கர்ப்பப்பை நலமாக இருக்க



ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இறைவன் எப்போதும் குறைகளை வைப்பது இல்லை.

யாருடைய உடம்பையும் இறைவன் குறைகளாக படைப்பது இல்லை.

ஆனால் இன்று கர்ப்பபை சம்பந்தமான பிரச்சினை மிக அதிகரித்து கர்ப்பப்பையில் புற்றுநோய்வரை ஏற்பட்டு பின் கர்ப்பபையையே எடுத்துவிடுகிறார்கள்.அவ்வாறு எடுக்கப்பட்டாலும் அந்த பெண் தொந்தரவுகளில் இருந்து வெளிப்பட்டு நிம்மதியாக இருக்கிறாரா? இல்லை அதன் பின் மற்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறாரா? என்றால் அவர் மேலும் மேலும் தொந்தரவுகளுக்கு ஆளாவதைத்தான் பார்க்க முடிகிறது. ஆம் .தவறான செயலை செய்தால் தவறான விளைவுகள்தான் ஏற்படும்.

கர்ப்பப்பையில் என்ன மாதிரியான தொந்தரவுகள் ஏற்படும்

  • ஒழுங்கற்ற மாதவிடாய்
  • அதிக இரத்தப் போக்கு
  • அதிகநாட்கள் இரத்தப் போக்கு
  • அதிக வலி
  • வெள்ளைப்படுதல்
  • புண்கள்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதற்கு காரணம் என்ன? இதை ஏதாவது ஒரு ஆங்கில மருத்துவரிடம் சென்று கேட்டால் அவர்கள், அவர்கள் பங்கிற்கு ஏதேனும் சொல்வார்கள்.
ஆங்கில மருத்துவத்திற்கு மூலகாரணம், தெரியாத அதே சமயம் குணப்படுத்த முடியாத நோய்களின் பட்டியலில் 15 ஆவது வரிசையில் இருப்பது “கர்ப்பப்பை சம்மந்தமான அனைத்து நோய்களும்”. எனவே மூலகாரணமும் தெரியாமல், குணப்படுத்தவும் இயலாத ஒரு மருத்துவத்தை நாம் நாடும்போது அந்த நோய் முற்றுவது என்பது இயற்கையே. தவறான செயலை செய்தால் தீங்கு நிச்சயம் நேரும் என்பது உண்மைதானே. அதுதான் இங்கும்.


சரி இதன் தீர்வுக்கான வழியை பற்றி இங்கு கொஞ்சம் பார்போம்.

நமது முன்னோர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது அது எத்தனை நாட்களில் குணமடைந்தது?

தற்போதைய பெண்களுக்கு எத்தனை நாட்களில் குணமடைகிறது?

முன்னோர்களென்றால் நமது பாட்டியையே எடுத்துக்கொள்ளலாம்.

அவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டதா என்றால் பெரும்பாலும் ஏற்பட்டு இருக்காது. ஆனால் தற்போதைய பெண்களுக்கு ஏன் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது?


முதலில் மாதவிடாயை பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

மாதவிடாய் என்பது ஒரு பெண் பருவம் அடைந்த நாள் முதல் எற்படும் ஒரு இயற்கையின் சுழற்சி. அந்த பெண்ணின் சினைப்பையில் இருக்கும் கருமுட்டை ஆனது கருக்குழாய்மூலம் கருப்பையை அடைந்து ஆணின் உயிரணுவிற்காக காத்திருக்கும். இந்த கருமுட்டையை தாங்கிப் பிடிக்க இரத்தத்தினால் ஆன ஒரு பை உருவாகி அதில் இந்த கருமுட்டையானது இருக்கும். ஆணின் உயிரணு கிடைக்காத பட்சத்தில் அந்தக் கருமுட்டை மற்றும் இரத்தத்தால் ஆன பை இரண்டும் உடைந்து உடலைவிட்டு வெளியேறிவிடும். இது இயற்கையாக நடக்கும் ஒரு செயல். இந்த செயல் 28 நாட்களில் நடந்து முடிந்து அடுத்த சுழற்சி ஏற்படும். இது இயற்கை. அதேபோல் இந்த வெளியேறும் செயல் மட்டும் மூன்று நாட்கள் நடக்கும்.

ஆனால் இன்றைய கால பெண்களுக்கு அவ்வாறு நடக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மூன்று நாட்களில் வெளியேற வேண்டிய இந்த கழிவு 5/6 நாட்கள் வரை தொடர்ந்து வெளியேறுதல்,குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே வெளியேறுதல்,குறிப்பிட்ட நாட்கள் கழித்தும் வெளியேறாமல் இருத்தல், அதிக வலி, அதிக உதிரப்போக்கு, சில சமயங்களில் ஒரு நாள் மட்டும் வெளியேறுதல், தொடர்ந்து பல நாட்கள் உதிரப்போக்கு இருத்தல், தொடர்ந்து சில மாதங்கள் கழிவு வெளியேறாமல் இருந்தல் போன்றவை ஏற்படுகிறது.

நம் பாட்டி ,அம்மாக்களுக்கு இல்லாத இந்த சிக்கல் ஏன் நமதுகால பெண்களுக்கு?

காரணம் நமக்கு உடலைப் பற்றிய தெளிவு இல்லாமல் போனது ஒருபுறம், நமது வாழ்க்கை முறை ஒருபுறம்.

இங்கே இந்த பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்த நமது முன்னோர்கள் வாழ்ந்தது எப்படி?

மிக எளிது.
  • அந்தக் காலங்களில் மாதவிடாய் சமயத்தில் அவர்கள் குளிக்கமாட்டார்கள்.
  • எந்த வேலையும் செய்யாமல் தீட்டு என்று வீட்டிற்கு ஒதுக்குபுறம் ஒதுக்கிவிடுவார்கள்.
  • எந்த வித நாப்கினும் அவர்கள் பயன்படுத்தவில்லை. பருத்தி துணிகளையே பயன்படுத்தினார்கள்.

இந்த செயல்களில் மறைந்திருக்கும் சூட்சும விஞ்ஞானம் என்ன தெரியுமா?

