Showing posts with label வினீத். Show all posts
Showing posts with label வினீத். Show all posts

நோயின்றி ஆரோக்கியமாக வாழ புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!



"கழிவின் தேக்கம் வியாதி; கழிவின் வெளியேற்றம் குணம்"


திருக்குறள் (அறிவுடைமை#0423)

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

தெளிவுரை:

    எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.


    மது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.   நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 


    நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.

பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம். 




உணவு [நிலம்] [இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]


1. பசி:
    • பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும்.
    • பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி மற்றும் உடலெங்கும் வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம், புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மூலம், மாரடைப்பு,... போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுத்தும். அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும்.
    • நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும். பல் முளைத்த குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுப்பதை நிறுத்தினாலே நன்கு பசி எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிடும்.

2. உணவின் அளவு:
    • நாம் எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்கிற சந்தேகம் பலருக்கு உள்ளது. சாப்பிடும்போது நாம் உண்ணும் உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு (திகட்டுதல்) வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு.
    • விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதிகமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக மெதுவாக மென்று சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் உண்ணும்போதே 10 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது, நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும். 
    • இவற்றை முயற்சி செய்து பார்த்ததில் எனக்கு (விழிப்புணர்வு வினீத்) சில மாதங்களில் 20 கிலோ (From 93 to 73) வரை எடை குறைந்து விட்டது.

3. உணவை உண்ணும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:
    • சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது நமது உள்ளுறுப்புக்கள் தூண்டப்பட்டு அவை உணவை கிரகித்துக்கொள்ள தயாராகிவிடும்.
    • உணவில் ஆறு சுவைகள் [இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். யாருக்காகவும் எந்த சுவையையும் தவிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
    • திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். சுவை நாக்கால் உறிஞ்சப்பட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். சுவையாகவே இரைப்பைக்கு செல்லும் உணவு தான் நமது உடலுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.
    • திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி அதன் வெப்ப தன்மை அல்லது குளிர்ச்சி தன்மை (Hot or Cold) நம் நாவிலே சமப்படுத்தப்பட வேண்டும். நம் தொண்டைக்கு செல்லும்போது வெப்பமாகவோ குளிர்ச்சியாகவோ இருக்கக் கூடாது. (வெப்பமாக சென்றால் இரைப்பையை பாதிக்கும் குளிர்ச்சியாக சென்றால் மாரடைப்பை ஏற்படுத்தும்)
    • சாப்பிடும்பொழுது நமது கவனம் சிதறாமல் இருப்பதற்கு நமது கண்களை மூடி, உதட்டை மூடி உண்ணலாம். பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    • முடிந்தவரை சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். கால்களைத் தொங்க வைத்துக் கொண்டோ, நின்றுக் கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    • முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் (10 நிமிடமாவது) முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் (உணவில் காரமோ உப்போ அதிகமானால்) சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி.
    • குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகோ அல்லது நன்கு பசித்த பிறகோ சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.
    • மொத்தத்தில் நமக்கு பிடித்த உணவை பசிக்கும்போது ரசித்து ருசித்து உண்டால் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.


நீர் [நீர்] [சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 


    • நீரை வடிகட்டி குடிப்பதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுக்காக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.
    • மண்பானையில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அது காலிட்டராக ஆகும் வரைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும் பொழுது அந்த நீர் உடலில் பலவித நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருந்தாக மாறுகிறது. 
    • தண்ணீரை எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திரங்களில் ஊற்றி கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. அப்படிக் குடிக்கும்பொழுது அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ஆவியாகிவிடுகிறது. இந்த நீரால் உடலுக்குத் தீங்கு தான் விளையும்.
    • தண்ணீரில் உள்ள நீர்ச்சத்து தாகத்தைப் போக்குவதோடு ஆரோக்கியத்தையும் நம் உடலில் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவோம்.
    • மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தினால் அதிலுள்ள நீர்ச்சத்துக்களை இழக்க நேரிடும். அப்படி குடிக்க நேர்ந்தால் நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [பிரெஷ் ஜூஸ்] போன்றவற்றை பருக வேண்டும். 
    • தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல் தாகம் எடுக்கும்போது உடனே தேவையான அளவு தண்ணீரை நிதானமாக வாய்வைத்துக் குடிக்க வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக்கூடாது (அப்படி குடிக்கும்போது தேவையை விட பலமடங்கு நீரை குடிக்க நேரிடுவதால் நமது சிறுநீரகம் பாதிக்கப்படும்).
    • சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
    • நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,... ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். 
    • பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
    • நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும் (Osteoporosis, Low Bone Mineral Density), எலும்புத் தேய்மானம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள், தலை முடி உதிர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
    • இயற்கை காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கும்போதும், இரசாயண கொசுவிரட்டிகள் இருக்கும் இடத்தில் தூங்கும்போதும், நாம் சுவாசிக்கும் காற்றையே மறுபடியும் மறுபடியும் சுவாசிக்கும் சுழலில் (பூட்டிய அறையில், தலையை போர்த்திக்கொண்டு தூங்குவது) தூங்கும்போது விஷக்காற்று நமது உடலில் பரவி சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு, கர்ப்பையில் தொந்தரவுகள், விதைப்பையில் தொந்தரவுகள், ஆண்மை மற்றும் பெண்மை இழப்பு, மலட்டுத்தன்மை, மூட்டு வலிகள், உடல் சோர்வு,... போன்ற பல இன்னல்களை உருவாக்கும்.

ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

    • அலாரம் வைத்து எழுந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி எழுந்தால் நாம் எப்போதுமே களைப்பாகவும், எரிச்சலுடனும், உடல் வலியுடனும் வாழவேண்டியிருக்கும்.
    • இரவு சீக்கிரமாக படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது சாத்தியப்படும். நாம் இரவு கண்விழித்து தொலைக்காட்சி, கணினி, செல்போன் மற்றும் சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது போன்ற தேவையில்லாத காரியங்களை இரவு 1 மணி வரை பார்த்துவிட்டு காலதாமதமாகப் படுப்பது நமது தவறு தானே.
    • எனவே நாம் எந்த நேரங்களில் எழுந்திருக்கவேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல் நாம் ஒரு 8 மணி நேரத்திற்கு முன்பாக நாம் படுக்கைக்கு செல்லவேண்டும்.
    • முடிந்தவரை இரவு 10 மணிக்குள் தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.
    • இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
    • படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள் அமர்ந்துகொண்டு தூங்கினால் அல்லது தூங்க முயற்சி செய்தால் மனதும், புத்தியும் மிகவிரைவாக அடுக்கி வைத்துவிட்டு உடனே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.
    • தெற்க்கு அல்லது கிழக்கில் [South or East] தலை வைத்துப்படுப்பது மிகவும் நல்லது. அப்படி படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும். வடக்கே [North] தலை வைத்து படுப்பது நல்லதல்ல. அப்படி படுத்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலில் கழிவுகள் தேங்கிவிடும் அதனால் உடலில் ஆங்காங்கே வலிகள் ஏற்படும்.
    • தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
    • புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். 
    • படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
    • குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். 
    • இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். 
    • தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
    • நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும் மற்றும் இருதயம் தொடர்பான தொந்தரவுகள் மற்றும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.
    • இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. 
    • தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
    • டுவா தூக்கம் எனும் ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
    • நமக்கு தூக்கம் வரவில்லை என்றால், குப்புறப்படுத்து கண்களை மூடி நமது இரு மணிக்கட்டுகளையும் தாடைக்கு சப்போர்ட் கொடுத்து சினிமா படங்களில் நடிகைகள் படுத்திருப்பதுபோல காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாக தூங்கிவிடுவோம்.
    • இரவு தூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உங்களது ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக்கொடுப்பதன் மூலமாக நன்றாக தூங்கமுடியும். இந்த இடத்திற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் DU 20 என்று கூறுவார்கள்.
    • இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.



காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]


    • புகைபழக்கம், கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். 
    • கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க] 
    • வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். 
    • தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க] 
    • தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்க கூடாது [நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க] 
    • மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் தரமான கொசுவலையை வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள். 
    • சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா... போன்ற பல வியாதிகள் உண்டாகும். 
    • சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.


உழைப்பு [நெருப்பு] [இருதயம், சிறுகுடல், இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 


    • பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். 
    • உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும். 
    • தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். 
    • இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். 
    • உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம். 
    • தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. 
    • காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும். 
    • காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். 
    • எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை. 


மருத்துவம் என்றால் என்ன?

 நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.


ஆரோக்கியம் என்றால் என்ன?

 நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.


எல்லா வகை வியாதிகளிருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?

  • நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  
  • பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
  • மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
  • உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.
  • இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை. 
    • டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.) 


மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது!

நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 
  • அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 
  • பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 
  • பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  
  • பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,
  • பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 
  • பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,
  • பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 
  • நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
  • அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 
  • நேர்மையாக வாழும்போதும்,
  • சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,
... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


முக்கிய குறிப்பு:

    இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

    ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +91 98 40 98 02 24, +91 97 50 95 63 98 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும் படியுங்கள் / கேளுங்கள். நிச்சயம் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவற்றை காண / பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு







    நாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்?


    நோய்கள் என்றால் என்ன?

    நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல்முறையின்போது (Process) நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

    எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?

    நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை / கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.

    இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும்போது ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம். இவ்வாறு தடுக்கும்போது நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப்பாதையில் தங்கிவிடுகிறது.

    இந்த சூழ்நிலையில் நமது உடலில் சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி, நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும். இந்த செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose) ஏற்படும். இதையும் வியாதி என புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம். இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது. 

    இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும். இந்த நீரை தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள். பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது. இதை தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம். இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதை தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

    நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்ற முடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும். அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

    வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs) படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும். இந்த நிலையை தான் மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம். இதுவே பெருவாரியான சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிக குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

    பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நாம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம் அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில் குறைவான சிற்றலைகள் மட்டுமே திறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும். பெரும்பகுதியான சிற்றலைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான் கழிவுகளின் தேக்கம் வியாதி; கழிவுகளின் வெளியேற்றம் குணம் என்று கூறுகிறோம்.

    இப்போதும் ஒருவருக்கு ஏன் ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள் திட வடிவம் (Solid State) பெறுகிறது. இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி மருத்துக்கள் உட்கொண்டு அவற்றை தடுத்துவிடுகிறோம். பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய் (T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம்.

