சுவை மருத்துவம் - Taste Therapy


சுவை மருத்துவம்


நாம் சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்போம். பல மணி நேரமாக உணவு சாப்பிடாவிட்டால் நமது உடல் மிகவும் தளர்ந்த நிலையில் சோர்வாக இருக்கும். அப்போது நாம் ஏதாவது ஓர் உணவைச் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்த உடனே உடலுக்கு சக்தி கிடைக்கிறதா அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கிறதா? சாப்பிட்ட உடனேயே நமக்கு சக்தி கிடைத்து விடும். ஆனால் அறிவியல்படி, நாம் வாயில் சாப்பிடும் சாப்பாடு வயிற்றுக்குச் சென்று, அங்கே ஒரு மணி நேரம் இருந்து ஜீரணமாகி, பின்பு சிறுகுடலுக்குச் சென்று அங்கேயும் ஒரு மணி நேரம் ஜீரணமாகிப் பின்னர் இரத்தத்தில் கலக்கிறது. எனவே நமக்கு 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் சக்தி கிடைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துச் சர்க்கரையின் அளவைச் சோதனை செய்து பார்ப்பதற்கான காரணம் இதுதான்.

ஆனால், சாப்பிட்டவுடன் நமக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இது எங்கிருந்து வருகிறது?
நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு பிராண சக்தி கிடைக்கிறது. உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதிப் பிராண சக்தி கிடைக்கிறது.

நாம் உணவை மெல்லும்பொழுது அதில் உள்ள சுவைகள் நாக்கில் புள்ளிப் புள்ளியாக இருக்கும் சுவை மொட்டுகள் (Taste Buds) மூலமாக உறிஞ்சப்பட்டு, சுவைகள் பிராண சக்தியாக மாறி நரம்புகள் வழியாக மண்ணீரலுக்கு அனுப்பப்படுகின்றன. மண்ணீரல் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அதைப் பிரித்துக் கொடுக்கிறது.

நமது உடலுக்குப் பல வகைகளில் பிராண சக்தி கிடைக்கிறது. சாப்பிடும்பொழுது சுவை வழியாகவும் பொருள் வழியாகவும் இரண்டு வழி முறைகளில் பிராண சக்தி கிடைக்கிறது.

நாம் உணவகத்தில் சாப்பிடும்பொழுது, சாப்பிட்டவுடன் தெம்பாக இருக்கிறோம். ஆனால், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உடல் சோர்ந்து விடும். மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருக்கும். ஏனென்றால், உணவகங்களில் சுவைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவைச் சுவையாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள். எனவே, அந்தச் சுவை நாக்கின் மூலமாகப் பிராண சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கிடைப்பதால் நாம் ஒரு மணி நேரம் தெம்பாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் சோடா உப்பு, அஜீனோமோட்டோ போன்ற பொருட்களைக் கலப்பதால் உணவில் தரம் குறைந்து, உள்ளே செல்லும் பொருட்கள் சக்தி உள்ள பொருட்களாக இருப்பதில்லை. எனவே, ஒரு மணி நேரம் கழித்து நமக்கு உடல் சோர்வடைகிறது.

வீட்டில் சாப்பிடும்பொழுது சாப்பிட்டு முடித்தவுடன் சோர்வாக இருக்கும். ஒரு மணி கழித்து நன்றாக, தெம்பாக இருக்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், வீட்டில் சமைக்கும்பொழுது நாம் சுவைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், உணவில் சத்துப் பொருட்கள் அதிகமாக இருக்கும். எனவே, சுவை மூலம் பிராண சக்தி கிடைக்காததால் முதல் 1 மணி நேரத்திற்கு நமக்கு சக்தி கிடைப்பதில்லை. ஆனால், உள்ளே செல்லும் பொருட்கள் வீரியத்துடன் இருப்பதால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொருட்கள் மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியில் நாம் இயங்க ஆரம்பிக்கிறோம்.

வீட்டில் சாப்பிட்ட உணவுக்கு நாம் பல மணி நேரம் சக்தியுடன் இருக்க முடியும்.
எனவே, வீடுகளில் இனிமேல் உணவகங்களைப் போன்று சுவையாகச் சமைக்க வேண்டும். அதே சமயம், உணவகங்களில் வீட்டைப் போல் சத்து உள்ள பொருட்களைச் சமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் எங்கு சாப்பிட்டாலும் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரத்திற்கு நாம் தெம்பாக இருக்கலாம்.

