நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? ஆடியோ தொடர்




மருத்துவம் என்றால் என்ன?

 நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.

ஆரோக்கியம் என்றால் என்ன?

    நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.
    
    "நாமே மருத்துவர்" என்கிற உண்மையை நாம் புரிந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழ நமக்கு எந்தவொரு மருந்தோ? மருத்துவமோ? நுட்பமோ? தேவைப்படாது. நமது உடலின் இயக்கத்தை புரியவைப்பதே இந்த தொடரின் நோக்கம். ஆரோக்கியம் தொடர்பான தேடல் இருப்பவர்களுக்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.  

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர் - அறிமுகம்

.
  • மருத்துவர்கள் என்ன காரணத்தால் கடவுளுக்கு நிகராக கருதப்பட்டார்கள்?
  • இன்றைய மருத்துவத்தின் நிலை?
  • நமது அறியாமையை வியாபாரிகள் எவ்வாறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்? 
    இது போன்ற விபரங்களை இந்த அறிமுகப்பகுதியில் பகிர்ந்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் இந்த ஆடியோவை கேட்டு பயன்பெறுங்கள்.



பாகம் - ௦1
வரும்முன் காப்பதே சிறந்தது!

    நம் உடலில் ஒரு பிரச்சினை ஏற்படும் முன்னே தடுப்பது தானே சிறந்தது. அதனை பற்றி தான் இந்த ஆடியோ பதிவு அலசுகிறது.



பாகம் - ௦2
உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம்!

Both Body and Mind Decides our Health!    

  • உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம் என்பது கூட தெரியாமல் தான் இன்றைய மருத்துவ உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இதனை புரிய வைக்க உருவாக்கியது தான் இந்த வீடியோ பதிவு.
  • முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு நலமாக இருக்கிறார் என்று மருத்துவ அறிக்கை பெற்ற நபர் நான்கு நாட்களில் இறந்துவிட்டார். இத்தனைக்கும் உணவுக்கட்டுப்பாட்டை சரியாக பின்பற்றி வந்துள்ளார் அந்த நபர். அவரது மரணத்திற்கான காரணதை தெளிவாக விளக்கியுள்ளேன்.
  • சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உள்ளது என்று நான்கு வருடத்திற்கு முன்பே மருத்துவர்களால் பயமுறுதப்பட்ட நபர் இன்றும் "டயாலிசிஸ்" மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளாமல் வாழ்வதற்கான காரணதை தெளிவாக விளக்கியுள்ளேன்.
  • தினமும் ஐந்து முறை காப்பி குடித்த நபர் அதனை ஒரு முறையாக குறைத்த பின்னர் தொப்பை கரைந்த காரணதை தெளிவாக விளக்கியுள்ளேன்.
  • மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறையையும் ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து தற்காலிகமாக விடுபட உதவும் முத்திரையையும் பகிர்ந்துள்ளேன்.



பாகம் 03 நம் உடலின் வலிமையை தெரிந்து கொள்வோம்!

    நாம் நமது உடலின் வலிமையை தெரிந்துகொள்ள தவறினால் நாமும் யானைகள் போல் அடிமை வாழ்கையை வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவும் மருந்தும் மட்டும் போதாது என்கிற கருத்தை இந்த ஆடியோ பதிவில் சில உதாரணங்களுடன் விளக்கியுள்ளேன்.


பாகம் 4
சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்!

    
    இன்று பெரும்பான்மையான மக்கள் சொந்த செலவில் சூனியம் வைக்கும் வேலையை தான் செய்துகொண்டு இருக்கிறோம். சில தேவையற்ற பொருட்களை நம் வீட்டினுள் அனுமதிப்பதே காலத்திற்கும் நமது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை பறித்துவிடுகிறது. இதனைப்பற்றி தான் இந்த ஆடியோ பதிவில் தெளிவாக பகிர்ந்துள்ளேன்.




பாகம் 05
தடுப்பூசி அவசியம்தானா?


  • தடுப்பூசியின் மறுபக்கம், 
  • Anti Vaccination Leage (தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடங்கிய அமைப்பு), 
  • கிருமிகளிடமிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக்கொள்வது, 
  • காய்ச்சல் நமக்கு நன்மைதான் செய்கிறது   
போன்றவற்றை இந்த ஆடியோ பதிவில் தெளிவாக விளக்கியுள்ளேன். 













டீ காப்பி நமக்கு தேவைதானா?

இந்த பதிவை youtube இல் பார்க்க விரும்பினால் இந்த லிங்கிற்கு செல்லவும் https://www.youtube.com/watch?v=TkvkJozBpQc

டீ காப்பி என்பது பலரால் விரும்பி குடிக்கப்படும் ஒரு உற்சாக பானமாக திகழ்ந்து வருகிறது. அனைவரும் இதனை வீட்டிலேயே தயாரித்து குடும்பமாக பருகி வருகிறோம். அதில் இருக்கும் சாதகங்களை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதிலிருக்கும் பாதகங்களை நாம் அறிந்திருக்கவில்லை. அதனை பற்றி அலசுவதே இந்த ஆடியோ பதிவின் நோக்கம்.