1. நாம் முன்னமே பார்த்த அந்தக் கழிவானது வெளியேற உடலின் சூடு மிகவும் துணைபுரிகிறது. அதனால் அவர்கள் குளிப்பதைத் தவிர்த்தார்கள். அதன் விளைவு உடலின் சூடு குறையாமல் கழிவை வெளியேற்ற அந்த சூடு பயன்பட்டது. ஆனால் இப்போது பெண்கள் அவர்கள் சூழ்நிலை காரணமாக தினமும் வழக்கம் போல் குளித்துவிட்டு வருவதால் உடல் சூடு குறைவதால் கழிவு வெளியேற்றம் தடைபடுகிறது.

2.அந்த காலங்களில் தீட்டு என்று ஓரமாக அமர்ந்து ஓய்வில் இருந்தார்கள். அதனால் உடலில் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் வேலை செய்யும்போது ஏற்படும் சக்தி பரிமாற்றம் ஏற்படாமல் முழு இயக்க சக்தியும் கழிவு வெளியேற்றத்திற்கே செலவு செய்யப்பட்டதால் எளிதில் கழிவு வெளியேறியது.

மற்றபடி அதில் தீட்டு என்றும், தீண்டத்தகாதவர் என்றும் ஏதும் இல்லை. இந்த இரண்டு செயல்களும் நம் முன்னோர்கள் இதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆனால் இன்றைய பெண்கள் சூழ்நிலையின் காரணமாக உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை செய்வது அவர்கள் உடலில் உள்ள மாதவிடாய் கழிவை வெளியேற்றவிடாமல் தடுக்கிறது.

3.அந்தக்காலங்களில் நமது அம்மா, பாட்டி போன்றோர்கள் இன்றைய பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் பயன்படுத்தியது இல்லை. எனவே அவர்களுக்கு கர்ப்பப்பை தொடர்புடைய சிக்கல்கள் இருந்தது இல்லை.

இதை சொல்லும்போது நாப்கின் பயன்படுத்துவது தவறா என்று கேட்கலாம்.


இன்றைய விளம்பரங்களில் பாருங்கள், நாப்கின் அணிந்துகொண்டு மலை ஏறலாம், மரம் ஏறலாம், ஓடலாம், ஆடலாம், பாடலாம் என்று சொல்லப்படுகிறது.

இது சரியா என்று மேலே சொல்லப்பட்ட கருத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஓய்வில் இருந்தால்தான் கழிவுகள் வெளியேறும். ஓய்வு இல்லாமல் மலையும், மரமும் ஏறினால் என்ன நடக்கும். கழிவுகள் உடலிலேயே தங்கும். மேலும் நாப்கின்களில் இருக்கும் திரவத்தை உறிஞ்சும் ஜெல், மாதவிடாய் கழிவுகளை வெளியேற்ற விடாமல் தடுக்கிறது. அதனால் கழிவுகள் முழுதும் வெளியேறாமல் உடலிலேயே தங்குகிறது.

4. இதுபோன்று தங்கிய கழிவுகளாலேயே கர்ப்பப்பையில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.

இதுபோக இந்த சிக்கல்கள் சரியாக வேண்டி எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள், அதுவும் பெண்கள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளும் நோயை பெரிதுபடுத்தி கர்ப்பப்பையில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தும்.

உடனே கேள்வி எழும்… என்ன மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் கூட சிக்கல்களை பெரிதுபடுத்துமா? ஆம். ஆங்கில மருத்துவத்திற்கு மூலகாரணம் தெரியாது, அதேசமயம் குணப்படுத்தவும் முடியாது என்று உலக சுகாதர நிறுவனமும், இந்திய அரசாங்கமும் அறிவித்திருக்கும் பட்டியலில் 15 ஆவது இடத்தில் “கர்ப்பப்பை தொடர்புடைய அனைத்து நோய்களும்” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த காரணத்தாலேயே ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் சாப்பிடுவது கர்ப்பப்பையை எடுக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கிறது.

சரி இந்த சிக்கல்கள் வராமல் இருக்கவும், வந்தவர்கள் இதை சரி செய்யவும் என்ன செய்யவேண்டும். 

எப்போதும் போல் பசி எடுக்கும்போது பிடித்த உணவுகளையும், தாகத்திற்கு தண்ணீரையும், உடல் ஓய்வு கேட்கும்போது ஓய்வையும், தூக்கம் வரும்போது தூக்கத்தையும் உடலுக்கு கொடுத்தாலே போதும்.

மேலும் மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்து உடல் சூடு குறையாமல் பார்த்துக்கொண்டு, அந்த சமயங்களில் நாப்கின் பயன்படுத்தாமல் ஓய்வில் இருந்தால் போதுமானது. இந்த காலத்தில் ஓய்வா என்றால், நிச்சயம் ஓய்வுதான் தேவை.


மேலும் சொல்வதானால் பெண்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்ப்பதாலும், கர்ப்பகாலங்களில் குழந்தையை ஸ்கேன்செய்ய கருப்பையை ஸ்கேன் செய்வது, சிசேரியன் என்ற பெயரில் கர்ப்பப்பையை கிழித்து குழந்தையை வெளியே எடுப்பதும் கூட கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு காரணமாக அமைகிறது. அதைப்பற்றி அடுத்து எழுதலாம்.

இதை செய்துவந்தாலே மெல்ல மாதவிடாய் சிக்கல்கள் தீரும்.

வாழ்த்துகள்!

- அன்புடன் அக்குஹீலர்.கு.நா.மோகன்ராஜ்


குறிப்பு:

சரியான வாழ்க்கை முறையால் மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். http://reghahealthcare.blogspot.in/2011/08/to-live-healthy.html


For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் !!!




நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ? 

எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. 

உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா ...? 

அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல .. 

நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ, சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ? 

நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்... நோயிற்க்கான மருந்து அல்ல.... மண்டை குலம்புகிறதா..? தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது. 

போலியோ சொட்டு மருந்து : 

போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான். ''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர். ''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின். 

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது... 

மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது. 

தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்

கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். 

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள். 

போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது. 

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது. 

இதனால்தான் 'இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்' என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..! அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008). 

இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை... 1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது. 