ஆம்! சுவை என்பது ரசிப்பதற்கோ, ருசிப்பதற்கோ அல்ல. சுவை என்பது பிராண சக்தி கொடுக்கும் அற்புதமான ஒரு விசயம்! எனவே, நாம் சாப்பிடுகிற உணவில் சுவை மூலமாகவும் பொருள் மூலமாகவும் இரண்டு வகைகளிலும் பிராண சக்தி எடுப்பது மூலமாக அதிக சக்தியுடன் வாழலாம்.

நமது உடலில், ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு பிராண சக்தி மூலமாக வேலை செய்கிறது. இப்படி, மொத்தம் ஐந்து விதமான பிராண சக்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு விதமான பிராண சக்திக்கும் ஒவ்வொரு வித உறுப்பு வேலை செய்யும். இப்படி எந்தப் பிராண சக்திக்கும் எந்த உறுப்புக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை இனி தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்.

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)


For More info Visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare

Thanks & Regards,
     Vineeth.S
+91 98409 80224  
+91 97509 56398 
vineeth3d@gmail.com

வெற்றிலை போடுவது ஏன்?

வெற்றிலை போடுவது ஏன்?


பழந்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.



தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. 


மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது. 


பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. 


ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.


இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது. 


தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள். 


வெற்றிலை மருத்துவம்


வெற்றிலை பயன்--சித்த மருத்துவம்


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர்தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி: 

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.


தலைவலி: 


வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.


தேள் விஷம்: 


இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.


சர்க்கரை வியாதி:


சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.


அல்சர்: 

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.


Thanks & Regards,
     Vineeth.S
+91 98409 80224

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

முடி உதிர்தல், இளநரை சரியாக....


முடி உதிர்தல், இளநரை சரியாக....


இளநரை சரியாக....




  • கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.
  • கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.
  • மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.
  • நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும்.
  • ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து தூள் செய்து ,செம்பருத்தி பூவை தூள் செய்து இரண்டையும் சம அளவு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும்.
  • நெல்லிக்காய் பவுடராக்கி எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும் .
  • கசகசா , அதிமதுரம் சமபங்கு யடுத்து பால் கலந்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் "முடி கருமையாகும் "
  • அதிமதுரம் தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் கலந்து 1 மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.
  • கறிவேப்பில்லை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடிகருமையாகும்.
  • வரம் ஒரு முறை கீரை சாபிட்டால் முடி நன்றாக வளரும்.
  • தினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் , ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
  • தேங்காய்ப் பால் தேய்த்து குளித்தல் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.


முடி உதிர்தல் சரியாக....



  • வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த நீரை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட வேண்டும். காற்று போகாத அளவிற்கு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும் . பின் ஒரு நாள் கழித்து . தலை குளித்தால் தலையில் பேன் ஒளியும் ,முடி உதிர்வதை நிறுத்தலாம்.
  • வெந்தயம் சிறப்பான குணம் வாய்ந்தது . இதை நீரில்ஊரவைத்து.மறு நாள் அரைத்து தலையில் வைத்திருந்து குளித்தால்.உடல் சுடு குறையும். முடி நன்றாக வளரும். ஆனால் அதிக குளிர்ச்சி சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளது. ஆஸ்துமா , ஜலதோஷம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
  • வாரத்தில் ஒரு முறையனும் எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். தினமும் சுத்தமான தேங்காய் எண்ணெய் தலை பகுதி முழுவதும் முடியின் வேர் பகுதியில் மிதமாக தேய்துகொடுகவும். இதனால் இரத்த ஓட்டம் சிராக அமையும்.முடியும் நன்றாக வளரும் .

