Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

மனம் எனும் மாய தேவதை! பாகம் 8 - நீர் இல்லாத கிணறு



 

பாகம் 8 : நீர் இல்லாத கிணறு

        மது எண்ணங்களின் வேலை என்ன? நமது எண்ணங்களின் வலிமை என்ன? நமது சிந்தனைகளுக்கும் நமது செயல்பாட்டிற்கும் நமது வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? 

இது போன்ற பல விஷயங்களை மிக ஆழமாக சிந்தித்து ஆராய்ந்தார் ஜேம்ஸ் ஆலன் என்கிற தத்துவ ஆய்வாளர்.

ஜேம்ஸ் ஆலன் தனது 15 ஆவது வயதில் பள்ளியை விட்டு சென்றார். ஆனால் பிற்காலத்தில் வாழ்க்கையை குறித்து குறிப்பாக மனித சிந்தனையை குறித்து மிக ஆழமாக சிந்தித்தார். ஓரு பொருளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு அதை தொடர்ந்து ஆறாயும் ஒரு விஞ்ஞானி போல ஜேம்ஸ் ஆலன் எடுத்து மிக தீவிரமாக ஆராய்ந்த பொருள் மனித மனம். இதன் விளைவாக மனித மனம் பற்றிய பல அரிய உண்மைகளை உலகிற்கு கண்டு சொன்னார் ஆலன்.

அவரது முதல் புத்தகமான "ஏழ்மையில் இருந்து வளமைக்கு" (From Poverty to Power) அவரது வித்யாசமான ஆழமான சிந்தனைகளை உலகிற்கு காட்டியது.

ஆலன் நிறைய புத்தகங்களை வெளியிட்டவர் ஆனால் அவரது 3 ஆவது புத்தகமான "As a Man Thinketh" இன்று வரை பதிப்புகளில் சாதனை படைத்த புத்தகம்.

மனித மனம் பற்றிய மிக ஆழமான பல உண்மைகளை எடுத்து சொன்ன ஒரு புத்தகம். பைபிள் வாசகமான "மனிதன் சந்தித்ததை போல அவன் இருக்கின்றான்" (As a man thinketh in his heart, so is he) என்கிற வாசகத்தில் இருந்து தனது புத்தகத்துக்கு "As a man thinketh" என்ற பெயரை வைத்து இருந்தார்.

அந்த புத்தகத்தில் அவர் மனித மனதை சரியாக பயன்படுத்துவது எப்படி? சரியாக சிந்திக்கும் முறைகள் என்பது என்ன? நமது எண்ணங்களை கையாள்வதன் மூலம் நமது வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவது எப்படி போன்ற பல விஷயங்களை எடுத்து சொன்னார். 

நம்மூரில் இருந்து ஒருவர் அதை படித்து பார்த்து மிக ரசித்து ஆழ்ந்தார். அடடே இவைகள் வாழ்க்கையையே மாற்றும் சிந்தனைகள் ஆயிற்றே என்று ஆச்சர்யப்பட்டார். நல்ல அறிஞர்களில் தேச பாகுபாடு பார்க்க கூடாது என்று எண்ணம் கொண்டார். இவைகளை நமது நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அதன் விளைவாக நிறைய புத்தகங்களை எழுதினார். அந்த மனிதரின் பெயர் M. S உதய மூர்த்தி. (இப்போது அவர் இவ்வுலகில் இல்லை )

அவரது, 

"எண்ணங்கள்" 

"மனம் பிராத்தனை மந்திரம்" 

"சாதனைக்கோர் பாதை" 

"நெஞ்சமே அஞ்சாதே நீ"

"உலகால் அறிய படாத ரகசியம்"

"உயர் மனிதன் உண்டாக்கும் எண்ணங்கள்"

"ஆத்ம தரிசனம்"

"தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும்"

"உன்னால் முடியும்"

போன்ற பல புத்தகங்களில் உள்ளீடாக இருப்பது ஜேம்ஸ் ஆலன் அவர்களின் கருத்துகள் தான்.