    ஸ்டீராய்டு (Steroid) பற்றிய பாதிப்புக்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள பதிவு உபயோகமாக இருக்கும். https://goo.gl/KrvPk5

    இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சி மேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போது பயாஸ்பி (Biospy) எடுத்து புற்றுநோயா (Cancer) என சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள். கழிவின் தேக்கத்தில் எங்கு இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர். இது தான் நுரையீரல் புற்றுநோய் (Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.

    எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!

    "நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றையதினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில் தேடுகிறோம்.

    நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்?

    * தும்மல்

    * மூக்கு ஒழுகுதல்

    * சளி  

    * இருமல் மூலமாக வெளியேற்றும்.

    இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போது இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலே அதன் அடர்த்தி அதிகமாகி நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக் கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும்.

    காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

    யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை. 

    யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றியும் மற்றும் பசிக்கவில்லை என உணவின்றியும் ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid, Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல), புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை. 

    இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.


    என்னென்ன ரூபங்களில் நம் சுவாசப் பாதையில் கழிவுகள் தேங்குகின்றன என்பதை பார்ப்போம்:

    காரணம் #1 

    ஜன்னல் மற்றும் கதவுகள் பூட்டப்பட்ட அறையில் தூங்கும்போது.

    நாம் சில காரணங்களுக்காக ஜன்னல்களை பூட்டிக் கொண்டு தூங்குகிறோம். அப்படி காற்று புக முடியாத சூழ்நிலையில் தூங்கும்போது நாம் ஒருமுறை சுவாசித்த மூச்சுக் காற்றையே மறுபடியும் மறுபடியும் சுவாசிக்க ஆரம்பித்து விடுவோம். சுத்தமான காற்றை சுவாசிக்காமல் இத்தகைய காற்றை சுவாசிக்கும்போது அவை நமது உடலில் நச்சுக்கலாக தேங்கும்.

    பொதுவாக நாம் எப்போது ஜன்னல்கள் மற்றும் கதவை பூட்டிக்கொண்டு தூங்குகிறோம்?

    குளிசாதனம் A/C உபயோகப் படுத்தும்போது மற்றும் கொசுவிரட்டிகளை உபயோகப் படுத்தும்போதும் தான்.

    அதற்கான தீர்வு:

    # குளிர்சாதனத்தை பயன்படுத்தினாலும் ஜன்னல்களை திறந்துவைகும் பட்சத்தில் பிராணவாயு (Oxygen) கிடைப்பதில் தடை இருக்காது.

    # கொசுக்களால் தொந்தரவுகள் ஏற்படுமானால் காற்று வரக்கூடிய கொசுவலைகளை ஜன்னல்களில் மாட்டிக்கொள்ளலாம். அதையும் மீறி வரும் கொசுக்களை மின்சாதன கொசு மட்டையை (Electrical Musquito Bat) உபயோகப்படுத்தி அழித்துவிடலாம்.


    காரணம் #2 

    தலையை போர்த்திக்கொண்டு தூங்கும்போது.

    நாம் தலையை போர்த்திக்கொண்டு தூங்கும்போது ஒருமுறை சுவாசித்த காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் சூழல் ஏற்படும். அவ்வாறு சுவாசிப்பதும் உடலில் பலவித பாதிப்புக்களை (தீராத சளி, தொடர் தும்மல், வலிப்பு, சிறுநீரக கல் போன்ற பல தொந்தரவுகளை) ஏற்படுத்தும்.

    அதற்கான தீர்வு:

    # தலையை மட்டும் மூடாமல் கழுத்துவரை போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கலாம்.

    # மின்விசிறியை அணைத்துவிட்டு இயற்கை காற்றோட்டம் உள்ள இடத்தில் தூங்கலாம்.


    காரணம் #3 

    காற்றோட்டமே இல்லாத இடத்தில் தூங்கும்போது.

    நாம் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் முதன்மை வகிப்பது காற்று தான். 

    அதற்கான தீர்வு:

    # எந்த ஒரு வீட்டில் மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காற்ற்றோட்டமும் வெளிச்சமும் தடையின்றி கிடைக்கிறதோ அந்த வீடு தான் நாம் வாழ தகுதியான இடம் என்று அர்த்தம். ஆகவே அத்தகையதொரு வீட்டை குடியிருக்க தேர்ந்தெடுங்கள்.

    # துர்நாற்றம் இருக்கும் இடத்தில் வீடு அமைந்திருந்தால் தாமதிக்காமல் வேறு இடத்திற்கு குடியிருப்பை மாற்றிவிடுங்கள்.

    இத்தகைய எளிய தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொசுக்கடியின்றி காற்றோட்டத்துடன் கூடிய நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும். 

    இதனால் சுவாசம் தொடர்பான வியாதிகளையும் (Wheezing, Asthma, Sinusitis,...) சிறுநீரகம் தொடர்பான வியாதிகளையும் (மூட்டுவலி, கர்ப்பை தொந்தரவுகள், Rheumatoid Arthritis, Kidney Failure, Kidney Stones,..) தடுக்கும் வாய்புகள் அதிகம்.




