Real Indian Body

Real Indian Body 

Obesity X-Ray Photo
The length of digestive system is six times of your height





தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?

ஆண்களாயினும், பெண்களாயினும் அழகிற்கு அழகு சேர்ப்பது அவர்களுடைய தலைக்கேசம். 
இன்றைய நவீன யுகத்தில் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி உதிர்வதையும், இளநரை 
விழுவதையும் இப் பிரச்சினையின் காரணமாக பலவித விளம்பரங்களை கண்டு மயங்கி 
பலவித செயற்கை ரசாயன எண்ணெய்களையும். ஷாம்பு, ஹேர்டை போன்றவற்றை 
உபயோகப்படுத்தி மேலும் தங்கள் தலைமுடியை பாழ்படுத்திக் கொள்வதை காண்கிறோம். 
நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், உணவுப்பழக்க முறையினாலும், இயற்கையில் 
கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்துவதாலும் இப்பிரச்சினையை அறவே தடுக்க முடியும். 

தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள் 

தலைமுடி கொட்டுவதற்கு தலை பராமரிப்பு மட்டும் காரணமில்லை, வயிற்றில் அமிலத்தன்மை 
அதிகரிப்பதாலும், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு டென்சன் 
ஆவதாலும் கூட தலைமுடி கொட்டும். உணவில் கால்சியம் சத்து குறைந்தாலும் இக்குறை 
உண்டாகும். இக்குறையை தீர்க்க நாம் டென்சனை தவிர்க்கவேண்டும். அமிலத்தன்மை 
வயிற்றில் ஏற்படாத வண்ணம் காலம் தவறாமல் உண்ணவேண்டும். இளநீர் அதிகம் குடிப்பதால் 
கால்சியம் சத்து கிடைக்கும், உடலில் அமிலத்தன்மையை தவிர்க்க ரசாயன பொருட்கள் கலந்து 
செய்யப்பட்ட உணவு வகைகள், குளிர்பானங்கள், சாஸ் வகைகள், செயற்கை நிறங்கள் 
சேர்க்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். 

சிலர் தலைக்கு தினமும் அதிகமாக எண்ணெய் தடவிக்கொண்டால் முடி அடர்த்தியாக வளரும் 
என்ற எண்ணத்தில் பலவிதமான செயற்கை எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். ஆனால் 
உண்மையில் தலைக்கு எண்ணெயை அதிகம் தடவக்கூடாது. நம் உடலில் தோலில் உள்ள 
துவாரங்களில் எண்ணெய் சுரப்புவதுண்டு அதுபோல் தலையில் உள்ள மயிர்க்கால்களிலும் 
எண்ணெய் சுரப்புவதுண்டு. அதுவே தலைமுடிக்கு போதுமானது என்று மருத்துவர்கள் 
கூறுகிறார்கள். இவ்வாறு அதிகம் எண்ணெய் அப்பிக் கொண்டால் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து 
பொடுகு உண்டாகும். பொடுகு அதிகம் ஆகும் போது, சீக்கிரம் நரையும் உண்டாகும். 

வறண்ட சருமம் உள்ளவர்கள் மட்டும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் 
சமஅளவு சேர்த்து லேசாக சுடவைத்து அதை மயிர்கால்களில் படும்படி மசாஜ் செய்தபின் இரண்டு 
மணி நேரம் ஊறவைத்து இயற்கையான சீகைக்காய் பொடி கொண்டு தண்ணீரில் அலசினால் 
பொடுகு அறவே அகன்று இள நரையும் விழாது. 

தலைமுடிக்கு ஊட்டம் அளிக்க... 

தலை முடிக்கு ஊட்டம் அளிப்பதற்கு முன்பாக அது செழுமையாக இருக்க உள்ளுக்கு ஆகாரம் 
சாப்பிட வேண்டும். கேசத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். எனவே முருங்கைக்கீரை, 
முளைக்கீரை, பேரீச்சம்பழம் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். சில சமயங்களில்
நம் தலைமுடியை சரிவர வாருவது கூட கிடையாது. இதனால் கூடு கூடாக தலைமுடி கொட்ட 
ஆரம்பிக்கும். உடல் சூடு, வேண்டாத சிந்தனை, அநாவசிய டென்சன் இவற்றை நீக்க வேண்டும். 
இதை போக்க வெந்தயத்தை ஊறவைத்து அறைத்து வடிகட்டி அதன் சாறை எடுத்து தலையில் 
தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் தலை குளிக்க வேண்டும். இதே முறையில் செம்பருத்தி 
இலையை பயன்படுத்தியும் செய்யலாம். 