1870 - 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்... அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை... 

இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள். 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான். 

மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு. 
இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது. உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது. 

இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது. 

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது. இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன. 

இந்த மருந்தை என்ன செய்வது?

அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்....

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...!!!! 

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? 'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். 

இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. சில பழைய பக்கங்களை பார்ப்போம். 

1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக... தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது. 
.
இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன.




- நன்றி அக்குஹீலர் அருண் குமார்

மேலும் தடுப்பூசி பற்றிய தகவலுக்கு கீழே உள்ள லின்குகளுக்கு செல்லவும்

  1. தடுப்பூசி என்றால் என்ன? அது நல்லதா கெட்டதா?
  2. தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்
  3. தடுப்பூசிகள்: மருந்தா? வணிகமா?
  4. பி.சி.ஜி. தடுப்பு ஊசி ஒரு மிகப் பெரும் சமுதாயத் துரோகம்
  5. தடுப்பூசிகளின் கேவலமான பின்னணியில் இருப்பது யார்..! யார்..?
  6. தடுப்பூசி தற்கொலைக்கு சமம் ...!
  7. மருத்துவத்தின் அரசியல்


For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

பி.சி.ஜி. தடுப்பு ஊசி ஒரு மிகப் பெரும் சமுதாயத் துரோகம்


வாசகர்களே! இந்த உண்மையை இப்போது நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு மருத்துவக் கட்டுரை. எனினும் பொய் எப்போதும் ருசியாகத்தான் இருக்கும். பி.சி.ஜி. தடுப்பூசி என்ற மகா மட்டமான பொய்யை ருசி குறையாமல் உண்மையை கொண்டே தருகிறோம். ஒரு நாவலைப் படிப்பது போன்ற படியுங்கள். காரணம் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு ஒரு கதை; கதையைத் தவிர வேறில்லை. உங்கள் பகுதிகளில் இருக்கும் ஆங்கில மருத்துவர்களையும் படிக்கச் சொல்லுங்கள். விளக்கம் கேளுங்கள். அவர்களால் நிச்சயமாக பதில் அளிக்க முடியாது.

பி.சி.ஜி. தடுப்பு ஊசி பற்றி கேள்வி பதில் மூலமாகவே இங்கு அறிவிக்கிறோம்.

கேள்வி: பி.சி.ஜி. (BCG Vaccine) தடுப்பு ஊசி என்றால் என்ன?

பதில்: காச நோயைத் தடுப்பதற்காக – அதாவது டி.பி. நோயைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்து ஊசியாகும்.

கேள்வி: பி.சி.ஜி. என்ற அந்த மருந்தில் என்ன மருந்து இருக்கிறது?

பதில்: பி.சி.ஜி. தடுப்பு ஊசியில் மருந்துகள் என்பது ஒன்றும் கிடையாது. அந்தத் தடுப்பு ஊசியில் காசநோய்க் கிருமிகளை நாங்கள் அடைத்து வைத்திருக்கிறோம்.

கேள்வி: பி.சி.ஜி. தடுப்பூசியில் காச நோய்க் கிருமிகளை அடக்கியிருப்பதாகக் கூறுகிறீர்களே, அது உடலில் செலுத்தப் பட்டால் என்னாவது?

பதில்: கிருமிகள் அனைத்தையும் நாங்கள் வெகுவாக செயலிழக்கச் செய்கிறோம். அல்லது அந்தக் கிருமிகளைக் கொன்று விடுகிறோம். எனவே, அவை நோயைத் தோற்றுவிக்க முடியாது. மாறாக நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியைத் தோற்றுவிக்கும்.

கேள்வி: அதாவது டிபி என்ற காசநோய்க்கு எதிராக சாகடிக்கப்பட்ட நோய்க் கிருமிகள் எதிர்ப்பு சக்தியைத் தோற்றுவிக்கும் என்கிறீர்கள். அப்படித்தானே? இப்போது ஒரு சந்தேகம். இதற்குப் பதில் தாருங்கள். அந்தத் தடுப்பூசியில் எந்த கிருமியை செயலிழக்கச் செய்து ஊசியின் மூலமாக உடலுக்குள் செலுத்தினீர்களோ, அந்தக் கிருமிக்கு எதிராகத்தானே எதிர்ப்பு சக்தி உருவாகும்?

பதில்: ஆம். எந்தக் கிருமியை உடலுக்குள் செலுத்துகிறோமோ, அந்தக் கிருமிக்கு எதிராகத் தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்?

கேள்வி: நோய் எதிர்ப்பு சக்தி என்று எப்படி கூறுகிறீர்கள்? அது உடலில் செலுத்தப்பட்ட அந்தக் குறிப்பிட்ட கிருமிக்கு எதிரான “கிருமி எதிர்ப்பு சக்தி” என்று அறிவது தானே பொருந்தும்? நோய் எதிர்ப்பு சக்தி என்று கூறுவது தவறான அடிப்படையாகும் இல்லையா?

பதில்: கிருமிகள் எதிர்ப்பு சக்தி என்று கூறுவதுதான் பொருத்தமானது. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தக் கிருமிகள் நோயை உருவாக்கும் பொழுது, மறைமுகமாக நோய் எதிர்ப்பு சக்தி என்றும் பொருளாகிறது இல்லையா?

கேள்வி: அந்தக் கிருமிகளைத்தான் நீங்கள் கொன்றுவிடுகிறீர்களே, அதன் பின்னர் தானே நீங்கள் உடலுக்குள் தடுப்பு ஊசி என்ற பெயரில் செலுத்துகிறீர்கள்? கொல்லப்பட்டு விட்ட அந்தக் கிருமிகள் எவ்வாறு நோயைத் தோற்றுவிக்கும்?

பதில்: ஆம். கொல்லப்பட்டுவிட்ட கிருமிகளால் நோயைத் தோற்றுவிக்க முடியாது. ஆகவே எதிர்ப்பு சக்தியானது அந்த உடலுக்குள் செலுத்தப்பட்டு விட்ட கிருமிகளை எதிர்த்துத்தான் உருவாகிறது. நீங்கள் சொல்வதுதான் சரி. தடுப்பூசி உடலுக்குள் செலுத்தப்பட்ட அந்தக் குறிப்பிட்ட கிருமிக்கு எதிரான ‘கிருமி எதிர்ப்பு சக்தி” தானே தவிர காச நோய்க்கு – டி.பி. நோய்க்கு எதிரான ‘நோய் எதிர்ப்பு சக்தி” என்று கூறுவது தவறானதுதான்.