மருத்துவம் என்றால் என்ன?

நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.

ஆரோக்கியம் என்றால் என்ன?

நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.


 # நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.


# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  

# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.



நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 


# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

# அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 

# நேர்மையாக வாழும்போதும்,

# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876


முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"  Youtube Channel முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!"  Youtube Channel முகவரி

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவின் முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" Telegram குழுவின் முகவரி

இரத்ததானம் அவசியம்தானா?


"ரத்ததானம் அவசியம் தானா?" என்கிற தலைப்பில் நான் பகிர்ந்து கொண்ட இந்த ஆடியோ பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். 

இரத்ததானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்றால், மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எவரும் அவ்வளவாக இரத்ததானம் செய்வதில்லையே ஏன்?

சாதாரண மக்கள் இரத்ததானம் செய்தார்கள் என்று மருத்துவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது போல, தாங்களும் இரத்ததானம் செய்ததாக செய்யாமலேயே எத்தனை பாராட்டுப் பத்திரங்களை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், எந்த மருத்துவராவது தானும் ஒரு சாதாரண மனிதருக்கு இரத்ததானம் செய்தேன் என்பதற்கு அச்சாதாரண மனிதரின் சான்று ஒன்றையாவது காட்ட முடியுமா?

பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகன இயந்திரத்தின் அதிமுக்கிய பாகங்களை பெட்ரோல் கொண்டுதான் கழுவ முடியும் என்பது போல தொண்ணூறு சதவிகித தான இரத்தம் விபத்தில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது வெளி உபயோகத்திற்காகத்தான் தேவைப்படுகிறது.

மனிதர்கள் எல்லோருமே விபத்தில் சிக்குவதில்லை. அப்படி ஆங்காங்கே சிக்குபவர்களைக் காக்க, ஆங்காங்கே மருத்துவதுறையில் பணிபுரியும் ஊழியர்களின் இரத்ததானமே போதுமானதே!

இதனைச் செய்யாமல் ஏன் மக்களிடம் இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்?

இத்தனைக்கும் தானமாக பெறப்பட்ட இரத்தமானது முப்பது நாட்களுக்குள் உபயோகப்படுத்தவில்லை என்றால் கெட்டுவிடும்.

கோடி கோடியாக செலவு செய்தாலும் உற்பத்தி செய்ய முடியாத இரத்தத்தைச் சாதாரண மனிதர்கள் தானாக மனம் இரங்கி மற்ற மனித உயிரைக் காக்க வேண்டும் என்ற நன்னோக்கில் தானமாக தரும் போது, உயிரைக் காப்பதையே பிரதான நோக்கமாக கொண்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தானமாக கொடுக்கப்பட்ட இரத்தத்தைப் பரிசோதனை செய்தோம் என்று லட்சம் லட்சமாக சிகிச்சைக் கட்டணத்திற்கு உள்ளேயே அல்பத்தனமான ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிப்பது ஏன்?

சிலர் தங்களின் சுப தினங்களில் ரத்ததானம் செய்வதைக் கடமையாக கொண்டுள்ளனர். அத்தோடு பல தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அவ்வப்போது ஆங்காங்கே முகாம் நடத்தி இரத்தம் சேகரிகத்தும் கொடுக்கிறார்கள். ஆனால், ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றால், ஒன்றுக்கு இரண்டாக அல்லது மூன்று யூனிட்டாக அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள் என கட்டாயமாக இரத்ததானம் செய்த பிறகுதான், இரத்த வங்கிகளுடைய மருத்துவமனைகள் பரிசோதனைகள் முடிந்து நிலுவையாக உள்ள தங்களின் கையிருப்பு இரத்தத்தையே எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள்.

ஒருவேளை இரத்த கொடையாளிகளே விபத்தில் சிக்க நேரிட்டாலும் இதே நிலைதான். இரத்த கொடையாளரிடமே இரத்தகொடையளிக்க எவரையாவது அழைத்து வரும்படி கட்டாயப்படுத்துவது கொடுமையிலும் கொடுமையல்லவா?

அப்படியானால், "யாருக்காவது பயன்படும் என்ற நல்ல நோக்கில் கொடையாளிகள் கொடுத்த இரத்தம் எங்கே போகிறது?"

இரத்த சேமிப்பு வங்கிகள் இது குறித்த கணக்குகளை மக்களின் பார்வைக்கு அல்லது தானக் கொடையாளர்களின் பார்வைக்கு கொண்டு சென்றது உண்டா?

இரத்ததான முகாம்கள் மூலம் உங்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்தம் இன்னாரின் பயன்பாட்டுக்காக உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை கொடையாளருக்கும், இன்னாருடைய இரத்தம்தான் உங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது என்ற தகவலை பயனடைந்தவருக்கும் தெரிவிக்க வேண்டியது மருத்துவத்துறையின் கடமையல்லவா?

இவைகளை சம்பந்தப்பட்ட இருவரும் தெரிந்து கொள்வது எந்த வகையில் நியாயமற்றது? ஆனாலும், மருத்துவத்துறை இதுவரை செய்தது இல்லை. இனியும் செய்யப்போவது இல்லை. ஏன் தெரியுமா?