வியர்வை தங்கக்கூடாது 

வியர்வை அதிகம் தலையில் தங்கவிடுவதால், அதன் புழுக்கத்தில் பேன் உண்டாகும். இதைப்
போக்க வேப்ப எண்ணெய் சுடவைத்து மயிர்கால்களில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து 
தலையை நல்ல சீகக்காய் கொண்டு அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் 
செய்து வந்தால் பேன் தொல்லை அணுகாது. 

தலைமுடி கொட்டுவதற்கு நாம் உபயோகிக்கும் துண்டும் காரணமாகும். துண்டில் அழுக்கு 
சேரவிடாமல் நல்ல சோப்பினால் அலசப்பட்டு பராமரிக்க வேண்டும். 

மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்
சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, 
வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை 
குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். நேந்திரம் 
பழத்தில் வைட்டமின் ஈ சக்தியும், பி12-ம் இருப்பதால் அதை உட்கொண்டால் மயிர்கால்கள் உறுதி 
அடைவதுடன் தலைமுடியின் மினு மினுப்பும் கூடுகிறது. பாதாம்பருப்பு, அக்ரூட், அத்திப்பழம் 
இதில் கிடைக்கும் ஏதாவது ஒன்றை ஐந்து எண்ணிக்கைகள் சாப்பிட்டு, ஒரு டம்பளர் காரட் சாறும் 
குடித்தால் தலைமுடி நன்கு வளர்வதோடு, பொலிவோடும் மின்னும். 

மேற்கூறிய இயற்கை முறையிலேயே நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டால், 
பணம் விரயம்படுத்தும் கண்டவிதமான செயற்கை எண்ணெய்களையும், ஹேர் டைகளையும், 
ஷாம்புகளையும் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லாமல்; நம்முடைய தலைமுடியை நன்கு 
பராமரித்து இயற்கையான கறுப்பு நிறத்தோடு பொலிவோடு வைத்து கொள்ளலாம்.

நமது அன்றாட உணவும் காய்கறிகளின் தன்மையும்

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது. புரோட்டீன் உடலை வளர்க்கிறது. கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35 கலோரி உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். எடை கூட இன்னும் நிறைய உணவு உட்கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி. தண்ணீர் பருகவேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு,உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.
வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட்களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு,துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம். கசப்பு, புளிப்பு, காரம்; உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2 ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமைத்தல் வாயு உண்டாகாது.
 காரமுடைய பொருட்கள் உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
 ஒரு மாதத்திற்கு 500 மிலிக்கு எண்ணையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
 ஒரு வாரத்திற்கு 2 முட்டைகளுக்கு மேல் உண்ணக்கூடாது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிக கொழுப்புச் சத்து உள்ளது. இந்த கொழுப்பு 8 தேக்கரண்டி வெண்ணைக்குச் சமமானது.
உப்பு :
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2.5 கிராம் அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. இதற்கு மேல் சேர்த்துக் கொண்டால் அதிக இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். ஊறுகாய், அப்பளம், சட்னி ஆகியவைகளில் உப்பு அதிகமாக உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும்.
ஜீரணம் :
மாவுப் பொருட்களின் ஜீரணம் வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. மாவுச்சத்து ஜீரணமடைய சுண்ணாம்புச் சத்து ஊடகமாக உள்ளது. மாவுப்பொருட்களை நன்கு மென்று சாப்பிடவேண்டும். இல்லையென்றால் சரியாக ஜீரணம் ஆகாது. புரதம் இரைப்பையில் ஜீரணம் அடைய ஆரம்பிக்கிறது. புரதசத்து ஜீரணமடைய அமிலம் ஊடகமாக உள்ளது.
பூண்டு :
1. பூண்டில் ஆஸ்பிரின் குணம் உள்ளது. இதனால் இதயக்கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
2. பூண்டை உண்டால் உடம்பில் கொழுப்பு கரையும்.
3. பூண்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
4. இதய தசை மற்றும் இரத்தக்குழாய் தசைகளையும் வலுப்படுத்தும்.
5. பூண்டு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும்.
6. குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இரவில் பாலில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும், வயிற்று உப்புசமும் வராது.
7. தசை வலியிருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்து கட்டினால் வலி குறையும்.
8. பூண்டின் தோலை சேகரித்து சாம்பிராணிக்கு பதிலாக பயன்படுத்தலாம். அதன் புகைக்கு   கொசு, , மற்றும் கரப்பான் அண்டாமல் இருக்கும்.
இஞ்சி :
இஞ்சியில் கால்ஷியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ் கார்போ ஹைட்ரேட், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இஞ்சி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இஞ்சியைத் தவிர்க்கவேண்டும். பித்தத்தை குணமாக்கும்.
புதினா :
புதினா கீரை இரத்த சுத்திகரிப்புக்குச் சிறந்த மருந்தாகும். தினமும் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் முகத்தில் பொலிவு உண்டாக்கி, கரும்புள்ளி மறைகிறது. பருக்கள் வருவது குறைகிறது. முகத்திலுள்ள எண்ணை பசை மறைகிறது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பிரச்சனைகள் குறையும்.
வெங்காயம் :
வெங்காயம் ஜீரணத்திற்கு நல்லது. வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். அப்ப்ஹ்ற்ங் டழ்ர்ல்ஹ்ற்ங் ஈண்ள்ன்ப்ல்ட்ண்க்ங் என்ற எண்ணை இருப்பதால் வெங்காயம் காரத்தன்மையோடு உள்ளது. இதயத்திற்கு சக்தியை தருகிறது. நரை முடியைத் தடுக்கும், தலையில் வழுக்கை விழாமல் காக்கும். எலும்புக்கு வலிமை அளிக்கும். பித்தநோய், கண் நோய், வாத நோய்கள் குணமாகும்.
 கத்தரிக்காய், பீட்ரூட், ஊதா முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் லங் கேன்சர் வராது. பீன்ஸ், பாகற்காய், கீரை வகைகளில் உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லாவகையான கேன்ஸர் நோய்களும் அண்டாது.
 ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து வந்தால் கேன்சர் வராமல்  தடுக்கலாம்.
 நார் சத்து நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவைகளை உண்டு வந்தால், நம்  உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக வெளியேரும்.
 தக்காளி, சிவப்பு நிறமுள்ள ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை உண்டால் கண்பார்வை நன்கு தெரியும்.
கத்தரிக்காய் :
கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நரம்புகளுக்கு நல்லது. சளி இருமலுக்கு நல்லது. ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு நல்லது. தோல் வியாதி உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.
முருங்கைக்காய் :
முருங்கைக்காயில் இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. நரம்புகளுக்கு நல்லது. முருங்கைக்காயை குழந்தைகள் உண்டால் வயிற்றில் கிருமிகள் அண்டாது. பெரியவர்களுக்கு வாயுக்கோளாரை ஏற்படுத்தும்.
வெண்டைக்காய் :
Acetylated, Galeturomic என்ற அமிலங்கள் வெண்டைக்காய்க்கு வழுவழுப்பை ஏற்படுத்துகிறது. பாதி கரையும் நார்ச்சத்து,பாதி கரையாத நார்ச்சத்து வெண்டைக்காயில் உள்ளது. கரையும் நார்ச்சத்து கொலெஸ்டெராலை குறைக்கும். கரையாத நார்ச்சத்து குடலை பாதுகாத்து, குடல் புற்றுநோய் வராமல் காக்கும்.
மாங்காய் :
மாங்காயில் வைட்டமின் ஏ, நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. தோல் நோய் உள்ளவர்கள் மாங்காயை தவிர்ப்பது நல்லது. மாங்காயை நிறைய உண்டால் உடலில் சூட்டை உண்டாக்கும். மாங்காய்க்கு பசியைத் தூண்டும் தன்மை உள்ளது.
அவரக்காய் :
அவரக்காயில் நிறைய புரதம் உள்ளது. இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை நீக்கும்.
அத்திக்காய் :
அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. அத்திக்காயை உணவில் சேர்த்து வந்தால் மூல நோய் குணமாகும்.
பீர்க்கங்காய் :
பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைய உள்ளது. தாது உப்புக்களும் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். இரவு உணவில் பீர்க்கங்காயை தவிர்ப்பது நல்லது.
கோவக்காய் :
கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வாய் மற்றும் நாக்கிலுள்ள புண்களை குணப்படுத்தும்.
புடலங்காய் :
புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச்சத்து மற்றும் நிறைய புரதம் உள்ளது. தலை வலி, சளி மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கள் புடலங்காயை தவிர்ப்பது நல்லது.
பாகற்காய் :
பாகற்காயில் பாலிபெப்டைட் என்ற இன்சுலின் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. பாகற்காயை நிறைய உண்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும். பாகற்காய் வயிற்றிலுள்ள கிருமிகளை அழிக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு பாகற்காய் ஜøஸ் சாப்பிடலாம்.
சுரைக்காய் :
சுரைக்காயில் நீர்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவைகள் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். ஆண்மை சக்தி கூடும். இதயத்திற்க நல்லது.
பூசனிக்காய் :
பூசனிக்காயில் கொழுப்பு மற்றும் புரதச் சத்து உள்ளது. நரம்பு மற்றும் வயிற்றுப்புண்களுக்கு நல்லது.
கொத்தவரைக்காய் :
கொத்தவரைக்காயில் நார்ச்சத்து உள்ளது. வாயுத்தொல்லையை உண்டாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

வாழைக்காய் :

வாழைக்காயில் வைட்டமின் இ மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லையை உண்டாக்கும்.
வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. நன்கு சிறுநீர் கழியும், உடலுக்கு குளிச்சியைத் தரும்.
சுண்டைக்காய் :
சுண்டைக்காயில் வைட்டமின் சி உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் கிருமிகள் வராது.
பலாக்காய் :
பலாக்காயில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. அஜீரண கோளாறு உள்ளவர்கள் பலாக்காயை தவிர்க்கலாம். செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும்.
களாக்காய் :
களாக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. நல்ல பசி உண்டாகும். கண் பார்வை கூடும்.
நெல்லிக்காய் :
நெல்லிக்காயில் கால்சியம், செல்லுலோஸ், வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, பாஸ்பரஸ்,நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் மற்றும் பிளட் பிரஷர் உள்ளவர்கள் நெல்லிக்காயை உண்ணலாம். நெல்லிக்காயை உண்டால் இளமை கூடும். தலைமுடி நன்கு வளரும்.
காரட் :
காரட்டில் வைட்டமின் ஏ, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், மற்றும் மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளன. காரட் கண் பார்வைக்கு நல்லது.
பீன்ஸ் :
பீன்ஸில் வைட்டமின் ஏ, கார்போ ஹைட்ரேட், புரதம் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. கண் பார்வை தெளிவு பெறும். வாயு, பித்தம் நீங்கும். சருமம் பழபழப்பாகும்.
பீட்ரூட் :
பீட்ரூட்டில் குளூகோஸ் உள்ளது. பீட்ரூட் உண்டால் இரத்தசோகை நீங்கும்.
வெள்ளை முள்ளங்கி :
வெள்ளை முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாஷியம், கால்ஷியம், இரும்புச்சத்து மற்றும் சத்து உள்ளது. சிறுநீரக கல் அடைப்பு குணமாகும். உடலுக்கு குளுர்ச்சியைத் தரும்.
சிவப்பு முள்ளங்கி :
சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின் சி, கால்ஷியம், கந்தக சத்துக்கள் உள்ளன. சிறுநீரை வெளியேற்றும். அசிடிட்டி உள்ளவர்கள் சிவப்பு முள்ளங்கியை உண்டால் குணமாகும்.
காலி ஃபிளவர் :
காலிஃபிளவரில் இரும்புச்சத்து, சோடியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, மெக்னீஷியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கல் வராமல் இருக்கும். உடல் மெலியும்.
முட்டைக்கோஸ் :
முட்டைக்கோசில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சோடியம், இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. தாது பலம் கூடும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
நார்த்தங்காய் :
நார்த்தங்காயில் சிட்ரஸ் ஆசிட் உள்ளது. வயிற்றுப்புண், அல்சர் உள்ளவர்கள் நார்த்தங்காயை தவிர்க்க வேண்டும். வாயுத் தொல்லையை நீக்கும்.

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?