கேள்வி: செத்துப் போன கிருமியை உடலுக்குள் செலுத்துவதால் உடலின் எதிர்ப்பு சக்தி வீணடிக்கப்படுகிறதல்லவா? இதனால் உடல் எதிர்ப்பு சக்தி நாளடைவில் தளர்ச்சியடைந்து விடாதா?

பதில்: தடுப்பு ஊசியில் இன்னொரு வகையைத்தான் நாங்கள் கையாளுகிறோம். அதாவது, கிருமிகளைக் கொன்று விடுவதில்லை. அவற்றைக் குற்றுயிரும், குலையுயிருமாக ஆக்கி செயலிழக்கச் செய்து பின்னர் தான் அதைத் தடுப்பு ஊசியாக உபயோகிக்கிறோம்.

கேள்வி: அதாவது டி.பி. கிருமிகளைக் கொன்று விடாமலும், உயிருடனும் விட்டு வைக்காமலும் ஏறக்குறைய கோமா நிலைக்கு அந்தக் கிருமிகளை ஆக்கி விடுகிறீர்கள்.

பதில்: ஏறக்குறைய அப்படித்தான். அதனை நாங்கள் Attennated Germs – அதாவது கிட்டத்தட்ட செயலிழக்கச் செய்யப்பட்ட நிலைக்கு அதனைக் குற்றுயிராக்கி பின்னர் தடுப்பூசியாக உபயோகிக்கிறோம்.

கேள்வி: செயல்பட முடியாத கிருமிகள் டி.பி. நோயை உருவாக்க முடியாதல்லவா?

பதில்: வீரியம் குறைந்த நிலையில் நோயை உருவாக்கும். அந்த அளவில் அது நோயை ஏற்படுத்தும் தானே? அந்த நோய்க்கு எதிராக இவ்விதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் இல்லையா?

கேள்வி: ஆகவே உடலினுள் செலுத்தப்பட்டு விட்ட நோய்க் கிருமிகளும், அது உருவாக்கும் வீரியத்தில் குறைந்த அந்த டி.பி. நோய்க்கும் எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தோன்றி அதனை உடலை விட்டு நீக்கிவிடும். இந்த எதிர்ப்பு சக்தி பின்னர் மறைந்து விடும். ஒவ்வொரு மனிதனின் உடலில் இருக்கும் மாறுபட்ட வீரியமும், செயலும் கொண்ட டி.பி. கிருமியையும், அதன் காரணமாக உருவாகியுள்ள மாறுபட்ட வீரியமுள்ள டிபி நோயையும் எவ்விதம் இந்தத் தடுப்பூசி அழிக்க முடியும்?

பதில்: தடுப்பூசி என்பது குறிப்பிட்ட கிருமியும் அது நோயைத் தோற்றுவிக்க என்ன சக்தி பெற்றிருக்கிறதோ அதுக்கு மட்டும் தான் எதிர்ப்பு சக்தியைத் தோற்றுவிக்கும். நீங்கள் சொல்வதுதான் சரி. 

கேள்வி: தேவையில்லாமல் உடலுக்குள் சம்பந்தமில்லாத ஒரு தடுப்பூசியைப் போடுவதன் காரணமாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வீணடிக்கப்படாதா?

பதில்: ஆம். வீணடிக்கப்படும்.

கேள்வி: எனவே பிசிஜி தடுப்பூசியின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இன்னும் மோசமான டிபி நோயின் தாக்கத்திற்கு ஆளாவார்கள் தானே?

பதில்: ஆம். அதனை நாங்கள் Disseminated TB என்போம். அதாவது பிசிஜி தடுப்பூசிக்குப் பிறகு அந்தக் குழந்தைகளுக்கு திடீரென சளித் தொந்தரவுகளும், ஜுரம், உடல் வலி, அசதி, அஜீரணம், பசியின்மை ஏற்பட்டு மூச்சிரைப்பும், மூச்சடைப்பும் ஏற்பட்டு இறந்து விடும். இது பி.சி.ஜி.யின் மிகக் கொடுமையான பக்க விளைவுகளில் ஒன்றாகும்.

கேள்வி: இவ்வளவும் தெரிந்துமா பச்சிளங்குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி போட்டு கொடுமைப்படுத்துகிறீர்கள்?

பதில்: இதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாவோம்? ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் போடச் சொல்லுகிறார்கள். அரசாங்கமும் அதைத் தலைமேல் தாங்கிக் கொண்டு ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்கிறது. நாங்கள் என்ன செய்வது?

கேள்வி: தடுப்பு ஊசி பிறந்த குழந்தைகளுக்குப் போடுகிறீர்களா? காரணம் அந்த குழந்தைகள் காசநோய் பரவலாக இருக்கக் கூடிய உலகின் பகுதியில் பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்குத்தான் சுவாசத்தின் மூலமாக ஏற்கெனவே உடலுக்குள் சென்று விட்டதே? 

பதில்: ஆம். அந்தக் குழந்தைக்கு பிறப்பின் போதே எதிர்ப்புச் சக்தியுடன் தான் பிறக்கிறது. இந்த எதிர்ப்பு சக்தி 3 மாதங்கள் முதலாக குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகும் வரை, பிறவியின் போதே நோய்களை எதிர்க்கும் சக்தியுடனேயே தான் பிறக்கிறது.

கேள்வி: இந்த பிறவி நோய் எதிர்ப்பு சக்தி 3 முதல் 6 மாத காலத்திற்கு இருக்கும்போது சுவாசத்தின் காரணமாக நுரையீரல்களுக்குள் செல்லும் டிபி கிருமிகள், அனைத்தையும் அந்த எதிர்ப்பு சக்தி அழிக்கும் இல்லையா? இன்னும் அனைத்துப் பிற நோய்களை உருவாக்கும் கிருமிகளையும் எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் இல்லையா?

