தடுப்பூசிகளின் கேவலமான பின்னணியில் இருப்பது யார்..! யார்..?

தடுப்பூசிகளின் கேவலமான பின்னணியில் இருப்பது 
யார்..! யார்..?



இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்..!

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர் மட்டுமல்ல; “பிக் பார்மா” என்றழைக்கப்படும் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களான மெர்க், ஃபைசர், கிளாக்சோ ஸ்மித் கிளைன் ஆகியவற்றில் பில் கேட்ஸ் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார்.

மேற்கத்திய ஏகபோக மருந்து நிறுவனங்களின் இலாப சதவீதம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், அது குறித்து ஆய்வு செய்த மெக்கன்சி நிறுவனம், “மேற்கத்திய நாடுகளில் அமலில் உள்ள தரக் கட்டுப்பாடு சட்டங்கள் புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும் அதனைச் சந்தைப்படுத்துவதற்குமான செலவுகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறி, “இந்தச் செலவைக் குறைப்பதற்கு வேறு புதுமையான வழிகளை மருந்து கம்பெனிகள் கண்டுபிடிக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கியது”.

இதனடிப்படையில் புதிய மருந்துகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்க குடிமகன்களுக்குக் கொடுத்து பரிசோதித்துப் பார்ப்பதைவிட, ஏழை நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் உடம்பில் செலுத்திப் பரிசோதித்துப் பார்ப்பதை இலாபகரமானதாகவும், மேற்கத்திய தரக் கட்டுப்பாட்டு சட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியாகவும் ஏகபோக மருந்து கம்பெனிகள் கண்டு கொண்டன.

இதற்கு அப்பால், “நம்மை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் மக்களைச் சாந்தப்படுத்துவதற்கு ஆயுதங்களை விட மருந்தே சாதகமானது” என்பதை அமெரிக்க ஏகபோக முதலாளியான ராக்பெல்லர் பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமது சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்து, அதனை தனது அறக்கட்டளையின் செயல்திட்டமாக நடைமுறைப்படுத்தியும் வந்திருந்தார்.

கேட்ஸ் அறக்கட்டளை பொது சுகாதார தளத்தில் இயங்குவதைத் தனது முக்கிய இலக்காகக் கொண்டிருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். இந்த அடிப்படையில் தனது அறக்கட்டளையின் மூலமாக சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதோடு மட்டும் கேட்ஸ் ஒதுங்கிக் கொள்ளவில்லை. ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டு புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக பி.டி.பி. (Product Development Projects)) என்ற பெயரில் மருந்துப் பொருள் அபிவிருத்திக்கான திட்டங்களையும், (இந்தத் திட்டம் பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாகச் செயல்படுத்தப்படும் பி.பி.பி. திட்டம் போன்றது) ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்தி மருந்துகளைப் பரிசோதனை செய்யும் அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறது. மேலும், ஏழை நாடுகளின் அரசுகளின் சுகாதார கொள்கைகளைத் தமக்குச் சாதகமாக உருவாக்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு ஏற்ப, அதிகார வர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அளவிற்குப் பலமிக்க அரசுசாரா நிறுவனங்களையும் களத்தில் இறக்கியிருக்கிறார். பில் கேட்ஸின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் “ஒரு படையெடுப்புக்கு நிகரானது” (Chemical War) எனச் சொல்லத் தேவையில்லை.

2000-ம் ஆண்டுகளின் மத்தியில் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் புதிய மருந்துகளுக்கான சோதனைகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை நடத்த ஆரம்பித்தது. 2010-ம் ஆண்டு கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசியை 7 ஆப்பிரிக்க நாடுகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் மீது சோதித்தது. இந்தச் சோதனையின் விளைவாக 151 குழந்தைகள் இறந்ததுடன், 1,048 குழந்தைகள் முடக்குவாதம், வலிப்பு நோய் போன்ற கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டன. எனினும், இவ்வுண்மைகளை மறைத்து மருந்துப் பரிசோதனை பெரும் வெற்றி பெற்றதாகப் பிரச்சாரம் செய்து, உலகம் முழுவதும் அம்மருந்தை விநியோகம் செய்யும் உரிமத்தை கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்திற்கு வாங்கித்தந்தது.

அதே போன்று ஆப்பிரிக்க நாடான சாட்-இல், குழந்தைகளின் மூளையையும் தண்டுவடத்தையும் பாதிக்கும் “மெனின்ஜெட்டிஸ்” (Meningitis) என்ற நோய்க்கு எதிரான தடுப்பூசியை அறிமுகம் செய்து, அதனைச் சந்தைப்படுத்துவதற்காக ‘மென் ஆஃப்ரி வாக்’ (MenAfriVac) என்ற இயக்கத்தையும் எடுத்தது, கேட்ஸ் அறக்கட்டளை. இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்ட 500 குழந்தைகளில் 50 குழந்தைகள் முடக்குவாதத்தில் வீழ்ந்தனர்.

ரொட்டாவைரஸ் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான சோதனைக் கூடத்தை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சி.எம்.சி) ஏற்படுத்தியுள்ள கேட்ஸ் அறக்கட்டளை, ரொட்டாவைரஸ் தடுப்பூசி தொடர்பான மருந்துகளை மேலும் வளர்த்தெடுக்கவும், அம்மருந்துகளை 10,000 பச்சிளங் குழந்தைகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்தவும் பாரத் பயோடெக் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் தடுப்பூசிகளை இந்திய அரசின் குழந்தைகள் நலத்திட்டத்துடன் இணைப்பதன் மூலம் அம்மருந்துகளுக்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை.

சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக்களை சந்தித்தப் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வேறு பெயர்களில் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் தலையில் கட்டும் கேட்ஸ் அறக்கட்டளையின் சதிச்செயல் ஏற்கெனவே அம்பலமான பிறகும் கூட இந்திய அரசு அதனுடனான தொடர்பைப் பேணுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையும், “பாத்” என்ற அரசுசாரா நிறுவனமும் இணைந்து, குஜராத்திலும், ஆந்திராவிலும் நடத்திய தடுப்பூசி முகாம்களில், ஹெச்.பி.வீ. என்ற கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசியை 23,000 பழங்குடியினச் சிறுமிகளுக்குச் செலுத்தின. இந்த தடுப்பூசி நோயைத் தடுப்பதற்குப் பதிலாக பாரதூரமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியது. அத்தடுப்பூசியின் காரணமாக ஏழு பழங்குடியினச் சிறுமிகள் அநியாயமாக உயிரிழந்ததோடு, 1,200-க்கும் அதிகமான சிறுமிகள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க மக்களால் புறக்கணிக்கப்பட்ட கர்டாசில் என்ற மருந்தைத்தான், அதில் சில மாற்றங்களைச் செய்து, புதுப் பெயரையும் சூட்டி இந்தியச் சிறுமிகளுக்குச் செலுத்திய அயோக்கியத்தனம் பின்னர் விசாரணையில் அம்பலமானது.

இம்மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கேட்ஸ் அறக்கட்டளையின் தொங்குதசையான பாத் நிறுவனம், பழங்குடியினச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இம்முகாம்களுக்கு இழுத்து வந்ததும், இம்மருந்தின் விளைவுகள் குறித்துப் பல பொய்களைப் பிரச்சாரம் செய்ததும் மட்டுமின்றி, தடுப்பூசி போட்டுக் கொண்ட பல சிறுமிகளின் பெற்றோர்களின் கையெழுத்தை பாத் நிறுவன அதிகாரிகளே மோசடியாக போட்டிருப்பதும் நிரூபணமானது.

இம்மரணங்கள் குறித்து விசாரித்த நாடாளுமன்ற நிலைக்குழு, தனது அறிக்கையில், “மருத்துவ முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இவை, அங்கீகாரமற்ற தடுப்பூசிகளை மனிதர்கள் மேல் சோதித்துப் பார்ப்பதற்காக நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனை நடவடிக்கைகளாகும்” என்பதை உறுதி செய்து, “இது சட்டவிரோதமான முறையில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலாகும்” எனச் சுட்டிக் காட்டியது. “ஒருவேளை இந்த அறக்கட்டளையின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்தில் கர்டாசில் தடுப்பூசியைச் சேர்த்திருந்தால், அது அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத்திற்கு மிகப் பெரும் இலாபத்தை, ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்லும் அதிரடி இலாபத்தை, அள்ளித் தந்திருக்கும்” என்பதை அம்பலப்படுத்திய நாடாளுமன்ற நிலைக்குழு, “பொதுச் சேவை என்கிற பெயரில் தனியார் நிறுவனங்களின் வணிக நோக்கங்களுக்குச் சாதகமாக இயங்கிவரும் இந்த அறக்கட்டளை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் பரிந்துரைத்தது.