 
பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்ற இயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.
எப்படி என்பதை இப்போது பார்ப்போம்:
சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன.
முகப்பருவைப் போக்கவும்,ன் தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்.
1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.
2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.
3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.
4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ் கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.
5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.
6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.
7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.
9. பருக்களில் சீழ் வைத்தால் “டெட்ராசைக்ளின்” (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.
10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன. அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்

நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே ‘இன்ன நோய்’ என்று சொல்லிவிடுவார்கள்.
நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், ‘புரோட்டீன் _ கெராட்டீன்’ என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது.நகங்கள் முளைக்கும்போது மிருதுவான செல் (cell) களால் உருவாகிறது. பிற்பாடு வளரும்போது கடினத்தன்மை அடைகிறது. நகத்தின் அடிப்புறம் உள்ள சருமத்தின் புற அடுக்கு க்யுடிகிள் (cuticle)எனப்படும். இது அழுக்கு, நுண்ணியக் கிருமிகள் போன்றவை உள்ளே ஊடுருவாமல் தடுத்துவைக்கிறது. நகத்தின் அடியில் உள்ள சருமத்தில் ரத்தம் அதிகமாய் ‘சப்ளை’ ஆவதாலும், தந்துகிகளாலும் இது இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும்.
நகத்தின் நீரகத்தன்மை 10% என்பதால் எலும்புகளை, பற்களைப் போலவே இதுவும் ஒரு கடினத் திசு ஆகும்.இதன் வளர்ச்சி வாரத்திற்கு 0.5_1.2 மி.மீயாக இருக்கும். நகம் கோடையில் விரைவாக வளரும். பகலைவிட இரவில் கூடுதல் வளர்ச்சி கொண்டிருக்கிறது. நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவராயின் இடது கை நகத்தைவிட வலதுகை நகம் துரிதமாய் வளரும். நகத்தின் இயல்பான வளர்ச்சிக்கு சத்துள்ள உணவு தேவை. போஷாக்கின்மை அதன் வளர்ச்சியை தாமதப்படுத்தும். ‘ப்யூலைன்’ (Beauline) என்று சொல்லக்கூடிய பள்ளங்கள் நகத்தின் குறுக்கு வசத்தில் விழும் சத்தின்மை காரணமாக அது முறிவுத்தன்மை அடையவும், சீவலாய் உதிரவும் வாய்ப்பு உண்டு.பெண்கள் உபயோகிக்கிற நகப்பூச்சு நகங்களை மேலும் கடினப்படுத்திவிடும். ஆனால் ‘பாலிஷ் ரிமூவர்’ உபயோகிப்பதால் நகங்கள் முறிந்து போகவும் கூடும்.
சத்துக் குறைவான நகங்கள் மஞ்சள் நிறம் அடையும். நீரிழிவு, இருதய நோய் உள்ளவர்களின் நகங்கள் மஞ்சலாக இருக்கும். முற்றிய ‘கேஸ்’களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நகப் படுகை (Nail Bed) நீலமாக மாறும்.சிலருடைய நகங்கள் இயல்புக்கு மாறான தோற்றம் கொண்டிருக்கும். அவை நோய்களின் அறிகுறியை மருத்துவருக்கு புலப்படுத்தும்.
1. க்ளப்பிங் (Clubbing): நகங்கள் மேற்புறத்தில் அதீத வளைவுடன், விரல் நுனியில் சுருண்டும் காணப்பட்டால் அவை அல்ஸர், டி.பி.எம் பிஸிமா போன்ற நோய்களின் வரவைக் குறிப்பதாகும்.
