறது. எல்லா அரசாங்கங்களும் உலக சுகாதார நிறுவனமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க வேண்டும்...! வழங்குமா...? மருந்து கொடுக்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கில் மருந்துக் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவருவார்கள். உணவு வழங்க...இதுபோல இன்னும் நிறைய சொல்லலாம். இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்படுகிற எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, கோடிக்-கணக்கான பணம் கை மாறுகிறது. இந்த நோய்க்கு காரணம் எனச் சொல்லப்படுகிற இந்த எச்.ஐ.வி. வைரசைக் கண்டுபிடித்த லண்டன், பாஸ்டர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் லுக்மோன்பிக்னியர், தான் கண்டுபிடித்த எச்.ஐ.வி. கிருமிக்கும் எய்ட்சுக்கும் சம்பந்தமே இல்லை என்றும் அதை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதனை கலிபோர்னிய பல்கலை பேராசிரியர்கள், ரசாயனத்துறையில் நோபல்பரிசு பெற்ற ஞிக்ஷீ. வால்டர் கில்பர்ட் என நிறைய அறிஞர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.இதுபோன்ற செய்திகளையெல்லாம் வெளியிடப்படுவதில்லை. இன்றைய சமூகச் சூழலில் மருத்துவத்திலும் பெரிய தவறான அரசியல் நடமாடுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் இதுபோன்ற மாற்றுப் பாதைகளின் தேவை ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறோம்.

இன்றைய நிஜங்கள் எனப்படுகிற பலவற்றை உடைக்கிறது இந்நூல். (உ.ம்) உடற்பயிற்சி, நடைபயிற்சி. இந்தப் பயிற்சி வகைகள் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறீர்கள்...?

உடற்பயிற்சி என்பது புத்துணர்வுக்காக என்று சொல்லப்படுகிறது. சரி. புத்துணர்ச்சி உறங்கி எழுவதில் கிட்டுமா... பயிற்சி பசி எடுத்தால் கிடைக்குமா. நாள் முழுக்க உழைத்துக் களைத்தவரிடம் கேளுங்கள். தூங்க விடுங்கள் என பதில் கூறுவார்.உடல் இயற்கையானது இயல்பானது. பயிற்சி செயற்கை. கன்றுக்குட்டிக்கு பாலருந்த யார் பயிற்சி தந்தது. ஆனால் பால்கறப்பவருக்கு பயிற்சி தேவை. இயல்பான உடலுக்கு எந்தப் பயிற்சியும் தேவை-யில்லை. எந்த மருத்துவம் இவற்றை பரிந்துரைக்கிறதோ, அது, அதன் குறைபாட்டை மறைக்கும் ஏற்பாடுதான் இந்தப் பயிற்சிகள். கண்களில் குறைபாடு என்றால் கண்களை குணப்படுத்துவதுதானே மருத்துவம். மாறாக கண்ணாடி வாங்கச் சொல்வது வியாபாரமில்லையா. நடக்க முடியாதவருக்கு நலம் பெற சிகிச்சைதான் வேண்டும். ஊன்றுகோல் எடுக்கச் சொல்வது யாருடைய வேலை.சர்க்கரை நோயாளியை நடக்கச் சொல்வார்கள் நடந்தால், உடல் களைத்து பசிக்கும். பசிக்கு சாப்பிடவும் விடமாட்டார்கள். நிறைய நடப்பவர்களுக்கு எலும்பு தேய்ந்துவிட்டதால் மூட்டுவலி வந்திருக்கிறது என்று கூறுவார்கள்.நவீன மருத்துவத்தின் ஆராய்ச்சிகள் உடம்பிற்கு வெளியே நடைபெறுகிறது. இந்த ஆராய்ச்சிகளைக் கொண்டு, நடக்க வேண்டும், ஓட வேண்டும். சிரிக்க வேண்டும் என்ற முடிவுகளுக்கு வரமுடியும். இப்போது நடப்பதற்கும் மிசின் வந்திருக்கிறது. அதில் ஏறி நின்றால், போதுமாம், நடந்ததற்குச் சமமாகுமாம். இப்படி அவர்களது ஒவ்வொரு பரிந்துரைகளும், மருந்துகள் மெசின்... என எதையாவது நம் தலையில் கட்டிவிடும் எல்லாமே லாப நோக்கில்தான் இருக்கிறது.

உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவர்என துறைவாரியாக அமைந்த மருத்துவ உலகம் இது. கழிவுகளின் தேக்கம் - சக்திக் குறைபாடுஎன்று எளிமையாக பகுக்கப்பட்ட மருத்துவ உலகில் இந்த நாட்டு வைத்தியம்சரிப்பட்டு வருமா...?

உடல் என்பது தனித்தனி உறுப்புகளின் எந்திரச் சேர்க்கை அல்ல. அது ஒரு ஒருங்கிணைந்த இயக்கம். கண் மருத்துவருக்கு கல்லீரலைப் பற்றித் தெரியாது. கல்லீரல் சிறப்பு மருத்துவருக்கு கண்களைப் பற்றித் தெரியாது. தனித்தனியான சிறப்பு மருத்துவர் என்பது கேலிக்கூத்துதான். மஞ்சள்காமாலை வந்தால் நவீன மருத்துவப்படி கல்லீரல்தான் பாதிக்கப்பட வேண்டும். ஆனால் கண்கள் மஞ்சள் நிறம் அடைகின்றன. அக்குபங்சர் மருத்துவத்தில் கண்கள் என்பது கல்லீரலின் புற உறுப்புகள்.நம்முடைய தொன்மையான மருத்துவங்களை நாட்டு மருத்துவம் என்றும், இதை பின்பற்றுவோர்களை காட்டு-மிராண்டிகள் எனவும் அழைத்தார்கள் ஆங்கி-லேயர்கள். அவர்கள் தந்த மருத்துவத்தை நம் மருத்துவமாக ஏற்றுக் கொண்டு நமது மருத்துவத்தை மாற்று மருத்துவம்என்று கூறுகிறவர்கள்தான் நாம்.உலகில் எல்லா நோய்களும் உடலின் சக்திக் குறைவால் ஏற்படுபவைதான். ஆங்கில மருத்துவம் கூறும் தொற்று நோய்களில் கூட பத்துபேரில் இரண்டு பேருக்குத்தான் அந்த நோய் வருகிறது. ஏன் என்று கேட்டால், எதிர்ப்பு சக்தி குறைவிருந்த-தால்தான் நோய்தொற்றும் என்று அவர்களே கூறுகிறார்கள். அதையேதான் மாற்று மருத்துவர்-களும் கூறுகின்றனர்.

இந்த நூலின் சிறப்பம்சம் எழுதப்பட்டிருக்கிற மொழி ஒரு மருத்துவ நூலுக்கான மொழியாக உணரமுடிய வில்லை. இந்த எளிமை எங்கிருந்து கிட்டியது?

எனது இந்த எளிமையான மொழி தமுஎகச அளித்தது. மக்களுக்கு எதையாவது சொல்ல விரும்பினால் மக்கள் மொழியில் சொல்வதுதானே சரியாக இருக்கும். என் பள்ளிப் பாடத்தை முடித்து வாழ்க்கையைக் கற்கத் துவங்கிய போதே என்னை அரவணைத்துக் கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். மக்கள் விழிப்புணர்வு, சமூக மேம்பாடு போன்ற கருத்தாக்கங்களை எனக்குள் ஏற்படுத்தியது அந்த அமைப்பு. அதற்குப் பின்பான என் மருத்துவத் தேடலின் அடியுரமாகவும் இன்றுவரை வழிகாட்டி-யாகவும் இருப்பது இந்தச் சங்கம்தான்.

நீங்கள் ஒரு துறைசார்ந்த மருத்துவராக இருந்தாலும் அதனை வெளிக்காட்டாத உங்கள் நேர்மை பாராட்டத் தக்கது. இது இயல்பாக வந்ததா... திட்டமிடப்பட்டதா..?

இன்றைய உலகம் சந்தைமயமானது. ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால் அதன் பின்னால் லாபநோக்கம் இருக்குமென்று சந்தேகப்பட வேண்டிய காலம் இது. அப்படி நான் சார்ந்திருக்கும் அக்குபங்சர் மருத்துவத்தை இந்த நூலில் பரிந்துரைத்தால் அதன் விழிப்புணர்வுப் பணி பாதிப்படையலாம். அதனால்தான் அது தவறு என்பதை மட்டும் சுட்டிக்காட்டி மருத்துவ மூட நம்பிக்கைகளை வேரறுக்கும் முயற்சியாக இந்நூலை எழுதினேன்.