நிச்சயமாக இதில் ஏதோ தில்லுமுல்லுகள் நடைபெறுகிறது. ஆனால், இப்படியொரு சந்தேகம் இரத்த தானம் செய்யும் எவருக்குமே தோன்றாதது ஏன்?

ஒருவேளை, எங்காவது அபூர்வமாக தில்லுமுல்லுகள் நடக்கும்; அதற்கு ஏன் நாம் அலட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் அதுவும் நிச்சயமாக தவறு. ஏனெனில், இரத்த தானம் பெறும் எல்லா நிலையங்களிலுமே இத்தகைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதே என் குற்றச்சாற்று!

நாம் தானமாக கொடுக்கும் சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே நம் உடல் தானாகவே சுரந்து கொள்ளும் என்று கூறப்படுகின்றது. 

அதெப்படி சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே, ஊட்டச்சத்து இல்லாமல் தானாகவே ஊற கிடைக்கும்?

மருத்துவர்கள் உண்ணும் உணவைவிட சராசரி மனிதர்களாகிய நாம் தரமானதொரு உணவை உண்ணுவிடப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, மருத்துவர்கள் இரத்ததானம் செய்யாததன் மூலம் அவர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லாமலும், மக்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடும் இருக்கிறார்கள் என சொல்ல முடியுமா?

இரத்ததானத்தால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது என்பதும் முதல் நோக்கிலேயே ஏற்கத்தக்கது அல்ல. அதாவது, ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுவதும் விஷம்தானே? இல்லையில்லை, பாலோடு சேர்ந்த விஷம் ஊட்டச்சத்து மிக்க பாலாகி விட்டது என சொல்ல முடியுமா?

இதேபோல, புதிதாக உற்பத்தியாகும் சுமார் அரை லிட்டர் புது இரத்தம் ஏற்கனவே உடலில் அசுத்தமாக உள்ள ஐந்தரை லிட்டர் இரத்தத்தோடு சேர்ந்து அவைகளையும் புது இரத்தமாக்கி விடுகிறது என்பது எவ்வளவு புத்திசாலித்தனமான கட்டுக்கதை.

அது சரி, புது இரத்தம் சுரந்துதான் புத்துணர்ச்சி தருகிறது என்றால், இரத்ததானம் செய்பவர்கள் எல்லாம் புத்துணர்ச்சி இல்லாதவர்களா? 

அவர்களின் இரத்தம் அசுத்தமானதா? அசுத்தமான இரத்தத்தை எதற்கு தானமாக எடுத்து ஆபத்தில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்? எப்படி காப்பாற்ற முடியும்?

இதனால், நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதும் சரியல்ல. 400 மில்லி இரத்த இழப்பால் நமக்கு பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அதே அளவிற்கு இரத்தம் சிந்தும்போது ஏன் சுய நினைவை இழந்து மயக்கமடைகிறார்கள்?

நாம் கொடுக்கும் 400 மில்லி இரத்தத்தால் நம் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அல்லாதோருக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் இரத்தத்தை அந்நோயாளியிடமே எடுத்துக் கொள்ளலாமே!

எனவே, 400 மில்லி இரத்தம் நம் உடலிலிருந்து இழப்பது நிச்சயமாக நம் உடலுக்குக் கெடுதியானதே. எப்படி?

இரத்தம் கொடுக்கும் ஒரு சிலருக்கு உடனடியாக மயக்கம் வரும் என்பதை மருத்துவத்துறையே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. ஆனால், மயக்கம் உடலுக்கு மிகவும் நல்லது என்று எந்த மருத்துவமும் சொல்வதில்லையே!

உண்மை இப்படி வெட்ட வெளிச்சமாக இருக்கும்போது, மயக்கமடைந்தவரிடம் இருந்து பெறப்பட்ட தான இரத்தத்தை அவருக்கே திரும்ப செலுத்தி விடுவதுதானே தானத்தின் நியாயம். ஆனால், அப்படி ஒருபோதும் செய்வதில்லையே!

மயக்கம் ஏற்பட்டால் உடனே காலைத்தூக்கி பிடிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இரத்ததானம் செய்யும் இடத்தில் மயக்கம் வந்தால் காலைத்தூக்கிப்பிடித்து தற்காலிகமாக காப்பாற்றி விடுவார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இதற்காகத்தான் சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அங்கேயே 200 மில்லி குளிர்ச்சியான செயற்கை பானம் மற்றும் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டை உண்ண வைத்து படுக்க வைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை இவ்வெற்று சம்பிரதாய சடங்குக்கு முடிந்து அவ்விடத்தை விட்டு சென்ற பின் ஒருவர் மயக்கம் போட்டால், அவர் இரத்ததானம் கொடுத்ததால்தான் மயக்கம் போட்டார் என்பதையும், அவரைக்காப்பாற்ற காலைத் தூக்கி பிடிக்க வேண்டும் என்பதும் யாருக்கு தெரியும். இல்லை அவரேதான் முன்னெச்சரிக்கையாகவோ சொல்லி வைக்க முடியுமா அல்லது மயக்கத்தின் ஊடே எழுந்து சொல்ல முடியுமா?