ஆனால், இதுவரை கேட்ஸ் அறக்கட்டளை மீதோ, பாத் நிறுவனம் மீதோ எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேட்ஸ் அறக்கட்டளையும் புதிய மருந்துகளைப் பரிசோதிக்கும் தனது கிரிமினல் நடவடிக்கைகளைக் கைவிட்டுவிடவில்லை.

கேட்ஸ் அறக்கட்டளை, ஏழை நாட்டு மக்களைப் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச்சாலை எலிகளாக மட்டும் பயன்படுத்தவில்லை. மேற்கத்திய நாடுகளில் கடும் பக்கவிளைவுகளின் காரணமாக போணியாகாமல் தேங்கிக் கிடக்கும் மருந்துகளைக் கொண்டுவந்து கொட்டும் சந்தையாவும் ஏழை நாடுகளைப் பயன்படுத்தி வருகிறது. கடும் பக்கவிளைவுகளின் காரணமாக நார்பிளாண்ட் என்ற கருத்தடை சாதனத்திற்கு (contraceptive) எதிராக அமெரிக்காவில் 36,000 வழக்குகள் தொடரப்பட்டதையடுத்து, நார்பிளாண்ட் அமெரிக்கச் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இக்கருத்தடை சாதனத்தின் பெயரை ஜேடல் என மாற்றி, ஆப்பிரிக்காவில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் உதவியுடன் கேட்ஸ் அறக்கட்டளை சந்தைப்படுத்தி வருகிறது. “ஆப்பிரிக்க ஆண்கள் கருத்தடை சாதனங்கள் குறித்து அக்கறைப்படாததால், ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் தங்களுக்கு இந்த மருந்து நிச்சயம் தேவை என விரும்பிக்கேட்பதாகக் கூறி” பில் கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ் இந்த விற்பனையை நியாயப்படுத்தியிருக்கிறார். நார்பிளாண்டைப் போன்றே கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஃபைசர் நிறுவனத்தின் டிப்போ புரோவேரா மருந்தையும், மெர்க் நிறுவனத்தின் இம்ப்ளானோன் மருந்தையும் கேட்ஸ் அறக்கட்டளை தெற்காசிய, ஆப்பிரிக்க பெண்களிடையே விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

கருப்பை புற்றுநோயிலிருந்து பெண்களைக் காக்கக்கூடிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம், கர்டாஸில் எனப் பெயரிடப்பட்ட அம்மருந்தை 2006-ல் அமெரிக்காவில் விற்பனைக் கொண்டு வந்தது. இம்மருந்தின் பக்கவிளைவுகள் அடுத்த மூன்றே ஆண்டுகளில் தெரியவந்த பிறகு, வருடத்திற்கு 150 கோடி அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்த அம்மருந்தின் விற்பனை தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த மருந்தை யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான சர்வதேச கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை...!

என் ஏழை நாட்டு மக்கள், மேலை நாட்டு மருந்து கம்பெனிகளின் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச்சாலை எலிகளாக மட்டுமே இருக்கிறார்கள்..! 

இனியும் இதனை நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கப் போகிறோமா..?? கேளிக்கைகளிலும், வேடிக்கைகளிலும் மூழ்கிக்கிடக்கும் என் இளைய சமுதாயமே உன்னுடைய கடமையை நீ என்றுதான் உணரப் போகிறாய்..!!!

இக்கட்டுரை, மும்பையிலிருந்து வெளிவரும் “இந்தியப் பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற ஆங்கில காலாண்டு இதழில் (எண்.57) வெளியான “கேட்ஸ் அறக்கட்டளையின் உண்மை நிகழ்ச்சி நிரல்” மற்றும் “இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளை: அரிச்சுவடி” என்ற இரு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

டாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன?

டாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன?

- மருத்துவர் புகழேந்தி

டாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன?

