நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல..!

நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல..! 

இது மருத்துவத்தின் ஒரு வியாபார தந்திரம் மட்டுமே...?



மனிதனை இயற்கையின் ஓர் ஒப்பற்ற படைப்பு எனலாம். மனித உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தன்மையும், நோய்களைத் தானே குணமாக்கிக் கொள்ளும் சிறப்பும் கொண்டது. நம் உடலில் உள்ள ஓர் அற்புதமான ஜீவசக்தி எல்லாச் செயல்பாடுகளையும் இம்மி தவறாத கணிப்புடன் இயங்கச் செய்து உடலை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த ஜீவசக்தி நம் உடலின் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயை எதிர்த்துப் போரிடும் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்போம்.

நமது கண்ணில் தூசி விழுந்து விடுகிறது. உடனே கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்து அந்த தூசி வெளியேறி விடுகிறது. அளவுக்கு அதிகமாகவோ, உடலுக்குத் தேவையற்ற ஒன்றையோ விழுங்கி விடுகிறோம். உடலின் பாதுகாவலனான இந்த ஜீவசக்தி உடனே செயல்பட்டு குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்கி, தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது.

தவறான உணவு முறைகளாலும், பழக்க வழக்கங்களினாலும் இந்த ஜீவசக்தி செயலிழந்து போகும் தன்மையுடையது. உடலின் ஒரே பாதுகாப்பு அரண் செயலிழந்து விடுவதால் பல நோய்கள் உடலில் குடிபுக ஆரம்பிக்கின்றன. ஆகவே இந்த ஜீவசக்தியின் வலு விழந்த தன்மையே நோயாகிறது. இதற்கு மூலகாரணம் உடலில் இருந்து வெளியேறாது தேங்கிக்கிடக்கும் கழிவுப் பொருட்களும் அதனால் உருவாகிய நச்சுப் பொருட்களுமாகும்.

இந்தத் தேவையற்ற கழிவுகளின் தன்மை யைப் பொறுத்தும், அவைதேங்கி நிற்கும் உறுப்பைப் பொறுத்தும் நோயின் தன்மை மாறுகிறது. நச்சுப் பொருட்கள் முழங்கால் கணுக்கால் போன்ற இடங்களில் தேங்கினால் அது கீல்வாதம் எனப்படுகிறது. அடிவயிற்றுப் பகுதியில் கழிவு நீர் அதிகமாகச் சேருமாயின்அது மகோதரம் என்னும் பெருவயிறு நோயாகிறது. நுரையீரலில் சளி மற்றும் நீர் அதிகமானால், அது இருமலாகவோ, இளைப்பு நோயாகவோ உருவாகிறது. இவ்வாறு உடலின் பல பாகங்களில் தேங்கிக்கிடக்கும் கழிவு மற்றும் நச்சுப் பொருட் களை வெளியேற்றி விட்டால், ஜீவசக்தி வலுப் பெற்று உடல் நலம் பெறுகிறது.

நோய்க்குக் காரணம் உடலில் தேங்கி யிருக்கும் தேவையற்ற கழிவுகளும் நச்சுப் பொருளுமே காரணமென்றால் நுண்கிருமிகளால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் அவற்றை அழித்தால்தான் நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர் கூறுகின்றனரே. இது எவ்வாறு சாத்தியமாகும்? இதுவொரு நியாயமான சந்தேகம். எத்தனையோ வகையான நுண்கிருமிகள் (வைரஸ்) நம் உடலுக்கு உள்ளும் வெளியிலும் காற்றிலும் நீரிலும், ஏன் இந்தப் பூமி எங்கும் நிறைந்திருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கிருமிகள்தான். காற்று மண்டலம் முழுவதும் நுண்கிருமிகள்தான். இது முற்றிலும் உண்மைதான். ஆனால் இவைகள் தான் நோய்களுக்குக் காரணம் என்று சொல்வதுதான் தவறு. அது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு 21,000 தடவைகள் நுண்கிருமிகள் உள்ள காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் நாம் எல்லோரும் அல்லவா நோய்வாய்ப்பட வேண்டும்? இல்லையே. அது ஏன்? ஏனெனில் நுண்கிருமிகள் நோய்களை உண்டாக்கும் காரணிகள் அல்ல. அதுமட்டுமல்ல, பல மருத்துவ நிபுணர்கள் தங்களின் ஆய்வின் மூலம் நோய்களுக்கு மூலகாரணம் நுண்கிருமிகள் என்பது தவறு என்று நிரூபித்தும் உள்ளனர். டாக்டர். வாட்கின்ஸ் என்பவர் இளைப்பு நோய் (டி.பி.) பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இரத்தத்தின் மூலம் நோய் அறிதல் என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார். அதில் நோய் தோன்றுவதற்கு முன் நுண்கிருமிகள் காணப்படும் என்ற கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்று அடித்துக் கூறுகிறார். ஜான்ஸம் ரேசர் என்பவர் கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். இவர் நுண்கிருமிகள் நோய்களுக்குக் காரணமா? என்ற ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் நோய் தோன்றிய பின்புதான் கிருமிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

1941ல் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹண்டர் என்பவரும் மற்றும் சில நிபுணர்களும் சேர்ந்து நுண்கிருமிகள் நோய்க்குக் காரணம் அல்ல என்பதை நேரடியான சோதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர். டிப்தீரியா என்பது தொண்டையைப் பாதித்து, அதன்பின் உயிரையே குடிக்கும் ஒரு கொடிய நோய். இந்த நோயில் காணப்படும் கிருமிகளை ஹிண்டர் தனிமைப்படுத்தி வளர்த்தார். இலட்சக்கணக்கான இந்தக் கிருமி நீர், பால், உணவு ஆகியவற்றில் கலந்து ஆரோக்கியமான பலருக்கு உண்ணக் கொடுத்து வந்தார். ஆனால் ஒருவர்கூட டிப்தீரியா நோயினால் பாதிக்கப்படவில்லை. அவர் செய்த மற்றொரு ஆராய்ச்சி இன்னும் புதுமையானது. இதே கிருமிகளைச் சிலருடைய உள்நாக்கு, தொண்டை மற்றும் மூக்கின் உட்பாகம் ஆகியவற்றில் நேராகவே தடவி விட்டார். இப்போதும் எவரும் நோயால் பாதிக்கப்பட வில்லை. நுண்கிருமிகளே நோய்க்கான காரணமென்றால் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவராவது பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

இன்னொரு ஆய்வு, இதனை நடத்தியவர் வியன்னா பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பாடின்காஃபர். இவர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நுண்கிருமிகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை ஊற்றினார், பரிசோதனைச் சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட இலட்சக்கணக்கான காலராக் கிருமிகளை அந்த நீரில் கலந்தார். மாணவர்கள் எல்லோரும் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நீர் முழுவதையும் மடக்மடக்கென குடித்து விட்டார். பல நாட்கள் கடந்த நிலையிலும் அவர் காலராவால் பாதிக்கப்படவில்லை.

இந்தச் சோதனைகள் மூலம் நமக்கு விளங்கு வது என்ன? நுண்கிருமிகள் ஒரு போதும் நோய்கள் உண்டாகக் காரணமாக அமைவ தில்லை. ஓர் ஆரோக்கியமான உடலினுள் அவை வாழ முடிவதில்லை. ஆனால், கழிவு மற்றும் நச்சுப் பொருட்கள் நிறைந்த ஜீவசக்தி வலு இழந்துள்ள - உடம்பினுள் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, நோய் உண்டாக அடிப்படையான காரணம் உடலினுள் சேர்ந்துள்ள கழிவு மற்றும் நச்சுப் பொருட்களின் தேக்கமே. இதனால் உண்டான விளைவுதான் நுண்கிருமிகள். எனவே, ஒரு நோயைக் குணமாக்க வேண்டுமென்றால், உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றி ஜீவசக்தியை வலுவுள்ளதாக்கவேண்டும். 

இதை விட்டுவிட்டு அந்தக் கிருமிகளைக் கொல்லக்கூடிய மருந்துகளை விழுங்குவதால் உடலில் மேலும் ரசாய கழிவுகள் தேங்குகின்றன. இதனால் மற்றும் ஒரு புதிய முறையில் உடல் [உயிர்-ஜீவசக்தி] அந்த கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது. இப்போது உடலில் முன்பைவிட சற்று கூடுதலான தொந்தரவு தோன்றுகிறது. இப்போதும் பல டெஸ்ட்கள் எடுத்து பார்த்துவிட்டு இதற்கும் ஒரு கிருமிதான் காரணம் ஆனால் அதற்கு வேறு ஒரு புதிய பெயர் என்று மருத்துவம் இன்று பல புதிய நோய்களை உருவாக்கி வருவது வேதனையான விஷயம். 