    இந்த பதிவை புரிந்துகொள்ள நம் உடல் சக்தியை பெரும் முறையையும் அவற்றை எவ்வாறு பராமரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    உடல் சக்தியை பெரும் வழிகளாவன:
    • நாம் உண்ணும் உணவின் மூலமும், 
    • சுவாசிக்கும் காற்றின் மூலமும், 
    • குடிக்கும் நீரின் மூலமும், 
    • எடுக்கும் ஓய்வின் மூலமும், 
    • உடல் உழைப்பின் மூலமும் 

    பெறப்படும் சக்தியானது மூன்று பிரிவுகளாகப் பிரிந்து நம் உடலை பராமரிக்கிறது. அவை


    1. இயக்க சக்தி (Functional Energy)

    2. ஜீரண சக்தி (Digestive Energy)

    3. நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)

    பொதுவாக இந்த சக்திகள் நமது உடலில் சரிசமமாக இருக்கும். நம் உடலின் தேவைக்கேற்ப ஒரு சக்தியானது மற்றொரு சக்தியை தற்காலிகமாக பெற்றுக்கொள்ளும்.

    உதாரணமாக நாம் தேவைக்கு அதிகமாக உணவை உட்கொண்டோமானால் அதை ஜீரணிக்க தேவையான சக்தி இல்லாத பட்சத்தில் நம் இயக்க சக்தியையும் எதிர்ப்பு சக்தியையும் நமது ஜீரண சக்தியானது தற்காலிகமாக பெற்றுக்கொள்ளும். 

    எனவே யாரெல்லாம் உணவை உண்டவுடன் உறங்கி விடுகிறார்களோ அவர்கள் உண்ட உணவு முழுமையாக ஜீரணமாகிவிடும். நன்கு ஜீரணமான உணவை நம் உடல் வீணாக்காமல் தன்னுள் சேமித்து வைத்துக்கொள்ளும். அதனால் தான் நாம் உடல் பருமனாக இருப்பவர்களை பார்த்து "நல்லா திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குனா ஏன் குண்டாக மாட்டாய்" என்று நம்மை அறியாமலே வேடிக்கையாக கூறுவோம்.

    இந்த செயல்முறை Process முடிவு பெற்ற பின் பழையபடி இயக்க சக்தியும் எதிர்ப்பு சக்தியும் இயல்புநிலைக்கு திரும்பி அதனதன் வேலையை செய்ய ஆரம்பித்துவிடும்.

    Cancer புற்றுநோய் வியாபாரங்கள்

    இன்றைய தினத்தில் Cancer புற்றுநோயை மையமாக வைத்து பல வித வியாபாரங்கள் நடைபெற்று வருகிறது. ஏன் பயப்படுகிறோம்? எதற்கு பயப்படுகிறோம்? என்று கூட தெரியாமல் பயப்படுகிறோம். இதில் மருத்துவர்களும் விதிவிலக்கல்ல. 

    புற்றுநோய் விஷயத்தில் "பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம்" என்னும் வாக்கியம் பொருந்தும். 

    கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில நெல் விளையும்னு கூட சொல்லுவானுக.... 


    கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்: 

    # விவசாயதின்போது தெளிக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் புற்றுநோயை உருவாக்குமென்றால் அதை உண்ணும் அனைவருக்கும் தானே புற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்?

    # Refined Oil ல் கலப்படமாக கலக்கப்படுகின்ற Liquid Paraffin என்னும் Petrolium Biproduct இருப்பதால் புற்றுநோய் உருவாகிறது என்றால் செக்கில் ஆட்டிய எண்ணை உபயோகப்படுத்தாத அனைவருக்குமே புற்றுநோயின் பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டும்?

    # கலப்பட பால் குடிப்பதால் தான் புற்றுநோய் உருவாகிறது என்றால் அதை குடிக்கும் அனைவருக்குமே அல்லவா புற்றுநோயின் பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டும்?

    # இன்னும் மைதா மாவு, பரோட்டா என்று புற்றுநோயின் காரணங்களாக பலவற்றை நாம் குறிப்பிடுகின்றோம். இவற்றை தினமும் உண்டு புற்றுநோயின் பாதிப்புகள் ஏதும் இல்லாமல் வாழும் மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

    # வெள்ளை சர்கரை (ஜீனி) உபயோகித்தால் புற்றுநோய் ஏற்படும் என்றால் இன்று உலகில் உள்ள அனைவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கவேண்டுமே? ஏனென்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் வெள்ளை சர்க்கரை உட்கொண்டுதான் இருக்கிறோம்.

    # வெள்ளையா இருக்கிற பால், அரிசி, ஜீனி போன்றவற்றை உபயோகித்தால் புற்றுநோய் வந்துவிடும் என பயமுறுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதைக் கேட்டுவிட்டு வெள்ளை பொருட்கள் உணவில் சேர்கிறதில்லை என பெருமையாக கூறுபவர்களும் உண்டு. 
    இவற்றை நாம் சிந்தித்துபார்த்தாலே நம்மை சுற்றி பல வித வணிகங்களை புரிந்துகொள்ள முடியும். 

    குறிப்பு: 

    நான் ரசாயன மருந்துக்களை, Refined Oil, கலப்பட பால், ஜீனி, பால், மைதா மாவு போன்றவற்றை ஆதரிக்கவில்லை. இவை யாவும் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட நேரடிக் காரணம் இல்லை என்பதை உணர்த்தவே முயற்சிக்கிறேன். 