சும்மா இருப்பதே சுகம்...’ - என்பதில் சும்மாஎன்பது எது...?

இந்தவரியில் ஆன்மிகவாதிகள் சொல்லுகிற சும்மாவேறு. நான் அதற்குள் போகவில்லை. உடல் தன்னைத்தானே சரி செய்து கொண்டிருக்கும் போது நாம் அதற்கு ஒத்துழைக்கும் போக்கில் ஏதும் செய்யாமல், இருப்பதே சும்மா அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.இருமல் ஏற்படுகிறது. அப்படி ஏற்பட்டால் நுரையீரலில் இருந்து சளி வெளியேறுகிறது என்று அர்த்தம். ஆனால் மருத்துவர்கள் மருந்துகளைக் கொடுத்து சளி வெளியேறுவதை தடுத்து நிறுத்து-கிறார்கள். உள்தேங்கிய சளி ஆஸ்த்துமாவையும், காசநோயையும் ஏற்படுத்தும் இப்படி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக சும்மா இருந்தாலே சிலநாள் இருமலில் சளி வெளியேறி விடும். இதுதான் சும்மா இருப்பது.

கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்படுகிற மருத்துவ தொழிலில்... உங்களது இந்த முறையினை மக்கள் எவ்வாறு நம்பி வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்...?

மருந்து மாத்திரைகளை வருஷக்கணக்கில் சாப்பிட்டு வருபவர்களிடம் கேட்டுப் பாருங்கள். விரும்பித்தான் சாப்பிடுகிறீர்களா என்று. எல்லோருமே உடல் நலத்தைத்தான் விரும்புகிறார்கள். முழு உடல் நலம் பெற நோயிலிருந்து விடுபட என்னவழி என்று கற்றுக் கொடுப்பதுதான் மருத்துவர்களின் வேலையாக இருக்க வேண்டும். இங்கே அவர்கள் மருந்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.உடலின் மொழியைக் கற்றுக்கொள்ள மக்கள் ஆவலாய் இருக்கிறார்கள். நாங்களும் எங்கள் மருத்துவர்களும் 2000ஆம் ஆண்டிலிருந்து லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறோம். எங்கள் அக்குபங்சர் இல்லம்தமிழகத்தின் 35 மையங்களில் சிகிச்சையையும் வழிகாட்டுதலையும் கொடுத்துவருகிறது. இன்னும் பக்கத்து மாநிலங்களிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் கூட பலர் இங்கே வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். தங்களது மருந்துகளைத் தூக்கி எறிந்து விட்டு!

தங்களது முந்தைய இலக்கிய நூல்களிலிருந்து, ‘உடலின் மொழியினைஎவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்..

எனது முந்தைய நூல்கள் புனைவிலக்கியம். கவிதை சிறுகதை... என்று ஆறு நூல்களை தோழன் அய். தமிழ்மணியோடு இணைந்து எழுதி உள்ளேன். இலக்கியத்தில் நல்ல வாசகன் என்பதைத் தவிர எதையும் செய்ததாகக் கருதவில்லை. மருத்துவ இலக்கியம் என்பது உடல் பற்றிய உயிர் பற்றிய விசயம். மக்கள், இலக்கியத்தையும் மருத்துவத்தையும், வெவ்வேறு தளங்களாகப் பார்க்கிறார்கள். இரண்டுமே ஒன்றுதான். இலக்கியம், சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற முன் முடிவுகளை, ஏற்றத்தாழ்வுகளை உடைக்கிறது. மருத்துவம், உடல்பற்றிய கருத்தாக்கங்களை முன் முடிவுகளை உடைக்கிறது. இரண்டுமே சமூக நலத்திற்கானவை.

நூறு வயதுவரை வாழ...போன்ற புத்தகங்களில் மலிந்த இந்தப் பதிப்பகத் துறையில் உடலின் மொழிக்கு என்ன பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்... சொல்ல முடியுமா..?