“ஒரு நோயை குணபடுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் வைத்தியத்தின் மூலம் மேலும் மேலும் மோசமாகிவிடாதீர்கள்” என்பது ஆங்கில மருத்துவத்தின் தந்தை டாக்டர்.ஹிப்போக்ரேட்டிஸ் மருத்துவர்களுக்கு கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால் ஆங்கில மருத்துவமோ தங்கள் செயல்முறையில் அறியாமலேயே பெரும் தவறிழைத்து கொண்டிருகிறது.

இயற்கை மருத்துவ முறைகளே ஜீவசக்தியை வலுப்பெற செய்யும் என்பதனை நாம் புரியாதவரை இது போன்ற ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

இதற்கு எடுத்துகாட்டு, இன்று டிவி ஐ போட்டாலே சாதாரண பேஸ்ட் முதல்கொண்டு சீப்பு, சோப்பு, பவுடர், ஷாம்பூ, மற்றும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களை விற்க கூட இந்த கிருமிகள் மிகவும் பேருதவியாக உள்ளது. இவர்களுக்கு முதலீடே பணம் அல்ல கிருமிகள் தான். இன்று சாதாரண பொருட்களை விற்க கூட மருத்துவரின் வெள்ளை கோட்டு இல்லாமல் ஒரு விளம்பரமும் வருவதில்லை. என்று நாம் கிருமிகள் என்பது வெறும் கட்டுக்கதை என்பதனை புரிகின்றோமோ அன்றுதான் நமக்கு உண்மையான உடலின் இயக்கத்தில் நம்பிக்கை வரும். அன்றே உடல் தன்னை தானே குணப்படுத்தும் என்பதில் நம்பிக்கை வரும். அன்று தான் இது போன்ற ஏமாற்று வேலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். ஆனால் அன்று நம்மால் சும்மா இருக்க முடியாது. மற்றவர்களுக்கும் இதனை புரியவைக்க முயற்சிப்போம். அதை தான் நான் செய்துகொண்டுள்ளேன். புரிந்தால் நீங்களும் நிச்சயம் இதைதான் செய்வீர்கள்.

இவை மற்றும் அல்ல, சில வருடங்கள் முன்பு வரை மருத்துவர்கள் உபயோகித்த syringe மற்றும் ஊசிகள் சுடும் நீரில் போட்டு எடுத்து மீண்டும் உபயோகிக்கும் முறையை கடைபிடித்தார்கள் அப்போது எந்த நோயும் பரவியதாக தெரியவில்லை. இன்று disposable syringes தான் பயன்படுத்தபடுகிறது இதனை மாற்ற இவர்கள் கூறியது ஊசிகள் மூலம் நோய் பரவும் என்று.. ஆனால் இன்றோ அப்படி நோய் பரவாது என்றும் இதே மருத்துவம்தான் கூறுகிறது. இதற்கு இடையில் ஒரு வியாபாரம் நடந்து உள்ளது. பலருக்கும் ஒரே syringe மற்றும் ஊசிகள் பயன்படுத்துவதால் லாபம் வருமா அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பயன்படுத்தினால் லாபம் வருமா...? இந்த வியாபாரத்தில் கூட்டு சேர்ந்த வெளிநாட்டு மருந்து கம்பெனி DISPOVAN, இவர்கள்தான் இன்று அதிக அளவில் disposable syringes தயாரிக்கும் கம்பெனி. மருத்துவம் எப்படி வியாபாரமாக மாறிவருகிறது பாருங்கள். 

இதற்கு மற்றும் ஒரு எடுத்துகாட்டு, சில வருடங்கள் முன்பு வரை ஷேவ் செய்ய உபயோகித்து வந்த Blades இன்று எப்படி மாறி உள்ளது என்று பாருங்கள். நமக்கே தெரியும் சில வருடங்கள் முன்பு வரை ஒரு கத்தி மட்டுமே இருக்கும், அதனை சிறிய கல்லை கொண்டு தீட்டி அதில்தான் அனைவருக்கும் ஷேவ் செய்வார்கள். அப்போது நோய்கள் எவ்வளவு இருந்தது என்றும் இன்றோ அவை எப்படி பெருத்து உள்ளது என்றும் உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆனால் இன்றோ நாம் உபயோகிக்கும் Single Use Razors தான் தங்கள் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இது வர காரணமாக சொல்லப்பட்டதும் இதே கிருமிகள் தான். ஆனால் இன்று மருத்துவம் சொல்கிறது Bladeகள் மூலம் எல்லாம் கிருமிகள் பரவாது என்று. ஆனால் இன்னும் நம் பயம் மாறவில்லை. இடையில் லாபம் அடைந்ததும் ஒரு வெளிநாட்டு கம்பெனி தான் அது இந்தியாவில் இருந்த அனைத்து கம்பெனிகளையும் ஒழித்துவிட்டு இன்று முதல் இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் Gillette. 

இவற்றை எல்லாம் பார்த்தால் எந்த ஒரு வெளிநாட்டு பொருளையும் இந்தியாவில் விற்க மருத்துவத்துறை மிக பெரிய பக்கபலமாக இருப்பது கண்கூடாக நிரூபிக்கபடுகிறது. இது போல் மக்கள் கண்களில் இருந்து மறைக்கப்படும் விஷயங்கள் பல பல உள்ளன அவற்றை எல்லாம் மக்கள் கண் முன் வெளிச்சம் போட்டு காட்டுவதே என்ன கடமை.

நன்றி - அக்குஹீலர் கார்த்திகேயன்

மேலும் படிக்க 

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 1 - நீரிழிவு ஒரு அறிமுகம்
http://reghahealthcare.blogspot.com/2010/12/diabetes.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 2 - கிளைகோஜன் மற்றும் அட்ரினல் சுரப்பியின் பங்கு
http://reghahealthcare.blogspot.com/2014/12/2.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 3 - High Sugar(ஹை சுகர்), Low Sugar (லோ சுகர்) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/3.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 4 - Sugar Free (சுகர் ப்ரீ) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/4.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 5 - அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம் 
http://reghahealthcare.blogspot.com/2014/12/5.html

இனிப்பு சிகிச்சை (இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்)
http://reghahealthcare.blogspot.in/2014/12/blog-post.html

For more info visit:


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
     Vineeth.S
+91 98409 80224  
+91 97509 56398 

டுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்கம்)


டுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்கம்) 




டுவா என்றால் மலாய் மொழியில் (மலேசியாவில் உள்ள வழக்கு மொழியில்) இரண்டு என்று அர்த்தம். சாதாரணமாக நாம் ஒரு தூக்கம் மட்டுமே தூங்குகிறோம். இது இரட்டை தூக்கம்(Double Sleep). இது ஆழ்ந்த தூக்கத்தை குறிக்கும். இந்த ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம். இதை வெறும் தூக்கம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இது ஒரு வகையான சிகிச்சை.

நமது உடலில் மூன்று விஷயங்கள் உள்ளன. 


1. உடல் - உடல் பற்றி நமக்கு நமக்கு ஏற்கனவே தெரியும். 
2. மனம் - மனம் என்பது கோபம், டென்ஷன், பயம், பிடித்திருகிறது, பிடிக்கவில்லை போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்வது. 
3. புத்தி - புத்தி என்பது நல்லது, கெட்டது, சரி, தவறு என்று முடிவெடுத்து அந்த விஷயங்களை யோசிப்பதற்கு புத்தி என்று பெயர். 


இவ்வாறு நம்மிடம் மூன்று விஷயங்கள் உள்ளன. அனாடமிக் செவிவழி தொடுசிகிச்சை என்ற புத்தகம் முழுமையாக படித்தவர்களுக்கு மற்றும் DVD பார்த்தவர்களுக்கு இந்த மூன்றையும் பிரித்து பார்க்கும் பக்குவம் இருக்கும். அந்த புத்தகத்தை முழுமமையாக படிக்காதவர்கள் உடனே அதை வாங்கிப் படித்துவிட்டு இந்த டுவா தூக்கம் பற்றிய செய்தியைப் படித்தல் நன்றாக புரியும். 

உடலுக்கு நோய் என்றால் என்ன என்று தெரியாது. நமது உடல், உடலிலுள்ள அனைத்து செல்களும் 24 மணிநேரமும் நம் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வேலையை மட்டுமே சித்து கொண்டிருக்கின்றன.

நமது புத்தியில் தான் நோய் இருக்கிறது. இந்த புத்தி மனதை கெடுத்து மாசுப்பட்ட மனம் உடலுக்குள் சென்று நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே நாம் நம்மை ஒரு நோயாளி என்று எண்ணும் போது அந்த நோய் பெரிதாகிறது. இதுவே நம்மை ஒரு ஆரோக்கியமான நபர் என்று என்னும்போது ஆரோக்கியம் பெரிதாகிறது. நம்மை பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமா அது உடலில் நடைபெறுகிறது.

உதாரணமாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ஒருவர் தனித்தனியாகக் காரை ஓட்டிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். அவர் காரை ஓட்டத் துவங்குவதற்கு முன்பே ‘500 கிலோ மீட்டர் 8 மணி நேரம் தொடர்ந்து காரை ஓட்டினால் நான் அந்த ஊருக்கு சென்ற உடன் களைப்படைந்து விடுவேன்’ என்றோ, நான் உடல் பலவீனப்பட்டு விடுவேன் என்றோ முதலிலேயே எண்ணினால் அப்படியே நடக்கும். அதாவது முதலிலேயே கற்பனை செய்து, முதலிலேயே முடிவெடுத்து தன் உடல் பலவீனமாகிவிடும் என்று புத்தியில் எண்ணுவதால் பிறகு அதன்படியே உடல் களைப்படைந்து விடுகிறது.

நான் எப்போதும் என் புத்தியை உடலில் வேலை செய்யவே விடமாட்டேன். நான் அவ்வாறு கார் ஓட்டும் பொழுது அப்படி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். அதனால் இரவு முழுவதும் கார் ஓட்டி முடித்த பிறகும் களைப்படைவதில்லை. ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. இது நமக்கு தெரியாது. எப்பொழுது நம் புத்தியை நிறுத்துகிறோமோ அப்பொழுது நமது உடலிலுள்ள நோய்கள் குணமாகிவிடும்.

நான் கடந்த 7 வருடங்களாக தினமும் காலை 10 மணிமுதல் மாலி 6 மணிவரை ஒவ்வொரு ஊராக சென்று மைக்கில் பேசி வருகிறேன். அனால் பொதுவாக ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், சில சாமியார்கள் 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் பேசிமுடித்த உடன் சோர்வு ஏற்ப்பட்டுவிடுகிறது. களைப்படைந்து விடுகிறார்கள். அவர்கள் நான் ஒரு மணிநேரம் பேசினேன் இரண்டு மணிநேரம் பேசினேன், மிகவும் களைப்படைந்துவிட்டேன் என்று கூறுகிறார்கள்.

அப்படி இருக்கும்போது என்னால் எப்படி தினமும் 7,8 மணிநேரம் தொடர்ந்து பேசமுடிகிறது என்றால் நான் புத்தியில் மணிநேரம் பேசினால் களைப்படைந்து விடுவேன் என்ற எண்ணத்தை வைத்துக்கொள்வது கிடையாது. 

ஆனால் அதற்காக நான் களைப்படைய மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வேலை திடீரென்று களைப்படையலாம். உடல் களைப்படையும் பொழுது அது உடலின் வேலை, உடலாகவே களைப்படையும் பொது அது ஓய்வு எடுத்துக்கொள்ளும் என்று எண்ணுவேன். ஆனால் நானாகவே என் உடல் களைப்படைந்து விடும் என்று முன்னரே முடிவு செய்ய மாட்டேன். எனவே தயவுசெய்து ஒரு விஷயத்தைப் புரிந்தது கொள்ளுங்கள். ஒரு மனிதனின் புத்தியை நிறுத்தி வைத்துவிட்டால் அந்த வினாடி முதலே உடலிலுள்ள நோய்கள் குணமடைய தொடங்குகின்றன. இதுதான் உண்மை.

மறைமலை அடிகளார் இதை அரிதுயில் என்று கூறுகிறார். எப்பொழுது ஒரு மனிதன் அரிதுயில் அதாவது தன்னை மறந்து இந்த சிந்தனையும் இன்றி தூங்குகின்றானோ அவன் குணமடைய ஆரம்பிக்கிறான். நாம் தினமும் தூங்குகிறோம். ஆனால் நோய் இருக்கிறது. ஏன்னென்றால் உண்மையில் நாம் தூங்கவே இல்லை. இதை எப்படிக் கண்டுப்பிடிப்பது? 

தூங்கச்செல்லும்போது இரவு கடைசியாக எதைப்பற்றி யோசித்துத் கொண்டு தூங்கினோமோ அந்த விஷயத்தை காலை விழித்தவுடன் நாம் யோசித்த்தோம் என்றால் நமது புத்தி உடலில் வேலை செய்திருக்கிறது என்று அர்த்தம். 

சில நேரங்களில் காலை எழுந்திருக்கும் பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? நம் பெயர் என்ன? என்ன வேலை செய்துக்கொண்டிருக்கிறோம்? என்று எல்லாம் மறந்த நிலையில் எழுந்திருப்போம். இந்த மாதிரி எப்பொழுது எழுந்த்திருக்கிறோமோ அதுதான் உண்மையான ஆழ்ந்த தூக்கம்.

சில குழந்தைகள் அந்த தூக்கத்தை தூங்குகின்றன. குழந்தைகள் எழுத்த உடன் அப்படியே அமர்ந்து இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது சுறுசுறுப்படையும். அந்த மாதிரியான குழந்தைகள் ஆழ்நிலை தூக்கத்திற்கு சென்று வந்திருக்கின்றன என்று அர்த்தம். 

சில குழந்தைகள் எழுத்த உடன் வேகமாக செயல்படும். அந்த குழந்தைகள் ஆழ்நிலை தூகன் கொள்ளவில்லை என்று அர்த்தம். இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.
இந்த அரிதுயில் என்ற (டுவா தூக்கம்) ஆழ்நிலைத் தூக்கத்திற்கு பலவிதமான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இருப்பதிலேயே உலகத்தில் மிகவும் சுலபமான ஒரு வலி முறையை நாம் கற்றுக்கொள்ள போகிறோம். 

இந்த ஆழ்நிலைத் தூக்கத்திற்கு நாம் எப்படி எல்லா வேண்டும் என்றால் இதற்கு இருவர் தேவை. அதாவது ஒரே ஒருவர் மட்டுமே தனியாக இருக்கும் பொது அவரது புத்தி உடலுக்குள் வேலை செய்துக் கொண்டே இருக்கும். இரு உயிர்கள் எப்பொழுது ஒன்று சேர்கிறதோ அதாவது இரு உயிர்கள் என்பது இரண்டு நபர்களின் நுண்ணுடல் (சூட்சும உடம்பு) காந்த சக்தி (Aura) ஒன்று சேர்கிறதோ அப்பொழுது இருவரது புத்தியும் நிறுத்தப்படுகிறது. இது தான் இரகசியம். எனவே இந்த சிகிச்சைக்கு இருவர் தேவை.



டுவா தூக்கம் தூங்க எண்ணுபவர்கள் அமைதியான சூழ்நிலையில் தரையில் ஒரு விரிப்பின் மீது அல்லது கட்டிலில் மல்லாந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். கால்கள் நீட்டியிருக்க வேண்டும். பின்னக்கூடாது. இரண்டு கைகளையும் தனித்தனியே பின்னாமல் தளர்வாக வைக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அவர் அமைதியாக படுத்திருக்க வேண்டும். சிகிச்சை அளிப்பவர் அவர் தலைக்கு மேலே ஒரு அடி தள்ளி அமைதியாக அமர்ந்துக் கொள்ள வேண்டும். அவர் தரையில் படுத்திருந்தால் தலைக்கு அருகில் அமர்ந்துக்கொள்ளலாம். சிகிச்சை பெறுபவர் கட்டிலில் படுத்திருந்தால் சிகிச்சை அளிப்பவர் நாற்காலியில் அமர்ந்துக்கொள்ளலாம். 