பதில்: ஆம்.

கேள்வி: பிறந்த உடன் தடுப்பூசி குழந்தைகளுக்குப் போட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அநியாயமாகத் திசை திருப்பப்பட்டு விடும் தானே? இது குழந்தைகளுக்குச் செய்யும் மிகப் பெரும் பாதகமும், துரோகமும் இல்லையா?

பதில்: நாங்கள் இதையெல்லாம் அறிந்து செய்தால்தானே தவறு?

கேள்வி: அப்படியானால் ஆங்கில மருத்துவம் எதனையும் அறியாமல், புரியாமல் தான் இருக்கிறதா?

பதில்: அறியாமல், புரியாமல் இருந்தால் இவ்வளவு பிரமாதமான முறையில் அறுவை சிகிச்சைகள், அந்த சிகிச்சையின் வளர்ச்சிகள் இருக்குமா?

கேள்வி: நான் மருத்துவ சிகிச்சையைப் பற்றித்தான் கேட்கிறேன். அறுவை சிகிச்சையைப் பற்றி பின்னர் வைத்துக் கொள்வோம். மருந்துகளையும், அதனை உபயோகிக்கும்போது ஏற்படும் பாதகமான விளைவுகளைப் பற்றியும், அறியாமலோ, அல்லது அறிந்தும் அதனைப் புறக்கணித்து மருத்துவம் பார்க்கிறார்களே அது சரிதானா? என்றுதான் விளக்கம் கேட்கிறோம்.

பதில்: ஆங்கில மருத்துவத்தில் ஒன்று மட்டும் நிஜம். எந்த ஒரு நோயைப் பற்றியும் எங்களுக்கு முழுமையாகத் தெரியாது. மருந்துகளைப் பற்றி எதுவுமே தெரியாது என்றுதான் கூற வேண்டும். ஆங்கில மருத்துவத்தில் பலவிதமான ‘ஏன்’ ? என்ற கேள்விகளுக்கும், எப்படி? என்ற கேள்விகளுக்கும் விடை கிடையாது.

கேள்வி: அப்படியானால் ஆங்கில மருத்துவம் போலி மருத்துவம் தானே? அது எப்படி நவீன மருத்துவம், விஞ்ஞான மருத்துவம் என்று கூறிக்கொள்கிறீர்கள்? 

பதில்: நீங்கள் அவ்விதம் நம்பிக் கொண்டிருக்கும் வரையில் எங்கள் பிழைப்புக்கு ஒரு பாதகமும் இல்லை. எது எப்படி இருந்தாலும் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. ஆங்கில மருத்துவம் ஒரு போலி மருத்துவம்தான்!

வாசகர்களே, தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக கேள்வி பதில் அடிப்படையில் பிசிஜி தடுப்பு ஊசியைப் பற்றிய விரிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். இதனைக் குழந்தைகளிடத்தே போடும்போது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி வீணாக்கப்பட்டு அது முதலில் தோன்றும். தும்மல், சளி போன்றவைகள் முதலாக, அக்குழந்தையின் வாழ்நாள் முழுமையிலும் ஏற்படவிருக்கும் எண்ணற்ற நோய்களுக்கும், துன்பங்களுக்கும் இந்த பிசிஜி தடுப்பு ஊசியே காரணமாகவும் அமையலாம் என்பதை இனி உறுதியாக அறிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.

BCG – உடல் நலனுக்கு எதிரானது 

பிறந்த குழந்தைகளுக்கு, தேவையில்லாத கிருமிகளைக் கொண்ட பிசிஜி தடுப்பு ஊசி போட்ட பிறகு அந்த இடத்தில ஒரு கொப்புளம் ஏற்படுகிறது. இந்த பிசிஜி மருந்துகளில் உள்ள கிருமிகளும், கேடுகளும் உடலினுள் பரவக்கூடாது என்பதற்காக நடைபெறும் உடலின் நோய் எதிர்ப்பு நடவடிக்கையாகும். இந்த கொப்புளம் 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். அந்த அளவுக்கு உடல் நலனுக்குப் பாதகமான அந்த பிசிஜியை உடலின் எதிர்ப்பு சக்தி எதிர்த்து அழிக்கும் முயற்சியில் இருக்கிறது.

இந்த அறிவிப்பைக் கொண்டு நாம் உணர வேண்டியது என்னவென்றால், பிறந்த குழந்தையின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி 12 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக வீணடிக்கப்படுகிறது. பிசிஜியின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி வீணடிக்கப்பட்டுவிடுவதால், இயற்கையான செயல்பாட்டில் ஆரோக்கியமாக இயங்க வேண்டிய உறுப்புக்கள் மந்த நிலையை அடைகின்றன. அஜீரணம், பேதி, கடுமையான வயிற்று வலி போன்றவை பிசிஜி போட்ட சில நாட்களுக்குள்ளாகவே ஆரம்பம் ஆகி விடுகின்றன. இவை நாளைய பெரு வியாதிகளாக உருவெடுக்கும். காரணம், இவற்றை நீக்கி சுகப்படுத்தும் எதிர்ப்பு சக்தி பிசிஜி ஊசியின் காரணமாகத் திசை திருப்பப்பட்டு வீணடிக்கப்பட்டு விட்டது.

BCG – யே பெரும் நோய்களுக்குக் காரணம்!

எனவே, தும்மல், அடுக்குத் தும்மலாக உருவெடுக்கிறது. மூக்கடைப்பு, சளி, இருமல், வயிற்று உபாதைகள் படிப்படியாக அதன் தீவிரத்தில் மோசமடைகிறது. இயற்கையாக சுவாசத்தின் காரணமாக உடலுக்குள் கிரகிக்கப்பட்ட டிபி – காசநோய் இன்னும் ஒவ்வாரு நோய்க் கிருமியும் அதன் வீரியத்தில் அதிகமாகின்றன. ஆங்கில மருந்துகள் கொடுக்கப்படாமலிருந்தால் எதிர்ப்பு சக்திகள் அழகான முறையில் ஒவ்வொரு நோயையும் சுகமாக்கி, அதனதன் எதிர்ப்பு சக்தியை உறுதியாக்கி, உடலின் நியாயமான ஒரு ஆரோக்கியத்திற்கு வழிவகுத்திருக்கும் என்பதையும் மேற்சொன்ன கேள்வி பதில் தொகுப்பிலிருந்து சந்தேகமின்றி அறிந்து கொள்ளமுடியும்.