    இந்த லட்சணத்தில் சில பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் ரத்த புற்றுநோய்க்கு இலவச மருந்து கொடுக்கிறார்கள் என்று காலம்காலமாக நம்மில் பலர் ஏன்? எதற்கு? என்று சிந்திக்காமல் SMS, Whatsapp, Facebook மூலமாகவும் விளம்பர படுத்துகிறோம். ஒரு மருந்து ஆராய்ச்சி நிலையில் இருக்கும்போது சோதனை செய்ய மனித எலிகள் தேவை. அதற்குதான் இவ்வாறு வதந்திகளை கிளப்புகின்றனர்.

    இதில் வேடிக்கை என்னவென்றால் நம் உடலில் ஏற்படும் தொந்தரவுகளின் அடிப்படை காரணம் (தவறான வாழ்க்கைமுறை) தெரியாமல் அவற்றை குணப்படுத்த முடியாது என நமது அரசாங்கம் சட்டம் கூட இயற்றியுள்ளது. மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940) https://goo.gl/RG6zwU

    அந்த பட்டியலில் புற்றுநோயும் மற்றும் இரத்தப் புற்றுநோயும் அடக்கம். இனியாவது சிந்தித்து செயல்படுங்கள் மக்களே.

    Cancer புற்றுநோய் கட்டி எவ்வாறு ஏற்படுகிறது?

    நம் உடலில் நீண்ட நாட்களாக தேங்கும் கழிவுகளே திட வடிவம் பெறுகிறது. இந்த கழிவை வெளியேற்ற நம் உடல் முயற்சி செய்யும்போது வலி ஏற்படும். இதை தான் பரிசோதனை செய்துவிட்டு Cancer புற்றுநோய் கட்டி என்று அழைக்கிறோம். எனவே கழிவின் தேக்கம் வியாதி கழிவின் வெளியேற்றம் குணம் என்பதை புரிந்துகொண்டு நம் உடலின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.


    நம் உடலில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக்கொள்ளும் வழிமுறைகள்:

    1. பசியை உணர்ந்து உணவருந்த வேண்டும். அந்த நேரத்தில் எந்த உணவு பிடிக்கிறதோ அல்லது எந்த உணவை உண்ண வேண்டும் என தோன்றுகிறதோ அதை மட்டும் உண்ணவேண்டும். பிடித்த உணவே நமக்கு மருந்தாகும். அதேநேரத்தில் நமக்கு பிடிக்காத உணவு கழிவாக மாறும்.

    2. தாகம் எடுக்கும்போது மட்டும் தேவையான அளவு நீரை அருந்த வேண்டும். நீரை அன்னாக்க குடிக்க கூடாது. அப்படி குடித்தால் நமது தேவையை விட பலமடங்கு அருந்திவிடுவோம். அவை நீர் கழிவுகளாக மாறிவிடும்.

    3. ஆங்கில மருந்துக்கள், பால் கலந்த டீ மற்றும் காப்பி, புகை பிடிப்பது, தண்ணியடிப்பது, பாக்கு போடுவது போன்றவை போதை வஸ்துக்களே. அவை நம் உடலின் பராமரிப்பு சக்தியை புத்துணர்ச்சிக்காக பயன்படுத்திவிடும். இதனால் நம் உடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற போதிய பராமரிப்பு சக்தி இல்லாமல் போய்விடும். உடலை பலகீனப் படுத்தும். எலும்பு, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    4. நாம் இருக்கும் இடத்தில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். பூட்டிய அறையில் இருக்கும்போதும், கொசுவிரட்டிகளை பயன்படுத்தும்போதும், ரசாயன ஊதுபத்திகளை பயன்படுத்தும் போதும், தலையை போர்த்திக்கொண்டு உறங்கும்போதும் நாம் அசுத்த காற்றை சுவாசிக்கும்போதும் கெட்ட காற்றை சுவாசிக்க நேரிடும். இவ்வாறு சுவாசிக்கும் காற்றானது கழிவுகளாக நமது நுரையீரலில் தேங்கிவிடும். இவற்றை தான் நம் உடல் தும்மல், சளி, இருமல், மூக்கின் நீர் மூலமும், கண்ணீர் மூலமும், காய்ச்சல் மூலமும் வெளியேற்றும். இதற்கு போதிய சக்தி இல்லாதபோது நம் உடல் நமக்கு தலைவலியை ஏற்படுத்தும் அப்போதுதான் நாம் ஓய்வு எடுப்போம் அப்போது நமது இயக்கசக்தியும் பராமரிப்பு சக்தியாக மாற்றப்படும்.  

    5. நம் உடல் கேட்கும்போது ஓய்வையும் உறக்கத்தையும் கொடுக்கவேண்டும். நமக்கு அசதியாக இருக்கிறது தூக்கம் வருகிறது என்றால் நம் உடலின் பராமரிப்பு வேலை நடைபெறுகிறது அதற்கு போதிய சக்தி இல்லை எனவே நமது இயக்க சக்தி தேவைபடுகிறது என்று அர்த்தம். உதாரணமாக நம் உண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றால் அந்த உணவில் இருந்து கெட்ட கொழுப்பு (LDL) அதாவது சரியாக ஜீரணம் ஆகாத அடர்த்தி குறைவான கொழுப்பு உருவாகும். அவை நம் இரத்த குழாய்களில் படியும். அதை தான் மாரடைப்பு Heart Attack மற்றும் பக்கவாதம் Paralysis என கூறுகிறோம். இதை தவிர்க்கவே அசதி ஏற்படும். அப்போது ஓய்வெடுக்கும் பட்சத்தில் நம் உடலில் பித்த நீர் சுரந்து அந்த கெட்ட கொழுப்பை இலவசமாகவே கரைத்துவிடும்.