சிகிச்சை அளிப்பவர் அமைதியாக அமர்ந்துக்கொண்டு இரண்டு கைகளிலும் உள்ள பாத்து விரல்களையும் அதன் நுனிப்பகுதியைக் கொண்டு சிகிச்சை பெறுபவரின் தலையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அண்ணல் உலங்கை தலையில் படக்கூடாது. அதிகமாக அழுத்தக் கூடாது. அதற்காக பட்டும் படாமலும் வைக்கக் கூடாது. சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பவரின் பத்து விரல்களும் தம் தலையில் அழுத்தம் கொடுக்கின்றன என்ற உணர்வு இருக்குமாறு அழுத்தம் தர வேண்டும். ஒரு தேங்காயை கையில் பிடிக்கும் பொது எப்படி பத்து இடங்களில் பத்து விரல்களும் படியுமோ அதைப்போல சிகிச்சை பெறுபவரின் தலையில் பத்து இடங்களில் தன்னுடைய பத்து விரல்களால் அழுத்தம் தர வேண்டும். சிகிச்சை கொடுப்பவர் இந்த முயற்சியையும் செய்ய வேண்டாம். அதாவது பிராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து தன கைகளின் மூலமாக வாங்கி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட வேண்டியதில்லை. அவருக்கு பிராணக் ஹீலிங் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தியானம் செய்தால் நல்லது. பிராணக் ஹீலிங் தெரிந்தால் அதை செயல்படுத்தினால் நல்லது. அண்ணல் தேவையில்லை. சும்மா உட்காந்திருந்தால் போதுமானது.இந்த சிகிச்சையை கொடுப்பவர் சும்மா உட்காந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர் காத்து ஒலி வாங்கி (EAR PHONE) மூலம் பாடல் கேட்டுக் கொள்ளலாம். அது அவர் மனதிற்கு பிடித்த அமைதியான, மென்மையான பாடலாக இருக்க வேண்டும். அந்த அறையில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருக்க கூடாது. அலைபேசி சப்தம் எழுப்பாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஒரு சப்தமும் கேட்காமல் இருந்தால் மிகவும் நல்லது. முடிந்தவரை அழைப்புமணி (CALLING BELL), ஒலிப்பான் (HORN) போன்ற சப்தங்கள் எதுவும் இல்லாமல் அந்த அரை அமைதியாக இருந்தால் இந்த சிகிச்சையின் பலன் அதிகமாக கிடைக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சிகிச்சை கொடுப்பவர் கைவிரல்களை சற்று நகர்த்தி வேறு இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம். தலைபகுதிக்குள் மட்டுமே அந்த மாற்றம் இருக்கவேண்டும். முன்தலை, உச்சந்தலை, பின்தலை காதுகளுக்கு அருகில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி அழுத்தம் கொடுத்துவர வேண்டும். ஏனென்றால் நமது மூளையில் இந்த இடங்களில் தொடுகின்றோமோ அந்தந்த இடம் சம்பந்தப்பட்ட இடங்கள் தூங்க ஆரம்பிக்கின்றன. தலையில் உள்ள அனைத்து இடங்களையும், தொட்டுவிட்டால் உடலில்; உள்ள அனைத்து உறுப்புகளும் தூங்கி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும். சிகிச்சை அளிப்பவர் கைகளில் வலி ஏற்பட்டால் ஒரு கையின் ஐந்து விரல்களை மட்டும் தலயில் வைத்துக்கொண்டு மற்றொரு கையின் ஐந்து விரல்களுக்கு ஓய்வு அளித்த்க்கொள்ளலாம்.இப்படி முதல் முறை சிகிச்சை கொடுக்கும் பொது குறைந்தது 4 மணிநேரம் தலையில் விரல்களால் அழுத்தம் தரவேண்டும்.

நீங்கள் யாருக்காவது இந்த சிகிச்சையை செய்து பாருங்கள் முதல் அரைமணி நேரத்திலேயே உங்களால் சிகிச்சை அளிக்கப்படும் நபர் இதுவரை இல்லாத அளவுக்கு அரை மணிநேரம் சென்றவுடன் வித்தியாசமான முறையில் அதிக அளவில் குறட்டை விட்டு தன்னை மறந்து தூங்கிவிடுவார். படுத்திருப்பவருக்கு நான் யார்? இந்த ஊர்? போன்ற எதுவுமே தெரியாது. ஒருவேளை 4 மணி நேரத்திற்குப் பிகு முக்கியமான வேலை இருக்கிறது அல்லது விமான நிலையம் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தால் கூட அனைத்தையும் மறந்து அவர் தூங்கிவிடுவார்.அவர் அவ்வாறு தூங்குவதை நாம் உணர முடியும் என்றாலும் நாம் விரல்களால் அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் அழுத்தம் கொடுக்கிறோமோ அவ்வளவு ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வார். எனவே முதல்முறை இந்தப் பயிற்சி சியும் பொது தயவுசெய்து குறைந்தது 4 மணி நேரத்திற்கு கைகளால் அழுத்தம் தர வேண்டும். அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை பெற்றுக் கொள்பவர் தேவைக்கு தகுந்தார் போல் உணவருந்திவிட்டு, தாகம் இருப்பின் புதிய அளவு நீர் அருந்திவிட்டு, இயற்க்கை உபாதைகளை நிறைவு செய்து விட்டு இந்த சிகிச்சையில் பங்கேற்க வேண்டும். சிகிச்சை அளிப்பவரும் அப்படியே. உனக்கு, நீர் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக்கொண்டு புற வேலைகளை நிறைவு செய்து விட்டு பின் 4 மணிநேரம் அவருக்கு சிகிச்சை அளிக்க தயாராக வேண்டும். ஏனென்றால் ஒரு மணிநேரம் கழித்து சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வோ, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வோ, பசி உணர்வோ ஏற்படும் பொழுது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியகதாகிவிடும். எனவே சிகிச்சை தருபவர் சிகிச்சை பெற்று கொள்பவர் இருவருமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றொரு முக்கியமான விஷயம், சிகிச்சை அளிப்பவர் இரண்டு மூன்று மூன்று நாட்கள் தூக்கமின்றி இருக்கும் நிலையிலோ, உடல் நிலை பாதிக்கப் பட்ட நிலையிலோ சிகிச்சை அளிக்கக் கூடாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மிகவும் நோய்வாய்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 

வீட்டில் மிகபெரிய சோகமான நிகழ்ச்சி. நெருங்கிய உறவுகள் யாரேனும் தவறியிருக்கலாம். அத்தகைய சோகமான சூழ்நிலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சை அளிக்கக்கூடாது. 

சிகிச்சை அளிப்பவர் இளநீர், தண்ணீர், பழச்சாரு போன்றவற்றை அருகில் வைத்துக் கொண்டு தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.சிகிச்சை பெற்றுக்கொள்பவருக்கு இது தேவைப்படாது. ஏனெனில் ஆழ்நிலைத் தூக்கத்திற்கு சென்று விடுவதால் அவருக்கு இது தேவைப்படாது. 

வாசியோகம் தெரிந்தவர்கள், பிராணாயாமம் தெரிந்தவர்கள் சிகிச்சை அளிக்கும் போது வாசியோகம் அல்லது பிராணாயாமம் சிதுக்கொண்டே சிகிச்சை அளிக்கும் போது மெகா அற்புதமான பலன் கிடைக்கும். பிராண ஹீலின் தெரிந்தவர்கள் பிராண சக்தியை தன் உடல் மூலமாக பெற்று தை சிகிச்சை பெறுபவரின் உடலில் அனுப்பும் போது நல்ல பயன் கிடைக்கும். தெரியாதவர்கள் அதைப்பற்றி கவலை பட வேண்டாம். சும்மா அழுத்தம் கொடுத்தால் போதுமானது. இப்படி செய்தால் அரைமணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை பெறுபவர் தூங்கிவிடுவார். சிகிச்சை அளிப்பவர் அமைதியாக் அமர்ந்து 4 மணி நேரம் சிகிச்சை கொடுத்தபின் மெதுவாக கையை எடுத்துவிட்டு தாங்களும் உறங்க செல்லவோ அல்லது வேறு வேளைகளிலோ ஈடுபடலாம். தூங்கிக்கொண்டு இருப்பார் அதற்கு பின் பல மணிநேரம் கழித்துதான் எழுவார். இதுவே தொடர்ந்து 48 மணிநேரம் தொடர்ந்து சிகிச்சை அகிக்கும் பட்சத்தில் 48 மணிநேரம் தூக்கத்தில் தான் இருப்பார். ஆனால் அப்படி சியைக் கூடாது. ஏனென்றால் 8 மணிநேரம் அல்லது 10 மணிநேரத்திற்குப் பிறகு உடலுக்கு தாகம், உணவு தேவை ஆகியவை ஏற்படும். மலம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். இந்த விஷவங்காலி சியாமல் அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது. பலன் குறைந்து விடும். அதிகபட்சம் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை சிகிச்சை அளித்தால் போதும். கைகளை எடுத்தவுடன் ஒருசிலர் அரைமணிநேரத்தில் எழுந்து விடுவார்கள், ஒருசிலர் 10 மணிநேரம் கூட தூங்குவார்கள். விட்டுவிடுங்கள். அது ஒவ்வொருவரின் உடலின் தேவையை பொறுத்தது. சிகிச்சையை குறைந்தபட்சம் 4 மணிநேரம் கொடுக்க வேண்டும். அடுத்தநாள் 4 மணிநேரம் சிகிச்சை அளித்தால் மிகவும் நல்லது. இல்லையென்றால் 1 மணிநேரம் சிகிச்சை அளிக்கலாம். குறைந்தது 1 மணிநேரம் சிகிச்சை அளிப்பதே பலன் அளிக்கும். யாராவது மிகபெரிய நோய் உள்ளவர்கள், உலக வைத்தியத்தால் குணப்படுத்த முடியாது என்று முடிவு செய்யப்பட வியாதிகள் அனைத்தும் இந்த முறையில் குணமடையலாம். 