2. ப்ளு_மூன்ஸ் (Blue Moones): நகத்தின் அடிப்புறம் நீலமாக காணப்பட்டால் அது கால், விரல், பாத இசிவு மற்றும் இருதய நோய் குறித்தும் எச்சரிப்பதாகும். சில நேரங்களில் கீல் வாதங்களுக்கும் இந்த அறிகுறி பொருந்தும். 3. ‘ஸ்பூன் நெய்ல்ஸ்’ (Spoon Nails): தட்டையாக அல்லது கரண்டி போல் தோற்றமளிக்கும் நகங்கள். இரும்புச் சத்து குறைவில் வரும். அனீமியா, தைராய்டு கோளாறு மற்றும் சிபிலிஸ் நோய் தொடர்புகளைச் சுட்டும்.4. ‘ப்யூ’ஸ் லைன்கள் (Beau’s Lines): கடுமையான நோய் அல்லது சத்துப் பற்றாக்குறை காரணமாக நகத்தின் படுக்கை வாட்டில் பள்ளக்கோடுகள் விழும். தட்டம்மை (விமீணீsறீமீs), புட்டாலம்மை (விuனீஜீs) போன்றவற்றால் நகத்தின் வளர்ச்சி தற்காலிகமாக பாதிக்கப்படும்.
5. ‘டெர்ரி’ஸ் (Terry’s): நகத்தின் அடிப்புற சருமம் ஒரேயடியாக வெளுத்துப் போகலாம். அது ஈரலில் வரும் ‘சிவீக்ஷீக்ஷீலீஷீsவீs’ஐ குறிக்கும்.
6. ‘லிண்ட்ஸே’ (Lindsay): நகத்தின் முனைப் பக்க பாதி இளஞ்சிவப்பு அல்லது பழுப்பாக இருக்கும். க்யூடிகிள் சார்ந்த பாதியும் வெண்மையாய் காணப்படும். இது நாள்பட்ட சிறுநீரகக் கோளாறின் அறிகுறியாகும்.7. ‘எல்லோ_நெய்ல் ஸிண்ட்ரம்’ (Yellow Nail Syndrome): நக வளர்ச்சி குன்றி கடினமாகும். மஞ்சள் அல்லது பசுமஞ்சள் நிறம் காணும். இது சுவாசக் கோளாறு பற்றிய அறிகுறி.8. ‘ஸ்ப்ளிண்டர் ஹெமரேஜஸ்’ (Splinter Haemorrhages): ரேகை மாதிரி ஓடும் செந்நிறக் கீற்றுகள் தந்துகிகளில் ஏற்படும் இரத்தக் கசிவையும் ப்ளட்_ப்ரஷ்ஷரையும் ‘Psoriasis’ என்கிற சரும நோயையும் பற்றி நமக்கு எச்சரிப்பதாகும்.
9. ‘பிட்டிங்_இன்_ரோஸ்’ (PitinginRows): நகம் முழுக்க விழும் குழிகள் சீக்கிரமே முடி உதிருவதற்கான ‘சிக்னல்’. ஸோ… உங்கள் நகங்களை ஊன்றி கவனியுங்கள். அவை அதையே சொல்ல முயல்கின்றன.
நகப் பராமரிப்பு: நலம் தரும் சுத்திகரிப்பு! ‘வீக்’கான நகங்கள் என்றாலே சுலபத்தில் முறிந்து போகிற (Brittle) நகங்கள் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உரிதல், கிழிதல், பிளவுபடுதல் என்பன நகத்தின் தன்மைகள். சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் வறட்சி, குளுமை காரணமாக நகம் தன்னுடைய ஈரத்தன்மை இழக்கும். இதனாலும் முறிவுத்தன்மை மோசமாகும். இந்த இழப்பை ஈடுகட்ட, படுக்கப்போகும் போது சற்று வெதுவெதுப்பான நீரில் நகத்தை, ஒரு 15 நிமிடங்கள் முழுவதுமாய் நனைத்துக் கொள்ளலாம். பிறகு ‘மாய்சரைஸர்’ பயன்படுத்தலாம். நமது கேசத்தைப் போலவே நகங்களும் பரம்பரையை ஒட்டியே அமைகின்றன. ஸ்ட்ராங்கான சோப், டிடர்ஜன்ட் வகைகளைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகழுவிக் கொண்டிருக்கக் கூடாது. அதனால், ‘நெய்ல்_ப்ளேட்’டுகள் சுருங்கிப் போகும் அல்லது விரிந்துவிடும்.
நாம் முதுமை அடையும்போது நகங்கள் மெலிந்து, உடையக் கூடியதாகிவிடும். நடுத்தர வயதினரின் நகங்கள் வளர்ச்சி குன்றும், ஆனைவிட பெண்Êணுக்கு …. வருஷங்கள் முன்னதாகவே நகமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. நகத்தினால் எதையும் சுரண்டவோ, கீறவோ கூடாது.சில பெண்கள் போலி நகங்கள் (காஸ்மெடிக் ஸ்டோரில் விற்கப்படும் Acrylic Nails) பொருத்திக் கொள்வார்கள். நீண்ட உபயோகத்தில் அவை ஒரிஜினல் நகங்கள் பாழடிந்துவிடும்.நக வளர்ச்சிக்கு என்று தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் தினமும் ‘மைனாக்ஸிடில்’ (Minoxidill) – கேச வளர்ச்சிக்கு உபயோகிப்பது_பூசினால் ஆரோக்கியமான நகத்தைப் பெறமுடியும் என்கிறது அமெரிக்க கொலம்பியா மருத்துவமனையின் ஆராய்ச்சி மையம்.