தானம் செய்தவரை டாஸ்மாக்கில் தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறான் பார் என்றல்லவா போவோர் வருவோர் நினைப்பார்கள். திட்டி தீர்ப்பார்கள்.

கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் கிடைக்கவில்லை என்றால் மரத்துப்போய் குத்தும், குடையும் என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் பல முறை அனுபவபூர்வமாகவே உணர்ந்து இருக்கிறோம் அல்லவா? 

இரத்த ஓட்டத்தை சரி செய்து மரத்துப் போனதை திரும்பவும் சாதாரண நிலைக்கு கொண்டுவர அத்தருணத்தில் வலியால் என்ன பாடுபடுகிறோம். அம்முயற்சி துவங்கிய பின்னர் குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரை ஆகிறதுதானே! கை, கால் மரப்புக்கே இப்படிப்பட்ட விளைவு என்றால், மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஏன் மருத்துவர்களின் மூளையைப் போல் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்பட நமது மூளை மட்டும் ஏன் மறுக்கிறது?

இரத்ததானம் செய்தவர் மயக்கம் போட்டு விழுந்து கிடப்பதை, தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறார். போதை தெளிந்ததும் எழுந்து விடுவார் என்ற தெளிந்த சிந்தனையில் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால், புண்ணியம் தேடி இரத்ததானம் கொடுத்தவர் புகலிடம் தேடி சாவை சந்திக்க வேண்டியிருக்கும். அல்ல அல்ல. இப்படி நிச்சயமாக நடந்திருக்கும். சாலையில் சென்றவர் சுருண்டு விழுந்து செத்தார் என்ற செய்தியை படித்திருக்கிறோம் அல்லவா? அச்சாவுகள் இந்தவகையைச் சார்ந்தது அல்ல என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? இப்படி சாவை சந்தித்தவர்களின் புள்ளி விபரங்கள் யாருக்கு தெரியும்!

இதுபோன்றதொரு நிலமையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரத்ததானம் கொடுப்பவர் தக்க பாதுகாவலர்களோடு வர வேண்டும் என மருத்துவத்துறை இன்று வரையிலும் கூட அறிவுறுத்தியது இல்லை. இப்படி அறிவுறுத்தினால் யார் இரத்ததானம் செய்ய முன்வருவார்கள்? என்ற அடிப்படை காரணம் இதில் இல்லாமலும் இல்லை.

இரத்ததானம் செய்தவரின் உடல் நிலையைப் பொறுத்து சோர்வு ஏற்படும். இது எப்படிப்பட்ட பலம் கொண்டவராக இருந்தாலும் நிச்சயம் என்பதை நானே உணர்வுப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். ஆனாலும், உடனே மயக்கம் அடையாத இரத்ததான கொடையாளர்கள் தங்களின் சோர்வுக்கும், உடல் ஒத்துழையாமைக்கும் தானம்தான் காரணம் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியாது.

நம்மால் தானம் கொடுக்கப்பட்ட 400 மில்லி இரத்தம் மீண்டும் புதிதாக சாதாரணமாக உண்ணும் உணவில் உற்பத்தியாகாது. அதற்காக இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பல மாதங்கள் தொடர்ந்து உண்ண வேண்டியிருக்கிறது. கட்டாய ஓய்வும் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதனையெல்லாம் புண்ணியம்தேடி சர்வ சாதாரணமாக இரத்ததானம் செய்பவர்கள் கணித்து விட முடியாது. உடல் தங்களது பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், ஓய்வு கொடுத்து விடுவார்களே ஒழிய, இரத்ததானம்தான் காரணமாக இருக்குமோ என அறியக்கூட முற்படுவதில்லை.

மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு இச்சாதக பாதக விளைவுகளை கணிக்கும் திறன் இருப்பதாலும், உடலுக்கு தேவையில்லாத செலவுடன் கட்டாய ஓய்வளித்து வருமானத்தை இழக்க விரும்பாததாலுமே இரத்ததானம் செய்வதில்லை.

கடந்த 2007 ஆம் ஆண்டில் சகோதரி ஒருத்தி விபத்தில் சிக்கி நான் இரத்ததானம் செய்த வகையில் இதில் குறிப்பிட்டுள்ளபடியான தில்லுமுல்லுகளை உணர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனை இயக்குனருக்கு சட்டப்படியான அறிவிப்பை அனுப்பினேன்.

அதற்கு அம்மருத்துவ அறிவாளிகள் கேட்ட கேள்விகள் எதற்கும் நியாயமான பதிலை சொல்ல முடியாமல், மடத்தனமாக இரத்தம் மரத்தில் காய்க்காது என்பன போன்ற உணர்ச்சியூட்டும் வசனங்களையே திரும்பத்திரும்ப பதிலாக தந்தனர். அவளின் தொடர் சிகிச்சையை காரணம் காட்டி, அவளே என்னிடம் மன்றாடியதால் வழக்கு தொடுக்க இயலாமல் போய் விட்டது. இதுபோன்ற தொடர் சிகிச்சை காரணங்கள்தான் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர தடையாய் இருக்கிறது.