தினசரி 4 மணிநேரம் இதற்காக ஒதுக்கினால் போதும். ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். தினசரி மற்ற நேரங்களில் TV, ஏதேனும் ஒன்றை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த வண்ணம் இருப்பதை போல் ஒருவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம். 

குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறி அதற்கு பல இலட்சம் அல்லது கோடி ரூபாய் செலவு செய்து மருத்துவம் பார்ப்பதை விட இந்த மாதிரி ஒருவரை சிகிச்சைக்கு மாத சம்பளத்திற்கு நியமித்துக் கொள்வது நல்ல பயன் அளிக்கும். ஒருவருக்கு வேலை கொடுத்த மதிரும் ஆயிற்று. நம் வியாதி குணமடைந்த மாதிரியும் ஆயிற்று. 

வீட்டில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி இந்த சிகிச்சையை கொடுத்துக்கொள்ளலாம். ஒருவர் தலையில் இன்னொருவர் கைவைக்கும்போது இரண்டு பேருடைய ஆராக்களும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு உயிரும் கலக்கிறது. ஈருயிர் சேர்ந்து ஆழ்நிலைத் தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதற்குப் பெயர் டுவா தூக்கம். 

இந்த சிகிச்சையை மலேசியாவில் உள்ள முத்தம்மாள் என்கிற பெண்ணுக்கு அவரது தாத்தா கற்றுக்கொடுத்திருகிறார். அவர் ஒரு மலேசியா வாழ் தமிழர். இந்த சிகிச்சை அப்பொழுது யாருமே கண்டுக்கொள்ளவில்லை. இதுவரை யாருமே பயிற்சி செய்யவில்லை. ஆனால் இப்போது அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். நான் எனக்கும் மற்றவர்க்கும் இதை செயல்படுத்தி பார்த்தேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதனால் தற்போது இதைப்பற்றி எல்லா வகுப்புகளிலும் பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த ஒரே ஒரு சிகிச்சை மட்டும் தெரிந்துக்கொண்டால் மனது உலகை ஆரோக்கியப்படுத்தி விடலாம். இதைதான் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறினார்களோ என்னவோ? வசூல் ராஜா M.B.B.S திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்று இருக்கிறது. 

இப்பொழுது யோசித்துப் பார்கிறேன், குழந்தைக்கு நோய் வந்தால் மடியில் படுக்க வைத்து அதன் தலையை தடவி கொடுக்கிறோம். இன்னொருவர் அருகில் இருந்தால் போதும். ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவர் அருகில் ஆதரவாக இருந்தாலே போதும் என்பது உண்மை. அனால் இப்பொழுது அனைவரும் அனாதைகளாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாகரீக வாழ்கையில் பெரும்பாலானோர் கூட்டு கும்பமாக இல்லை. ஏன் கணவன் மனைவிகூட வாரம் ஒரு நாள் மாதம் ஒரு நாள் சந்தித்துக் கொள்கிறார்கள். வேலை அல்லது தொழில்ரீதியான காரணங்களால் தனித்தனியே வாழ்கின்றனர். இதனால் இந்த தனிமையான வாழ்க்கை முறையே அவர்களுக்கு நோயைக் கொண்டுவருகிறது. எப்பொழுதும் இருவர் ஒன்று சேர்ந்து வாழும் போது நம் மனதுக்கும் பிடித்தவர்கள் உடன் இருக்கும்போது மனது நோய்கள் குணமடைகிறது. பல கணவன் மனைவிமார்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் போது அன்பாக அமைதியாக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறோம். அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் டுவா தூக்கம் அங்கே நடைபெறுகிறது. எனவே இனி தினமும் டுவா தூக்கம் கொள்வோம். நமது உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ்வோம். எனவே இதை யார் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். எனவே இனிமேல் யாருடைய நோயையாவது குணப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் எதைபற்றியும் கவலைபடாமல் உங்களுக்கு எந்தவித வர்மா புள்ளியோ, பிராண ஹீலிங்க்கோ, முத்ரா, ரெய்க்கி, நியுரோ தெரபி போன்ற எதுவும் தெரிந்திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் மீது உணகளுக்கு அக்கறை இருக்கிறதோ, அவர்களை படுக்க வைத்து அவர்கள் தலையில் 10 மணிநேரம் கையை வையுங்கள். அவர்கள் ஆரோக்கியம் அடைவார்கள். நான் இத சிகிச்சையை பலருக்கும் கொடுத்து வருகிறேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. சில நபர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது நாம் 5 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறேன். நான் ஒருவனே அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாது. எனவேதான் நான் இதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். இந்த முறையை நான் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் தங்கள் கையைக் கொண்டு இந்த சிகிச்சையை அளிக்கலாம். இதற்க்கு நான் தேவை இல்லை. எனவே இதை புரிந்துக்கொண்டு மற்றவர்கல்லும் கற்றுக்கொடுங்கள். மற்றவர்களையும் தெளிவுப்படுத்துங்கள். 

ஒரு விஷயம் பாருங்கள்! இதை கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்க ஒரு அரைமணி நேரம் ஆகுமா? உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லிதாருங்கள். கேட்கிறார்களோ, இல்லையோ உங்களுக்கு தெரிந்த இந்த சிகிச்சையை மற்றவர்கல்லும் சொல்லி கொடுங்கள். ஒருவேளை இந்த சிகிச்சையை அவர்கள் பயன்படுத்தி நன்மை அடைந்தால் உங்களை தேடி வந்து உங்களை வாழ்த்திவிட்டு செல்வார்கள் பாருங்கள். அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது. 

சத்தியமாக நான் ஒன்று கூறுகிறேன். இப்போது நான் இறந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியாக சந்தோஷமாக நிம்மதியாக இறப்பேன். ஏனென்றால் என் மூலமாக இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் ஆரோக்கியமடையும் கலையை கற்றுக்கொண்டனர் என்று எண்ணும் போது உயிருக்கு மேலும் மெருகேறுகிறது. நாம் வாழ்ந்த இந்த வாழ்விற்கு அர்த்தம் கிடைக்கிறது. நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம், என்று இல்லாமல் எல்லோருக்கும் நன்மை அளிக்கும் விதமாக ஏதாவது செயல் புரிய வேண்டும். இப்பொழுது முதல் ஒரு சங்கல்ப்பம் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த சிகிச்சையை எனது நண்பர்கள், உறவினர்கள், எனக்கு தெறிந்த மற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுப்பேன். பேருந்து பயணம் அல்லது வழிப்பயணம் செய்யும் போதோ எதுவாக இருந்தாலும் நான் சந்திக்கும் நபர்களுக்கு ஒரு அரைமணிநேரம் இதைப்பற்றி சொல்லிக்கொடுப்பேன். இதன் மூலமாக எனக்கு புண்ணியம் கிடைகிறது என்று எண்ணி கொள்வேன். இந்த டுவா தூக்கம் மூலமாக, அரிதுயில் மூலமாகா ஆழ்நிலைத் தூக்கம் மூலமாக நம் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)

For More info visit:


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
     Vineeth.S
+91 98409 80224  
+91 97509 56398 

இரத்த அழுத்தத்தைக் கண்டு பயப்பட தேவையில்லை!



"இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கட்டுப்படுத்துவது என்பது சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல என்பதைப் புரிந்து கொண்டு, நமது முறைப்படி எளிமையாகக் குணப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வோம்!"

இரத்தம் இருதயத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்குள்ளேயும் சென்று வரும். அப்பொழுது உறுப்புகளிலிருந்து சில பொருட்கள் இரத்தத்தில் கலக்கும். சில பொருட்கள் இரத்தத்திலிருந்து உறுப்புகளுக்குள் சேரும்.

இப்படிச் சென்று வரும் இரத்தத்தை நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜைகள் ஆகியவை சுத்தம் செய்கின்றன. எலும்பு மஜ்ஜைகள் இரத்தத்தைப் புதிதாக உருவாக்கும் பணியையும் செய்கின்றன. சரி, இதயம் என்னதான் செய்கிறது என்றால், உடலெங்கும் சுற்றிச் சுழன்று ஓய்ந்து போய் வரும் இரத்தத்திற்கு இரத்த அழுத்தத்தை (பிரஷரை) இதயம் அளிக்கிறது.

ஒரு மணி நேரம் அமைதியாக, உடல் அசைவின்றித் தியானம் செய்யும்பொழுது இரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பாருங்கள்! குறை இரத்த அழுத்தம்தான் (Low BP) இருக்கும். குறை இரத்த அழுத்தம் என்பது ஒரு நோய் என்றால் தியானம் செய்வதை நோய் என்று கூற முடியுமா? எனவே, குறைந்த இரத்த அழுத்தம் என்பது ஒரு நோயே கிடையாது.