BCG – காசநோய் கிருமிகள் இரத்தத்தில்...

தோலில் போடப்பட்ட பிசிஜி தடுப்பூசியின் கேடுகள் அனைத்தையும் குழந்தையின் இயற்கையால் அருளப்பட்ட எதிர்ப்பு சக்தியானது தோலிலேயே எதிர்கொண்டு அழித்தாலும், இரத்தத்திலும் கலந்து விடுவதால், நெறி கட்டுதல் போன்ற வீக்கம் அக்குள், கழுத்துக்களில் உள்ள glands (நிண நீர் விதைகளில்) ஏற்படுகிறது. பலருக்கு அந்த நிணநீர் விதைகளின் வீக்கம் குறையாமல் தொடர்கிறது. பல சமயங்களில் அதில் சீழ் பிடித்து நிலைமை மோசமடைகிறது.

அந்த வீக்கங்கள் பிளவு பட்டு விடுமானால் அதிலிருந்து உடல் முழுவதும் கேடான நச்சுக்கள் மிகுந்த வீரியத்துடன் பரவுகின்றன. தீர்க்க முடியாத, என்ன ஏது என்று கண்டுபிடிக்கப்பட முடியாத பலப்பல நோய்களுக்குக் காரணமாக அமையும். எய்ட்ஸ் நோய், சார்ஸ் நோய் மட்டுமல்ல. இன்னும் கோடிக்கணக்கில் நோய்கள் புதிது புதிதாக உருவாகும். அந்தக் கேடு இந்த ஆங்கில மருத்துவத்தால் ஏற்கெனவே உருவாகி விட்டது.

BCG – இரத்தத்தையே நாசமாக்குகிறது 

நம்முடைய புரதச் சத்துக்கள் (புரோட்டீன்கள்) அழிக்கப்பட்டு ‘குளோபுளின்’ (hypo – gamma globulinaemia) என்ற புரதம் இரத்தத்தில் குறைந்து விடுகிறது. இந்த குளோபுளின் என்ற புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை இரத்தத்தில் தாங்கிச் செல்வதாகும். இந்தப் புரதத்தில் குறைவு ஏற்படும்போது, இரத்த அணுக்களிலும், இரத்தம் உற்பத்தியாகும் எலும்புகள், மண்ணீரல், கல்லீரல் போன்ற உறுப்புக்களிலும் பலவீனத்தையும், பெரும் பாதகங்களையும் ஏற்படுத்தும்.

இதன் காரணமாக எலும்பில் வலிகள், கை கால்களில் உளைச்சல்கள் சிறுவயதிலேயே ஆரம்பம் ஆகின்றன. அஜீரணம், கல்லீரல், மண்ணீரல் பலவீனங்கள் தலைதூக்குகின்றன.

BCG – கான்சருக்குக் காரணம் 

BCG Vaccine தடுப்பு ஊசியின் வீரியம் இரத்தத்தில் கலந்து எந்த உறுப்பில் அல்லது உடலின் எந்த பாகத்தில் தங்கிகிறதோ அந்த பாகத்தில் எந்தவிதமான தாங்கமுடியாத நோய்களும் ஏற்படலாம். கான்சர், புற்று நோய்களையும் இந்த பிஜிஜியின் கேடான வீரியமே தூண்டிவிடும். இனி இதற்கு மருந்துகள் கிடையாது என்பதை நாமும் அறிவோம். ஆங்கில மருத்துவமும் நன்கு அறியும்.

வாசகர்களே! இன்று நீங்கள் எந்த ஆஸ்பத்திரியிலும் தரும் மருந்துகளைப் பார்ப்பீர்களானால், தீர்க்க முடியாத எந்த நோயானாலும் சரியே. உடனே அது நோயாக இருக்கலாம். எனவே டி.பி. நோய்க்கான மருந்து கொடுத்து 6 மாதம் 1 வருடம், 2 வருடங்கள் என்று ஏதோ கண்டுபிடித்து விட்டதைப் போல் கொடுத்து விடுவார்கள். இதில் மிகவும் புகழ் பெற்ற மருந்து AKT 4 என்ற மருந்தைத்தான் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

TB – மருந்துகள் 3 வகைகள் 

இந்த மருந்தில் 3 மருந்துகள் – அனைத்தும் டிபி நோய்க்கான மருந்துகள் – என்று ஆங்கில மருத்துவர்கள் எண்ணிக கொண்டும், நம்பிக் கொண்டும் இருக்கும் மருந்துகள் ஆகும். அந்த மருந்துகள் RIFAMPICIN, ETHAMBUTOL, INH என்பவையாகும். இவற்றின் ஒவ்வொன்றின் கேடுகள் பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் தெளிவாக விளங்கிக் கொள்ள இருக்கிறோம்.

இதற்கு முன்பாக BCG – Vaccine பற்றி ஆங்கில மருத்துவத்தின் மரண வாக்குமூலம் இதோ:

பிசிஜி தடுப்பு ஊசியின் விளைவுகள் அனைத்தும் நோயாளிகள் கூறுவதைக் கொண்டுதான். இதில் விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் இல்லை. எனினும் BCG – Vaccine TB யைத் தடுக்கும் என்பது பொய். அதுபற்றி ஒன்றுமே எங்களுக்குத் தெரியாது என்பதுதான் உண்மை.

BCG – யின் மரண வாக்குமூலம் 

However, BCG gives relative degree of resistance to clinical tuberculosis. The protection, though useful, is: “Not Complete, Nor permannent, Nor Predictable, Nor Measurable”

பல சந்தர்ப்பங்களில் BCG – Vaccine தடுப்பு ஊசி கல்லீரல் புற்று நோய், இரத்தப் புற்று நோய், எலும்புகளில் புற்று நோய் போன்றவற்றைத் தூண்டியும் விடுகிறது.

However, Finally BCG may cause malignant tumors and cancers...!