‘மருத்துவர்கள் அத்தனை பேருமே நல்லவர்கள்தான், நாம் அவர்களைத் தேடிச் செல்லாத வரையில்...’ என்றொரு நகைச்சுவைப் பொன்மொழி உண்டு.
நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், நிஜமும் அப்படித்தான் இருக்கிறது என்பதுதான் வேதனை. பேப்பர் போடுகிறவர் முதல் காய்கறி வியாபாரி வரை அத்தனை பேரையும் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் குடைந்தெடுக்கிற பலருக்கும், மருத்துவர்களிடம் பேச மட்டும் ஏனோ அப்படியோர் மிரட்சி. பெரும்பாலான மருத்துவர்களிடம் சந்தேகங்கள் கேட்கக் கூடாது, எதிர்க்கேள்வி கேட்டாலோ போச்சு... ‘நீ டாக்டரா, நான் டாக்டரா...’ என்கிற ஏளனமான பதிலுக்குத் தலைகுனிய வேண்டும்.
என்னதான் நடக்கிறது? மருத்துவர்களிடம் கேள்வி கேட்பது அத்தனை பெரிய தவறா? தனக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவரிடம் நோயாளி அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மருத்துவர் பதில் சொல்ல மறுத்தால் என்ன செய்வது?
சாமானிய மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெளிவுப்படுத்துகிறார் மருத்துவரும் சமூக ஆர்வலருமான புகழேந்தி.
‘‘‘நோயாளியின் துணை இல்லாமல் எந்த மருத்துவரும் ஒரு நோயைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது’ என்கிறார் நவீன மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுகிற வில்லியம் ஆஸ்லர். நோயாளி இல்லாமல் மருத்துவம் படிப்பதென்பது, அந்த மருத்துவருக்கு திசை தெரியாத நடுக்கடலில் பயணிப்பதற்குச் சமம். ஆனால், பல மருத்துவர்கள் அதை உணர்வதில்லை. டாக்டரிடம் எப்படிக் கேள்வி கேட்பது, கேட்டால் என்ன பதில் சொல்வாரோ? திட்டினால்? பாதி சிகிச்சையோடு விரட்டினால்... நோயாளிகளுக்கு இப்படி எல்லாவற்றுக்கும் பயம். பிரச்னை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இந்த இடத்தில் காந்திஜி சொன்ன ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். ‘என் உடல்நலன் மீது எனக்கு அக்கறை அதிகமா? இன்னொருவருக்கா?’ என்றார். அதன்படி பார்த்தால் மருத்துவரைவிட, நோயாளிக்குத்தானே தன் உடல் மீது அக்கறை அதிகம்? தனக்கிருக்கிற பிரச்னையைப் பற்றி, அதன் அறிகுறிகள் பற்றி சொல்வது மட்டும்தான் நோயாளியின் வேலை. அதன் பின்னணியில் உள்ள டெக்னிகல் விஷயங்களைக் கண்டுபிடித்து, நோயாளிக்குச் சொல்வது மட்டுமே மருத்துவரின் கடமை. அதன் தொடர்ச்சியாகப் பரிந்துரைக்கப்படுகிற சிகிச்சையைப் பற்றி முடிவெடுப்பது முழுக்க முழுக்க நோயாளியின் உரிமை மட்டுமே. சட்டமும் அதையே சொல்கிறது. ஆனால், யதார்த்தம் அப்படியிருப்பதில்லை.
என் அம்மாவை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒரு படிவத்தில் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். எதிர்பாராத விதமாக ஏதேனும் பிரச்னைகள் வந்தால், மருத்துவரோ, மருத்துவமனை நிர்வாகமோ பொறுப்பில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மயக்க மருந்து கொடுக்கும் போது 2 விதங்களில் பிரச்னை வரலாம். மருத்துவர் சரியான அளவு கொடுத்து, நோயாளியின் உடல் அதற்கு வேறு மாதிரி ரியாக்ட் செய்தால், அது மருத்துவப் புறக்கணிப்பில் வராது. ஆனால், மயக்க மருந்தின் அளவைக் கூட்டிக் கொடுத்து, அதனால் பிரச்னை வந்தால், அது மருத்துவப் புறக்கணிப்பின்றி வேறென்ன? நீங்கள் சரியான அளவு மயக்க மருந்துதான் கொடுக்கிறீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? எனவே, அந்த வரிகளை படிவத்தில் இருந்து நீக்குங்கள் என்று வாதாடினேன். 
கையெழுத்து போடாவிட்டால் அறுவைசிகிச்சை செய்ய முடியாது என்றார்கள். பெரும்பாலான கண் மருத்துவமனைகளில் இப்படித் தான் நடக்கிறது. சமீபத்தில் மறுபடி என் அம்மாவை வேறொரு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றேன். சிறுநீரகச் செயல்பாட்டைக் கண்டுபிடிக்க சில டெஸ்ட்டுகள் எடுக்கச் சொன்னார்கள். ரத்தம், யூரியா மற்றும் சீரம் கிரியாட்டினின் என எல்லாம் எடுக்கச் சொன்னார்கள். சிறுநீரகச் செயல்பாட்டை யூரியா டெஸ்ட்டைவிட சீரம் கிரியாட்டினின்தான் துல்லியமாகச் சொல்லும். அப்படியிருக்கும் போது எதற்கு அனாவசியமாக இரண்டு டெஸ்ட்டுகள் எனக் கேள்வி எழுப்பினேன். 
பதில் இல்லை. புகார் எழுதிப் போட்டிருக்கிறேன். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. விஷயம் தெரிந்த ஒரு மருத்துவரான எனக்கே இந்த நிலைதான். போலியோ சொட்டு மருந்து கொடுத்தால் போலியோ வராது என விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால்,போலியோ சொட்டு மருந்து கொடுத்த பிறகும் போலியோ வரும். அதற்குப் பெயர் ‘வேக்சின் டிரைவ்டு போலியோ’.  அதைப் பற்றி யாரும் சொல்வதில்லை. எல்லாவிதமான தடுப்பூசி மருந்துகளிலும் thiomersal என்கிற ஒரு ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கிறார்கள். அந்த ப்ரிசர்வேட்டிவின் விளைவால் ஆட்டிசம் வருவதாக அமெரிக்காவில் அதைத் தடை செய்து விட்டார்கள். 
இந்தியாவிலோ அப்படி எந்தத் தடையும் இதுவரை இல்லை. ஒரு தடுப்பூசியைப் போட்ட பிறகு போலியோ வராது என்றோ, ஆணுறை உபயோகித்தால் எய்ட்ஸ் வராது என்றோ அமெரிக்காவில் யாரும் விளம்பரப்படுத்த முடியாது. ஆனால், நம்மூரில் கல்வியின் தரமும் சமூக நிலையும் அரசியல் ஆதிக்கமும் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. ஒரு மருந்தின் சாதக, பாதகங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதைத் தெரிந்து கொண்டு அதை எடுப்பதா, விடுப்பதா என முடிவு செய்ய வேண்டியது அவரவர்தான்.
என்னுடைய மருத்துவ நண்பர் ஒருவரிடம்   ஒரு குழந்தையைத் தூக்கி   வந்து காட்டினார்கள். அந்தக் குழந்தைக்கு உடல் முழுக்க தடிப்பு. உடனே என் நண்பரான அந்த மருத்துவர், நான்கு மாத்திரைகள், ஒரு ஊசி, ஒரு ஆயின்மென்ட், ஒரு சோப் எல்லாவற்றையும் பரிந்துரைத்தார். அடுத்த நாளே அந்தக் குழந்தைக்கு எல்லாம் சரியாகிவிட்டது. அந்தக் குழந்தையின் அலர்ஜி பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் போதும் என்பது எனக்குத் தெரியும். மாத்திரையால்தான் குணமானது என்பது தெரியாமல், அவர் எழுதிக் கொடுத்த ஆயின்மென்ட்டும், சோப்பும்தான் காரணம் என அவர்கள் நினைப்பார்களே... அதுதான் வணிக தந்திரம்.இன்னொரு மருத்துவ நண்பர்... அவரிடம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர், ஆலோசனைக்கு வருகிறார். 
உணவுக் குழாயில் எரிச்சல் என்பது அவரது புகார். இந்த அறுவை செய்தவர்களுக்கு பொதுவாக ஸ்டீராய்டு மருந்துகள் கொடுப்பார்கள். அதன் விளைவுதான் அவருக்கு உணவுக்குழாயில் உண்டான எரிச்சல். அதற்கு சாதாரண மருந்து போதும். ஆனாலும், என் நண்பர் இசிஜி செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தார். அதைப் பற்றி நான் கேட்ட போது, ‘அட நீ வேறப்பா... நான் பிரைவேட் ஆஸ்பத்திரியில வேலை பார்க்கறேன். அவங்க பெரிய காசு போட்டு இசிஜி மெஷின் வாங்கிப் போட்டிருக்காங்க. நான் எழுதிக் கொடுக்கலைனா, என்னை வேலையை விட்டுத் தூக்கிடுவாங்க’ என்ற போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் எவ்வளவு பாவம் பாருங்கள்... 
தனக்குப் பரிந்துரைக்கப்படுகிற மருந்துகளில், சோதனைகளில் எதெல்லாம் தேவையில்லாதது, எது அவசியமானது, விலை குறைவான மருந்துகள் இருக்கின்றனவா, மருந்துகளின் சாதக, பாதகங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது நோயாளிகளின் உரிமைகள். சரியான பதில் கிடைக்காவிட்டால் தைரியமாகப் போராடுங்கள். வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. ஆனால், நம்மூரில் எல்லாக் காய்ச்சலுக்கும் ஆன்டிபயாடிக்தான். தேவையில்லாத மருந்துகளைப் பரிந்துரைக்கிற கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது.
அதே மாதிரி சாதாரண, விலை மலிவான மருந்துகளிலேயே சரியாகக் கூடிய பிரச்னைக்கு, எக்கச்சக்க விலையுள்ள மருந்துகளைப் பரிந்துரைக்கிற அக்கிரமமும் இங்கேதான் நடக்கிறது. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்றும், அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த கதையும் படித்திருக்கிறோம். அவை எதுவுமே அபத்தமில்லை. நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி இருக்கிறது. அது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்து, ஆயுளைக் கூட்டும் என்பதும் அறிவியல்.  அரிசி உணவுகளைத் தவிர்த்து, சிறுதானிய உணவுகளைச் சேர்த்துக் கொண்டால் 40 சதவிகித நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம் என்பது உண்மை. 
ஆனால், எந்த மருத்துவராவது இதையெல்லாம் நோயாளிகளுக்குச் சொல்கிறாரா? மருத்துவரின் வேலை, நோயைக் குணப்படுத்துவதா?  தடுப்பதா? வியாதி வந்தால் மருத்துவமனைக்குப் போ, மருத்துவரைப் பார், மருந்து சாப்பிடு... இதுதான் எழுதப்படாத விதியாக இருக்கிறது. காற்றோட்டமான இடமும் சுத்தமான, சத்தான சாப்பாடும், செருப்புகள் தவிர்க்காத கால்களும் நோய்களில் இருந்து காப்பாற்றும் என எந்த மருத்துவர் பிரச்சாரம் செய்கிறார்? நடக்கும் பிரசவங்களில் 50  சதவிகிதத்துக்கும் அதிகமானவை சிசேரியன். அவசரமான தருணங்களில், தாயையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய கட்டத்தில் மட்டும்தான் சிசேரியன் அவசியம். 
ஆனால், ஏதேதோ காரணங் களைச் சொல்லி, பல மருத்துவர்களும் சிசேரியனை வலியுறுத்துகிறார்கள். அதற்கு சம்மதிப்பதற்கு முன், சிசேரியன் ஏன் தேவை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டும்படி மருத்துவரிடம் கேட்க வேண்டும். எத்தனை பேர் கேட்கிறீர்கள்? இனியாவது கேளுங்கள்.மருத்துவம் படிக்கிற பலரும், பெரிய பணத்தை செலவழித்துப் படிப்பதால், அதை எத்தனை சீக்கிரம் திருப்பி எடுப்பது என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள். மருத்துவருக்கும் நோயாளிக்குமான இடைவெளி நிரப்பப்பட வேண்டும். ஸ்டாண்டர்டு மெடிக்கல் ட்ரீட்மென்ட் என்பது இங்கே சட்டமாக்கப்பட வேண்டும். 
ஒரு மருந்து பாதுகாப்பானதுதானா, இல்லையா என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்கிற அநியாயம் நிறுத்தப்பட வேண்டும். மருத்துவத் துறையில் வணிக நலன் தூக்கி எறியப்பட்டு, மக்கள் நலன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். கேள்வி கேட்கும் அறிவை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவர்கள் அனைவரும் மனசாட்சிக்குப் பயந்து நடக்க வேண்டும். உயிரைக் காப்பாற்றும் உன்னதப் பணியில் இருப்பதை மறக்காமல், மருத்துவத்தை நிஜமான சேவையாக நினைத்துச் செய்ய வேண்டும்.  சட்டமும் அதைத்தான் சொல்கிறது...’’ 
For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல..!

நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல..! 

இது மருத்துவத்தின் ஒரு வியாபார தந்திரம் மட்டுமே...?



மனிதனை இயற்கையின் ஓர் ஒப்பற்ற படைப்பு எனலாம். மனித உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தன்மையும், நோய்களைத் தானே குணமாக்கிக் கொள்ளும் சிறப்பும் கொண்டது. நம் உடலில் உள்ள ஓர் அற்புதமான ஜீவசக்தி எல்லாச் செயல்பாடுகளையும் இம்மி தவறாத கணிப்புடன் இயங்கச் செய்து உடலை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த ஜீவசக்தி நம் உடலின் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயை எதிர்த்துப் போரிடும் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்போம்.

நமது கண்ணில் தூசி விழுந்து விடுகிறது. உடனே கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்து அந்த தூசி வெளியேறி விடுகிறது. அளவுக்கு அதிகமாகவோ, உடலுக்குத் தேவையற்ற ஒன்றையோ விழுங்கி விடுகிறோம். உடலின் பாதுகாவலனான இந்த ஜீவசக்தி உடனே செயல்பட்டு குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்கி, தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது.

தவறான உணவு முறைகளாலும், பழக்க வழக்கங்களினாலும் இந்த ஜீவசக்தி செயலிழந்து போகும் தன்மையுடையது. உடலின் ஒரே பாதுகாப்பு அரண் செயலிழந்து விடுவதால் பல நோய்கள் உடலில் குடிபுக ஆரம்பிக்கின்றன. ஆகவே இந்த ஜீவசக்தியின் வலு விழந்த தன்மையே நோயாகிறது. இதற்கு மூலகாரணம் உடலில் இருந்து வெளியேறாது தேங்கிக்கிடக்கும் கழிவுப் பொருட்களும் அதனால் உருவாகிய நச்சுப் பொருட்களுமாகும்.

இந்தத் தேவையற்ற கழிவுகளின் தன்மை யைப் பொறுத்தும், அவைதேங்கி நிற்கும் உறுப்பைப் பொறுத்தும் நோயின் தன்மை மாறுகிறது. நச்சுப் பொருட்கள் முழங்கால் கணுக்கால் போன்ற இடங்களில் தேங்கினால் அது கீல்வாதம் எனப்படுகிறது. அடிவயிற்றுப் பகுதியில் கழிவு நீர் அதிகமாகச் சேருமாயின்அது மகோதரம் என்னும் பெருவயிறு நோயாகிறது. நுரையீரலில் சளி மற்றும் நீர் அதிகமானால், அது இருமலாகவோ, இளைப்பு நோயாகவோ உருவாகிறது. இவ்வாறு உடலின் பல பாகங்களில் தேங்கிக்கிடக்கும் கழிவு மற்றும் நச்சுப் பொருட் களை வெளியேற்றி விட்டால், ஜீவசக்தி வலுப் பெற்று உடல் நலம் பெறுகிறது.

நோய்க்குக் காரணம் உடலில் தேங்கி யிருக்கும் தேவையற்ற கழிவுகளும் நச்சுப் பொருளுமே காரணமென்றால் நுண்கிருமிகளால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் அவற்றை அழித்தால்தான் நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர் கூறுகின்றனரே. இது எவ்வாறு சாத்தியமாகும்? இதுவொரு நியாயமான சந்தேகம். எத்தனையோ வகையான நுண்கிருமிகள் (வைரஸ்) நம் உடலுக்கு உள்ளும் வெளியிலும் காற்றிலும் நீரிலும், ஏன் இந்தப் பூமி எங்கும் நிறைந்திருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கிருமிகள்தான். காற்று மண்டலம் முழுவதும் நுண்கிருமிகள்தான். இது முற்றிலும் உண்மைதான். ஆனால் இவைகள் தான் நோய்களுக்குக் காரணம் என்று சொல்வதுதான் தவறு. அது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு 21,000 தடவைகள் நுண்கிருமிகள் உள்ள காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் நாம் எல்லோரும் அல்லவா நோய்வாய்ப்பட வேண்டும்? இல்லையே. அது ஏன்? ஏனெனில் நுண்கிருமிகள் நோய்களை உண்டாக்கும் காரணிகள் அல்ல. அதுமட்டுமல்ல, பல மருத்துவ நிபுணர்கள் தங்களின் ஆய்வின் மூலம் நோய்களுக்கு மூலகாரணம் நுண்கிருமிகள் என்பது தவறு என்று நிரூபித்தும் உள்ளனர். டாக்டர். வாட்கின்ஸ் என்பவர் இளைப்பு நோய் (டி.பி.) பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இரத்தத்தின் மூலம் நோய் அறிதல் என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார். அதில் நோய் தோன்றுவதற்கு முன் நுண்கிருமிகள் காணப்படும் என்ற கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்று அடித்துக் கூறுகிறார். ஜான்ஸம் ரேசர் என்பவர் கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். இவர் நுண்கிருமிகள் நோய்களுக்குக் காரணமா? என்ற ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் நோய் தோன்றிய பின்புதான் கிருமிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

1941ல் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹண்டர் என்பவரும் மற்றும் சில நிபுணர்களும் சேர்ந்து நுண்கிருமிகள் நோய்க்குக் காரணம் அல்ல என்பதை நேரடியான சோதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர். டிப்தீரியா என்பது தொண்டையைப் பாதித்து, அதன்பின் உயிரையே குடிக்கும் ஒரு கொடிய நோய். இந்த நோயில் காணப்படும் கிருமிகளை ஹிண்டர் தனிமைப்படுத்தி வளர்த்தார். இலட்சக்கணக்கான இந்தக் கிருமி நீர், பால், உணவு ஆகியவற்றில் கலந்து ஆரோக்கியமான பலருக்கு உண்ணக் கொடுத்து வந்தார். ஆனால் ஒருவர்கூட டிப்தீரியா நோயினால் பாதிக்கப்படவில்லை. அவர் செய்த மற்றொரு ஆராய்ச்சி இன்னும் புதுமையானது. இதே கிருமிகளைச் சிலருடைய உள்நாக்கு, தொண்டை மற்றும் மூக்கின் உட்பாகம் ஆகியவற்றில் நேராகவே தடவி விட்டார். இப்போதும் எவரும் நோயால் பாதிக்கப்பட வில்லை. நுண்கிருமிகளே நோய்க்கான காரணமென்றால் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவராவது பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

இன்னொரு ஆய்வு, இதனை நடத்தியவர் வியன்னா பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பாடின்காஃபர். இவர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நுண்கிருமிகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை ஊற்றினார், பரிசோதனைச் சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட இலட்சக்கணக்கான காலராக் கிருமிகளை அந்த நீரில் கலந்தார். மாணவர்கள் எல்லோரும் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நீர் முழுவதையும் மடக்மடக்கென குடித்து விட்டார். பல நாட்கள் கடந்த நிலையிலும் அவர் காலராவால் பாதிக்கப்படவில்லை.

இந்தச் சோதனைகள் மூலம் நமக்கு விளங்கு வது என்ன? நுண்கிருமிகள் ஒரு போதும் நோய்கள் உண்டாகக் காரணமாக அமைவ தில்லை. ஓர் ஆரோக்கியமான உடலினுள் அவை வாழ முடிவதில்லை. ஆனால், கழிவு மற்றும் நச்சுப் பொருட்கள் நிறைந்த ஜீவசக்தி வலு இழந்துள்ள - உடம்பினுள் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, நோய் உண்டாக அடிப்படையான காரணம் உடலினுள் சேர்ந்துள்ள கழிவு மற்றும் நச்சுப் பொருட்களின் தேக்கமே. இதனால் உண்டான விளைவுதான் நுண்கிருமிகள். எனவே, ஒரு நோயைக் குணமாக்க வேண்டுமென்றால், உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றி ஜீவசக்தியை வலுவுள்ளதாக்கவேண்டும். 