தியானம் முடித்தவுடன் மெதுவாகக் கண்ணைத் திறந்து ஒரே ஒரு கையை மட்டும் லேசாக மேலும் கீழும் ஆட்டுங்கள். இப்பொழுது இரத்த அழுத்தம் அதிகரிக்குமா அல்லது குறையுமா? அதிகரிக்கத்தான் செய்யும்.

முதலில், இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஒரு செல் இரத்தத்திலுள்ள ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட்டால், அந்தச் செல் என்ற குழந்தை இதயம் என்ற அம்மாவிடம், “அம்மா நான் ஒரு பொருளைச் சாப்பிட்டு விட்டேன். எனக்கு ஒரு இரத்த அழுத்தம் கொடுங்கள்” என்று கேட்கும். இப்படி, எத்தனை குழந்தைகள் சாப்பிடுகின்றனவோ அத்தனை இரத்த அழுத்தம் அதிகமாகும்.

இப்பொழுது இரு கைகளையும் மேலும் கீழுமாக வேகமாக ஆட்டுங்கள். உங்கள் இரத்த அழுத்தம் ஏற்கெனவே இருந்ததை விட அதிகமாகிறதல்லவா? ஏன்? இரண்டு கைகளிலுள்ள அனைத்து செல்களும் இரத்தத்திலுள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் இதயம் அதிகமாக உணவு விநியோகம் செய்கிறது.

இப்பொழுது வேகமாக ஓடுங்கள். ஏற்கெனவே இருந்த இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். இதிலிருந்து என்ன புரிகிறதென்றால், இரத்த அழுத்தம் சீராக (நார்மலாக) இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரத்த அழுத்தம் என்றால் அது அதிகமாகவோ, குறைவாகவோ சீராகவோ மாறி மாறித்தான் இருக்கும். நம் உடலுக்கு எப்பொழுது எவ்வளவு இரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறு அது அதிகப்படுத்தி கொள்ளும், குறைத்துக் கொள்ளுமே தவிர, நாம் அதைக் கட்டுப்படுத்தக் கூடாது!

"சரி, ஓடினால் இரத்த அழுத்தம் உயரும், தியானம் செய்யும்பொழுது இரத்த அழுத்தம் குறையுமென்று எங்களுக்கும் தெரியும். நான் ஓடவேயில்லை. வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதும் எனக்கு இரத்த அழுத்தம் உயர்ந்துவிட்டது. இதற்குக் காரணமென்ன?" என்று கேட்பீர்கள். "நான் தியானம் செய்யவேயில்லை; வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தேன். எனக்குக் குறை இரத்த அழுத்தம் வந்து விட்டது. இதற்கு என்ன காரணமென்று கேட்பீர்கள்.

ஒரு செல்லுக்கு ஏதாவது ஒரு நோய் வந்தால் மொத்தம் நான்கு விஷயங்களைக் கேட்கும்.
  • இரத்த அழுத்தம்
  • சர்க்கரை
  • ஆக்ஸிஜன்
  • நோயைக் குணப்படுத்தத் தேவையான தாதுப் பொருட்களும் வைட்டமின்களும்.
இந்த நான்கு பொருட்கள் ஒரு செல்லுக்குள் நுழைந்தால் அந்தச் செல்லுக்கு எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும். ஆக, ஒரு செல்லுக்கு நோய் வந்தால் முதன் முதலில் அது கேட்பது இரத்த அழுத்தம்.

ஏனென்றால், இரத்த அழுத்தம் அதிகமானால்தான் பொருட்களைச் சாப்பிட முடியும். அப்பொழுதுதான் நோயைக் குணப்படுத்த முடியும். 10.000 செல்களுக்கு நோய் வந்துவிட்டால் 10,000 செல்களும் முதலில் இரத்த அழுத்த்தைக் கேட்கும். இரத்த அழுத்தம் அதிகமாகும். 10,000 செல்கள் தங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளும். இதற்கு அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ, நாலு மணி நேரமோ தேவைப்படலாம். இப்படி, உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்தால் அதைக் குணப்படுத்த ஆரம்பிக்கும் விநாடி முதல் குணப்படுத்தி முடிக்கும் விநாடி வரை இரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகத்தான் இருக்கும். யாருடைய உடலில் நாம் சொன்னது போல,
  • இரத்தத்திலுள்ள பொருட்களின் தரம்
  • இரத்தத்திலுள்ள பொருட்களின் அளவு
  • இரத்தத்தின் அளவு
  • மனம்
  • உடல் அறிவு
இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறதோ அவர்களுடைய இரத்த அழுத்தம் நோய் வரும்பொழுது அதிகமாகும். நோய்கள் குணமானதும் சீராகி விடும். ஒரு வேளை, மேலே சொன்ன ஐந்து விஷயங்களில் ஏதாவது ஒன்றோ இரண்டோ சரியாக இல்லையென்றால் நம் உடலில் நோயைக் குணப்படுத்த முடியாது.

உதாரணமாக, ஒரு நோயைக் குணப்படுத்தத் தேவையான ஒரு பொருளின் தரம் இரத்தத்தில் குறைந்திருந்தால் தரம் குறைந்த அந்தப் பொருளைக் கொண்டு நோயைக் குணப்படுத்த முடியாமல் அந்தச் செல் தவிக்கும்பொழுது அது இரத்த அழுத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தப் பொருளின் தரம் சரியாகி, செல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் காலம் வரும் வரைக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கும். ஆக, இரத்த அழுத்தம் அதிகரித்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்துவிட்டது; அதைக் குணப்படுத்த முடியாமல் உடல் தவிக்கிறது என்பதைத்தான். மாறாக, இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது; இதயத்தில் கோளாறு என்று தவறாக நினைக்கக் கூடாது.

அதனால் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் ஒருவருக்கு இதயத்தில் சிகிச்சை செய்தோ, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சை செய்தோ எந்தவிதப் பயனும் இல்லை. உடலிலுள்ள செல்களுக்கு உண்டான நோய்களைக் குணப்படுத்துவதற்கு மேலே கூறப்பட்ட காரணங்களைச் சரி செய்ய வேண்டும். இந்த ஐந்து காரணங்களையும் சரி செய்து உடல் செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்துவதன் மூலமாகத்தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். அதுவே சரியான தீர்வு! 

இதயமும் திசுக்களாலானதுதான். அந்தத் திசுக்களுக்குள்ளும் செல்கள் உள்ளன. அந்த இதயச் செல்கள் சாப்பிடக்கூடிய பொருள் இரத்தத்தில் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது இல்லாமல் போயிருந்தாலோ இதயச் செல்கள் பாதிக்கும். இதனால் ஏற்படுவதே குறை இரத்த அழுத்தம். 

எனவே, உயர் இரத்த அழுத்தம் என்பதும் குறை இரத்த அழுத்தம் என்பதும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே கிடையாது. அவை இரத்தத்திலுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். குறிப்பாக, மேலே சொல்லப்பட்ட ஐந்து விஷயங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். எனவே, உயர் இரத்த அழுத்தத்துக்கும், குறை இரத்த அழுத்தத்துக்கும் இதயத்தில் சிகிச்சை அளிக்கக் கூடாது! இரத்தத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும். 

இது தெரியாத மருத்துவரிடம் செல்லும்பொழுது அவர் நமது இரத்தழுத்தத்தை மட்டுமே சோதிக்கிறார். அளவுக்கு அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். குறைவாக இருந்தால் குறை இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இரத்த அழுத்தத்தின் அளவை மட்டுமே சோதிக்கிறார்களே தவிர, அது ஏன் அதிகமாகின்றது, ஏன் குறைகிறது என்ற விஷயத்தை யாரும் இதுவரை ஆராய்ச்சி செய்து பார்க்கவில்லை. மாறாக, மருத்துவர்கள் அதற்கு ஒரு மருந்து அல்லது மாத்திரை தருகிறார்கள். இந்த மருந்து, மாத்திரைகள் என்ன செய்கின்றன? நேராக, இதயத்தின் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகின்றன. உடம்பு சில காரணங்களுக்காக, நோயைக் குணப்படுத்துவதற்காக அல்லது இயக்க சக்திக்கு தேவையான உணவைச் சாப்பிடுவதற்காக அதிகப்படுத்தியிருக்கும் இரத்த அழுத்தத்தை நாமாகக் கட்டுப்படுத்துவது சரியா? சற்று யோசித்துப் பாருங்கள்! 

இப்படி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நமது உடலில் நோய்கள் அதிகமாகுமே தவிர, குறைவதற்கு வாய்ப்பேயில்லை. இப்படி யார் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அந்தக் காலகட்டத்தில் உடலில் வரும் எந்த நோயையும் உடல் குணப்படுத்தவே செய்யாது. 