இயக்குனர் பாலசந்தர் "உன்னால் முடியும் தம்பி" படத்தை எடுத்த போது "உன்னால் முடியும்" எனும் தலைப்பில் புத்தகம் எழுதி இளைஞர்களிடையே எழுச்சியை உண்டு பண்ணி இருந்த உதய மூர்த்தி அவர்களின் பெயரை தான் கதாநாயகனின் பெயராக வைத்தார்.

ஜேம்ஸ் ஆலன் கருத்துகளை பகிர்ந்து கொள்ள MS உதயமூர்த்தி அவர்கள் விரும்பியது போல MS உதயமூர்த்தியின் கருத்துக்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அவரது மற்றும் ஆலன் அவர்களது மனம் குறித்த சில சிந்தனைகள் மிக ஆழமானவை. ஒரு வரி கருத்து கூட நம்மை நீண்ட நேரம் சிந்திக்க வைத்து புரிதலை ஏற்படுத்தக் கூடியவை.

உதாரணமாக அவரது ஒரு கருத்தில் "சூழ்நிலைகள் மனிதனை உண்டாக்குவது இல்லை மாறாக அவனை அடையாளம் காட்டுகின்றன" என்கிறார்.

நமக்குள் ஆழமான புரிதலை ஏற்படுத்தும் மந்திர வாக்கியம் இது. ஒரு உதாரணத்திற்காக கிராமத்தில் ஒழுக்கமாக வாழ்ந்து வந்த ஒருவன் நகரத்திற்கு மேல் படிப்பிற்கு சென்ற மாணவன் அங்கே பல தீய பழக்கத்திற்கு ஆளாகிறான் என்று வைத்து கொள்வோம். "ஏன் இப்படி கெட்டு போய்ட்ட" என்று கேட்டால் "நான் என்ன பண்றது நான் சேர்ந்த நண்பர்களும் இப்போ இருக்கும் சூழ்நிலைகளும் அப்படி" என்று சொல்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அது சுத்த பொய் என்கிறார் ஆலன்.

"தான் விரும்பாத வரை... தான் இடம் கொடுக்காத வரை எப்படிப்பட்ட சூழ்நிலையும் ஒரு மனிதனை கெடுக்க முடியாது" என்கிறார் ஆலன். சூழ்நிலை தான் மனிதனை உண்டாக்குகிறது என்று நாம் கேள்வி பட்டிருப்போம். அதை மிக உறுதியாக மறுக்கிறார் ஆலன். 

"சூழ்நிலையால் மனிதனை உண்டாக்க முடியாது ஆனால் அவனுக்குள் இருக்கும் நிஜ மனிதன் என்ன என்பதை அடையாளம் காட்ட முடியும்" என்கிறார். ஒருவன் நகரத்திற்கு வந்து கெட்டவன் ஆகிவிட்டான் என்றால் அவனுக்குள் கெட்டவன் ஏற்கனவே இருந்து இருக்கின்றான் என்கிறார். அப்படி இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்கிறார்.

இதே கருத்தை புத்தர் பல இடங்களில் வலியுறுத்தி இருக்கின்றார். தண்ணீர் இல்லாத கிணற்றில் நீங்கள் எத்தனை முறை இறைத்தாலும் வெறும் காலி பாத்திரம் தான் திரும்பி வரும் நீர் வராது என்கிறார்.

ஒரு முறை ஒரு கிராமத்தின் வழியாக கடந்து செல்கிறார் புத்தர். வழக்கமாக தானம் கேட்டு வாங்கி சாப்பிடுவது தான் அவர் வழக்கம். அந்த ஊரிலும் அப்படி கேட்கிறார். அப்போது அவர் மேல் கடுப்பான ஒருவர் "கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு பிச்சை எடுத்து சாப்பிடற வெக்கமா இல்ல தூ" என்று முகத்தில் உமிழ்கிறார்.

புத்தர் அதற்கு எந்த மறுவினையும் ஆற்றாமல் மிக சாந்தமாக "வேறு ஏதும் தர வேண்டி இருந்தால் சீக்கிரம் தாருங்கள் அய்யா நான் அடுத்த கிராமத்திற்கு செல்ல வேண்டும்" என்கிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த அவர் சீடர் ஒருவர் கொஞ்சம் நேரம் கழித்து அவரிடம் "எப்படி குருவே இவ்ளோ பொறுமையா இருக்கீங்க? அவன் காரி துப்பறான் உங்களுக்கு கோபமே வரலையா?" என்று கேட்கிறான்.

அதற்கு புத்தர், "அந்த மனிதன் மிக கால தாமதமாக வந்து விட்டான்" என்கிறார்.

"இதில் பொறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அவர் செய்ததற்கு மறுவினை ஆற்ற எனக்குள் அங்கே யாருமே இல்லை என்பது தான் உண்மை. வெறும் சூனியத்தில் எச்சில் துப்பினால் அது எப்படி கடந்து போய் கீழே விழுமோ அப்படி அவன் துப்பியது என்னை கடந்து சென்று விட்டது. சூழ்நிலைக்கு மறுமொழி ஆற்றும் ஒருவன் எனக்குள்ளிருந்து அழிந்து பல நாட்கள் ஆகிவிட்டது. அந்த மனிதன் என்னை கோபப்படுத்த மிக தாமதமாக வந்து விட்டான்" என்றார்.

"நீர் இல்லாத வெற்று கினற்றில் எத்தனை முறை இறைத்தாலும் நீர் எடுக்க முடியாது... உள்ளுக்குள் கோபம் என்ற ஒன்று முற்றிலும் அழிந்து போன ஒருவனை எந்த சூழ்நிலையும் கோபப்படுத்த முடியாது" என்கிறார் புத்தர்.

புத்தர் சொன்ன மிக சக்தி வாய்ந்த வாசகம் ஒன்று உண்டு. 

"உங்களை கோபப்படுத்தும் அல்லது எரிச்சல் மூட்டும் மனிதர்கள் அல்லது வெளி சூழ்நிலைகளுக்கு மறுமொழி ஆற்றாதீர்கள். காரணம் உங்கள் மறுமொழி இல்லாமல் அவைகள் சக்தி அற்றவைகள். அவைகளுக்கு சக்தி கொடுபதே நீங்கள் தான்"

நாம் நமக்குள் இருந்து செயலாற்றாத வரை வெளி சூழ்நிலைகள் நம்மை எந்த வகையிலும் மாற்றவோ பாதிக்கவோ முடியாது என்பது மிக பெரிய உண்மை.

ஜேம்ஸ் ஆலனின் "சூழ்நிலைகள் மனிதனை உண்டாக்குவது இல்லை, அடையாளம் காட்டுகின்றன" என்ற வாசகம் நமக்குள் தலைகீழ் மாற்றத்தை உண்டு பண்ணக் கூடியது. சூழ்நிலை தன்னை மாற்றி விடுமோ என்று அஞ்சும் நபர்கள் ஆலனின் கருத்தை நம்புவார்கள் எனில் சூழ்நிலை நமது கையில் தான் உள்ளது. எனவே அதற்கு அஞ்ச வேண்டிய தேவை இல்லை என்று தன்னம்பிக்கை கொள்ளலாம்.

தொடர்ந்து சிந்திப்போம்...

பாகம் 8 - நீர் இல்லாத கிணறு பதிவை காணொளி வடிவில் காண 👇





இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண














மனம் எனும் மாய தேவதை! பாகம் 7 - இவன் அசாதாரணன்




பாகம் 7 : இவன் அசாதாரணன்


        னதை சரியாக கையாள்வது எப்படி... சரியாக சிந்திப்பது எப்படி... சிந்திக்கும் முறை என்பது என்ன... மனதை பயன்படுத்தி மனதை வளமாகுவது எப்படி என்பதை எல்லாம் பார்க்க போகிறோம்.

ஆனால் அதற்கு முன் இந்த மனதை பயன்படுத்தினால் அதை கட்டுப்படுத்த ஒருமுகப்படுத்த தெரிந்தால். வேறு விதமாக வாழலாம் என்பது வெறும் கற்பனை கூற்றா அல்லது அப்படி பயன்படுத்தி நம்மை விட சக்திவாய்ந்த மனதிற்கு சொந்தக்காரராக யாரும் நிஜத்தில் வாழ்ந்து இருக்கிறார்களா என்பதை பார்க்க போகிறோம்.

அப்படி நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவு வலிமையான மனதையும் அறிவையும் கொண்ட ஒரு இந்திய நாட்டு அசாதாரணன் பற்றி தான் இப்போது நான் சொல்ல போகிறேன்.

அவர் பெயர் சுவாமி விவேகானந்தர்.

அவர் அமேரிக்கா சென்றார். அங்கு உலகமே வியக்கும் அளவு ஆன்மிகம் பரப்பினார். குழந்தைக்கும் புரியும்படி எளிமையாக ஆன்மிகத்தை விளக்கினார் என்பதை பற்றி எல்லாம் நான் இப்போது பேச போவதில்லை. மாறாக அவர் வாழ்வில் சில விசித்திரங்களை வரலாறு பதிவு செய்து இருக்கிறது. மனதின் ஆற்றலில் நம்மை போல சாமான்யனாக வாழ்ந்தவர் அல்ல அந்த வீர துறவி. அந்த ஆச்சர்யங்களை பற்றி தான் நான் இப்போது சொல்ல போகிறேன்.

நாம் பொதுவாக கேள்விப்பட்ட கதை ஒன்று உள்ளது. அது அவரது புத்தகம் படிக்கும் ஆற்றல் பற்றிய கதை. சாதாரணமாக நூலகத்தில் இருந்து தலையணை சைசில் பல புத்தங்களை வாங்கி செல்வார் அவர். மிக ஆச்சர்யமாக அடுத்த நாளே அவை எல்லா வற்றையும் கொடுத்து விட்டு வேறு வாங்கி செல்வார். 

ஒரு சாமான்ய மனிதன் அந்த புத்தகங்களை படிக்க குறைந்தது மாதக் கணக்கில் ஆகும். இவர் ஓரிரு நாளில் அதை திருப்பி கொடுப்பது எப்படி? பொறுத்து பார்த்த நூலகத்தார் ஒரு நாள் கேட்டே விட்டார். "அய்யா நீங்க என்ன எதுனா சீன் போடரதுக்குனே வாங்கிட்டு போறீங்களா ...இல்ல தெரியாம தான் கேக்கறேன் ஒரே நாளைல இத்தனை புத்தகங்களை எப்படிங்க படிக்க முடியும்"

அவனை பார்த்த விவேக்கானதார். அந்த புத்தகத்தில் தாம் விரும்பிய எந்த பக்கத்தில் இருந்து எந்த சந்தேகம் வேணாலும் கேளு என்றார். அவன் கேள்வி கேட்ட போது... அவன் குறிபிடும் வரிகளை அப்படியே சொன்னதோடு இல்லாமல் அந்த பக்கத்தின் நம்பரையும் சேர்த்து சொன்னார்.

இதில் ஏதோ தில்லுமுல்லு இருக்க வேண்டும் என்று நினைத்த நூலக பொறுப்பாளர் மீண்டும் மீண்டும் சோதித்து பார்க்க அனைத்தையும் அப்படியே இதே போல விடை சொன்னார். கேள்வி கேட்டவர் வாயை பிளந்தார். இது எப்படி சாத்தியம் இது ஒரு சாமான்ய மனிதனுக்கு மிக அந்நியப்பட்டு இருக்கே இந்த ஆற்றல் என வியந்தார். அய்யா இது எப்படி சாத்தியம் என தயவு செய்து சொல்லுங்கள் என்று அவரை வேண்டி கேட்டார். 

அதற்கு அவர் சொன்ன பதில் "இது அப்படி ஒன்னும் ஆச்சர்யமான விஷயம் அல்லவே மனதை சரியாக ஒருமுகப்படுத்த தெரிந்து கொண்டால். அதன் ஆற்றல் முன் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இதை யார் வேணா தாராளமா செய்யலாம்" என்றார்.

அவரது இந்த ஆச்சர்யமான திறமை அவர் வாழ்க்கையில் பல இடங்களில் வெளிப்பட்டு இருப்பதை நாம் அவர் வரலாற்றில் பார்க்க முடிகிறது. ஒரு முறை வெளிநாட்டில் ஒரு நண்பர் வீட்டில் அவரை சந்திக்க சென்று இருந்தார். அப்போது அவர் வர கொஞ்சம் தாமதம் ஆனது. சரி என்று அதுவரை அங்கு வைக்கப்பட்ட ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினார். அடடே இது நண்பர் சிலாகித்து சொல்லும் புத்தகமல்லவா.

சில நிமிடங்கள் கழித்து அவர் நண்பர் வந்த போது விவேகானந்தர் "நண்பரே நீங்கள் சொன்னது போல் அப்படி ஒன்றும் இது விசேஷமாய் இல்லையே" என்றார்.

வந்த நண்பர் அதிர்ந்து போய் "நீங்க எப்போ இதை படித்தீர்கள்" என்று கேட்டார்.

"இதோ இப்போ காத்திருந்த நேரத்தில் தான்" என்றார் விவேக்கானதார்.

அதை கேட்டு நம்ப மறுத்த நண்பரிடம் விவேகானந்தர் சந்தேகம் என்றால் தன்னை பரிசோதித்து பார்த்து கொள்ளும் படி சொன்னார். அவர் அந்த புத்தகத்தில் எதேச்சையாக ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து கேட்க அந்த பக்கதில் என்ன உள்ளது என்று அப்படியே சொன்னதோடு இல்லாமல் "நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்தின் எண் ஐ சொல்லுங்கங்கள் போதும் என்னால் அதில் என்ன இருக்கிறது என சொல்ல முடியும்" என்றார்.

அந்த நண்பருக்கு மயக்கமே வந்து விட்டது. நமக்கு இப்போது திகைப்பாக இருபதை விட அந்த நண்பர் இன்னும் கூடுதலாக திகைத்தார். அவர் திகைத்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.

பொதுவாகவே விவேக்கானதர் சிறு வயதிலேயே மனம் ஒருங்கினைவு தியானம் போன்ற சமாச்சாரங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் சிறு வயதில் விளையாட போனால்... தெரு முனையில் எங்காவது ஒரு ஓரமாய் போய் தியானத்தில் அமர்ந்து கொள்வாராம். அப்படி அமர்ந்து விட்டால் தன்னையும் வெளி புறத்தையும் காலத்தையும் அவர் மறந்து போவாராம். அவர் தாய் அவரை தேடி செல்லும் போது உடல் முழுக்க கொசுகளால் மூட பட்டு ஆனால் அதை குறித்த எந்த பிரகஞ்ஞையும் இல்லாத நரேந்திரனை காண்பாராம்.

பொதுவாக ஆன்மீகத்தில் ஒரு விஷயம் உண்டு அதில் ஆழ்ந்து செல்ல செல்ல மனதின் அளப்பரிய சக்தி பல சித்து வேலைகளை செய்ய வைக்கும். அந்த சித்து வேலைக்கு மயங்கி தனது ஆன்மீக பாதையை கோட்டை விட்டவர்கள் பலர். அவர்கள் கடைசி வரை நம்மை விட சற்று மாறுபட்டு ஏதேனும் சித்து வேலை செய்பவர்களாகவே கடைசி வரை வாழும் படி ஆகிவிடும். எனவே அந்த கவர்ச்சிக்கு இவர் ஆளாகிவிட கூடாது என்பதில் அவர் குரு ராமகிருஷ்ணன் மிக கவனமாக இருந்தார். மூளை செய்யும் சித்து வேளையில் அதிகம் நாட்டம் செலுத்தாதே என்று அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஒரு இலக்கு நோக்கிய பயணதில் வழியில் வரும் மலை... ஆறு.. காடுகளை ரசிக்கலாம் ஆனால் அதில் மயங்கி அங்கேயே இறங்கி கொண்டால். இலக்கை சென்று சேர முடியாது என்று அவருக்கு எடுத்து சொல்லி கொண்டே இருந்தார்.

பொதுவாக சிறந்த ஞானிகள் அதிசயங்கள் அற்புதங்களை செய்ய பிரியபடுவதில்லை (சில விதி விலக்குகள் உண்டு) அதற்கு காரணம் இரண்டு. 

ஒன்று இந்த மந்திர வேலைகளில் நாட்டம் சென்றால் தன்னை முழுதாக அறியும் ஒரு பயணமாகிய ஆன்மீக இலக்கை தவற விட நேரும்.

இரண்டாவது காரணம் மிக நுட்பமானது. அதாவது வாழ்வை ..ஆழமாக புரிய புரிய அவர்களுக்கு அற்புத செயல் சாதா செயல் என்று இரண்டு இல்லை என்று புரிதல் உண்டாகிறது. நாம் பார்க்கும் அனைத்திலும் அற்புதம் அடங்கி உள்ளது. ஒரே ஒரு மணல் துளியில் உள்ள அனைத்து ரகசியத்தையும் இன்று வரை அறிவியல் விளக்க முடியவில்லை.

பிரபஞ்சத்தில் அற்புதம் அல்லாதது என்று எதுமே இல்லை. சாதா செயல் என்று ஒன்று கூட இல்லை. நமக்கு நன்கு புரிவதை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். நமக்கு புரிபடாததை அற்புதம் என்கிறோம் அவ்ளோதான். சில நூறு ஆண்டுகளுக்கு முன் யாராவது பூமியின் அடுத்த முனையில் உள்ளவர்களை இங்கேயே தொடர்பு கொள்ள முடியும் என்று சொன்னால் அதை அற்புதம் என்று தான் சொல்லி இருப்போம் ஆனால் இன்று அது அற்புதம் அல்ல.

எனவே ஞானிகளைப் பொறுத்தவரை இரண்டே பார்வை தான். ஒன்று ...எதுவுமே அற்புதம் அல்ல எல்லாம் இயல்பானது. அல்லது எல்லாமே அற்புதம் தான் எதுவுமே சாமான்யமானது அல்ல. எனவே ராமகிருஷ்ணர் அற்புதம் செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

ஒரு முறை அவர் சீடர்களிடம் உரையாடி கொண்டிருந்த போது. ஒரு சீடர் ஓடி வந்தார். சுவாமி ஒரு அற்புதம்... "நம்ம ஊருக்கு தண்ணீரில் நடக்கும் யோகி ஒருவர் வந்து இருக்கார். ஆற்றில் இங்கே இருந்து அடுத்த கரை நடந்தே செல்கிறார். 30 வருட கடும் யோக பயிற்சியால் இது சாத்தியப்பட்டது என்கிறார்" என்று ஆச்சர்யபட்டு பேசினான்.

ராம கிருஷ்ணர் சிரித்து விட்டு "நம்ம ஓட காரன் ஆற்றில் இங்கே இருந்து அங்கே கொண்டு போய் விட எவ்ளோ வங்கரான்" என்று கேட்டார்.