For More Info Contact:

மருந்து மாத்திரைகளின் பரிசோதனை முன்னோட்டம் – ஒரு அதிர்ச்சி தகவல் (Clinical trail)


Clinical Trial – ஒரு இளம் கிரிக்கெட் வீரர் விளம்பரத்தில் தோன்றி சூப்பர் பைக் என்று ஒரு புது வகை இருசக்கர வாகனத்தை கடைதெருவில் விற்க போகும் முன்னால் அது பல்வேறு ஆய்வுகளை கடந்து அதாவது தேர்ந்த பொறியாளர்கள் பரிசோதனை செய்து விற்கலாம் என்று சொன்ன பிறகே நம் கைகளில் வந்து தார்ச்சாலையில் உருளும். ஒரு பைக்கே இதனை தாண்டி வரும் போது நம் நோய்வாய்ப்படும் போது உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் எப்படி.. சில தெரிந்த தெரியாத உண்மைகள் நம்மை சுற்றி மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் விடுகின்றன. மக்கள் தொகை வளர வளர இன்று நோய்களும் அதன் எண்ணிக்கையும், தாக்கமும் அதிகரித்து விட்டன. செயல் வீரியம் மிக்க மருந்துகளை மார்க்கெட்டில் மருந்து கடைகளில் யார் அதிகம் விற்கிறார்களோ அவர்களுக்கு பணம் வரவும் அதிகம்.

சாமுராய், போன்ற சில படங்களை நாம் கடந்து வந்து விட்டோம். சில படங்களை நாம் நிழல் படமாகவோ அல்லது பொழுது போக்கு சித்திரமாக கண்டு கழித்து விட்டு அடுத்த படத்திற்க்கு தயாராகி விடுகிறோம். அல்லது இது எங்கோ நடந்து கொண்டு இருக்கலாம் இயக்குனர் அழகா சொல்லிருக்கிறார் என்று ஒரு கைதட்டலை பரிசளித்து மகிழ்வதில் நம் உட்சபட்ச உதாசீனம் வெளிப்படுகிறது. அந்த படங்களை பார்த்து நம் சமூகம் விழிப்படைந்து இருந்தால் சமீபத்திய ஒரு அறிவிக்கை நம் நாட்டுக்கு எல்லையில் விரிந்த மாறுப்பட்ட நிலையை இன்று நம் நாடு அறிந்து இருக்காது. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு சீனா, இந்தியாவில் உள்ளதாக சமீபத்திய தகவல் கூறுகிறது. அதாவது ஆட்டு சந்தையை போன்று மனித சந்தையாய் உள்ளது நம் இந்திய. மருந்துகளை விற்பதற்கும் அதை வணிகம் செய்வதற்கும் மட்டும் அல்லாமல் அதை நம் மீதே சோதித்து பார்க்கும் சந்தையாகவே நம் மக்களை பாவித்து கொள்ளும் ஒரு அடிமாட்டு சந்தையர்களாக மாற்றி போட்டு விட்டது இந்த மருத்துவ பரிசோதனைகள்.

ஒரு புதிய மூலக்கூறுகளை கொண்ட மருந்தை சந்தைக்கு கொண்டு வந்து விற்பதற்கு முன்னால் எலிகள்guniea pig, பறவைகள், குரங்குகள்(தசாவதாரம்) போன்ற விலங்குகளுக்கு வலுக்கட்டயமாக கொடுக்கப்பட்டு அதன் சாதகம் பாதங்களை கண்டறிந்த பின்பே மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு பின் அதனை விற்பதற்கு தகுந்த அனுமதி பெற்று மருந்தை மருந்து கடைகளில் விற்கவோ அல்லது மருத்துவர்களால் பிறருக்கு பரிந்துரை செய்வோ முடியும். இவ்வளவு தேர்வுகளை கடந்தே நம் வாய்க்குல்லோ அல்லது ஊசி மருந்தாகவோ உட்புக முடியும். இந்த புதிய மருந்து கண்டுபிடிப்பின் ஆய்வுகளுக்கு உள்ளாகும் விலங்குகள் மருந்துகளின் அளவு, வேதியல் இயக்க மாறுபாடுகள், வீரியம் இது போன்ற பல மாறுபாடுகளால் அது இறந்தோ அல்லது உறுப்புக்கள் வேலை செய்யாமலோ மூளை, கல்லீரல், சிறுநீரகம் இயக்கம் நின்றோ அல்லது குழம்பியோ போவதால் மரண நிலையை எட்டலாம்.