ஒருவர் இரத்த அழுத்தத்துக்கு மூன்று மாதம், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மூன்று மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மருந்து மாத்திரை சாப்பிடாமலிருந்தால் என்னாகும்? இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். நாம் என்ன செய்கிறோம்? மூன்று மாதம் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு வந்ததால் இரத்த அழுத்தம் சீராக இருந்தது. நாம் நன்றாக இருந்தோம். ஒரு நாள் சாப்பிடவில்லையென்றதும், இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. நமக்கு நோய் வந்து விட்டது என்ற பயத்தில் கையில் எப்பொழுதுமே இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரைகள் வைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். முதலில் 10,000 செல்களுக்கு நோய் ஏற்பட்டபொழுது அதைக் குணப்படுத்துவதற்காக இரத்த அழுத்தம் அதிகரித்தது. நாம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்து மாத்திரைகள் சாப்பிட்டோமே தவிர, அந்தப் 10,000 செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்த எந்தவொரு வேலையும் செய்யவில்லை. 

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திய இந்த மூன்று மாதத்தில் தினமும் புதிதாக 10,000 அல்லது 20,000 செல்களுக்கு நோய் வந்திருக்குமே அதை யார் குணப்படுத்துவது? இப்படி, 10,000 செல்களுக்கு இருந்த நோய் மூன்று மாதத்தில் இப்பொழுது 20,000 செல்களுக்குப் பரவி குணப்படுத்தப்படாமல் இருக்கிறது. அதனால்தான் ஒரு நாள் இரத்த அழுத்த மாத்திரையை நிறுத்தினால் உடனே இரத்த அழுத்தம் கன்னா பின்னாவென்று அதிகமாகிறது. இதற்கு, உடலில் நோய்கள் அதிகரித்து விட்டன என்றுதான் பொருள். 20,000 செல்களுக்கும் வந்துள்ள நோயைக் குணப்படுத்துவதற்கு இதயம் முயற்சிக்கும்பொழுது, நமது இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகிறது. 

இப்பொழுது சொல்லுங்கள்! இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நோய்கள் அதிகரிக்குமா, குறையுமா? நமது சிகிச்சையைப் பொறுத்த வரையில், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால்தான் நோய். இரத்த அழுத்தத்தை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. 

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தத்தான் முடியும். குணப்படுத்த முடியாதென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக, இரத்த அழுத்தத்துக்காக மாத்திரை சாப்பிட்டால் அளவு அதிகமாகிக் கொண்டேதான் போகும். எப்பொழுது மாத்திரையின் டோஸ் அதிகமாகின்றதோ, உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறதென்று அர்த்தம். உங்கள் நோயைக் குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா, பெரிதுபடுத்துவதற்கு மருத்துவர் தேவையா? மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் நோய்கள் குணமாகின்றனவா, பெரிதாகின்றனவா? சற்றுச் சிந்தியுங்கள்! எப்பொழுது உங்கள் மருந்து மாத்திரையின் அளவு அதிகமாகின்றதோ வெற்றிகரமாக உங்களது நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். 

ஒரு மருத்துவரென்றால் முதலில் அதிக வீரியமுள்ள மாத்திரை தர வேண்டும். சில மாதங்களுக்குப் பிறகு அதன் அளவைக் குறைக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு "நோயைக் குணப்படுத்தி விட்டேன். நீங்கள் இனி எந்த மருந்து மாத்திரையும் சாப்பிட வேண்டாம்" என்று உறுதி கூறி மாத்திரையை நிறுத்த வேண்டும். இதற்குப் பெயர்தான் வைத்தியம். ஆனால், இரத்த அழுத்தம் என்ற நோய்க்கு முதலில் தரும் மாத்திரையின் அளவு போகப் போக அதிகமாகிறது. அதுவும் வாழ்க்கை முழுவதும் சாப்பிட வேண்டுமென்று கூறுகிறார்கள். அதைக் குணப்படுத்த முடியாதென்றும் கூறுகிறார்கள். ஒரு நோயைக் குணப்படுத்த முடியாதென்று சொல்வதற்கு மருத்துவர் தேவையா? அதற்கு ஏன் படிக்க வேண்டும்? 

இந்தச் சிகிச்சையில் நாம் முக்கியமாகச் சொல்கிற ஐந்து விஷயங்களைச் சரி செய்வது மூலமாக ஒரு நிமிடத்தில் நமது உடலில் 300 கோடி செல்கள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கின்றன. 

இவ்வாறு நமது சிகிச்சையின் மூலமாகச் சில விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்களுக்கு நான்கு மாதத்தில் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த முடியும். எந்தவொரு மருந்து மாத்திரையுமில்லாமல் இந்த ஐந்து விஷயங்களை ஒழுங்காக வைத்துக் கொண்டால் ஏற்கெனவே சாப்பிடும் இரத்த அழுத்த மாத்திரையின் அளவு ஒவ்வொரு மாதமும் படிப்படியாகக் குறைந்து நான்காவது மாதத்திலிருந்து நீங்கள் இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட வேண்டிய தேவையே இல்லாமல் போய்விடும். பிறகு, இரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. இரத்த அழுத்தம் அதிகமானாலும், குறைந்தாலும் நீங்கள் தெம்பாக இருப்பீர்கள். 

ஆக, உடலிலுள்ள அனைத்துச் செல்களையும் குணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த முடியுமே தவிர, மருந்து மாத்திரைகளாலும் இதயத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாலும் முடியாதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! 

இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கட்டுப்படுத்துவது என்பது சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல என்பதைப் புரிந்து கொண்டு, நமது முறைப்படி எளிமையாகக் குணப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வோம்!

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)

மேலும் படிக்க 

உவர்ப்பு (உப்பு) சிகிச்சை (உப்பு சாப்பிட்டே ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தலாம்)
http://reghahealthcare.blogspot.in/2014/12/blog-post_16.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 1 - நீரிழிவு ஒரு அறிமுகம்
http://reghahealthcare.blogspot.com/2010/12/diabetes.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 2 - கிளைகோஜன் மற்றும் அட்ரினல் சுரப்பியின் பங்கு
http://reghahealthcare.blogspot.com/2014/12/2.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 3 - High Sugar(ஹை சுகர்), Low Sugar (லோ சுகர்) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/3.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 4 - Sugar Free (சுகர் ப்ரீ) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/4.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 5 - அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம் 
http://reghahealthcare.blogspot.com/2014/12/5.html

இனிப்பு சிகிச்சை (இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்)
http://reghahealthcare.blogspot.in/2014/12/blog-post.html

For more info visit:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்து!

நாக்குதான் மருத்துவர்! 
சுவைதான் மருந்து!


நோய்கள் ஏற்படும்பொழுது நாக்கு என்ற மருத்துவர் மூலமாகச் சுவை என்ற மருந்தை உடல் எப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் வித விதமான சுவைகளில் உணவைத் தேடுகிறார்கள்? கர்ப்பமான பெண்கள் சும்மா இருக்கவே முடியாது. அவர்கள் ஏதாவது ஒரு பொருளைச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிலும், பொருளை மாற்றி மாற்றிச் சாப்பிடுவார்கள். "கர்ப்பிணிகளிடம் அவர்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள். அவர்கள் மனதுக்குப் பிடித்த உணவை வாங்கித் தாருங்கள்" என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதில் மிகப் பெரிய அர்த்தம் உள்ளது!

கர்ப்பப்பையில் குழந்தை உருவாகும்பொழுது எந்தெந்த உறுப்புகள் சேர்ந்து அந்த வேலையைச் செய்கின்றனவோ, அந்தந்த உறுப்புகளுக்கு சம்பந்தப்பட்ட சக்தி உடலில் குறையும். எந்த சக்தி குறைந்து விட்டதோ அது சம்பந்தப்பட்ட சுவையை நாக்குக் கேட்கும். இதனால்தான் அந்தப் பெண்கள் திடீரென்று இனிப்புச் சாப்பிட வேண்டும் போல் இருப்பதாகக் கூறுவார்கள்; சாம்பலை அள்ளிச் சாப்பிடுவார்கள்; திடீரெனக் கீரை சாப்பிடுவார்கள். அவர்கள் நாக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போலவே இருக்கும். இரவு 2 மணிக்கு எழுந்து திடீரென எதையாவது எடுத்துச் சாப்பிடுவார்கள். ஏனென்றால், குழந்தை உருவாகும்பொழுது நம் உடம்பு சத்துப் பொருட்களையோ மருந்து மாத்திரைகளையோ கேட்பதில்லை; சுவைகளைத்தான் கேட்கிறது.

சுவைகள் நம் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமான மருந்துகள். எனவேதான் நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு, 'சோறு கட்டிப் போடுதல்' என்கிற ஒரு வைபவம் வைத்திருந்தார்கள். 'சீமந்தம்' என்று கூறுவார்கள்.