    6. நம் உடலின் கழிவுகள் பலரூபங்களில் வெளியேறும். அவற்றில் ஒன்று தான் வியர்வை. பெரும்பாலான மக்கள் வியர்வை என்கிற ஒன்றை வரவிடுவதே இல்லை. எனது சொந்த அனுபவத்தில் இந்த வியர்வையை வைத்தே முதுகு பகுதிகளில் எற்படும் வலிகளை சரி செய்திருக்கிறேன். மின்விசிறியை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்தாலே நன்றாக வியர்வை வரும். அப்போது அந்த பகுதியில் தேங்கிய கழிவுகள் வியர்வையின் மூலம் வெளியேறிவிடும். அதன் பின் அங்கு வலி இருக்காது. காய்ச்சலின்போது மருந்துக்களின்றி ஓய்வு எடுக்கும்போது இந்த கழிவுகளை உடல் வெப்பத்தின் மூலம் வெளியேற்றிவிடும். எனவே வியர்வை மற்றும் காய்ச்சலை அனுமதியுங்கள். 


    மக்கள் மத்தியில் கேன்சர் பற்றிய குழப்பத்தை போக்கி உண்மையான விழிப்புணர்வை ஏற்படுத்த "கேன்சர் என்பது நோயா? கட்டியா?" என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கியுள்ளேன்.


    எந்த விஷயம் வணிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் லாபத்தைத் தருமோ, அந்தக் கருத்துக்கள் மட்டுமே மக்களுக்கு பரப்பப்படுகிறது. அதனால், உண்மை என்பது எப்போதும் மறைமுகமாகத்தான் இருந்து கொண்டிருக்கும்.
    இன்று பரவலாக மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் யாரும் மாரடைப்பிற்கான உண்மையான காரணத்தை சுட்டிக்காட்டுவதில்லை. இதுவே நமக்கு மாரடைப்பை பற்றிய தெளிவு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணமாகிவிட்டது. 


    முதலில் ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதற்கான பொதுவான காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

    காரணம் #1 

    நம் உண்ணும் உணவு சரியாக ஜீரணம் ஆகாதபோது அதிலிருந்து உற்பத்தியாகும் கொழுப்பானது அடர்த்தி குறைவானதாக இருக்கும். அதை தான் LDL - Low Density Lipoprotein என்று குறிப்பிடுகிறார்கள். அவை நம் ரத்த குழாயில் எளிதில் படியக்கூடிய தன்மையுடையது. பொதுவாக இந்தக் கொழுப்புகள் தான் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். 

    எனவே தான் நாம் கொழுப்பு என்கிற வார்த்தையை கேட்டாலே பயப்படுகிறோம். இந்த பயத்தைத்தான் மருத்துவத்தை வியாபாரமாக செய்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

    காரணம் #2 

    நம் ரத்தக் குழாய்களில் தேங்கும் கழிவுகள் ரத்தத்துடன் வினைபுரிந்து உறைந்து ரத்தக் கட்டிகளாக மாறி ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். எனவே கொழுப்பு மட்டும்தான் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றில்லை ரத்தக்கட்டும் ஏற்படுத்தும். சாமர்த்தியமாக கொழுப்பை தவிர்க்கும் நாம் ரத்த உறைவை எவ்வாறு தவிர்க்கப்போகிறோம்?


    முதலில் நம் உடம்பில் கொழுப்பின் அவசியத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்

    நம் உடலின் அத்தியாவசிய தேவையான வைட்டமின்களில் தண்ணீரில் கரைபவை, கொழுப்பில் கரையக்கூடியவை என்று இரு வகை உண்டு. 

    # இதில் வைட்டமின் A, D, E, K இவை கொழுப்பில் மட்டுமே கரையக்கூடியவை.

    # வைட்டமின் C, B, ஃபோலிக் அமிலம், நியாசின், பிரிடாக்சின், கோபாலமின் எனப்படும் பி12 இவை தண்ணீரில் கரையக்கூடியதாகும்.

    நம் உடலால் வைட்டமின்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியாது. எனவே தினமும் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் ஆகும். நாம் கொழுப்பை தவிர்ப்பதால் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் A, D, E, K போன்றவை கிடைக்காமல் போய்விடும்.


    வைட்டமின் A யின் பயன்கள்:

    இவை கண் பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. உடலின் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கும் உதவுவதால், உடலின் எதிர்ப்பு சக்திக்கும் அவசியம். அதேபோல மியுக்கஸ் (சளி) படலம் சேர்ந்திருப்பதற்கு இவ்வைட்டமின் அத்தியாவசியமானது. இத்தகைய திசுப்படலம் இல்லை எனில் நுண்ணுயிர் கிருமிகள் உள்ளே நுழைந்து மேலும் பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். 