வணிக நோக்கத்தோடு எழுதப்படும் நூல்கள் இன்று நேற்றல்ல; எல்லாக் காலத்திலுமே உள்ளன. அவை படிக்கப்படலாம் பாதுகாக்கப்படுவதில்லை. அது ஒரு சீசன் வியாபாரம்.பாரதி புத்தகாலயம் போன்ற சமூக அக்கறையுள்ள பதிப்பகங்கள் மக்களுக்கு தேவைகருதி பல நூல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. உடலின் மொழியின் முதல்பதிப்பு இப்போது விற்றுத் தீர்ந்துவிட்டது. அதைப் படித்துவிட்டு பல கிராமங்களில் இருந்து போன் மூலம் விசாரணைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. சந்தேகங்களை கேள்வியாகக் கேட்கிறார்கள். ஒரு நூலைப் படித்துவிட்டு சராசரி மக்களிடமிருந்து இத்தனை கேள்விகள் வரும் என்பதே எனக்கு புதிய அனுபவம்.மாற்று மருத்துவர்கள் குறித்த ஒரு புதிய பார்வையை உடலின் மொழிஏற்படுத்தி இருப்பது நல்ல மாற்றம். மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ற மாற்று மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். இங்கேயும் மருத்துவத்தை கூவிவிற்கும் வியாபாரிகள் பெருகிவிட்டார்கள்.  அரசாங்கத்தின் கவனமும் மாற்று மருத்துவத்தின் பக்கம் இல்லை. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி... என எல்லாம் அரசு பாடத் திட்டத்திலும் ஆங்கில மருத்துவக் கோட்பாடுகள் திணிக்கப்பட்டுவிட்டன. எதிர்காலத்தில் நல்ல மாற்று மருத்துவர்களும் கிடைப்பதரிது. மக்களே தங்கள் உடலைப் புரிந்து கொண்டு, உடலின் மொழியறிந்து, சிகிச்சையையும் தாங்களே செய்து கொள்ளும் அளவிற்கு வரவேண்டும். மருத்துவர்களின் தேவை குறைந்து மக்களே மருத்துவர்களாவதுதான் ஆரோக்கியம் அமைவதற்கான ஒரேவழி.

For More Info Contact:

உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்




நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கின்றன. அவையாவன. 
  • பரோட்டிட் சுரப்பி
  • சப்மேன்டிபுலார் சுரப்பி
  • சப்லிங்குவல் சுரப்பி


இந்த மூன்று சுரப்பிகளிலிருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.
பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்றில் மிகப்பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டிபுலார் சுரப்பிதான் 70 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர்மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கின்றது.

உணவை பார்த்தவுடன்உணவை நினைத்தவுடன்உணவின் வாசனையை கர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மிகஸ்புரோட்டின்தாது உப்புக் கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்சைம் ஆகியவை இருக்கின்றது. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ்நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது.

எல்லா நேரமும் நம்மை அறியாமலேயே நாம் வாயில் சுரக்கும் உமிழ்நீரை உள்ளே விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். உமிழ்நீரிலுள்ள என்சைம் நாம் சாப்பிடும் உணவில் ரசாயன மாற்றங்களை வேகமாக ஏற்படுத்த உதவி செய்கிறது. இந்த என்சைம் இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக வாரக்கணக்கில் ஏன் மாசக் கணக்கில்கூட ஆகும். அப்படியானால் நம் உடலிலுள்ள தசைகள்நரம்புகள்எலும்புகள் இவையெல்லாம் ஒழுங்காக வேலை செய்யாது. இவையெல்லாம் வேலை செய்யாவிட்டால் நம்மால் உயிர்வாழ முடியாது.