மொத்தத்தில், இரத்ததானம் உடலுக்கு நல்லது என்றால், முதலில் அதை மருத்துவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். உனக்கேன் அவர்கள் மீது அவ்வளவு அக்கறை என்று சந்தேக கண்ணோட்டத்தோடோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ பார்க்காதீர்கள்.

ஏனெனில், அவர்கள் உடல் நலத்தோடு இருந்தால்தானே நாமும் உடல் நலத்தோடு இருக்க முடியும்! அதுவரை, மருத்துவர்கள் உண்டு கொழுப்பதற்கு உணர்ச்சி வயப்பட்டோ அல்லது புண்ணியம் தேடியோ தேவையில்லாமல் இரத்ததானம் செய்வதை தவிர்ப்போம்.

மாறாக, வி(ஆ)பத்தில் சிக்கும் உற்றார், உறவினர், நண்பர்களின் தேவைக்கு ஏற்ப இரத்ததானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதோடு, தானத்திற்கு பின் நமது உடல் நலனில் தகுந்த அக்கரை கொள்வோம். நமக்காக அடுத்தவர் தானம் செய்வதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்போம். மருந்தில்லா மகிழ்ச்சி வாழ்வு வாழ்வோம்.

கட்டுரை தொகுப்பு : சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா


ரத்ததானம் குறித்து நான் பகிர்ந்துகொண்ட ஆடியோ பதிவுகள் உங்களுக்கு மேலும் தெளிவைத் தரும் என நம்புகிறேன். அவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Part 1. https://goo.gl/iWUnBq

Part 2. https://goo.gl/psvj3i

இந்த பதிவை நகல் எடுக்க Printable format அதாவது PDF ஆக பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த முகவரிக்கு செல்லவும் https://goo.gl/bD3ECw





திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


தெளிவுரை:  எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.



“எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எந்த இடத்தில் தேடினாலும் கிடைக்காது”. நமது உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம். அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை நம்மிடமே வைத்துக்கொண்டு அதை வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்?

உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" என்னும் தலைப்பில் இதுவரை நான் பகிர்ந்து கொண்ட அனைத்து ஆடியோ / வீடியோ பதிவுகளையும் பாருங்கள். அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள். 

இந்த Telegram Channel https://t.me/OurBodyitselfaDoctorVideos

அல்லது 

இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

அவற்றை பார்வையிட

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" என்னும் Youtube Channel முகவரிக்கு செல்லுங்கள் https://goo.gl/xsH2SJ

அல்லது

இந்த முகநூல் பக்கத்திற்கு செல்லுங்கள்

நிச்சயம் இவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.


நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 

# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும், 

# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

# அடுத்தவர்களுக்கு உதவும்போதும்,

# நேர்மையாக வாழும்போதும்,

# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான். 

பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில் “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.


முக்கிய குறிப்பு:

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள், பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

Telegram குழுவின் முகவரி https://telegram.me/OurBodyItselfaDoctor

 https://telegram.me/OurBodyItselfaDoctor

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்


நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா? தனிச்சீர் உணவா?


நவீன அறிவியலின் அடிப்படையில் உண்ணப்படும் உணவு முறையின் பெயர் - சமச்சீர் உணவுமுறை. ஒரு மனிதனுக்கு எந்தெந்த அளவில், என்னென்ன சத்துகள் வேண்டுமோ அவை சமமாகக் கலந்திருக்கும் உணவை தேர்வு செய்து சாப்பிடுவதுதான் சமச்சீர் உணவுமுறை. 
ஒரு நபருக்கு கால்சியம் ஒரு அளவிலும், புரோட்டீன் ஒரு அளவிலும், வைட்டமின்கள் ஒவ்வோர் அளவிலும் தேவையிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவை அனைத்தையும் கொண்டுள்ள உணவுகளைச் சாப்பிடுவதுதான் நவீன காலத்தின் சமச்சீர் உணவு முறை.

தனிச்சீர் உணவுமுறை இதற்கு நேரெதிரானது. ஒரு குறிப்பிட்ட உணவில் இந்த வகையான சத்துகள் இருக்கின்றன என்று நம்மால் பிரித்து அறிய முடியும். 

ஆனால், நாம் வெறுமனே அதைச் சாப்பிட்டாலே போதுமானதா? 

நம்முடைய உடல் அந்த உணவிலிருந்து குறிப்பிட்ட அந்த சத்துக்களை எடுத்துக்கொண்டு விட்டதா என்பதை எப்படி அறிய முடியும்? 

உதாரணமாக, இரும்புச்சத்துக் குறைபாடு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படுகிறது. இரும்புச் சத்து கொண்ட ஒரு சிறப்பு உணவு அவருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த உணவில் சத்து இருப்பதும், அவர் உடலுக்கு அது தேவையாக இருப்பதும் உண்மைதான். ஆனால், ‘அந்த நோயாளியின் உடல் இரும்புச்சத்துள்ள அந்த உணவிலிருந்து தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டதா?’ என்று பரிசோதித்துப் பார்த்தால் மிகப்பெரிய வேறுபாடு அதில் இருக்கும்.