இதை விட்டுவிட்டு அந்தக் கிருமிகளைக் கொல்லக்கூடிய மருந்துகளை விழுங்குவதால் உடலில் மேலும் ரசாய கழிவுகள் தேங்குகின்றன. இதனால் மற்றும் ஒரு புதிய முறையில் உடல் [உயிர்-ஜீவசக்தி] அந்த கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது. இப்போது உடலில் முன்பைவிட சற்று கூடுதலான தொந்தரவு தோன்றுகிறது. இப்போதும் பல டெஸ்ட்கள் எடுத்து பார்த்துவிட்டு இதற்கும் ஒரு கிருமிதான் காரணம் ஆனால் அதற்கு வேறு ஒரு புதிய பெயர் என்று மருத்துவம் இன்று பல புதிய நோய்களை உருவாக்கி வருவது வேதனையான விஷயம். 

“ஒரு நோயை குணபடுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் வைத்தியத்தின் மூலம் மேலும் மேலும் மோசமாகிவிடாதீர்கள்” என்பது ஆங்கில மருத்துவத்தின் தந்தை டாக்டர்.ஹிப்போக்ரேட்டிஸ் மருத்துவர்களுக்கு கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால் ஆங்கில மருத்துவமோ தங்கள் செயல்முறையில் அறியாமலேயே பெரும் தவறிழைத்து கொண்டிருகிறது.

இயற்கை மருத்துவ முறைகளே ஜீவசக்தியை வலுப்பெற செய்யும் என்பதனை நாம் புரியாதவரை இது போன்ற ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

இதற்கு எடுத்துகாட்டு, இன்று டிவி ஐ போட்டாலே சாதாரண பேஸ்ட் முதல்கொண்டு சீப்பு, சோப்பு, பவுடர், ஷாம்பூ, மற்றும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களை விற்க கூட இந்த கிருமிகள் மிகவும் பேருதவியாக உள்ளது. இவர்களுக்கு முதலீடே பணம் அல்ல கிருமிகள் தான். இன்று சாதாரண பொருட்களை விற்க கூட மருத்துவரின் வெள்ளை கோட்டு இல்லாமல் ஒரு விளம்பரமும் வருவதில்லை. என்று நாம் கிருமிகள் என்பது வெறும் கட்டுக்கதை என்பதனை புரிகின்றோமோ அன்றுதான் நமக்கு உண்மையான உடலின் இயக்கத்தில் நம்பிக்கை வரும். அன்றே உடல் தன்னை தானே குணப்படுத்தும் என்பதில் நம்பிக்கை வரும். அன்று தான் இது போன்ற ஏமாற்று வேலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். ஆனால் அன்று நம்மால் சும்மா இருக்க முடியாது. மற்றவர்களுக்கும் இதனை புரியவைக்க முயற்சிப்போம். அதை தான் நான் செய்துகொண்டுள்ளேன். புரிந்தால் நீங்களும் நிச்சயம் இதைதான் செய்வீர்கள்.

இவை மற்றும் அல்ல, சில வருடங்கள் முன்பு வரை மருத்துவர்கள் உபயோகித்த syringe மற்றும் ஊசிகள் சுடும் நீரில் போட்டு எடுத்து மீண்டும் உபயோகிக்கும் முறையை கடைபிடித்தார்கள் அப்போது எந்த நோயும் பரவியதாக தெரியவில்லை. இன்று disposable syringes தான் பயன்படுத்தபடுகிறது இதனை மாற்ற இவர்கள் கூறியது ஊசிகள் மூலம் நோய் பரவும் என்று.. ஆனால் இன்றோ அப்படி நோய் பரவாது என்றும் இதே மருத்துவம்தான் கூறுகிறது. இதற்கு இடையில் ஒரு வியாபாரம் நடந்து உள்ளது. பலருக்கும் ஒரே syringe மற்றும் ஊசிகள் பயன்படுத்துவதால் லாபம் வருமா அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பயன்படுத்தினால் லாபம் வருமா...? இந்த வியாபாரத்தில் கூட்டு சேர்ந்த வெளிநாட்டு மருந்து கம்பெனி DISPOVAN, இவர்கள்தான் இன்று அதிக அளவில் disposable syringes தயாரிக்கும் கம்பெனி. மருத்துவம் எப்படி வியாபாரமாக மாறிவருகிறது பாருங்கள். 

இதற்கு மற்றும் ஒரு எடுத்துகாட்டு, சில வருடங்கள் முன்பு வரை ஷேவ் செய்ய உபயோகித்து வந்த Blades இன்று எப்படி மாறி உள்ளது என்று பாருங்கள். நமக்கே தெரியும் சில வருடங்கள் முன்பு வரை ஒரு கத்தி மட்டுமே இருக்கும், அதனை சிறிய கல்லை கொண்டு தீட்டி அதில்தான் அனைவருக்கும் ஷேவ் செய்வார்கள். அப்போது நோய்கள் எவ்வளவு இருந்தது என்றும் இன்றோ அவை எப்படி பெருத்து உள்ளது என்றும் உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆனால் இன்றோ நாம் உபயோகிக்கும் Single Use Razors தான் தங்கள் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இது வர காரணமாக சொல்லப்பட்டதும் இதே கிருமிகள் தான். ஆனால் இன்று மருத்துவம் சொல்கிறது Bladeகள் மூலம் எல்லாம் கிருமிகள் பரவாது என்று. ஆனால் இன்னும் நம் பயம் மாறவில்லை. இடையில் லாபம் அடைந்ததும் ஒரு வெளிநாட்டு கம்பெனி தான் அது இந்தியாவில் இருந்த அனைத்து கம்பெனிகளையும் ஒழித்துவிட்டு இன்று முதல் இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் Gillette. 

இவற்றை எல்லாம் பார்த்தால் எந்த ஒரு வெளிநாட்டு பொருளையும் இந்தியாவில் விற்க மருத்துவத்துறை மிக பெரிய பக்கபலமாக இருப்பது கண்கூடாக நிரூபிக்கபடுகிறது. இது போல் மக்கள் கண்களில் இருந்து மறைக்கப்படும் விஷயங்கள் பல பல உள்ளன அவற்றை எல்லாம் மக்கள் கண் முன் வெளிச்சம் போட்டு காட்டுவதே என்ன கடமை.

நன்றி - அக்குஹீலர் கார்த்திகேயன்

மேலும் படிக்க 

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 1 - நீரிழிவு ஒரு அறிமுகம்
http://reghahealthcare.blogspot.com/2010/12/diabetes.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 2 - கிளைகோஜன் மற்றும் அட்ரினல் சுரப்பியின் பங்கு
http://reghahealthcare.blogspot.com/2014/12/2.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 3 - High Sugar(ஹை சுகர்), Low Sugar (லோ சுகர்) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/3.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 4 - Sugar Free (சுகர் ப்ரீ) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/4.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 5 - அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம் 
http://reghahealthcare.blogspot.com/2014/12/5.html

இனிப்பு சிகிச்சை (இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்)
http://reghahealthcare.blogspot.in/2014/12/blog-post.html

For more info visit:


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
     Vineeth.S
+91 98409 80224  
+91 97509 56398 

டுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்கம்)


டுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்கம்) 




டுவா என்றால் மலாய் மொழியில் (மலேசியாவில் உள்ள வழக்கு மொழியில்) இரண்டு என்று அர்த்தம். சாதாரணமாக நாம் ஒரு தூக்கம் மட்டுமே தூங்குகிறோம். இது இரட்டை தூக்கம்(Double Sleep). இது ஆழ்ந்த தூக்கத்தை குறிக்கும். இந்த ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம். இதை வெறும் தூக்கம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இது ஒரு வகையான சிகிச்சை.

நமது உடலில் மூன்று விஷயங்கள் உள்ளன. 


1. உடல் - உடல் பற்றி நமக்கு நமக்கு ஏற்கனவே தெரியும். 
2. மனம் - மனம் என்பது கோபம், டென்ஷன், பயம், பிடித்திருகிறது, பிடிக்கவில்லை போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்வது. 
3. புத்தி - புத்தி என்பது நல்லது, கெட்டது, சரி, தவறு என்று முடிவெடுத்து அந்த விஷயங்களை யோசிப்பதற்கு புத்தி என்று பெயர். 


இவ்வாறு நம்மிடம் மூன்று விஷயங்கள் உள்ளன. அனாடமிக் செவிவழி தொடுசிகிச்சை என்ற புத்தகம் முழுமையாக படித்தவர்களுக்கு மற்றும் DVD பார்த்தவர்களுக்கு இந்த மூன்றையும் பிரித்து பார்க்கும் பக்குவம் இருக்கும். அந்த புத்தகத்தை முழுமமையாக படிக்காதவர்கள் உடனே அதை வாங்கிப் படித்துவிட்டு இந்த டுவா தூக்கம் பற்றிய செய்தியைப் படித்தல் நன்றாக புரியும். 