அந்த நேரத்தில் ஆறு வகைச் சுவையான உணவுகளைத் தயாரித்து அனைவருக்கும் பந்தியிட்டு மகிழ்ந்தார்கள். நாம் அனைவரும் அந்த விழாவிற்குச் சென்று நன்றாகச் சாப்பிட்டு விட்டு வருகிறோம். ஆனால், அது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை இது வரை யாரும் யோசித்ததில்லை. நாம் சாப்பிடுவதற்காக அந்தத் திருவிழா அல்ல; அந்தப் பெண் எந்தெந்தச் சுவையைக் கேட்கிறாளோ அவற்றையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை அந்தக் குடும்பத்தினருக்குப் புரிய வைப்பதற்காகவே.

இப்படி கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு அவர்கள் நாக்குக் கேட்கும் சுவையைச் சரியாகக் கொடுப்பது மூலமாக சுகப்பிரசவத்தையும், அழகான, ஆரோக்கியமான குழந்தையையும் பெற்று வந்தார்கள். ஆனால் இப்பொழுது, ஸ்கேனிங் வைபவம், ஆன்டி பயாடிக் வைபவம், மருந்து மாத்திரை வைபவம் என்று நடத்திக் கொண்டிருப்பதால் ஊனமான குழந்தைப் பிறப்பும், சிசேரியனும் நடந்து வருகிறது.

எனவே, யார் யாருக்கெல்லாம் நோய் வருகிறதோ அவர்களெல்லாரும் தங்களைக் கர்ப்பமான பெண்ணாக நினைத்துக் கொண்டு மனதிற்குப் பிடித்த மாதிரி, உங்கள் நாக்குக்குப் பிடித்த உணவுகளைத் தாராளமாகச் சாப்பிடுங்கள்! அப்பொழுதுதான் நோய்கள் குணமாகும்.

கசப்பு, துவர்ப்பு என்ற இரு சுவைகளை நாம் பொதுவாகச் சாப்பிடுவதில்லை. இனிப்புச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள். உப்புச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் எகிறிவிடும் என்கிறார்கள். காரம் சாப்பிட்டால் தோல் நோய் வருமென்று கூறுகிறார்கள். புளி சேர்த்தால் மூட்டு, முழங்கால் வலி வருமென்று கூறுகிறார்கள். இப்படி, இருக்கும் ஆறு சுவைகளையும் ஒவ்வொரு காரணம் காட்டி மருத்துவர்கள் சாப்பிட வேண்டாம் எனக் கூறுகிறார்களே, நாம் எதைத்தான் சாப்பிடுவது? எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் அதில் ஆறு சுவைகளில் ஏதோ ஒரு சுவை மிகுதியாகவோ, குறையாகவோ இருக்கும். இப்படி ஒவ்வொரு சுவையும் வேண்டாமென்று கூறினால் நாம் பட்டினிதான் கிடக்க வேண்டும். எனவே, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சுவைக்கும், எந்த நோய்க்கும் சம்பந்தமே கிடையாது! உங்கள் நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்து! எனவே, நீங்கள் எந்தச் சுவையைச் சாப்பிட வேண்டும், எந்தச் சுவையைச் சாப்பிடக் கூடாதென்று எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது. அவரவர் நாக்குக்கு மட்டுமே தெரியும். இனிப்பான பொருளை வாயில் வையுங்கள். பிடித்திருந்தால் சாப்பிடுங்கள். 

பிடிக்கவில்லையென்றால் சாப்பிட வேண்டாம். மறுபடியும் பிடித்தால் இன்னொரு இனிப்பைச் சாப்பிடுங்கள். மூன்றாவது இனிப்பைச் சாப்பிடும்பொழுது நாக்குத் திகட்டும். அப்பொழுது நிறுத்திக் கொள்ளுங்கள். நாக்குத் திகட்டிய பிறகு இனிப்புச் சாப்பிட்டால் உங்களுக்கு இனிப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.

அதே போல், உப்பு உணவில் அதிகமாக இருந்தால் சாப்பிட முடியுமா? முடியாது. ஆனால், குறைவாக இருந்தால் சாப்பிடுகிறோமே!

அந்தக் காலத்தில், சாப்பிடும்பொழுது இலையில் உப்பு வைப்பார்களே, அது எதற்கு? நீங்கள் உணவைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்; உப்புக் குறைவாக இருந்தால் உங்கள் நாக்குக்கு எவ்வளவு உப்புச் சாப்பிட்டால் நன்றாக இருக்குமோ அதை நீங்கள் உங்கள் சாப்பாட்டில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பலர், சாப்பிடும்பொழுது உப்புக் குறைவாக உள்ளதென்று மொத்தத்திலும் உப்பைக் கொட்டுகிறார்கள். 

ஒவ்வொருவருடைய நாக்கின் சுவையும் வேறு வேறாக இருக்கும். நம் நாக்குக்கு ஒரு சுவை அதிகமாக, குறைவாக இருக்கிறதென்றால், அடுத்தவர்களுக்கு அதே போல் இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. எனவே, சமைக்கும்பொழுது உப்பு, புளி, காரம் அனைத்தையும் அளவாகச் செய்யுங்கள். அவரவர்களுக்கு உப்புத் தேவையென்றால் அவரவர் உணவில் மட்டுமே அவரவர் உப்புச் சேர்த்துக் கொள்ளலாம். காரம் தேவையென்றால் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி அவரவர் தட்டில் மட்டுமே சுவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காகத்தான் பலவிதமான பொரியல், அவியல், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை நமது முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.

எனவே தயவு செய்து, இனிமேல் யாரும் எந்தச் சுவையைப் பார்த்தும் பயப்படாதீர்கள்! சுவைகளனைத்தும் நமக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே உள்ளன.

ஆனால், உங்கள் நாக்குத் திகட்டிய பிறகு அல்லது உங்கள் நாக்குக்குப் பிடிக்காத எந்தச் சுவையையும் சாப்பிடாதீர்கள்! நாக்குதான் மருத்துவர். சுவைதான் மருந்து என்பதைப் புரிந்து கொண்டு இனி நாக்குக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுங்கள்! நோயின்றி வாழலாம்.

சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் தாராளமாக  இனிப்பை சாப்பிடுங்கள்; ஒன்றும் ஆகாது. இரத்த அழுத்த நோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் தாராளமாக  உங்கள் நாக்குக்குத் தேவைப்படும் அளவுக்கு உப்புச் சாப்பிடுங்கள்; உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். இப்படி எந்தச் சுவையையும் ஒதுக்காமல் உங்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ, அதைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நன்றி - பாஸ்கர் 



மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய
தொடர்பு உள்ளது

நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காகபதவிக்காககெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம்புகழ்அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம்நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா?

·        அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும்,

·        பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும்,

·        பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

·        பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

·        பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும்,

·        பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

·        பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும்,

·        நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

·        அடுத்தவர்களுக்கு உதவும்போதும்,

·        நேர்மையாக வாழும்போதும்,

·        சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும்கிருமிகளைப் பற்றிய பயத்தையும்செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை)ரத்த அழுத்தம்தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


எல்லா வகை வியாதிகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?

· நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.

·  பசியை உணர்ந்துபசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

·    பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

· மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

·   டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

· உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

·  இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும்ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும்ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.


உணவே மருந்துவாழ்க்கைமுறையே தீர்வு!

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும். 

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது எண்ணம்.

ஆங்கில மருந்துக்கள்டீகாப்பிகஞ்சா உட்கொள்ளுதல்புகை பிடித்தல்மது அருந்துதல்புகையிலைபாக்குமூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் பொறுமையாக இருப்பவர்கள்நேர்மையாக வாழ்பவர்கள்அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளின் தொகுப்பைக் காண மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:






"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!" 
Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/OurBodyItselfaDoctor

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/LetUsThinkPositive

முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

மேலும் நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை புரிந்துகொண்டு பின்பற்றுங்கள். https://goo.gl/lC56N5

நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஆரோக்கியமாக வாழ நம் உடலின் அடிப்படையை புரிந்து கொண்டு அதற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும். இதனை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் நாம் தேவையில்லாமல் வியாதிகள் மற்றும் கிருமிகள் பற்றி பயந்து கொண்டு இருக்கிறோம்.


ஆரோக்கியம் என்பது உடல்மனம் மற்றும் தினசரி பழக்கவழக்கங்களில் தான் அடங்கி உள்ளது. இதனை புரிந்துக்கொள்ளாததால் தான் நாம் பல மருத்துவ வியாபாரிகளிடம் சிக்கித் தவிக்கிறோம்.

இப்படிக்கு,

விழிப்புணர்வு வினீத்