கண்களுக்குத் தேவையான ஒரு வைட்டமின் கேரட்டில் இருப்பதாக நம் பாடங்கள் சொல்கின்றன. ஒரு நோயாளிக்கு கண்களில் அக்குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவருக்கு கேரட் பரிந்துரைக்கப்படுகிறது. கேரட்டில் அந்நோயாளிக்குத் தேவையான அந்த வைட்டமின் இருப்பது உண்மைதான். ஆனால், தொடர்ந்து கேரட் சாப்பிட்டும் அவருடைய வைட்டமின் தேவை முழுமை பெறவில்லை என்றால், இதனை எப்படிப் புரிந்து கொள்வது?

இங்குதான் சமச்சீர் முறை உணவுக் கோட்பாடு பயனற்றுப் போகிறது. ஒவ்வொரு மனிதனும் தனித்தனியானவன். ஒவ்வொருவரின் தேவையும் தனித்தன்மையானது. பலருடைய தேவைகளைக் கூட்டி, வகுத்து உருவாக்கப்படும் பொதுவான சராசரிகளுக்கு மனித உடல் முரணானது. வெறும் கணக்குகளுக்குள் உடலின் இயக்கத்தை அடக்கிவிட முடியாது என்பது தான் தனிச்சீர் உணவுமுறையின் அடிப்படை.

ஒவ்வொரு மனிதனின் உடலும் தனக்குத் தேவையான ஆற்றலை உணவின் மூலம் கோரிப் பெறுகிறது. இப்படி ஒவ்வொரு தனிநபரும் தனக்குத் தேவையான உணவை சரியாகத் தேர்வு செய்யும் முறைதான், தனிச்சீர் உணவுமுறை. இந்த உணவு முறை சுவைகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் ‘உணவு’ என்ற சொல்லை தனியாக எங்கும் காண முடியாது. ‘அறுசுவை உணவு’ என்றே சொல்வார்கள். அந்த அளவிற்கு சுவையும், உணவும் பிரிக்க முடியாதது.

அறுசுவை என்ற சொல்லே ஆறு சுவைகள் இருக்கின்றன என்ற செய்தியைச் சொல்லி விடுகிறது. இந்த ஆறு சுவைகளும் தனித்தனியாக ஒவ்வொரு உடல் உறுப்போடு தொடர்பு கொண்டவை. ‘சுவைத் தேவையை நம் உடல் எவ்வாறு அறிவிக்கும்’ என்பதையும், ‘சுவைகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பதையும் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். 

ஒரு கர்ப்பிணி பெண்ணைக் கவனித்திருக்கிறீர்களா? 

அவர் அடிக்கடியும், அதிகமாகவும் சாப்பிடும் சுவைகள் என்னென்ன என்று தெரியுமா? 

புளிப்பு, துவர்ப்பு, உப்பு - இந்த மூன்று சுவைகளும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி தேவைப்படும் சுவைகளாகும். 

ஏன் இந்த மூன்று சுவைகள் மட்டும் தேவைப்படுகின்றன? 

நம் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. அந்த உறுப்புகளுக்கு ஆற்றல் தேவைப்படும்போதெல்லாம் குறிப்பிட்ட சுவையை அதிகம் கேட்கின்றன.

ஆறு சுவைகள் என்பவை எவை?

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்), உவர்ப்பு (உப்பு), கசப்பு

இந்த ஆறு சுவைகளும் எந்தெந்த உறுப்புகளோடு தொடர்பு கொண்டிருக்கின்றன தெரியுமா?

1. இனிப்பு - இரைப்பை

2. புளிப்பு - கல்லீரல்

3. துவர்ப்பு - மண்ணீரல்

4. கார்ப்பு - நுரையீரல்

5. உவர்ப்பு - சிறுநீரகம்

6. கசப்பு – இதயம்

இந்த சுவைகளின் பட்டியலை வைத்துக்கொண்டு, மறுபடியும் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிடித்த சுவைகளைப் பார்ப்போம். கர்ப்பப்பையில் சிசு வளர்கிறபோது நம்முடைய மரபுவழி அறிவியலின்படி மூன்று உறுப்புகள் சிசு பராமரிப்பில் பங்கேற்கின்றன. அவை சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல்.

சிறுநீரகத்தின் சுவை, உப்பு. 

கல்லீரலின் சுவை, புளிப்பு. 

மண்ணீரலின் சுவை, துவர்ப்பு. 

இம்மூன்று உறுப்புகளும் தங்களுக்கு சக்தித் தேவை ஏற்படுகிறபோது இச்சுவைகளைக் கேட்டுப் பெறுகின்றன. அதனால்தான் கர்ப்பிணிகளுக்கு மிகப் பிடித்த சுவைகளாக இவை இருக்கின்றன. 

இதேபோல நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் பல சுவைகள் தேவைப்படுகின்றன. நம்முடைய ருசித் தேவையை நாம் கவனிக்கத் தவறுகிறபோது, குறிப்பிட்ட சுவை தேவைப்படுகிற உறுப்பு பலவீனம் அடைகிறது. இன்னொருபுறம், கிடைக்கிற சுவையை அதிகமாகச் சாப்பிடுகிறபோது, தேவைக்கு மீறி கிடைக்கிற சுவையால் குறிப்பிட்ட உள்ளுறுப்பு பாதிப்படைகிறது. 