உமிழ்நீரிலுள்ள அமைலேஸ் என்கிற நொதி (என்சைம்) நாம் சாப்பிடும் உணவிலுள்ள ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டை மால்டோஸ் என்கிற சர்க்கரைப் பொருளாக மாற்று வதற்கு உதவி செய்கிறது. உணவு சிறுகுடலில் போய்ச் சேரும்போது இன்னும் அதிகமாக அமைலேஸ் என்சைம் கணையத்திலிருந்து சுரக்கப்பட்டு உணவில் மிச்சம் மீதியிருக்கும் ஸ்டார்ச்சையும்மால்டோசாக மாற்றிவிடுகிறது. மால்டேஸ் என்கிற இன்னொரு என்சைம் எல்லா மால்டோசையும் குளுக்கோசாக மாற்றிவிடுகிறது. இந்த குளுகோஸ்தான் கடைசி யாக ரத்தத்தில் கலக்கிறது. என்னவென்று புரியவில்லையாஒன்றுமில்லை நாம் சாப்பிடும் உணவிலுள்ள சர்க்கரையை வாயிலுள்ள என்சைம் குளுகோசாக மாற்றி ரத்தத்தில் கலக்கச்செய்கிறதுஅவ்வளவுதான்.

நமது உமிழ்நீரிலுள்ள மிசின் என்கிற பொருள் வாய் எப்பொழுதும் ஈரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. அதேமாதிரி உமிழ் நீரிலுள்ள லைசோசைம் என்கிற பொருள் நாம் சாப்பிடும் உணவிலுள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்துவிடுகிறது.

வயிற்றுக்குள் போய் எல்லா உணவும் ஜீரணம் ஆகிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு. உணவு வாயில் போடப்பட்டவுடன் உதடுகன்னம்நாக்கு ஆகியவற்றிலுள்ள தசைகள் ஒன்று சேர்ந்து வாயினுள் போடப்பட்ட உணவை வாயினுள்ளேயே சிறிது நேரம் வைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது. அதே நேரத்தில் வாயிலுள்ள 3 உமிழ்நீர் சுரப்பிகள் சுரக்கும் திரவம் வாயில் போடப்பட்ட உணவுக் கவளத்தைச் சூழ்ந்து செரிமானத்திற்கு தயாராகிறது. பற்களுக்கிடையில் மாட்டிய உணவு துண்டு துண்டாக வெட்டப்பட்டு பின்பக்கத்திலுள்ள பற்களால் மிகச்சிறிய துண்டுகளாக ஆக்கப்பட்டு விழுங்குவதற்கு ஏதுவாக தயாராகிறது.

நாக்கிலுள்ள சுவை நரம்புகள் நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பாபுளிப்பாஉப்பாதுவர்ப்பா என்பதைக் கண்டுபிடித்து அதற்குத் தேவையான சரியான என்சைம் களை சுரக்கச் செய்கிறது. நாக்கு இப்படியும் அப்படியும் புரளும்போது நாக்குக்கு இடை யில் உணவுத்துண்டுகள் பாதி நிலையில் ஜீரணமாகி ஒரு உருண்டையாக ஆக்கப்பட்டு நாக்கு மூலமாகவே அந்த உணவு உருண்டை தொண்டைக்குள் தள்ளப்படுகிறது. தொண்டையிலிருந்து வயிற்றுக்குள் இறங்கிய உணவு அங்குள்ள 5 என்சைம்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஜீரணமாகும் வேலையை ஆரம்பிக்கிறது.

வெற்றிலைபாக்குபுகையிலைபான்ஜர்தா போன்றவற்றைத் தொடர்ந்து போடும் பழக்க முள்ளவர்களுக்கு வாயினுள் வந்து முடியும் உமிழ்நீர் சுரப்பிகளின் குழாய் பாதிக்கப்பட்டு அடைபடும் வாய்ப்பு அதிகம். எனவேதான் இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு சரிவர உமிழ்நீர் சுரக்காமல் அடிக்கடி தொண்டை காய்ந்து போய்விடுகிறது.

இதேபோல் பற்களை இழந்த ஒருவருக்கு சரியான சத்தான உணவு கிடைக்காது. காரணம் அவரால் நன்றாக மெல்ல முடியாததால் அவர் சாப்பிடும் உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகாமல் உணவிலுள்ள சத்தான பொருட்கள் உடலுக்குப் போய்ச் சேருவதில்லை. எனவே இவர்களுக்கு தேக ஆரோக்கியமும் குறைந்துவிடும்.

ஆகவே சாப்பிடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்கு மட்டும்தான் வாய் உபயோகப்படுகிறது என்று தவறாக நினைத்து விடாதீர்கள். சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகும் வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.



For More Info Contact: