கர்ப்பப்பை நலமாக இருக்க



ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இறைவன் எப்போதும் குறைகளை வைப்பது இல்லை.

யாருடைய உடம்பையும் இறைவன் குறைகளாக படைப்பது இல்லை.

ஆனால் இன்று கர்ப்பபை சம்பந்தமான பிரச்சினை மிக அதிகரித்து கர்ப்பப்பையில் புற்றுநோய்வரை ஏற்பட்டு பின் கர்ப்பபையையே எடுத்துவிடுகிறார்கள்.அவ்வாறு எடுக்கப்பட்டாலும் அந்த பெண் தொந்தரவுகளில் இருந்து வெளிப்பட்டு நிம்மதியாக இருக்கிறாரா? இல்லை அதன் பின் மற்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறாரா? என்றால் அவர் மேலும் மேலும் தொந்தரவுகளுக்கு ஆளாவதைத்தான் பார்க்க முடிகிறது. ஆம் .தவறான செயலை செய்தால் தவறான விளைவுகள்தான் ஏற்படும்.

கர்ப்பப்பையில் என்ன மாதிரியான தொந்தரவுகள் ஏற்படும்

  • ஒழுங்கற்ற மாதவிடாய்
  • அதிக இரத்தப் போக்கு
  • அதிகநாட்கள் இரத்தப் போக்கு
  • அதிக வலி
  • வெள்ளைப்படுதல்
  • புண்கள்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதற்கு காரணம் என்ன? இதை ஏதாவது ஒரு ஆங்கில மருத்துவரிடம் சென்று கேட்டால் அவர்கள், அவர்கள் பங்கிற்கு ஏதேனும் சொல்வார்கள்.
ஆங்கில மருத்துவத்திற்கு மூலகாரணம், தெரியாத அதே சமயம் குணப்படுத்த முடியாத நோய்களின் பட்டியலில் 15 ஆவது வரிசையில் இருப்பது “கர்ப்பப்பை சம்மந்தமான அனைத்து நோய்களும்”. எனவே மூலகாரணமும் தெரியாமல், குணப்படுத்தவும் இயலாத ஒரு மருத்துவத்தை நாம் நாடும்போது அந்த நோய் முற்றுவது என்பது இயற்கையே. தவறான செயலை செய்தால் தீங்கு நிச்சயம் நேரும் என்பது உண்மைதானே. அதுதான் இங்கும்.


சரி இதன் தீர்வுக்கான வழியை பற்றி இங்கு கொஞ்சம் பார்போம்.

நமது முன்னோர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது அது எத்தனை நாட்களில் குணமடைந்தது?

தற்போதைய பெண்களுக்கு எத்தனை நாட்களில் குணமடைகிறது?

முன்னோர்களென்றால் நமது பாட்டியையே எடுத்துக்கொள்ளலாம்.

அவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டதா என்றால் பெரும்பாலும் ஏற்பட்டு இருக்காது. ஆனால் தற்போதைய பெண்களுக்கு ஏன் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது?


முதலில் மாதவிடாயை பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

மாதவிடாய் என்பது ஒரு பெண் பருவம் அடைந்த நாள் முதல் எற்படும் ஒரு இயற்கையின் சுழற்சி. அந்த பெண்ணின் சினைப்பையில் இருக்கும் கருமுட்டை ஆனது கருக்குழாய்மூலம் கருப்பையை அடைந்து ஆணின் உயிரணுவிற்காக காத்திருக்கும். இந்த கருமுட்டையை தாங்கிப் பிடிக்க இரத்தத்தினால் ஆன ஒரு பை உருவாகி அதில் இந்த கருமுட்டையானது இருக்கும். ஆணின் உயிரணு கிடைக்காத பட்சத்தில் அந்தக் கருமுட்டை மற்றும் இரத்தத்தால் ஆன பை இரண்டும் உடைந்து உடலைவிட்டு வெளியேறிவிடும். இது இயற்கையாக நடக்கும் ஒரு செயல். இந்த செயல் 28 நாட்களில் நடந்து முடிந்து அடுத்த சுழற்சி ஏற்படும். இது இயற்கை. அதேபோல் இந்த வெளியேறும் செயல் மட்டும் மூன்று நாட்கள் நடக்கும்.

ஆனால் இன்றைய கால பெண்களுக்கு அவ்வாறு நடக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மூன்று நாட்களில் வெளியேற வேண்டிய இந்த கழிவு 5/6 நாட்கள் வரை தொடர்ந்து வெளியேறுதல்,குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே வெளியேறுதல்,குறிப்பிட்ட நாட்கள் கழித்தும் வெளியேறாமல் இருத்தல், அதிக வலி, அதிக உதிரப்போக்கு, சில சமயங்களில் ஒரு நாள் மட்டும் வெளியேறுதல், தொடர்ந்து பல நாட்கள் உதிரப்போக்கு இருத்தல், தொடர்ந்து சில மாதங்கள் கழிவு வெளியேறாமல் இருந்தல் போன்றவை ஏற்படுகிறது.

நம் பாட்டி ,அம்மாக்களுக்கு இல்லாத இந்த சிக்கல் ஏன் நமதுகால பெண்களுக்கு?

காரணம் நமக்கு உடலைப் பற்றிய தெளிவு இல்லாமல் போனது ஒருபுறம், நமது வாழ்க்கை முறை ஒருபுறம்.

இங்கே இந்த பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்த நமது முன்னோர்கள் வாழ்ந்தது எப்படி?

மிக எளிது.
  • அந்தக் காலங்களில் மாதவிடாய் சமயத்தில் அவர்கள் குளிக்கமாட்டார்கள்.
  • எந்த வேலையும் செய்யாமல் தீட்டு என்று வீட்டிற்கு ஒதுக்குபுறம் ஒதுக்கிவிடுவார்கள்.
  • எந்த வித நாப்கினும் அவர்கள் பயன்படுத்தவில்லை. பருத்தி துணிகளையே பயன்படுத்தினார்கள்.

இந்த செயல்களில் மறைந்திருக்கும் சூட்சும விஞ்ஞானம் என்ன தெரியுமா?

1. நாம் முன்னமே பார்த்த அந்தக் கழிவானது வெளியேற உடலின் சூடு மிகவும் துணைபுரிகிறது. அதனால் அவர்கள் குளிப்பதைத் தவிர்த்தார்கள். அதன் விளைவு உடலின் சூடு குறையாமல் கழிவை வெளியேற்ற அந்த சூடு பயன்பட்டது. ஆனால் இப்போது பெண்கள் அவர்கள் சூழ்நிலை காரணமாக தினமும் வழக்கம் போல் குளித்துவிட்டு வருவதால் உடல் சூடு குறைவதால் கழிவு வெளியேற்றம் தடைபடுகிறது.

2.அந்த காலங்களில் தீட்டு என்று ஓரமாக அமர்ந்து ஓய்வில் இருந்தார்கள். அதனால் உடலில் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் வேலை செய்யும்போது ஏற்படும் சக்தி பரிமாற்றம் ஏற்படாமல் முழு இயக்க சக்தியும் கழிவு வெளியேற்றத்திற்கே செலவு செய்யப்பட்டதால் எளிதில் கழிவு வெளியேறியது.

மற்றபடி அதில் தீட்டு என்றும், தீண்டத்தகாதவர் என்றும் ஏதும் இல்லை. இந்த இரண்டு செயல்களும் நம் முன்னோர்கள் இதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆனால் இன்றைய பெண்கள் சூழ்நிலையின் காரணமாக உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை செய்வது அவர்கள் உடலில் உள்ள மாதவிடாய் கழிவை வெளியேற்றவிடாமல் தடுக்கிறது.

3.அந்தக்காலங்களில் நமது அம்மா, பாட்டி போன்றோர்கள் இன்றைய பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் பயன்படுத்தியது இல்லை. எனவே அவர்களுக்கு கர்ப்பப்பை தொடர்புடைய சிக்கல்கள் இருந்தது இல்லை.

இதை சொல்லும்போது நாப்கின் பயன்படுத்துவது தவறா என்று கேட்கலாம்.


இன்றைய விளம்பரங்களில் பாருங்கள், நாப்கின் அணிந்துகொண்டு மலை ஏறலாம், மரம் ஏறலாம், ஓடலாம், ஆடலாம், பாடலாம் என்று சொல்லப்படுகிறது.

இது சரியா என்று மேலே சொல்லப்பட்ட கருத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஓய்வில் இருந்தால்தான் கழிவுகள் வெளியேறும். ஓய்வு இல்லாமல் மலையும், மரமும் ஏறினால் என்ன நடக்கும். கழிவுகள் உடலிலேயே தங்கும். மேலும் நாப்கின்களில் இருக்கும் திரவத்தை உறிஞ்சும் ஜெல், மாதவிடாய் கழிவுகளை வெளியேற்ற விடாமல் தடுக்கிறது. அதனால் கழிவுகள் முழுதும் வெளியேறாமல் உடலிலேயே தங்குகிறது.

4. இதுபோன்று தங்கிய கழிவுகளாலேயே கர்ப்பப்பையில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.

இதுபோக இந்த சிக்கல்கள் சரியாக வேண்டி எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள், அதுவும் பெண்கள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளும் நோயை பெரிதுபடுத்தி கர்ப்பப்பையில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தும்.

உடனே கேள்வி எழும்… என்ன மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் கூட சிக்கல்களை பெரிதுபடுத்துமா? ஆம். ஆங்கில மருத்துவத்திற்கு மூலகாரணம் தெரியாது, அதேசமயம் குணப்படுத்தவும் முடியாது என்று உலக சுகாதர நிறுவனமும், இந்திய அரசாங்கமும் அறிவித்திருக்கும் பட்டியலில் 15 ஆவது இடத்தில் “கர்ப்பப்பை தொடர்புடைய அனைத்து நோய்களும்” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த காரணத்தாலேயே ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் சாப்பிடுவது கர்ப்பப்பையை எடுக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கிறது.

சரி இந்த சிக்கல்கள் வராமல் இருக்கவும், வந்தவர்கள் இதை சரி செய்யவும் என்ன செய்யவேண்டும். 

எப்போதும் போல் பசி எடுக்கும்போது பிடித்த உணவுகளையும், தாகத்திற்கு தண்ணீரையும், உடல் ஓய்வு கேட்கும்போது ஓய்வையும், தூக்கம் வரும்போது தூக்கத்தையும் உடலுக்கு கொடுத்தாலே போதும்.

மேலும் மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்து உடல் சூடு குறையாமல் பார்த்துக்கொண்டு, அந்த சமயங்களில் நாப்கின் பயன்படுத்தாமல் ஓய்வில் இருந்தால் போதுமானது. இந்த காலத்தில் ஓய்வா என்றால், நிச்சயம் ஓய்வுதான் தேவை.


மேலும் சொல்வதானால் பெண்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்ப்பதாலும், கர்ப்பகாலங்களில் குழந்தையை ஸ்கேன்செய்ய கருப்பையை ஸ்கேன் செய்வது, சிசேரியன் என்ற பெயரில் கர்ப்பப்பையை கிழித்து குழந்தையை வெளியே எடுப்பதும் கூட கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு காரணமாக அமைகிறது. அதைப்பற்றி அடுத்து எழுதலாம்.

இதை செய்துவந்தாலே மெல்ல மாதவிடாய் சிக்கல்கள் தீரும்.

வாழ்த்துகள்!

- அன்புடன் அக்குஹீலர்.கு.நா.மோகன்ராஜ்


குறிப்பு:

சரியான வாழ்க்கை முறையால் மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். http://reghahealthcare.blogspot.in/2011/08/to-live-healthy.html


For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

டுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்கம்)

டுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்கம்)


 டுவா என்றால் மலாய் மொழியில் (மலேசியாவில் உள்ள வழக்கு மொழியில்) இரண்டு என்று அர்த்தம். சாதாரணமாக நாம் ஒரு தூக்கம் மட்டுமே தூங்குகிறோம். இது இரட்டை தூக்கம் (Double Sleep). இது ஆழ்ந்த தூக்கத்தை குறிக்கும். இந்த ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம். இதை வெறும் தூக்கம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இது ஒரு வகையான சிகிச்சை.

 நமது உடலில் மூன்று விஷயங்கள் உள்ளன.

    • உடல் - உடல் பற்றி நமக்கு நமக்கு ஏற்கனவே தெரியும்.
    • மனம் - மனம் என்பது கோபம், டென்ஷன், பயம், பிடித்திருகிறது, பிடிக்கவில்லை போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்வது.
    • புத்தி - புத்தி என்பது நல்லது, கெட்டது, சரி, தவறு என்று முடிவெடுத்து அந்த விஷயங்களை யோசிப்பதற்கு புத்தி என்று பெயர்.

 இவ்வாறு நம்மிடம் மூன்று விஷயங்கள் உள்ளன. உடலுக்கு நோய் என்றால் என்ன என்று தெரியாது. நமது உடல், உடலிலுள்ள அனைத்து செல்களும் 24 மணிநேரமும் நம் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வேலையை மட்டுமே சித்து கொண்டிருக்கின்றன.

 நமது புத்தியில் தான் நோய் இருக்கிறது. இந்த புத்தி மனதை கெடுத்து மாசுப்பட்ட மனம் உடலுக்குள் சென்று நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே நாம் நம்மை ஒரு நோயாளி என்று எண்ணும் போது அந்த நோய் பெரிதாகிறது. இதுவே நம்மை ஒரு ஆரோக்கியமான நபர் என்று என்னும்போது ஆரோக்கியம் பெரிதாகிறது. நம்மை பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமா அது உடலில் நடைபெறுகிறது.

 உதாரணமாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ஒருவர் தனித்தனியாகக் காரை ஓட்டிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். அவர் காரை ஓட்டத் துவங்குவதற்கு முன்பே ‘500 கிலோ மீட்டர் 8 மணி நேரம் தொடர்ந்து காரை ஓட்டினால் நான் அந்த ஊருக்கு சென்ற உடன் களைப்படைந்து விடுவேன்’ என்றோ, நான் உடல் பலவீனப்பட்டு விடுவேன் என்றோ முதலிலேயே எண்ணினால் அப்படியே நடக்கும். அதாவது முதலிலேயே கற்பனை செய்து, முதலிலேயே முடிவெடுத்து தன் உடல் பலவீனமாகிவிடும் என்று புத்தியில் எண்ணுவதால் பிறகு அதன்படியே உடல் களைப்படைந்து விடுகிறது.

 நான் எப்போதும் என் புத்தியை உடலில் வேலை செய்யவே விடமாட்டேன். நான் அவ்வாறு கார் ஓட்டும் பொழுது அப்படி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். அதனால் இரவு முழுவதும் கார் ஓட்டி முடித்த பிறகும் களைப்படைவதில்லை. ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. இது நமக்கு தெரியாது. எப்பொழுது நம் புத்தியை நிறுத்துகிறோமோ அப்பொழுது நமது உடலிலுள்ள நோய்கள் குணமாகிவிடும்.

 நான் கடந்த 7 வருடங்களாக தினமும் காலை 10 மணிமுதல் மாலி 6 மணிவரை ஒவ்வொரு ஊராக சென்று மைக்கில் பேசி வருகிறேன். அனால் பொதுவாக ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், சில சாமியார்கள் 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் பேசிமுடித்த உடன் சோர்வு ஏற்ப்பட்டுவிடுகிறது. களைப்படைந்து விடுகிறார்கள். அவர்கள் நான் ஒரு மணிநேரம் பேசினேன் இரண்டு மணிநேரம் பேசினேன், மிகவும் களைப்படைந்துவிட்டேன் என்று கூறுகிறார்கள்.

 அப்படி இருக்கும்போது என்னால் எப்படி தினமும் 7,8 மணிநேரம் தொடர்ந்து பேசமுடிகிறது என்றால் நான் புத்தியில் மணிநேரம் பேசினால் களைப்படைந்து விடுவேன் என்ற எண்ணத்தை வைத்துக்கொள்வது கிடையாது.

 ஆனால் அதற்காக நான் களைப்படைய மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வேலை திடீரென்று களைப்படையலாம். உடல் களைப்படையும் பொழுது அது உடலின் வேலை, உடலாகவே களைப்படையும் பொது அது ஓய்வு எடுத்துக்கொள்ளும் என்று எண்ணுவேன். ஆனால் நானாகவே என் உடல் களைப்படைந்து விடும் என்று முன்னரே முடிவு செய்ய மாட்டேன். எனவே தயவுசெய்து ஒரு விஷயத்தைப் புரிந்தது கொள்ளுங்கள். ஒரு மனிதனின் புத்தியை நிறுத்தி வைத்துவிட்டால் அந்த வினாடி முதலே உடலிலுள்ள நோய்கள் குணமடைய தொடங்குகின்றன. இதுதான் உண்மை.

 மறைமலை அடிகளார் இதை அரிதுயில் என்று கூறுகிறார். எப்பொழுது ஒரு மனிதன் அரிதுயில் அதாவது தன்னை மறந்து இந்த சிந்தனையும் இன்றி தூங்குகின்றானோ அவன் குணமடைய ஆரம்பிக்கிறான். நாம் தினமும் தூங்குகிறோம். ஆனால் நோய் இருக்கிறது. ஏன்னென்றால் உண்மையில் நாம் தூங்கவே இல்லை. இதை எப்படிக் கண்டுப்பிடிப்பது?

 தூங்கச்செல்லும்போது இரவு கடைசியாக எதைப்பற்றி யோசித்துத் கொண்டு தூங்கினோமோ அந்த விஷயத்தை காலை விழித்தவுடன் நாம் யோசித்த்தோம் என்றால் நமது புத்தி உடலில் வேலை செய்திருக்கிறது என்று அர்த்தம்.

 சில நேரங்களில் காலை எழுந்திருக்கும் பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? நம் பெயர் என்ன? என்ன வேலை செய்துக்கொண்டிருக்கிறோம்? என்று எல்லாம் மறந்த நிலையில் எழுந்திருப்போம். இந்த மாதிரி எப்பொழுது எழுந்த்திருக்கிறோமோ அதுதான் உண்மையான ஆழ்ந்த தூக்கம்.

 சில குழந்தைகள் அந்த தூக்கத்தை தூங்குகின்றன. குழந்தைகள் எழுத்த உடன் அப்படியே அமர்ந்து இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது சுறுசுறுப்படையும். அந்த மாதிரியான குழந்தைகள் ஆழ்நிலை தூக்கத்திற்கு சென்று வந்திருக்கின்றன என்று அர்த்தம்.

 சில குழந்தைகள் எழுத்த உடன் வேகமாக செயல்படும். அந்த குழந்தைகள் ஆழ்நிலை தூகன் கொள்ளவில்லை என்று அர்த்தம். இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.

இந்த அரிதுயில் என்ற (டுவா தூக்கம்) ஆழ்நிலைத் தூக்கத்திற்கு பலவிதமான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இருப்பதிலேயே உலகத்தில் மிகவும் சுலபமான ஒரு வலி முறையை நாம் கற்றுக்கொள்ள போகிறோம்.

 இந்த ஆழ்நிலைத் தூக்கத்திற்கு நாம் எப்படி எல்லா வேண்டும் என்றால் இதற்கு இருவர் தேவை. அதாவது ஒரே ஒருவர் மட்டுமே தனியாக இருக்கும் பொது அவரது புத்தி உடலுக்குள் வேலை செய்துக் கொண்டே இருக்கும். இரு உயிர்கள் எப்பொழுது ஒன்று சேர்கிறதோ அதாவது இரு உயிர்கள் என்பது இரண்டு நபர்களின் நுண்ணுடல் (சூட்சும உடம்பு) காந்த சக்தி (Aura) ஒன்று சேர்கிறதோ அப்பொழுது இருவரது புத்தியும் நிறுத்தப்படுகிறது. இது தான் இரகசியம். எனவே இந்த சிகிச்சைக்கு இருவர் தேவை.

 டுவா தூக்கம் தூங்க எண்ணுபவர்கள் அமைதியான சூழ்நிலையில் தரையில் ஒரு விரிப்பின் மீது அல்லது கட்டிலில் மல்லாந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். கால்கள் நீட்டியிருக்க வேண்டும். பின்னக்கூடாது. இரண்டு கைகளையும் தனித்தனியே பின்னாமல் தளர்வாக வைக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அவர் அமைதியாக படுத்திருக்க வேண்டும். சிகிச்சை அளிப்பவர் அவர் தலைக்கு மேலே ஒரு அடி தள்ளி அமைதியாக அமர்ந்துக் கொள்ள வேண்டும். அவர் தரையில் படுத்திருந்தால் தலைக்கு அருகில் அமர்ந்துக்கொள்ளலாம். சிகிச்சை பெறுபவர் கட்டிலில் படுத்திருந்தால் சிகிச்சை அளிப்பவர் நாற்காலியில் அமர்ந்துக்கொள்ளலாம்.

 சிகிச்சை அளிப்பவர் அமைதியாக அமர்ந்துக்கொண்டு இரண்டு கைகளிலும் உள்ள பாத்து விரல்களையும் அதன் நுனிப்பகுதியைக் கொண்டு சிகிச்சை பெறுபவரின் தலையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அண்ணல் உலங்கை தலையில் படக்கூடாது. அதிகமாக அழுத்தக் கூடாது. அதற்காக பட்டும் படாமலும் வைக்கக் கூடாது. சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பவரின் பத்து விரல்களும் தம் தலையில் அழுத்தம் கொடுக்கின்றன என்ற உணர்வு இருக்குமாறு அழுத்தம் தர வேண்டும். ஒரு தேங்காயை கையில் பிடிக்கும் பொது எப்படி பத்து இடங்களில் பத்து விரல்களும் படியுமோ அதைப்போல சிகிச்சை பெறுபவரின் தலையில் பத்து இடங்களில் தன்னுடைய பத்து விரல்களால் அழுத்தம் தர வேண்டும். சிகிச்சை கொடுப்பவர் இந்த முயற்சியையும் செய்ய வேண்டாம். அதாவது பிராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து தன கைகளின் மூலமாக வாங்கி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட வேண்டியதில்லை. அவருக்கு பிராணக் ஹீலிங் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தியானம் செய்தால் நல்லது. பிராணக் ஹீலிங் தெரிந்தால் அதை செயல்படுத்தினால் நல்லது. அண்ணல் தேவையில்லை. சும்மா உட்காந்திருந்தால் போதுமானது.இந்த சிகிச்சையை கொடுப்பவர் சும்மா உட்காந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர் காத்து ஒலி வாங்கி (EAR PHONE) மூலம் பாடல் கேட்டுக் கொள்ளலாம். அது அவர் மனதிற்கு பிடித்த அமைதியான, மென்மையான பாடலாக இருக்க வேண்டும். அந்த அறையில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருக்க கூடாது. அலைபேசி சப்தம் எழுப்பாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஒரு சப்தமும் கேட்காமல் இருந்தால் மிகவும் நல்லது. முடிந்தவரை அழைப்புமணி (CALLING BELL), ஒலிப்பான் (HORN) போன்ற சப்தங்கள் எதுவும் இல்லாமல் அந்த அரை அமைதியாக இருந்தால் இந்த சிகிச்சையின் பலன் அதிகமாக கிடைக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சிகிச்சை கொடுப்பவர் கைவிரல்களை சற்று நகர்த்தி வேறு இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம். தலைபகுதிக்குள் மட்டுமே அந்த மாற்றம் இருக்கவேண்டும். முன்தலை, உச்சந்தலை, பின்தலை காதுகளுக்கு அருகில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி அழுத்தம் கொடுத்துவர வேண்டும். ஏனென்றால் நமது மூளையில் இந்த இடங்களில் தொடுகின்றோமோ அந்தந்த இடம் சம்பந்தப்பட்ட இடங்கள் தூங்க ஆரம்பிக்கின்றன. தலையில் உள்ள அனைத்து இடங்களையும், தொட்டுவிட்டால் உடலில்; உள்ள அனைத்து உறுப்புகளும் தூங்கி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும். சிகிச்சை அளிப்பவர் கைகளில் வலி ஏற்பட்டால் ஒரு கையின் ஐந்து விரல்களை மட்டும் தலயில் வைத்துக்கொண்டு மற்றொரு கையின் ஐந்து விரல்களுக்கு ஓய்வு அளித்த்க்கொள்ளலாம்.இப்படி முதல் முறை சிகிச்சை கொடுக்கும் பொது குறைந்தது 4 மணிநேரம் தலையில் விரல்களால் அழுத்தம் தரவேண்டும்.

 நீங்கள் யாருக்காவது இந்த சிகிச்சையை செய்து பாருங்கள் முதல் அரைமணி நேரத்திலேயே உங்களால் சிகிச்சை அளிக்கப்படும் நபர் இதுவரை இல்லாத அளவுக்கு அரை மணிநேரம் சென்றவுடன் வித்தியாசமான முறையில் அதிக அளவில் குறட்டை விட்டு தன்னை மறந்து தூங்கிவிடுவார். படுத்திருப்பவருக்கு நான் யார்? இந்த ஊர்? போன்ற எதுவுமே தெரியாது. ஒருவேளை 4 மணி நேரத்திற்குப் பிகு முக்கியமான வேலை இருக்கிறது அல்லது விமான நிலையம் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தால் கூட அனைத்தையும் மறந்து அவர் தூங்கிவிடுவார்.அவர் அவ்வாறு தூங்குவதை நாம் உணர முடியும் என்றாலும் நாம் விரல்களால் அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் அழுத்தம் கொடுக்கிறோமோ அவ்வளவு ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வார். எனவே முதல்முறை இந்தப் பயிற்சி சியும் பொது தயவுசெய்து குறைந்தது 4 மணி நேரத்திற்கு கைகளால் அழுத்தம் தர வேண்டும். அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை பெற்றுக் கொள்பவர் தேவைக்கு தகுந்தார் போல் உணவருந்திவிட்டு, தாகம் இருப்பின் புதிய அளவு நீர் அருந்திவிட்டு, இயற்க்கை உபாதைகளை நிறைவு செய்து விட்டு இந்த சிகிச்சையில் பங்கேற்க வேண்டும். சிகிச்சை அளிப்பவரும் அப்படியே. உனக்கு, நீர் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக்கொண்டு புற வேலைகளை நிறைவு செய்து விட்டு பின் 4 மணிநேரம் அவருக்கு சிகிச்சை அளிக்க தயாராக வேண்டும். ஏனென்றால் ஒரு மணிநேரம் கழித்து சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வோ, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வோ, பசி உணர்வோ ஏற்படும் பொழுது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியகதாகிவிடும். எனவே சிகிச்சை தருபவர் சிகிச்சை பெற்று கொள்பவர் இருவருமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றொரு முக்கியமான விஷயம், சிகிச்சை அளிப்பவர் இரண்டு மூன்று மூன்று நாட்கள் தூக்கமின்றி இருக்கும் நிலையிலோ, உடல் நிலை பாதிக்கப் பட்ட நிலையிலோ சிகிச்சை அளிக்கக் கூடாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மிகவும் நோய்வாய்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

 வீட்டில் மிகபெரிய சோகமான நிகழ்ச்சி. நெருங்கிய உறவுகள் யாரேனும் தவறியிருக்கலாம். அத்தகைய சோகமான சூழ்நிலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சை அளிக்கக்கூடாது.

 சிகிச்சை அளிப்பவர் இளநீர், தண்ணீர், பழச்சாரு போன்றவற்றை அருகில் வைத்துக் கொண்டு தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.சிகிச்சை பெற்றுக்கொள்பவருக்கு இது தேவைப்படாது. ஏனெனில் ஆழ்நிலைத் தூக்கத்திற்கு சென்று விடுவதால் அவருக்கு இது தேவைப்படாது.

 வாசியோகம் தெரிந்தவர்கள், பிராணாயாமம் தெரிந்தவர்கள் சிகிச்சை அளிக்கும் போது வாசியோகம் அல்லது பிராணாயாமம் சிதுக்கொண்டே சிகிச்சை அளிக்கும் போது மெகா அற்புதமான பலன் கிடைக்கும். பிராண ஹீலின் தெரிந்தவர்கள் பிராண சக்தியை தன் உடல் மூலமாக பெற்று தை சிகிச்சை பெறுபவரின் உடலில் அனுப்பும் போது நல்ல பயன் கிடைக்கும். தெரியாதவர்கள் அதைப்பற்றி கவலை பட வேண்டாம். சும்மா அழுத்தம் கொடுத்தால் போதுமானது. இப்படி செய்தால் அரைமணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை பெறுபவர் தூங்கிவிடுவார். சிகிச்சை அளிப்பவர் அமைதியாக் அமர்ந்து 4 மணி நேரம் சிகிச்சை கொடுத்தபின் மெதுவாக கையை எடுத்துவிட்டு தாங்களும் உறங்க செல்லவோ அல்லது வேறு வேளைகளிலோ ஈடுபடலாம். தூங்கிக்கொண்டு இருப்பார் அதற்கு பின் பல மணிநேரம் கழித்துதான் எழுவார். இதுவே தொடர்ந்து 48 மணிநேரம் தொடர்ந்து சிகிச்சை அகிக்கும் பட்சத்தில் 48 மணிநேரம் தூக்கத்தில் தான் இருப்பார். ஆனால் அப்படி சியைக் கூடாது. ஏனென்றால் 8 மணிநேரம் அல்லது 10 மணிநேரத்திற்குப் பிறகு உடலுக்கு தாகம், உணவு தேவை ஆகியவை ஏற்படும். மலம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். இந்த விஷவங்காலி சியாமல் அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது. பலன் குறைந்து விடும். அதிகபட்சம் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை சிகிச்சை அளித்தால் போதும். கைகளை எடுத்தவுடன் ஒருசிலர் அரைமணிநேரத்தில் எழுந்து விடுவார்கள், ஒருசிலர் 10 மணிநேரம் கூட தூங்குவார்கள். விட்டுவிடுங்கள். அது ஒவ்வொருவரின் உடலின் தேவையை பொறுத்தது. சிகிச்சையை குறைந்தபட்சம் 4 மணிநேரம் கொடுக்க வேண்டும். அடுத்தநாள் 4 மணிநேரம் சிகிச்சை அளித்தால் மிகவும் நல்லது. இல்லையென்றால் 1 மணிநேரம் சிகிச்சை அளிக்கலாம். குறைந்தது 1 மணிநேரம் சிகிச்சை அளிப்பதே பலன் அளிக்கும். யாராவது மிகபெரிய நோய் உள்ளவர்கள், உலக வைத்தியத்தால் குணப்படுத்த முடியாது என்று முடிவு செய்யப்பட வியாதிகள் அனைத்தும் இந்த முறையில் குணமடையலாம்.

 தினசரி 4 மணிநேரம் இதற்காக ஒதுக்கினால் போதும். ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். தினசரி மற்ற நேரங்களில் TV, ஏதேனும் ஒன்றை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த வண்ணம் இருப்பதை போல் ஒருவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம்.

 குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறி அதற்கு பல இலட்சம் அல்லது கோடி ரூபாய் செலவு செய்து மருத்துவம் பார்ப்பதை விட இந்த மாதிரி ஒருவரை சிகிச்சைக்கு மாத சம்பளத்திற்கு நியமித்துக் கொள்வது நல்ல பயன் அளிக்கும். ஒருவருக்கு வேலை கொடுத்த மதிரும் ஆயிற்று. நம் வியாதி குணமடைந்த மாதிரியும் ஆயிற்று.

 வீட்டில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி இந்த சிகிச்சையை கொடுத்துக்கொள்ளலாம். ஒருவர் தலையில் இன்னொருவர் கைவைக்கும்போது இரண்டு பேருடைய ஆராக்களும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு உயிரும் கலக்கிறது. ஈருயிர் சேர்ந்து ஆழ்நிலைத் தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதற்குப் பெயர் டுவா தூக்கம்.

 இந்த சிகிச்சையை மலேசியாவில் உள்ள முத்தம்மாள் என்கிற பெண்ணுக்கு அவரது தாத்தா கற்றுக்கொடுத்திருகிறார். அவர் ஒரு மலேசியா வாழ் தமிழர். இந்த சிகிச்சை அப்பொழுது யாருமே கண்டுக்கொள்ளவில்லை. இதுவரை யாருமே பயிற்சி செய்யவில்லை. ஆனால் இப்போது அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். நான் எனக்கும் மற்றவர்க்கும் இதை செயல்படுத்தி பார்த்தேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதனால் தற்போது இதைப்பற்றி எல்லா வகுப்புகளிலும் பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த ஒரே ஒரு சிகிச்சை மட்டும் தெரிந்துக்கொண்டால் மனது உலகை ஆரோக்கியப்படுத்தி விடலாம். இதைதான் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறினார்களோ என்னவோ? வசூல் ராஜா M.B.B.S திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்று இருக்கிறது.



 இப்பொழுது யோசித்துப் பார்கிறேன், குழந்தைக்கு நோய் வந்தால் மடியில் படுக்க வைத்து அதன் தலையை தடவி கொடுக்கிறோம். இன்னொருவர் அருகில் இருந்தால் போதும். ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவர் அருகில் ஆதரவாக இருந்தாலே போதும் என்பது உண்மை. அனால் இப்பொழுது அனைவரும் அனாதைகளாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாகரீக வாழ்கையில் பெரும்பாலானோர் கூட்டு கும்பமாக இல்லை. ஏன் கணவன் மனைவிகூட வாரம் ஒரு நாள் மாதம் ஒரு நாள் சந்தித்துக் கொள்கிறார்கள். வேலை அல்லது தொழில்ரீதியான காரணங்களால் தனித்தனியே வாழ்கின்றனர். இதனால் இந்த தனிமையான வாழ்க்கை முறையே அவர்களுக்கு நோயைக் கொண்டுவருகிறது. எப்பொழுதும் இருவர் ஒன்று சேர்ந்து வாழும் போது நம் மனதுக்கும் பிடித்தவர்கள் உடன் இருக்கும்போது மனது நோய்கள் குணமடைகிறது. பல கணவன் மனைவிமார்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் போது அன்பாக அமைதியாக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறோம். அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் டுவா தூக்கம் அங்கே நடைபெறுகிறது. எனவே இனி தினமும் டுவா தூக்கம் கொள்வோம். நமது உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ்வோம். எனவே இதை யார் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். எனவே இனிமேல் யாருடைய நோயையாவது குணப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் எதைபற்றியும் கவலைபடாமல் உங்களுக்கு எந்தவித வர்மா புள்ளியோ, பிராண ஹீலிங்க்கோ, முத்ரா, ரெய்க்கி, நியுரோ தெரபி போன்ற எதுவும் தெரிந்திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் மீது உணகளுக்கு அக்கறை இருக்கிறதோ, அவர்களை படுக்க வைத்து அவர்கள் தலையில் 10 மணிநேரம் கையை வையுங்கள். அவர்கள் ஆரோக்கியம் அடைவார்கள். இந்த முறையை நான் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் தங்கள் கையைக் கொண்டு இந்த சிகிச்சையை அளிக்கலாம். இதற்க்கு நான் தேவை இல்லை. எனவே இதை புரிந்துக்கொண்டு மற்றவர்கல்லும் கற்றுக்கொடுங்கள். மற்றவர்களையும் தெளிவுப்படுத்துங்கள்.

 ஒரு விஷயம் பாருங்கள்! இதை கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்க ஒரு அரைமணி நேரம் ஆகுமா? உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லிதாருங்கள். கேட்கிறார்களோ, இல்லையோ உங்களுக்கு தெரிந்த இந்த சிகிச்சையை மற்றவர்கல்லும் சொல்லி கொடுங்கள். ஒருவேளை இந்த சிகிச்சையை அவர்கள் பயன்படுத்தி நன்மை அடைந்தால் உங்களை தேடி வந்து உங்களை வாழ்த்திவிட்டு செல்வார்கள் பாருங்கள். அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது.

 நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம், என்று இல்லாமல் எல்லோருக்கும் நன்மை அளிக்கும் விதமாக ஏதாவது செயல் புரிய வேண்டும். இப்பொழுது முதல் ஒரு சங்கல்ப்பம் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த சிகிச்சையை எனது நண்பர்கள், உறவினர்கள், எனக்கு தெறிந்த மற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுப்பேன். பேருந்து பயணம் அல்லது வழிப்பயணம் செய்யும் போதோ எதுவாக இருந்தாலும் நான் சந்திக்கும் நபர்களுக்கு ஒரு அரைமணிநேரம் இதைப்பற்றி சொல்லிக்கொடுப்பேன். இதன் மூலமாக எனக்கு புண்ணியம் கிடைகிறது என்று எண்ணி கொள்வேன். இந்த டுவா தூக்கம் மூலமாக, அரிதுயில் மூலமாக ஆழ்நிலைத் தூக்கம் மூலமாக நம் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி - ஹீலர் பாஸ்கர்


இரத்த அழுத்தத்தைக் கண்டு பயப்பட தேவையில்லை!



"இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கட்டுப்படுத்துவது என்பது சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல என்பதைப் புரிந்து கொண்டு, நமது முறைப்படி எளிமையாகக் குணப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வோம்!"

இரத்தம் இருதயத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்குள்ளேயும் சென்று வரும். அப்பொழுது உறுப்புகளிலிருந்து சில பொருட்கள் இரத்தத்தில் கலக்கும். சில பொருட்கள் இரத்தத்திலிருந்து உறுப்புகளுக்குள் சேரும்.

இப்படிச் சென்று வரும் இரத்தத்தை நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜைகள் ஆகியவை சுத்தம் செய்கின்றன. எலும்பு மஜ்ஜைகள் இரத்தத்தைப் புதிதாக உருவாக்கும் பணியையும் செய்கின்றன. சரி, இதயம் என்னதான் செய்கிறது என்றால், உடலெங்கும் சுற்றிச் சுழன்று ஓய்ந்து போய் வரும் இரத்தத்திற்கு இரத்த அழுத்தத்தை (பிரஷரை) இதயம் அளிக்கிறது.

ஒரு மணி நேரம் அமைதியாக, உடல் அசைவின்றித் தியானம் செய்யும்பொழுது இரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பாருங்கள்! குறை இரத்த அழுத்தம்தான் (Low BP) இருக்கும். குறை இரத்த அழுத்தம் என்பது ஒரு நோய் என்றால் தியானம் செய்வதை நோய் என்று கூற முடியுமா? எனவே, குறைந்த இரத்த அழுத்தம் என்பது ஒரு நோயே கிடையாது.

தியானம் முடித்தவுடன் மெதுவாகக் கண்ணைத் திறந்து ஒரே ஒரு கையை மட்டும் லேசாக மேலும் கீழும் ஆட்டுங்கள். இப்பொழுது இரத்த அழுத்தம் அதிகரிக்குமா அல்லது குறையுமா? அதிகரிக்கத்தான் செய்யும்.

முதலில், இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஒரு செல் இரத்தத்திலுள்ள ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட்டால், அந்தச் செல் என்ற குழந்தை இதயம் என்ற அம்மாவிடம், “அம்மா நான் ஒரு பொருளைச் சாப்பிட்டு விட்டேன். எனக்கு ஒரு இரத்த அழுத்தம் கொடுங்கள்” என்று கேட்கும். இப்படி, எத்தனை குழந்தைகள் சாப்பிடுகின்றனவோ அத்தனை இரத்த அழுத்தம் அதிகமாகும்.

இப்பொழுது இரு கைகளையும் மேலும் கீழுமாக வேகமாக ஆட்டுங்கள். உங்கள் இரத்த அழுத்தம் ஏற்கெனவே இருந்ததை விட அதிகமாகிறதல்லவா? ஏன்? இரண்டு கைகளிலுள்ள அனைத்து செல்களும் இரத்தத்திலுள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் இதயம் அதிகமாக உணவு விநியோகம் செய்கிறது.

இப்பொழுது வேகமாக ஓடுங்கள். ஏற்கெனவே இருந்த இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். இதிலிருந்து என்ன புரிகிறதென்றால், இரத்த அழுத்தம் சீராக (நார்மலாக) இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரத்த அழுத்தம் என்றால் அது அதிகமாகவோ, குறைவாகவோ சீராகவோ மாறி மாறித்தான் இருக்கும். நம் உடலுக்கு எப்பொழுது எவ்வளவு இரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறு அது அதிகப்படுத்தி கொள்ளும், குறைத்துக் கொள்ளுமே தவிர, நாம் அதைக் கட்டுப்படுத்தக் கூடாது!

"சரி, ஓடினால் இரத்த அழுத்தம் உயரும், தியானம் செய்யும்பொழுது இரத்த அழுத்தம் குறையுமென்று எங்களுக்கும் தெரியும். நான் ஓடவேயில்லை. வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதும் எனக்கு இரத்த அழுத்தம் உயர்ந்துவிட்டது. இதற்குக் காரணமென்ன?" என்று கேட்பீர்கள். "நான் தியானம் செய்யவேயில்லை; வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தேன். எனக்குக் குறை இரத்த அழுத்தம் வந்து விட்டது. இதற்கு என்ன காரணமென்று கேட்பீர்கள்.

ஒரு செல்லுக்கு ஏதாவது ஒரு நோய் வந்தால் மொத்தம் நான்கு விஷயங்களைக் கேட்கும்.
  • இரத்த அழுத்தம்
  • சர்க்கரை
  • ஆக்ஸிஜன்
  • நோயைக் குணப்படுத்தத் தேவையான தாதுப் பொருட்களும் வைட்டமின்களும்.
இந்த நான்கு பொருட்கள் ஒரு செல்லுக்குள் நுழைந்தால் அந்தச் செல்லுக்கு எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும். ஆக, ஒரு செல்லுக்கு நோய் வந்தால் முதன் முதலில் அது கேட்பது இரத்த அழுத்தம்.

ஏனென்றால், இரத்த அழுத்தம் அதிகமானால்தான் பொருட்களைச் சாப்பிட முடியும். அப்பொழுதுதான் நோயைக் குணப்படுத்த முடியும். 10.000 செல்களுக்கு நோய் வந்துவிட்டால் 10,000 செல்களும் முதலில் இரத்த அழுத்த்தைக் கேட்கும். இரத்த அழுத்தம் அதிகமாகும். 10,000 செல்கள் தங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளும். இதற்கு அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ, நாலு மணி நேரமோ தேவைப்படலாம். இப்படி, உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்தால் அதைக் குணப்படுத்த ஆரம்பிக்கும் விநாடி முதல் குணப்படுத்தி முடிக்கும் விநாடி வரை இரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகத்தான் இருக்கும். யாருடைய உடலில் நாம் சொன்னது போல,
  • இரத்தத்திலுள்ள பொருட்களின் தரம்
  • இரத்தத்திலுள்ள பொருட்களின் அளவு
  • இரத்தத்தின் அளவு
  • மனம்
  • உடல் அறிவு
இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறதோ அவர்களுடைய இரத்த அழுத்தம் நோய் வரும்பொழுது அதிகமாகும். நோய்கள் குணமானதும் சீராகி விடும். ஒரு வேளை, மேலே சொன்ன ஐந்து விஷயங்களில் ஏதாவது ஒன்றோ இரண்டோ சரியாக இல்லையென்றால் நம் உடலில் நோயைக் குணப்படுத்த முடியாது.

உதாரணமாக, ஒரு நோயைக் குணப்படுத்தத் தேவையான ஒரு பொருளின் தரம் இரத்தத்தில் குறைந்திருந்தால் தரம் குறைந்த அந்தப் பொருளைக் கொண்டு நோயைக் குணப்படுத்த முடியாமல் அந்தச் செல் தவிக்கும்பொழுது அது இரத்த அழுத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தப் பொருளின் தரம் சரியாகி, செல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் காலம் வரும் வரைக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கும். ஆக, இரத்த அழுத்தம் அதிகரித்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்துவிட்டது; அதைக் குணப்படுத்த முடியாமல் உடல் தவிக்கிறது என்பதைத்தான். மாறாக, இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது; இதயத்தில் கோளாறு என்று தவறாக நினைக்கக் கூடாது.

அதனால் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் ஒருவருக்கு இதயத்தில் சிகிச்சை செய்தோ, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சை செய்தோ எந்தவிதப் பயனும் இல்லை. உடலிலுள்ள செல்களுக்கு உண்டான நோய்களைக் குணப்படுத்துவதற்கு மேலே கூறப்பட்ட காரணங்களைச் சரி செய்ய வேண்டும். இந்த ஐந்து காரணங்களையும் சரி செய்து உடல் செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்துவதன் மூலமாகத்தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். அதுவே சரியான தீர்வு! 

இதயமும் திசுக்களாலானதுதான். அந்தத் திசுக்களுக்குள்ளும் செல்கள் உள்ளன. அந்த இதயச் செல்கள் சாப்பிடக்கூடிய பொருள் இரத்தத்தில் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது இல்லாமல் போயிருந்தாலோ இதயச் செல்கள் பாதிக்கும். இதனால் ஏற்படுவதே குறை இரத்த அழுத்தம். 

எனவே, உயர் இரத்த அழுத்தம் என்பதும் குறை இரத்த அழுத்தம் என்பதும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே கிடையாது. அவை இரத்தத்திலுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். குறிப்பாக, மேலே சொல்லப்பட்ட ஐந்து விஷயங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். எனவே, உயர் இரத்த அழுத்தத்துக்கும், குறை இரத்த அழுத்தத்துக்கும் இதயத்தில் சிகிச்சை அளிக்கக் கூடாது! இரத்தத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும். 

இது தெரியாத மருத்துவரிடம் செல்லும்பொழுது அவர் நமது இரத்தழுத்தத்தை மட்டுமே சோதிக்கிறார். அளவுக்கு அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். குறைவாக இருந்தால் குறை இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இரத்த அழுத்தத்தின் அளவை மட்டுமே சோதிக்கிறார்களே தவிர, அது ஏன் அதிகமாகின்றது, ஏன் குறைகிறது என்ற விஷயத்தை யாரும் இதுவரை ஆராய்ச்சி செய்து பார்க்கவில்லை. மாறாக, மருத்துவர்கள் அதற்கு ஒரு மருந்து அல்லது மாத்திரை தருகிறார்கள். இந்த மருந்து, மாத்திரைகள் என்ன செய்கின்றன? நேராக, இதயத்தின் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகின்றன. உடம்பு சில காரணங்களுக்காக, நோயைக் குணப்படுத்துவதற்காக அல்லது இயக்க சக்திக்கு தேவையான உணவைச் சாப்பிடுவதற்காக அதிகப்படுத்தியிருக்கும் இரத்த அழுத்தத்தை நாமாகக் கட்டுப்படுத்துவது சரியா? சற்று யோசித்துப் பாருங்கள்! 

இப்படி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நமது உடலில் நோய்கள் அதிகமாகுமே தவிர, குறைவதற்கு வாய்ப்பேயில்லை. இப்படி யார் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அந்தக் காலகட்டத்தில் உடலில் வரும் எந்த நோயையும் உடல் குணப்படுத்தவே செய்யாது. 

ஒருவர் இரத்த அழுத்தத்துக்கு மூன்று மாதம், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மூன்று மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மருந்து மாத்திரை சாப்பிடாமலிருந்தால் என்னாகும்? இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். நாம் என்ன செய்கிறோம்? மூன்று மாதம் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு வந்ததால் இரத்த அழுத்தம் சீராக இருந்தது. நாம் நன்றாக இருந்தோம். ஒரு நாள் சாப்பிடவில்லையென்றதும், இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. நமக்கு நோய் வந்து விட்டது என்ற பயத்தில் கையில் எப்பொழுதுமே இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரைகள் வைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். முதலில் 10,000 செல்களுக்கு நோய் ஏற்பட்டபொழுது அதைக் குணப்படுத்துவதற்காக இரத்த அழுத்தம் அதிகரித்தது. நாம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்து மாத்திரைகள் சாப்பிட்டோமே தவிர, அந்தப் 10,000 செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்த எந்தவொரு வேலையும் செய்யவில்லை. 

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திய இந்த மூன்று மாதத்தில் தினமும் புதிதாக 10,000 அல்லது 20,000 செல்களுக்கு நோய் வந்திருக்குமே அதை யார் குணப்படுத்துவது? இப்படி, 10,000 செல்களுக்கு இருந்த நோய் மூன்று மாதத்தில் இப்பொழுது 20,000 செல்களுக்குப் பரவி குணப்படுத்தப்படாமல் இருக்கிறது. அதனால்தான் ஒரு நாள் இரத்த அழுத்த மாத்திரையை நிறுத்தினால் உடனே இரத்த அழுத்தம் கன்னா பின்னாவென்று அதிகமாகிறது. இதற்கு, உடலில் நோய்கள் அதிகரித்து விட்டன என்றுதான் பொருள். 20,000 செல்களுக்கும் வந்துள்ள நோயைக் குணப்படுத்துவதற்கு இதயம் முயற்சிக்கும்பொழுது, நமது இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகிறது. 

இப்பொழுது சொல்லுங்கள்! இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நோய்கள் அதிகரிக்குமா, குறையுமா? நமது சிகிச்சையைப் பொறுத்த வரையில், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால்தான் நோய். இரத்த அழுத்தத்தை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. 

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தத்தான் முடியும். குணப்படுத்த முடியாதென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக, இரத்த அழுத்தத்துக்காக மாத்திரை சாப்பிட்டால் அளவு அதிகமாகிக் கொண்டேதான் போகும். எப்பொழுது மாத்திரையின் டோஸ் அதிகமாகின்றதோ, உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறதென்று அர்த்தம். உங்கள் நோயைக் குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா, பெரிதுபடுத்துவதற்கு மருத்துவர் தேவையா? மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் நோய்கள் குணமாகின்றனவா, பெரிதாகின்றனவா? சற்றுச் சிந்தியுங்கள்! எப்பொழுது உங்கள் மருந்து மாத்திரையின் அளவு அதிகமாகின்றதோ வெற்றிகரமாக உங்களது நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். 

ஒரு மருத்துவரென்றால் முதலில் அதிக வீரியமுள்ள மாத்திரை தர வேண்டும். சில மாதங்களுக்குப் பிறகு அதன் அளவைக் குறைக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு "நோயைக் குணப்படுத்தி விட்டேன். நீங்கள் இனி எந்த மருந்து மாத்திரையும் சாப்பிட வேண்டாம்" என்று உறுதி கூறி மாத்திரையை நிறுத்த வேண்டும். இதற்குப் பெயர்தான் வைத்தியம். ஆனால், இரத்த அழுத்தம் என்ற நோய்க்கு முதலில் தரும் மாத்திரையின் அளவு போகப் போக அதிகமாகிறது. அதுவும் வாழ்க்கை முழுவதும் சாப்பிட வேண்டுமென்று கூறுகிறார்கள். அதைக் குணப்படுத்த முடியாதென்றும் கூறுகிறார்கள். ஒரு நோயைக் குணப்படுத்த முடியாதென்று சொல்வதற்கு மருத்துவர் தேவையா? அதற்கு ஏன் படிக்க வேண்டும்? 

இந்தச் சிகிச்சையில் நாம் முக்கியமாகச் சொல்கிற ஐந்து விஷயங்களைச் சரி செய்வது மூலமாக ஒரு நிமிடத்தில் நமது உடலில் 300 கோடி செல்கள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கின்றன. 

இவ்வாறு நமது சிகிச்சையின் மூலமாகச் சில விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்களுக்கு நான்கு மாதத்தில் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த முடியும். எந்தவொரு மருந்து மாத்திரையுமில்லாமல் இந்த ஐந்து விஷயங்களை ஒழுங்காக வைத்துக் கொண்டால் ஏற்கெனவே சாப்பிடும் இரத்த அழுத்த மாத்திரையின் அளவு ஒவ்வொரு மாதமும் படிப்படியாகக் குறைந்து நான்காவது மாதத்திலிருந்து நீங்கள் இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட வேண்டிய தேவையே இல்லாமல் போய்விடும். பிறகு, இரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. இரத்த அழுத்தம் அதிகமானாலும், குறைந்தாலும் நீங்கள் தெம்பாக இருப்பீர்கள். 

ஆக, உடலிலுள்ள அனைத்துச் செல்களையும் குணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த முடியுமே தவிர, மருந்து மாத்திரைகளாலும் இதயத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாலும் முடியாதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! 

இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கட்டுப்படுத்துவது என்பது சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல என்பதைப் புரிந்து கொண்டு, நமது முறைப்படி எளிமையாகக் குணப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வோம்!

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)

மேலும் படிக்க 

உவர்ப்பு (உப்பு) சிகிச்சை (உப்பு சாப்பிட்டே ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தலாம்)
http://reghahealthcare.blogspot.in/2014/12/blog-post_16.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 1 - நீரிழிவு ஒரு அறிமுகம்
http://reghahealthcare.blogspot.com/2010/12/diabetes.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 2 - கிளைகோஜன் மற்றும் அட்ரினல் சுரப்பியின் பங்கு
http://reghahealthcare.blogspot.com/2014/12/2.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 3 - High Sugar(ஹை சுகர்), Low Sugar (லோ சுகர்) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/3.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 4 - Sugar Free (சுகர் ப்ரீ) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/4.html

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 5 - அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம் 
http://reghahealthcare.blogspot.com/2014/12/5.html

இனிப்பு சிகிச்சை (இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்)
http://reghahealthcare.blogspot.in/2014/12/blog-post.html

For more info visit:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com