உடலுக்கு நோய் என்றால் என்ன என்று தெரியாது. நமது உடல், உடலிலுள்ள அனைத்து செல்களும் 24 மணிநேரமும் நம் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வேலையை மட்டுமே சித்து கொண்டிருக்கின்றன.

நமது புத்தியில் தான் நோய் இருக்கிறது. இந்த புத்தி மனதை கெடுத்து மாசுப்பட்ட மனம் உடலுக்குள் சென்று நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே நாம் நம்மை ஒரு நோயாளி என்று எண்ணும் போது அந்த நோய் பெரிதாகிறது. இதுவே நம்மை ஒரு ஆரோக்கியமான நபர் என்று என்னும்போது ஆரோக்கியம் பெரிதாகிறது. நம்மை பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமா அது உடலில் நடைபெறுகிறது.

உதாரணமாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ஒருவர் தனித்தனியாகக் காரை ஓட்டிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். அவர் காரை ஓட்டத் துவங்குவதற்கு முன்பே ‘500 கிலோ மீட்டர் 8 மணி நேரம் தொடர்ந்து காரை ஓட்டினால் நான் அந்த ஊருக்கு சென்ற உடன் களைப்படைந்து விடுவேன்’ என்றோ, நான் உடல் பலவீனப்பட்டு விடுவேன் என்றோ முதலிலேயே எண்ணினால் அப்படியே நடக்கும். அதாவது முதலிலேயே கற்பனை செய்து, முதலிலேயே முடிவெடுத்து தன் உடல் பலவீனமாகிவிடும் என்று புத்தியில் எண்ணுவதால் பிறகு அதன்படியே உடல் களைப்படைந்து விடுகிறது.

நான் எப்போதும் என் புத்தியை உடலில் வேலை செய்யவே விடமாட்டேன். நான் அவ்வாறு கார் ஓட்டும் பொழுது அப்படி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். அதனால் இரவு முழுவதும் கார் ஓட்டி முடித்த பிறகும் களைப்படைவதில்லை. ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. இது நமக்கு தெரியாது. எப்பொழுது நம் புத்தியை நிறுத்துகிறோமோ அப்பொழுது நமது உடலிலுள்ள நோய்கள் குணமாகிவிடும்.

நான் கடந்த 7 வருடங்களாக தினமும் காலை 10 மணிமுதல் மாலி 6 மணிவரை ஒவ்வொரு ஊராக சென்று மைக்கில் பேசி வருகிறேன். அனால் பொதுவாக ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், சில சாமியார்கள் 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் பேசிமுடித்த உடன் சோர்வு ஏற்ப்பட்டுவிடுகிறது. களைப்படைந்து விடுகிறார்கள். அவர்கள் நான் ஒரு மணிநேரம் பேசினேன் இரண்டு மணிநேரம் பேசினேன், மிகவும் களைப்படைந்துவிட்டேன் என்று கூறுகிறார்கள்.

அப்படி இருக்கும்போது என்னால் எப்படி தினமும் 7,8 மணிநேரம் தொடர்ந்து பேசமுடிகிறது என்றால் நான் புத்தியில் மணிநேரம் பேசினால் களைப்படைந்து விடுவேன் என்ற எண்ணத்தை வைத்துக்கொள்வது கிடையாது. 

ஆனால் அதற்காக நான் களைப்படைய மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வேலை திடீரென்று களைப்படையலாம். உடல் களைப்படையும் பொழுது அது உடலின் வேலை, உடலாகவே களைப்படையும் பொது அது ஓய்வு எடுத்துக்கொள்ளும் என்று எண்ணுவேன். ஆனால் நானாகவே என் உடல் களைப்படைந்து விடும் என்று முன்னரே முடிவு செய்ய மாட்டேன். எனவே தயவுசெய்து ஒரு விஷயத்தைப் புரிந்தது கொள்ளுங்கள். ஒரு மனிதனின் புத்தியை நிறுத்தி வைத்துவிட்டால் அந்த வினாடி முதலே உடலிலுள்ள நோய்கள் குணமடைய தொடங்குகின்றன. இதுதான் உண்மை.

மறைமலை அடிகளார் இதை அரிதுயில் என்று கூறுகிறார். எப்பொழுது ஒரு மனிதன் அரிதுயில் அதாவது தன்னை மறந்து இந்த சிந்தனையும் இன்றி தூங்குகின்றானோ அவன் குணமடைய ஆரம்பிக்கிறான். நாம் தினமும் தூங்குகிறோம். ஆனால் நோய் இருக்கிறது. ஏன்னென்றால் உண்மையில் நாம் தூங்கவே இல்லை. இதை எப்படிக் கண்டுப்பிடிப்பது? 

தூங்கச்செல்லும்போது இரவு கடைசியாக எதைப்பற்றி யோசித்துத் கொண்டு தூங்கினோமோ அந்த விஷயத்தை காலை விழித்தவுடன் நாம் யோசித்த்தோம் என்றால் நமது புத்தி உடலில் வேலை செய்திருக்கிறது என்று அர்த்தம். 

சில நேரங்களில் காலை எழுந்திருக்கும் பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? நம் பெயர் என்ன? என்ன வேலை செய்துக்கொண்டிருக்கிறோம்? என்று எல்லாம் மறந்த நிலையில் எழுந்திருப்போம். இந்த மாதிரி எப்பொழுது எழுந்த்திருக்கிறோமோ அதுதான் உண்மையான ஆழ்ந்த தூக்கம்.

சில குழந்தைகள் அந்த தூக்கத்தை தூங்குகின்றன. குழந்தைகள் எழுத்த உடன் அப்படியே அமர்ந்து இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது சுறுசுறுப்படையும். அந்த மாதிரியான குழந்தைகள் ஆழ்நிலை தூக்கத்திற்கு சென்று வந்திருக்கின்றன என்று அர்த்தம். 

சில குழந்தைகள் எழுத்த உடன் வேகமாக செயல்படும். அந்த குழந்தைகள் ஆழ்நிலை தூகன் கொள்ளவில்லை என்று அர்த்தம். இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.
இந்த அரிதுயில் என்ற (டுவா தூக்கம்) ஆழ்நிலைத் தூக்கத்திற்கு பலவிதமான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இருப்பதிலேயே உலகத்தில் மிகவும் சுலபமான ஒரு வலி முறையை நாம் கற்றுக்கொள்ள போகிறோம். 

இந்த ஆழ்நிலைத் தூக்கத்திற்கு நாம் எப்படி எல்லா வேண்டும் என்றால் இதற்கு இருவர் தேவை. அதாவது ஒரே ஒருவர் மட்டுமே தனியாக இருக்கும் பொது அவரது புத்தி உடலுக்குள் வேலை செய்துக் கொண்டே இருக்கும். இரு உயிர்கள் எப்பொழுது ஒன்று சேர்கிறதோ அதாவது இரு உயிர்கள் என்பது இரண்டு நபர்களின் நுண்ணுடல் (சூட்சும உடம்பு) காந்த சக்தி (Aura) ஒன்று சேர்கிறதோ அப்பொழுது இருவரது புத்தியும் நிறுத்தப்படுகிறது. இது தான் இரகசியம். எனவே இந்த சிகிச்சைக்கு இருவர் தேவை.



டுவா தூக்கம் தூங்க எண்ணுபவர்கள் அமைதியான சூழ்நிலையில் தரையில் ஒரு விரிப்பின் மீது அல்லது கட்டிலில் மல்லாந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். கால்கள் நீட்டியிருக்க வேண்டும். பின்னக்கூடாது. இரண்டு கைகளையும் தனித்தனியே பின்னாமல் தளர்வாக வைக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அவர் அமைதியாக படுத்திருக்க வேண்டும். சிகிச்சை அளிப்பவர் அவர் தலைக்கு மேலே ஒரு அடி தள்ளி அமைதியாக அமர்ந்துக் கொள்ள வேண்டும். அவர் தரையில் படுத்திருந்தால் தலைக்கு அருகில் அமர்ந்துக்கொள்ளலாம். சிகிச்சை பெறுபவர் கட்டிலில் படுத்திருந்தால் சிகிச்சை அளிப்பவர் நாற்காலியில் அமர்ந்துக்கொள்ளலாம். 