    வைட்டமின் A குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

    வைட்டமின் D யின் பயன்கள்:

    வைட்டமின் D யின் முக்கியமான உடலியல் செயல்பாடு, இரத்ததில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் அளவை சீராக்கி வைப்பது மட்டுமே ஆகும். கால்சியம் அதிகரிக்க உடல் எலும்புகள் பற்கள் வலுவானதாக மாறுகின்றன. மேலும் இதர வைட்டமின்கள், என்சைம்கள், ஹார்மோன்கள் செயல் பட கிரியாஊக்கியாக கால்சியம் செயல் பட , எலும்புகளில் தனிமங்கள் சேர வைட்டமின் Dஅவசியம் ஆகும்.

    வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

    வைட்டமின் E யின் பயன்கள்:

    தசைகளை வலுவாக்க, எதிர்ப்பு சக்தியைக் கூட்ட, இனப்பெருக்கத்திற்கு, இளமையை தக்க வைக்க உதவுகிறது. உண்மையில் வைட்டமின் ஈ இல்லா விட்டால் வைட்டமின் Aயும் Cயும் உடலில் அழிந்துவிடும். இந்த இரு வைட்டமின்களையும் பாதுகாப்பதுதான் ஈ-யின் முக்கிய வேலை. 

    வைட்டமின் ஈ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

    வைட்டமின் K யின் பயன்கள்:

    இவை தக்க சமயத்தில் ரத்தத்தை உறைய வைக்க.
    வைட்டமின் `K' குறைந்தால் விபத்து மற்றும் பிரசவ நேரத்தில் அதிகப்படியான ரத்தம் வெளியேறக்கூடிய ஆபத்து ஏற்படும்.

    மொத்தத்தில் நம் மீது கொழுப்பை பற்றிய பயத்தை ஏற்படுத்தினால் நாம் அவற்றை தவிர்த்துவிடுவோம். அப்படி தவிர்க்கும் பட்சத்தில் வைட்டமின் எ, டி, ஈ, கே கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அப்படி சிக்கல் ஏற்பட்டால் கண்பார்வை, பற்கள், எலும்புகள், ரத்தம் உறைதல், குழந்தைப்பேறு போன்றவற்றிலும் பாதிப்புகள் ஏற்படும். நோய் எதிர்ப்புசக்தியும் வலுவிழந்து நுண்ணுயிர் கிருமிகளால் மேலும் பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.


    பின் எவ்வாறு தான் மாரடைப்பு வராமல் தடுப்பது?

    முதலில் உடலின் அடிப்படையை புரிந்துக்கொள்ள வேண்டும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது முன்னோர்கள் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்கிற ரகசியத்தை அறிந்துகொண்டு நாமும் அவற்றை பின்பற்றினால் போதும். 

    1. உணவின் செரிமானம்

    நம் முன்னோர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் உடலுழைப்பு அதிகமாக இருந்தது. எனவே அவர்கள் பசியுடனே உணவை உண்ண நேர்ந்தது. அவ்வாறு உண்ணும் உணவானது எளிதில் ஜீரணம் ஆகி உடலுக்கு சக்தியை கொடுத்தது. ஆனால் இன்றோ உடலுழைப்பு குறைவாக இருப்பதால் நமக்கு பசி அதிகம் எடுப்பதில்லை. ஆனாலும் நாம் மருத்துவ வியாபாரிகளின் அறிவுரையை பின்பற்றி கடிகார நேரத்தை பின்பற்றி உணவுகளை உட்கொள்கிறோம். 

    பொதுவாக பசியெடுக்கும்போது நம் உடலில் ஜீரண சுரப்பிகள் செரிமானத்திற்கு தேவையான Enzymesநொதிகள் மற்றும் Acidsஅமிலங்களை சுரந்து தயார் நிலையில் இருக்கும். அப்போது உட்கொள்ளும் உணவுகள் முழுமையாக ஜீரணமாகும். அத்தகைய சமயத்தில் தான் தனமான அடர்த்தி அதிகமான கொழுப்பு (HDL - High Density Lipoprotein) உருவாகும்.

    அதே நேரத்தில் பசி எடுக்காமல் உண்ணும் உணவை ஜீரணிக்க நம் உடலில் போதிய Enzymesநொதிகள் மற்றும் Acidsஅமிலங்களை சுரந்திருக்காது. அப்போது நாம் உட்கொள்ளும் உணவானது சரியாக ஜீரணமாகாமல் அடர்த்தி குறைவான கொழுப்பை (LDL - Low Density Lipoprotein) உற்பத்திபண்ணும். இவை நம் ரத்த குழாயில் எளிதில் படியக்கூடிய தன்மையுடையது. பொதுவாக இந்தக் கொழுப்புகள் தான் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். 

    2. தூங்கும் நேரம்

    பொதுவாக ஒரு பழக்கத்தை 21 நாட்கள் பின்பற்றினாலே அது நம் தினசரி பழக்கமாகிவிடும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். உதாரணமாக 21 நாட்கள் தொடர்ந்து காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தால் 22ஆம் நாள் முதல் அலாரம் இல்லாமலே முழிப்பு வந்துவிடும். அன்று முதல் காலையில் முழிப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிடும்.

    21 நாட்கள் பழக்கத்துக்கே இப்படியென்றால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரவில் விரைவாக தூங்கி பழகி இருக்கிறோம். அப்படி தூங்கும் பழக்கத்தால் நம் உடலானது தன் தினசரி பராமரிப்பு வேலையை எந்த தங்குதடையுமின்றி செய்துவந்தது. குறிப்பாக பல காலமாக இரவு 11 மணியளவில் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறோம். அந்த நேரத்தில் நம் உடலில் பித்தநீர அதிகளவில் சுரந்து அதன் பராமரிப்பு வேலையில் ஈடுபடும். அந்த பித்தநீரானது நம் ரத்த குழாய்களில் சென்று அங்கு படிந்திருக்கும் LDL கொழுப்புக்களையும் ரத்தக்கட்டுகளையும் கரைத்துவிடும். 