மனிதர்கள் மீது நேரடியாக பரிசோதனை செய்யும் பொழுது மனிதனுக்கும் இதே போன்ற நிலைமை ஏற்படுத்தலாம். அதாவது மனிதர்களை நேரிடியாக மேல் சொன்ன எதுவும் செய்யாமல் விலங்குகளாக உட்படுத்தி (நோவேல் ஸ்டடி) மருந்தை நமக்கு தெரியாமல் நம் மீதே திணித்து ஆய்வுகளின் கால அளவை குறைத்து மருந்துகளை துரிதாமாக சந்தையில் கொண்டு வந்து வணிகமாக்கி விற்பதே இவரகளின் மிக முக்கிய நோக்கம். இவர்களை லாப கணக்கை அடைய நாம் பலிக்கடா என்பது சரியே. அதாவது நம்மையே விலங்காக பாவிப்பதே நடந்தது கொண்டு இருந்தது.


ஆனால் சில மருந்து நிறுவனங்கள் ஒரு புதிய மூலக்கூறு நிரம்பிய மருந்தை முதல் கட்டமாக விலங்குகளின் மீது ஆய்வுகளை செய்யாமல் மனிதர்களை நேரடியாக பரிசோதித்து சில பல மனித உயிர்களை காவல் வாங்கிய கதைகள் பல. இவ்வளவு மனிதர்கள் இறந்து இருக்காலாம் என்று ஒரு எண்ணிக்கை இங்கே தட்டச்சு செய்ய விரும்பவில்லை. “பல உயிர்கள்என்பதின் இருட்டு வாரத்தையில் நிறைய வெளிச்ச எண்ணிக்கை அடங்கியுள்ளது. மருந்துகளை நேரடியாக மனிதர்கள் மீது பரிசோதிக்க உண்பவரிடம் கூட அனுமதி பெறாமல் அவர்களை கொன்று குவித்து இருக்கிறார்கள். இப்படி அனுமதி பெறாமல் நடந்து கொண்டிருந்த பல்வேறு மருந்து முன்னோட்ட ஆய்வுகளையும், எதிர்காலத்தில் நடக்க போக விருந்த ஆய்வுகளையும் தடுத்த நிறுத்தியும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நேராமல் இருக்க தண்டனைகளும், அதற்கான சட்டமும் கடுமையாக்கபட்டுள்ளன என்பது ஒரு மகிழ்வான செய்தி. நம் மருந்து நிறுவனங்களை நம் நாட்டில் கட்டுபடுத்தா விட்டால் இது போன்ற இன்னும் நிறைய ஆய்வுகளை தொடர்ச்சியாய் செய்து கொண்டே பல மனிதர்களை கொன்று குவித்து கொண்டே இருக்கும். இந்த மருந்து ஆய்வுகளின் விளைவால் இறந்த, சுகாதார வாழ்வு பறிபோன பலரை கண்டு விளித்து கொண்டுள்ளது நம் நாட்டின் சட்ட திட்டங்கள். அமெரிக்க ஐரோப்பிய மருந்து நிறுவனங்கள் நம் நாட்டில் இதற்காக விரித்திரிந்த கூடாரங்கள் இன்று பெரும்பாலும் மூடப்பட்டு இருக்காலம் நீங்கள் இதை படிக்கும் நேரம்.

உங்கள் மருத்துவர்கள் உங்களுக்கு தரும் மருந்துகளில் (Sample not for sale) முத்திரை இருந்தால் உசார் உசார். இதுவும் ஒரு பரிசோதனையே. உங்களின் நோய்க்கு அதை உபயோகித்து பார்த்து சந்தை படுத்த எவனோ லாபம் அடைய நம் கோவணம் உருவப்படுகிறது என்ற அர்த்தத்தை உணரலாம். உலகமயமாக்கல், வணிகம், வளர்ச்சி, மக்கள் தொகை போன்ற பல்வேறு வார்த்தை ஜாலங்கள் இது போன்று நடைபெற நம் நாட்டு மக்கள் பலியிடப்படுவது ஏமாற்றமே. மூலிகைகளை தொலைத்து, சத்தான உணவு முறைகளை தொலைத்து, உடற்பயற்சியின் மகத்துவம், உழைப்பின் தேவையை மறந்த நமக்கு இது தேவையே என்று சொன்னால் அது பொய்யாகாது. உணருவோம் நம் மகத்துவத்தை நம் உதிரம் நாம் சிறப்பதற்கே.

நன்றி - கீற்று.காம்