சிகிச்சை அளிப்பவர் அமைதியாக அமர்ந்துக்கொண்டு இரண்டு கைகளிலும் உள்ள பாத்து விரல்களையும் அதன் நுனிப்பகுதியைக் கொண்டு சிகிச்சை பெறுபவரின் தலையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அண்ணல் உலங்கை தலையில் படக்கூடாது. அதிகமாக அழுத்தக் கூடாது. அதற்காக பட்டும் படாமலும் வைக்கக் கூடாது. சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பவரின் பத்து விரல்களும் தம் தலையில் அழுத்தம் கொடுக்கின்றன என்ற உணர்வு இருக்குமாறு அழுத்தம் தர வேண்டும். ஒரு தேங்காயை கையில் பிடிக்கும் பொது எப்படி பத்து இடங்களில் பத்து விரல்களும் படியுமோ அதைப்போல சிகிச்சை பெறுபவரின் தலையில் பத்து இடங்களில் தன்னுடைய பத்து விரல்களால் அழுத்தம் தர வேண்டும். சிகிச்சை கொடுப்பவர் இந்த முயற்சியையும் செய்ய வேண்டாம். அதாவது பிராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து தன கைகளின் மூலமாக வாங்கி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட வேண்டியதில்லை. அவருக்கு பிராணக் ஹீலிங் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தியானம் செய்தால் நல்லது. பிராணக் ஹீலிங் தெரிந்தால் அதை செயல்படுத்தினால் நல்லது. அண்ணல் தேவையில்லை. சும்மா உட்காந்திருந்தால் போதுமானது.இந்த சிகிச்சையை கொடுப்பவர் சும்மா உட்காந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர் காத்து ஒலி வாங்கி (EAR PHONE) மூலம் பாடல் கேட்டுக் கொள்ளலாம். அது அவர் மனதிற்கு பிடித்த அமைதியான, மென்மையான பாடலாக இருக்க வேண்டும். அந்த அறையில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருக்க கூடாது. அலைபேசி சப்தம் எழுப்பாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஒரு சப்தமும் கேட்காமல் இருந்தால் மிகவும் நல்லது. முடிந்தவரை அழைப்புமணி (CALLING BELL), ஒலிப்பான் (HORN) போன்ற சப்தங்கள் எதுவும் இல்லாமல் அந்த அரை அமைதியாக இருந்தால் இந்த சிகிச்சையின் பலன் அதிகமாக கிடைக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சிகிச்சை கொடுப்பவர் கைவிரல்களை சற்று நகர்த்தி வேறு இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம். தலைபகுதிக்குள் மட்டுமே அந்த மாற்றம் இருக்கவேண்டும். முன்தலை, உச்சந்தலை, பின்தலை காதுகளுக்கு அருகில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி அழுத்தம் கொடுத்துவர வேண்டும். ஏனென்றால் நமது மூளையில் இந்த இடங்களில் தொடுகின்றோமோ அந்தந்த இடம் சம்பந்தப்பட்ட இடங்கள் தூங்க ஆரம்பிக்கின்றன. தலையில் உள்ள அனைத்து இடங்களையும், தொட்டுவிட்டால் உடலில்; உள்ள அனைத்து உறுப்புகளும் தூங்கி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும். சிகிச்சை அளிப்பவர் கைகளில் வலி ஏற்பட்டால் ஒரு கையின் ஐந்து விரல்களை மட்டும் தலயில் வைத்துக்கொண்டு மற்றொரு கையின் ஐந்து விரல்களுக்கு ஓய்வு அளித்த்க்கொள்ளலாம்.இப்படி முதல் முறை சிகிச்சை கொடுக்கும் பொது குறைந்தது 4 மணிநேரம் தலையில் விரல்களால் அழுத்தம் தரவேண்டும்.

நீங்கள் யாருக்காவது இந்த சிகிச்சையை செய்து பாருங்கள் முதல் அரைமணி நேரத்திலேயே உங்களால் சிகிச்சை அளிக்கப்படும் நபர் இதுவரை இல்லாத அளவுக்கு அரை மணிநேரம் சென்றவுடன் வித்தியாசமான முறையில் அதிக அளவில் குறட்டை விட்டு தன்னை மறந்து தூங்கிவிடுவார். படுத்திருப்பவருக்கு நான் யார்? இந்த ஊர்? போன்ற எதுவுமே தெரியாது. ஒருவேளை 4 மணி நேரத்திற்குப் பிகு முக்கியமான வேலை இருக்கிறது அல்லது விமான நிலையம் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தால் கூட அனைத்தையும் மறந்து அவர் தூங்கிவிடுவார்.அவர் அவ்வாறு தூங்குவதை நாம் உணர முடியும் என்றாலும் நாம் விரல்களால் அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் அழுத்தம் கொடுக்கிறோமோ அவ்வளவு ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வார். எனவே முதல்முறை இந்தப் பயிற்சி சியும் பொது தயவுசெய்து குறைந்தது 4 மணி நேரத்திற்கு கைகளால் அழுத்தம் தர வேண்டும். அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை பெற்றுக் கொள்பவர் தேவைக்கு தகுந்தார் போல் உணவருந்திவிட்டு, தாகம் இருப்பின் புதிய அளவு நீர் அருந்திவிட்டு, இயற்க்கை உபாதைகளை நிறைவு செய்து விட்டு இந்த சிகிச்சையில் பங்கேற்க வேண்டும். சிகிச்சை அளிப்பவரும் அப்படியே. உனக்கு, நீர் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக்கொண்டு புற வேலைகளை நிறைவு செய்து விட்டு பின் 4 மணிநேரம் அவருக்கு சிகிச்சை அளிக்க தயாராக வேண்டும். ஏனென்றால் ஒரு மணிநேரம் கழித்து சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வோ, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வோ, பசி உணர்வோ ஏற்படும் பொழுது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியகதாகிவிடும். எனவே சிகிச்சை தருபவர் சிகிச்சை பெற்று கொள்பவர் இருவருமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றொரு முக்கியமான விஷயம், சிகிச்சை அளிப்பவர் இரண்டு மூன்று மூன்று நாட்கள் தூக்கமின்றி இருக்கும் நிலையிலோ, உடல் நிலை பாதிக்கப் பட்ட நிலையிலோ சிகிச்சை அளிக்கக் கூடாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மிகவும் நோய்வாய்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 

வீட்டில் மிகபெரிய சோகமான நிகழ்ச்சி. நெருங்கிய உறவுகள் யாரேனும் தவறியிருக்கலாம். அத்தகைய சோகமான சூழ்நிலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சை அளிக்கக்கூடாது. 

சிகிச்சை அளிப்பவர் இளநீர், தண்ணீர், பழச்சாரு போன்றவற்றை அருகில் வைத்துக் கொண்டு தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.சிகிச்சை பெற்றுக்கொள்பவருக்கு இது தேவைப்படாது. ஏனெனில் ஆழ்நிலைத் தூக்கத்திற்கு சென்று விடுவதால் அவருக்கு இது தேவைப்படாது. 

வாசியோகம் தெரிந்தவர்கள், பிராணாயாமம் தெரிந்தவர்கள் சிகிச்சை அளிக்கும் போது வாசியோகம் அல்லது பிராணாயாமம் சிதுக்கொண்டே சிகிச்சை அளிக்கும் போது மெகா அற்புதமான பலன் கிடைக்கும். பிராண ஹீலின் தெரிந்தவர்கள் பிராண சக்தியை தன் உடல் மூலமாக பெற்று தை சிகிச்சை பெறுபவரின் உடலில் அனுப்பும் போது நல்ல பயன் கிடைக்கும். தெரியாதவர்கள் அதைப்பற்றி கவலை பட வேண்டாம். சும்மா அழுத்தம் கொடுத்தால் போதுமானது. இப்படி செய்தால் அரைமணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை பெறுபவர் தூங்கிவிடுவார். சிகிச்சை அளிப்பவர் அமைதியாக் அமர்ந்து 4 மணி நேரம் சிகிச்சை கொடுத்தபின் மெதுவாக கையை எடுத்துவிட்டு தாங்களும் உறங்க செல்லவோ அல்லது வேறு வேளைகளிலோ ஈடுபடலாம். தூங்கிக்கொண்டு இருப்பார் அதற்கு பின் பல மணிநேரம் கழித்துதான் எழுவார். இதுவே தொடர்ந்து 48 மணிநேரம் தொடர்ந்து சிகிச்சை அகிக்கும் பட்சத்தில் 48 மணிநேரம் தூக்கத்தில் தான் இருப்பார். ஆனால் அப்படி சியைக் கூடாது. ஏனென்றால் 8 மணிநேரம் அல்லது 10 மணிநேரத்திற்குப் பிறகு உடலுக்கு தாகம், உணவு தேவை ஆகியவை ஏற்படும். மலம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். இந்த விஷவங்காலி சியாமல் அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது. பலன் குறைந்து விடும். அதிகபட்சம் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை சிகிச்சை அளித்தால் போதும். கைகளை எடுத்தவுடன் ஒருசிலர் அரைமணிநேரத்தில் எழுந்து விடுவார்கள், ஒருசிலர் 10 மணிநேரம் கூட தூங்குவார்கள். விட்டுவிடுங்கள். அது ஒவ்வொருவரின் உடலின் தேவையை பொறுத்தது. சிகிச்சையை குறைந்தபட்சம் 4 மணிநேரம் கொடுக்க வேண்டும். அடுத்தநாள் 4 மணிநேரம் சிகிச்சை அளித்தால் மிகவும் நல்லது. இல்லையென்றால் 1 மணிநேரம் சிகிச்சை அளிக்கலாம். குறைந்தது 1 மணிநேரம் சிகிச்சை அளிப்பதே பலன் அளிக்கும். யாராவது மிகபெரிய நோய் உள்ளவர்கள், உலக வைத்தியத்தால் குணப்படுத்த முடியாது என்று முடிவு செய்யப்பட வியாதிகள் அனைத்தும் இந்த முறையில் குணமடையலாம். 