- நன்றி டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான்

மேலும் தகவலுக்கு கீழே உள்ள லின்குகளுக்கு செல்லவும்


For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

தடுப்பூசி தற்கொலைக்கு சமம் ...!

தடுப்பூசி தற்கொலைக்கு சமம் ...!

தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பும் பலநோய்கள் தானாக தோன்றி எவ்வித மருந்துகளுமின்றி தானாக குறைந்திருக்கிறது. இப்படி இயற்கையாகக் குறைந்த பலநோய்களை தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றியது தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகள். 1800 களி லிருந்து நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். 20 ஆம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டுகளுக்குள் தட்டம்மை நோய் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் 97.7% குறைந்து விட்டன. அமெரிக்காவில் 1900 இல் ஒரு மில்லியனில் 133 பேர் இறப்பு என்பது குழந்தை பொது மரண விகிதம். இவர்களில் 100 பேர் தட்டம்மை யால் இறந்தவர்கள். 1960 இல் மரண விகிதம் 0.3% ஆகக் குறைந்து விட்டது. ஆனால் 1963 இல் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தட்டம்மை தடுப்பூசியால் மரண விகிதம் குறைந்துவிட்டதாக இப்போது கூறிக்கொள்கிறார்கள்.

இந்தத் தடுப்பூசிகள் நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால்கூட பரவா யில்லை; ஆனால் புதிய, கொடூரமான நோய்களையும் நம் குழந்தை களுக்கு பரிசாகத் தருகின்றன. 2004 ஆம் ஆண்டில் வெளியான டென்மார்க் நாட்டு அறிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டும் 4,40,000 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இவ்வாறு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன்றளவும் தொடர்கிறது. அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்கக் குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர் தான். 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்கக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் 150:1. 3000 மடங்கு அதிகரிப்பு ! ( அமெரிக்கத் தடுப்பூசித் திட்டங்களைப் பின் தொடர்ந்து தான் இந்தியா செல்கிறது என்பதை தனியே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது).

DPT தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படுகிறது. (இந்த தடுப்பூசி மருந்தையே நம் டாக்டர் கண்ணில் காட்டமாட்டார். சிரிஞ்சில் ஏற்றப்பட்ட பிறகே நாம் அதைப் பார்க்க முடியும்.இந்த நிலையில் அறிக்கையாவது மண்ணாவது ). DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையை கொஞ்சம் வாசியுங்களேன்.

  • அதிகப்படியான காய்ச்சல் ( 105 டிகிரி அல்லது அதற்கு மேல் )
  • மந்தமாக இருத்தல் 
  • நீடித்த அசதி
  • விட்டு விட்டு ஏற்படும் அலறல்
  • மூளை வளர்ச்சிக் குறைபாடு
  • அதிகப்படியான துறுதுறுப்பு
  • எப்பொழுதாவது வலிப்பு
  • மூளை பாதிப்பு
  • மயக்கம்
  • கண் நரம்புக் கோளாறுகள்
  • நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு. . .

இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது குழந்தை திடீரென இறந்துபோகும் என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க் என்று வெளிநாடுகளில் தானே இப்படி யான மரணங்கள் பதிவாகியுள்ளன. நாம் பயன்படுத்துவது வேறு மருந்தாக இருக்கும் என்று நினைத்துவிட வேண் டாம். இந்தியாவிலும் இத்தகைய பாதிப்பு கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின் றன. நம்முடைய பதிவேடுகளும், குறிப்பு களும் முறைப்படி எழுதப்படாமல் இருந் தாலும்கூட அரசும், மருத்துவத்துறையும் உணர்ந்துதான் இருக்கின்றன. 

இந்த கட்டுரையின் தொடர்ச்சி மருத்துவத்தின் அரசியல் என்ற தலைப்பில் இல் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.


- நன்றி அக்குஹீலர் கார்த்திகேயன்


மேலும் தகவலுக்கு கீழே உள்ள லின்குகளுக்கு செல்லவும்


For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

தடுப்பூசி போடப் போறிங்களா..!


தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது என்று நினைத்து உங்கள் பிஞ்சுகளின் உடலில் ஏற்றும் பெற்றோர்களே...! அவை வெறும் நஞ்சுகள் என்பதை புரிய வைக்க இதைவிட ஒரு விளக்கம் தேவைப்படாது என்று நம்புகிறோம்.

இன்று உலகில் இருக்கும் பல கொடூரமான நோய்களுக்கும் பின்னணியில் தடுப்பூசிகள்தான் முக்கிய காரணிகளாக உள்ளன. அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகள் விளக்கும்
  1. தடுப்பூசி என்றால் என்ன? அது நல்லதா கெட்டதா?
  2. தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்
  3. தடுப்பூசிகள்: மருந்தா? வணிகமா?
  4. தடுப்பூசிகளின் கேவலமான பின்னணியில் இருப்பது யார்..! யார்..?
  5. மருத்துவத்தின் அரசியல்

சரி, இந்த பதிவுகள் எல்லாமே நம்பிகையை தர போதுமானதாக இல்லை என்று கருதினால், நீங்கள் கடவுளாக நம்பும் உங்கள் மருத்துவரிடம் கீழ்க்கண்ட இந்த படிவத்தில் கையெழுத்து போட்டு விட்டு தாராளமாக உங்கள் பிஞ்சுகளின் உடலில் நஞ்சுகளை ஏற்றச் சொல்லுங்கள்...!