‘மிகினும் குறையினும் நோய்’ அல்லவா?

நம்முடைய பாரம்பரிய சுவை மருத்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது தான். நம்முடைய உணவுப் பழக்கத்தில் இருக்கும் ரகசிய ஃபார்முலாவின் அடிப்படையும் இதுதான். 

சரி, அடுத்ததாக ‘இந்த சுவைகளை வைத்துக்கொண்டு முழு உடலையும் சமப்படுத்துவது எப்படி?’ என்ற தனிச்சீர் உணவு முறையின் இரண்டாவது கட்டத்திற்குச் செல்லலாம்.

நம்முடைய பாரம்பரிய மருத்துவங்கள் இந்த ஐந்து உறுப்புகளுக்கும் மிக முக்கிய இடத்தைக் கொடுக்கின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவங்கள் இவற்றை ‘ராஜ உறுப்புகள்’ என்கின்றன. அக்குபங்சர் என்ற சீன மருத்துவம் ‘இன் உறுப்புகள்’ என இவற்றை அழைக்கிறது.

நம் உடலின் ராஜாக்கள் யார் தெரியுமா? 

இதயம், 

மண்ணீரல், 

நுரையீரல், 

சிறுநீரகம், 

கல்லீரல். 

மரபுவழி மருத்துவ அறிவியலின் படி, இந்த ராஜ உறுப்புகள் சரியாக இருந்தால் நம் உடலின் பிற உறுப்புகள் சரியாக இருக்கும். அதாவது, இந்த ஐவர்தான் நம் முழு உடலையும் பாதுகாப்பவர்கள். நம் உடலில் எந்த நோய் ஏற்பட்டாலும் இவர்களுக்குத் தெரியாமல் ஏற்படாது. சொல்லப் போனால், எந்த நோய் ஏற்பட்டாலும் அதற்குக் காரணமாக இருப்பது இவர்களாகத்தான் இருக்கும். 

‘‘அதெல்லாம் சரி... முக்கியமான உறுப்புகள் என்று சொல்லி ஒரு பட்டியலை நீட்டுகிறீர்கள். அதில் ‘தலைமைச் செயலகம்’ என்று அழைக்கப்படும் மூளையின் பெயரைக் காணோமே’’ என்று கேள்வி எழ வேண்டுமே! 

ஆமாம். நம் மரபுவழி மருத்துவங்கள் மூளையைப் புறக்கணிக்கின்றன. ‘அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான உறுப்பு இல்லை’ என்றே கூறுகின்றன. 

இதென்ன பெரிய சிக்கலாக இருக்கிறதே? 

நம் பள்ளிப் பாடங்களிலிருந்து இப்போது வரை ‘நம் உடலை இயக்கிக் கொண்டிருப்பது மூளை’ என்றுதானே நம்பிக் கொண்டிருக்கிறோம். திடீரென்று நம் மருத்துவங்கள் மூளையை மதிப்பதில்லை என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 

நவீன மருத்துவத்தில்கூட இது முடிவற்ற சர்ச்சையாகத் தொடர்கிறது. ‘இதயம் முக்கியமா... மூளை முக்கியமா...’ என்ற கேள்வியோடு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் நடத்தும் விவாதங்களுக்கு நம் ஊர் பட்டிமன்றங்கள் போல தீர்ப்புகள் அவ்வப்போது கிடைக்கின்றன. 

நம் உடலின் எல்லா உறுப்புகளோடும் தொடர்பில் இருப்பதும், அவற்றை இணைத்துப் பணியாற்றுவதும் மூளைதான். நமது உடலை ஒரு போர்ப் படையாகக் கருதிக்கொண்டால், வியூகங்கள் அமைத்து இந்தப் படையை இயக்கும் தளபதி மூளைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் நாம் நினைப்பது மாதிரி மூளை முதலாளி இல்லை. 

ஒரு படைத்தளபதி என்றால், அவருக்குக் கட்டளையிடும் மன்னரோ, அமைச்சரோ இருப்பார்கள் இல்லையா? 

அப்படித்தான் மூளைக்கும் மேலே சில முதலாளிகள் இருக்கிறார்கள். 

யார் அவர்கள்? 

நமக்கு ஏற்கனவே அறிமுகமான ராஜாக்கள்தான். மேலே சொன்ன ஐந்து ராஜ உறுப்புகளும்தான் மூளையை இயக்குகின்றன. மூளை இயங்குவதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கின்றன.

இதனைப் புரிந்து கொள்வதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்... ஒரு மனிதர் நாடு முழுவதும் நடைபெறும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், தன் அன்றாடக் கடமைகளில் ஒன்றான மது அருந்துவதைத் தொடர்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மனிதர் மது அருந்தியவுடன் அவர் உடலின் சமநிலை தவறுகிறது - தள்ளாடுகிறார். பேச்சு குழறுகிறது. 

இதற்கெல்லாம் காரணம் என்ன?