தினசரி 4 மணிநேரம் இதற்காக ஒதுக்கினால் போதும். ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். தினசரி மற்ற நேரங்களில் TV, ஏதேனும் ஒன்றை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த வண்ணம் இருப்பதை போல் ஒருவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம். 

குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறி அதற்கு பல இலட்சம் அல்லது கோடி ரூபாய் செலவு செய்து மருத்துவம் பார்ப்பதை விட இந்த மாதிரி ஒருவரை சிகிச்சைக்கு மாத சம்பளத்திற்கு நியமித்துக் கொள்வது நல்ல பயன் அளிக்கும். ஒருவருக்கு வேலை கொடுத்த மதிரும் ஆயிற்று. நம் வியாதி குணமடைந்த மாதிரியும் ஆயிற்று. 

வீட்டில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி இந்த சிகிச்சையை கொடுத்துக்கொள்ளலாம். ஒருவர் தலையில் இன்னொருவர் கைவைக்கும்போது இரண்டு பேருடைய ஆராக்களும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு உயிரும் கலக்கிறது. ஈருயிர் சேர்ந்து ஆழ்நிலைத் தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதற்குப் பெயர் டுவா தூக்கம். 

இந்த சிகிச்சையை மலேசியாவில் உள்ள முத்தம்மாள் என்கிற பெண்ணுக்கு அவரது தாத்தா கற்றுக்கொடுத்திருகிறார். அவர் ஒரு மலேசியா வாழ் தமிழர். இந்த சிகிச்சை அப்பொழுது யாருமே கண்டுக்கொள்ளவில்லை. இதுவரை யாருமே பயிற்சி செய்யவில்லை. ஆனால் இப்போது அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். நான் எனக்கும் மற்றவர்க்கும் இதை செயல்படுத்தி பார்த்தேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதனால் தற்போது இதைப்பற்றி எல்லா வகுப்புகளிலும் பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த ஒரே ஒரு சிகிச்சை மட்டும் தெரிந்துக்கொண்டால் மனது உலகை ஆரோக்கியப்படுத்தி விடலாம். இதைதான் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறினார்களோ என்னவோ? வசூல் ராஜா M.B.B.S திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்று இருக்கிறது. 

இப்பொழுது யோசித்துப் பார்கிறேன், குழந்தைக்கு நோய் வந்தால் மடியில் படுக்க வைத்து அதன் தலையை தடவி கொடுக்கிறோம். இன்னொருவர் அருகில் இருந்தால் போதும். ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவர் அருகில் ஆதரவாக இருந்தாலே போதும் என்பது உண்மை. அனால் இப்பொழுது அனைவரும் அனாதைகளாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாகரீக வாழ்கையில் பெரும்பாலானோர் கூட்டு கும்பமாக இல்லை. ஏன் கணவன் மனைவிகூட வாரம் ஒரு நாள் மாதம் ஒரு நாள் சந்தித்துக் கொள்கிறார்கள். வேலை அல்லது தொழில்ரீதியான காரணங்களால் தனித்தனியே வாழ்கின்றனர். இதனால் இந்த தனிமையான வாழ்க்கை முறையே அவர்களுக்கு நோயைக் கொண்டுவருகிறது. எப்பொழுதும் இருவர் ஒன்று சேர்ந்து வாழும் போது நம் மனதுக்கும் பிடித்தவர்கள் உடன் இருக்கும்போது மனது நோய்கள் குணமடைகிறது. பல கணவன் மனைவிமார்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் போது அன்பாக அமைதியாக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறோம். அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் டுவா தூக்கம் அங்கே நடைபெறுகிறது. எனவே இனி தினமும் டுவா தூக்கம் கொள்வோம். நமது உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ்வோம். எனவே இதை யார் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். எனவே இனிமேல் யாருடைய நோயையாவது குணப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் எதைபற்றியும் கவலைபடாமல் உங்களுக்கு எந்தவித வர்மா புள்ளியோ, பிராண ஹீலிங்க்கோ, முத்ரா, ரெய்க்கி, நியுரோ தெரபி போன்ற எதுவும் தெரிந்திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் மீது உணகளுக்கு அக்கறை இருக்கிறதோ, அவர்களை படுக்க வைத்து அவர்கள் தலையில் 10 மணிநேரம் கையை வையுங்கள். அவர்கள் ஆரோக்கியம் அடைவார்கள். நான் இத சிகிச்சையை பலருக்கும் கொடுத்து வருகிறேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. சில நபர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது நாம் 5 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறேன். நான் ஒருவனே அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாது. எனவேதான் நான் இதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். இந்த முறையை நான் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் தங்கள் கையைக் கொண்டு இந்த சிகிச்சையை அளிக்கலாம். இதற்க்கு நான் தேவை இல்லை. எனவே இதை புரிந்துக்கொண்டு மற்றவர்கல்லும் கற்றுக்கொடுங்கள். மற்றவர்களையும் தெளிவுப்படுத்துங்கள். 

ஒரு விஷயம் பாருங்கள்! இதை கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்க ஒரு அரைமணி நேரம் ஆகுமா? உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லிதாருங்கள். கேட்கிறார்களோ, இல்லையோ உங்களுக்கு தெரிந்த இந்த சிகிச்சையை மற்றவர்கல்லும் சொல்லி கொடுங்கள். ஒருவேளை இந்த சிகிச்சையை அவர்கள் பயன்படுத்தி நன்மை அடைந்தால் உங்களை தேடி வந்து உங்களை வாழ்த்திவிட்டு செல்வார்கள் பாருங்கள். அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது. 

சத்தியமாக நான் ஒன்று கூறுகிறேன். இப்போது நான் இறந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியாக சந்தோஷமாக நிம்மதியாக இறப்பேன். ஏனென்றால் என் மூலமாக இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் ஆரோக்கியமடையும் கலையை கற்றுக்கொண்டனர் என்று எண்ணும் போது உயிருக்கு மேலும் மெருகேறுகிறது. நாம் வாழ்ந்த இந்த வாழ்விற்கு அர்த்தம் கிடைக்கிறது. நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம், என்று இல்லாமல் எல்லோருக்கும் நன்மை அளிக்கும் விதமாக ஏதாவது செயல் புரிய வேண்டும். இப்பொழுது முதல் ஒரு சங்கல்ப்பம் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த சிகிச்சையை எனது நண்பர்கள், உறவினர்கள், எனக்கு தெறிந்த மற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுப்பேன். பேருந்து பயணம் அல்லது வழிப்பயணம் செய்யும் போதோ எதுவாக இருந்தாலும் நான் சந்திக்கும் நபர்களுக்கு ஒரு அரைமணிநேரம் இதைப்பற்றி சொல்லிக்கொடுப்பேன். இதன் மூலமாக எனக்கு புண்ணியம் கிடைகிறது என்று எண்ணி கொள்வேன். இந்த டுவா தூக்கம் மூலமாக, அரிதுயில் மூலமாகா ஆழ்நிலைத் தூக்கம் மூலமாக நம் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)

For More info visit:


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
     Vineeth.S
+91 98409 80224  
+91 97509 56398