PHYSICIAN'S WARRANTY OF VACCINE SAFETY

I (Physician’s name, degree)_______________, _____ am a physician licensed to practice medicine in the State/Province of _________. My State/Provincial license number is ___________ , and my DEA number is ____________. My medical specialty is _______________

I have a thorough understanding of the risks and benefits of all the medications that I prescribe for or administer to my patients. In the case of (Patient’s name) ______________ , age _____ , whom I have examined, I find that certain risk factors exist that justify the recommended vaccinations. The following is a list of said risk factors and the vaccinations that will protect against them:
Risk Factor __________________________
Vaccination __________________________
Risk Factor __________________________
Vaccination __________________________
Risk Factor __________________________
Vaccination __________________________

I am aware that vaccines may contain many of the following chemicals, excipients, preservatives and fillers:

* aluminum hydroxide
* aluminum phosphate
* ammonium sulfate
* amphotericin B
* animal tissues: pig blood, horse blood, rabbit brain,
* arginine hydrochloride
* dog kidney, monkey kidney,
* dibasic potassium phosphate
* chick embryo, chicken egg, duck egg
* calf (bovine) serum
* betapropiolactone
* fetal bovine serum
* formaldehyde
* formalin
* gelatin
* gentamicin sulfate
* glycerol
* human diploid cells (originating from human aborted fetal tissue)
* hydrocortisone
* hydrolized gelatin
* mercury thimerosol (thimerosal, Merthiolate(r))
* monosodium glutamate (MSG)
* monobasic potassium phosphate
* neomycin
* neomycin sulfate
* nonylphenol ethoxylate
* octylphenol ethoxylate
* octoxynol 10
* phenol red indicator
* phenoxyethanol (antifreeze)
* potassium chloride
* potassium diphosphate
* potassium monophosphate
* polymyxin B
* polysorbate 20
* polysorbate 80
* porcine (pig) pancreatic hydrolysate of casein
* residual MRC5 proteins
* sodium deoxycholate
* sorbitol
* thimerosal
* tri(n)butylphosphate,
* VERO cells, a continuous line of monkey kidney cells, and
* washed sheep red blood

and, hereby, warrant that these ingredients are safe for injection into the body of my patient. I have researched reports to the contrary, such as reports that mercury thimerosal causes severe neurological and immunological damage, and find that they are not credible.

I am aware that some vaccines have been found to have been contaminated with Simian Virus 40 (SV 40) and that SV 40 is causally linked by some researchers to non-Hodgkin’s lymphoma and mesotheliomas in humans as well as in experimental animals. I hereby warrant that the vaccines I employ in my practice do not contain SV 40 or any other live viruses. (Alternately, I hereby warrant that said SV-40 virus or other viruses pose no substantive risk to my patient.)

I hereby warrant that the vaccines I am recommending for the care of (Patient’s name) _______________ do not contain any tissue from aborted human babies (also known as "fetuses").

In order to protect my patient’s well being, I have taken the following steps to guarantee that the vaccines I will use will contain no damaging contaminants.

STEPS TAKEN: _________________________
_______________________________________
_______________________________________
_______________________________________

I have personally investigated the reports made to the VAERS (Vaccine Adverse Event Reporting System) and state that it is my professional opinion that the vaccines I am recommending are safe for administration to a child under the age of 5 years.

The bases for my opinion are itemized on Exhibit A, attached hereto, -- "Physician’s Bases for Professional Opinion of Vaccine Safety." (Please itemize each recommended vaccine separately along with the bases for arriving at the conclusion that the vaccine is safe for administration to a child under the age of 5 years.)

The professional journal articles I have relied upon in the issuance of this Physician’s Warranty of Vaccine Safety are itemized on Exhibit B , attached hereto, -- "Scientific Articles in Support of Physician’s Warranty of Vaccine Safety."

The professional journal articles that I have read which contain opinions adverse to my opinion are itemized on Exhibit C , attached hereto, -- "Scientific Articles Contrary to Physician’s Opinion of Vaccine Safety"

The reasons for my determining that the articles in Exhibit C were invalid are delineated in Attachment D , attached hereto, -- "Physician’s Reasons for Determining the Invalidity of Adverse Scientific Opinions."

Hepatitis B

I understand that 60 percent of patients who are vaccinated for Hepatitis B will lose detectable antibodies to Hepatitis B within 12 years. I understand that in 1996 only 54 cases of Hepatitis B were reported to the CDC in the 0-1 year age group. I understand that in the VAERS, there were 1,080 total reports of adverse reactions from Hepatitis B vaccine in 1996 in the 0-1 year age group, with 47 deaths reported.

I understand that 50 percent of patients who contract Hepatitis B develop no symptoms after exposure. I understand that 30 percent will develop only flu-like symptoms and will have lifetime immunity. I understand that 20 percent will develop the symptoms of the disease, but that 95 percent will fully recover and have lifetime immunity.

I understand that 5 percent of the patients who are exposed to Hepatitis B will become chronic carriers of the disease. I understand that 75 percent of the chronic carriers will live with an asymptomatic infection and that only 25 percent of the chronic carriers will develop chronic liver disease or liver cancer, 10-30 years after the acute infection. The following scientific studies have been performed to demonstrate the safety of the Hepatitis B vaccine in children under the age of 5 years.
____________________________________
____________________________________ _____________________________________

In addition to the recommended vaccinations as protections against the above cited risk factors, I have recommended other non-vaccine measures to protect the health of my patient and have enumerated said non-vaccine measures on Exhibit D , attached hereto, "Non-vaccine Measures to Protect Against Risk Factors" I am issuing this Physician’s Warranty of Vaccine Safety in my professional capacity as the attending physician to (Patient’s name) ________________________________. Regardless of the legal entity under which I normally practice medicine, I am issuing this statement in both my business and individual capacities and hereby waive any statutory, Common Law, Constitutional, UCC, international treaty, and any other legal immunities from liability lawsuits in the instant case. I issue this document of my own free will after consultation with competent legal counsel whose name is _____________________________, an attorney admitted to the Bar in the State of __________________ .
_________________________ (Name of Attending Physician)
______________________ L.S. (Signature of Attending Physician)
Signed on this _______ day of ______________ A.D. ________
Witness: _________________ Date: _____________________
Notary Public: _____________Date: ______________________


=================================================

I'm really anxious to hear back from any readers whose doctor decides to sign this document in an effort to satisfy your peace of mind. I also have a lengthy list of legal professionals who are very curious as well.

நன்றி : Dave Mihalovic is a Naturopathic Doctor who specializes in vaccine research, cancer prevention and a natural approach to treatment. 

இந்த படிவத்தினை பதிவிறக்கம் செய்ய (PDF FILE) இங்கு செல்லவும் :http://preventdisease.com/pdf/Warranty-of-Vaccine-Safety-English.pdf

- நன்றி அக்குஹீலர் கார்த்திகேயன்

For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com