நாம் சொல்கிறோம், ‘அவருடைய சிறுமூளை மது போதையால் பாதிக்கப்பட்டு, இந்த நிலை ஏற்படுகிறது’ என்று. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் குடித்த மது நேரடியாக சிறுமூளைக்கா சென்றது? இல்லை. அது இரைப்பையை அடைந்து, அங்கிருந்து மதுவின் பாதிப்புகள் கல்லீரலைச் சென்றடைகின்றன. 

ஏன் கல்லீரலுக்குச் செல்கிறது தெரியுமா? 

நம் உடலில் எந்த ரசாயனம் சென்றாலும் அது நேராக கல்லீரலுக்குத்தான் செல்லும். உடலுக்குள் நுழையும் ரசாயனம் எதுவானாலும், அதை அலசிப் பார்த்து, அதன் குணங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியை எடுப்பது கல்லீரல்தான். விஷமே வந்தாலும், அதன் நச்சுக்களை அகற்ற கல்லீரல்தான் போராடுகிறது. முடியாதபட்சத்தில் முதலில் பாதிக்கப்படுவதும் கல்லீரல்தான். ஆங்கில மருத்துவத்தின் ரசாயன மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகளாகக் குறிப்பிடப்படும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, கல்லீரல் பாதிப்பு. நம் உணவுகளில் கலக்கப்படுகிற ரசாயனங்கள் முதல், நாம் விரும்பிச் சாப்பிடுகிற மாத்திரைகள் வரை கல்லீரலைத்தான் பதம் பார்க்கின்றன.

அதே போல, ஒரு மனிதர் அருந்துகிற மதுவும் கல்லீரலைப் பாதிக்கிறது. அந்த பாதிப்பின் எதிரொலிதான் சிறுமூளை போதையால் பாதிக்கப்பட்டு தள்ளாட்டம், பேச்சு குழறுவது எல்லாமே. கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் அது மூளையில் எதிரொலிக்கிறது.

இன்னொரு உதாரணம்... நம்முடைய எல்லா உறுப்புகளுமே மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன என்று சொல்கிறோம். ஒருவேளை மூளை பாதிக்கப்பட்டால் எல்லா உறுப்புகளும் என்ன ஆகும்? 

‘மூளைதான் தலைமைச் செயலகம். அது இயங்கினால்தான் எல்லா உறுப்புகளும் இயங்கும்’ என்று சொல்கிற நாம், மூளைச் சாவு என்ற கோமாவில் இருக்கும் நபரைப் பார்த்தால் உண்மை விளங்கும். மூளையின் உத்தரவின்றி இதயம் துடிக்காது, ரத்த ஓட்டம் நடக்காது, சிறுநீரகங்கள் வேலை செய்யாது... இப்படியெல்லாம் நம்பிக் கொண்டிருப்போம்.
ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

கோமாவில் இருக்கும் நபரின் எல்லா உள்ளுறுப்புகளும் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும். மூளை செத்து விட்டதே என்று எந்த உறுப்பும் கட்டளைக்காகக் காத்திருக்கவில்லை. மாறாக, எல்லா உறுப்புகளும் தங்கள் இயல்பான வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் சரியாகச் சொன்னால், மூளை வேலை செய்யாத நேரத்தில் எல்லா உறுப்புகளும் கூடுதலாக வேலை செய்கின்றன. 

இப்போது சொல்லுங்கள்... 

நம் உடலின் உண்மையான ராஜா யார்? மூளையா? 

நம் உடலில் உள்ள ராஜ உறுப்புகள் ஐந்திற்கும் தனித்தனி சுவைகள் இருக்கின்றன என்பதைப் பார்த்தோம். இந்த ஐந்து ராஜ உறுப்புகளோடு இரைப்பையையும் சேர்த்து ஆறு உறுப்புகளை உணவில் இருக்கும் அறுசுவைகள் தூண்டுகின்றன. இந்த ஆறு உறுப்புகளும் இயல்பாக இயங்கினால் பிற உறுப்புகளில் எவ்வித நோய்களும் ஏற்படாது என்பது மரபுவழி மருத்துவங்களின் கோட்பாடு.

ஆறு உறுப்புகள் மற்றும் அறுசுவைகள் - இவற்றின் சமன்பாடுதான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளும், உணவு சார்ந்த மருத்துவமும் இதை உணர்ந்ததாக இருந்தன. இந்த சமன்பாடு புரியாமல் சமச்சீர் முறை என்ற அடிப்படையில் சத்துகளுக்காக நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது உடல்நலத்தைத் தராது.


இந்த பதிவை (கிட்சன் டு கிளினிக்) எழுதிய அக்குபஞ்சர் மருத்துவர் அ. உமர் பாரூக் அவர்களுக்கும் அதை வெளியிட்ட ”குங்குமம்” வார இதழிலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


நாம் அன்பாக இருந்தால் செல்லப்பிராணிகளிடம் இருந்தும் சகமனிதர்களிடம் இருந்தும் ஆற்றலை பெறமுடியும்.

 # நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.



# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  

# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.



நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 

# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

# அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 

# நேர்மையாக வாழும்போதும்,

# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876


முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"  Youtube Channel முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!"  Youtube Channel முகவரி

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவின் முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" Telegram குழுவின் முகவரி