    அதே நேரத்தில் நாம் விழித்திருந்தோமானால் இந்த பித்தநீர் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். இன்று யாரெல்லாம் தாமதமாக தூங்க செல்கிறோமோ அவர்களுக்குக்கெல்லாம் மாரடைப்பு, பக்கவாதம், மூலம், உடலில் பல இடங்களில் வலிகள், கொழுப்புக் கட்டிகள், மன அழுத்தம், அதிகப்படியான கோபம், உடல் சோர்வு, அதிகப்படியான தூக்கம் போன்ற பலவித தொந்தரவுகள் ஏற்படுகின்றது.

    3. பிடித்த உணவை உட்கொள்ளுதல்

    நம் முன்னோர்கள் எப்போதும் உணவுகளை கண்டு அஞ்சியதில்லை. அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால் பஞ்ச காலங்களில் உணவு கிடைக்காமல் தான் இறந்திருக்கின்றனர். தங்கள் வருமானத்திற்கு ஏற்ப கிடைத்த உணவுகளை தான் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். 

    ஆனால் நாமோ நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ தொலைக்காட்சியில், பத்திரிக்கைகளில் நல்லது என்று விளம்பரப்படுத்தும் அனைத்தையும் வாங்கி உண்ணுகிறோம். உண்மையில் நமக்கு என்ன உணவு தேவையோ அதை நம் உடலே உணர்வுகள் மூலம் உணர்த்தும். உதாரணமாக குளிர்காலங்களில் காரமான உணவை சூடாக உண்ண விரும்புகிறோம். அதே நேரத்தில் வெயில் காலங்களில் குளிர்ச்சியான காரம் குறைவான உணவுகளை உண்ண விரும்புகிறோம்.

    நமது உடலுக்கு தேவையான சுவையை உண்ணும்போது அதன் சுவை நன்றாக இருக்கும். நம் உடலுக்கு தேவையான அளவு உண்டதும் திகட்டுதல் உணர்வை ஏற்படுத்தும். தேவையற்றதை உண்டால் வெறுப்பாகவும், சுவயற்றதாகவும், குமட்டலயும் நம் உடலே ஏற்படுத்தி உண்ணுவதை தடை செய்யும்.

    இதன் காரணமாகத்தான் சர்க்கரை நோய் என்று முத்திரை குத்தப்பட்டோர் தங்களுக்கு தேவைப்படும் இனிப்பு சுவையை விரும்புகிறார்கள். மாரடைப்பு உள்ளவர்கள் கொழுப்பு சத்து உள்ள உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள். அந்த உணவுகளே அவர்கள் உடலில் ஏற்பட்ட தொந்தரவிற்கான நிரந்தர தீர்வைத் தரும்.

    நமக்கு பிடித்தமான உணவுகளை உண்ணும்போது அவையே மருந்துக்களாக மாறி நமது பிணிகளை களைகின்றது. 

    பால் கலந்த டீ மற்றும் காப்பியை அருந்திவிட்டு பிடித்ததை தான் உண்கிறேன் என்று கூறக் கூடாது. டீ மற்றும் காப்பி போன்றவைகள் உணவுகள் அல்ல போதை வஸ்துக்கள். அதனால் தான் பால் அருந்துவதை சத்து என்று கூறும் நாம் டீ சத்து காப்பி சத்து என்று கூறுவதில்லை. இத்தகைய போதை பொருட்களை அருந்தினால் உடலுக்கு உற்சாகத்தை தரும் எனவே தான் இவற்றை உற்சாக பானம் என்று அழைக்கிறோம்.

    எனவே பசிக்கும்போது உங்களுக்கு பிடித்த உணவுகளை (பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள், இரசாயனம் கலக்காத உணவுகளை,...) உட்கொண்டு, இரவு சீக்கிரம் (9 மணிக்குள்) தூங்கச் சென்று மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.





    மருத்துவம் என்றால் என்ன?

     நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.


    ஆரோக்கியம் என்றால் என்ன?

     நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.

    நாம் அன்பாக இருந்தால் செல்லப்பிராணிகளிடம் இருந்தும் சகமனிதர்களிடம் இருந்தும் ஆற்றலை பெறமுடியும்.

     # நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.



    # நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  

    # பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    # பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

    # மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

    # டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

    # உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

    # இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.




    நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

    எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

    # அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 

    # பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

    # பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

    # பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

    # பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

    # பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

    # பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

    # நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

    # அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 

    # நேர்மையாக வாழும்போதும்,

    # சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

    ... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

     நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


    ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

    நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

    நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


    மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

    http://reghahealthcare.blogspot.in

    https://www.facebook.com/ReghaHealthCare

    https://www.facebook.com/groups/reghahealthcare

    https://www.facebook.com/groups/811220052306876


    முக்கிய குறிப்பு:

    இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

    ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

    மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

    சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

     "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"  Youtube Channel முகவரி
     "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!"  Youtube Channel முகவரி

     "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவின் முகவரி
     "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" Telegram குழுவின் முகவரி