"3 பைசா சாமி " என்றார் சீடர்.

அதற்கு ராம கிருஷ்ணர்...

"ஒருத்தன் 3 பைசா பெருமானமுள்ள வித்தையை 30 ஆண்டுகளா கத்துகிட்டு வந்திருக்கான் முட்டாள் அந்த நேரத்துக்கு வேற எதுனா உருப்படியா பன்னி இருக்கலாம். இந்த வித்தையால யாருக்கு என்ன பயன்" என்றார்.

மிக சில ஞானிகளே மக்களுக்காக அற்புதம் செய்ய பிரியப்பட்டவர்களாக இருக்கிறார்கள் பெரும்பாலானவர்கள் அப்படி ஒன்று இருப்பதையே வெளிக்காட்டாமல் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

உதாரணமாக புத்தர். அவர் மனம் செய்யும் மந்திரத்தில் யாரும் மயங்க கூடாது என்பதில் மிக குறியாக இருந்தார். ஆனால் அவரை மீறி ஒரு இடத்தில் மக்கள் இடம் மாட்டி கொண்டார்.

புத்தர் வாழ்வில் அவர் வரலாறு பதிவு செய்துள்ள ஒரே இயல்புக்கு மாறான நிகழ்வு இது தான். அதாவது ஆற்றில் வெள்ளம் வந்தபோது பக்கத்து கிராமத்திற்கு போக முடியாமல் அனைவரும் தவித்தனர். புத்தருக்கோ அவர் போதனைக்கு கண்டிப்பாக செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனவே பல பேர் பார்த்து கொண்டு இருக்கும் போதே ஒரு காரியத்தை செய்தார். தீடீரென டிரான்ஸ்மிட் ஆகி போனார். இக்கரையில் மறைந்து அக்கரையில் அவர் தோன்றியதை பல பேர் சாட்சியாக பார்க்க நேர்ந்தது. (டிஸ்கவரியில் வெளியான Ancient Alien நிகழ்ச்சியில் இந்த சம்பவத்தை பற்றி பதிவு செய்திருக்கிறார்கள்)

எனவே மனதின் சக்தி அது தரும் அசாத்திய ஆற்றல் இதில் தனது சீடன் அதிகம் கவனம் செலுத்த கூடாது என்று ராமகிருஷ்ணர் ஒரு காரியம் செய்தார். ஒரு முறை விவேகானந்தரை அவர் நண்பர்களுடன் அழைத்தார். தனது மனம் பற்றிய ஆற்றலில் அதிகம் கர்வம் கொண்டிருந்த விவேகானந்தரிடம் ஒரு சாதுவின் முகவரி கொடுத்து அவரை போய் பாரு. உன் மனதில் இருப்பதை அவர் படிக்க முடியும் என்று சொல்லி அனுபினார். அற்புதங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட விவேகானந்தர் அதிக ஆர்வதோடு நண்பர்களுடன் அவரை பார்க்க சென்றார். இவர்களை வரவேற்ற அந்த பாபா இவர்கள் சென்ற உடன் ஒரு விசித்திர காரியம் செய்தார். ஆளுக்கு ஒரு துண்டு சீட்டு எழுதி இதை இப்ப படிக்க வேணாம் என்று கூறி அவர்கள் பாக்கெட்டில் வைக்க சொன்னார்.

பிறகு ஒரு அரைமணி நேர உரையாடலுக்கு பின் விவேகானந்தர் விஷயத்துக்கு வந்தார். "மனதை படிக்கும் அற்புதங்கள் உங்களிடம் உள்ளது என்று கேள்விப்பட்டு பார்க்க வந்தோம்" என்றார்.

அந்த பாபா அவர்கள் அனைவரையும் மனதில் எதையாவது ஒன்றை நினைத்து கொள்ளச் சொன்னார். நண்பர்கள் தங்களுக்குள் திட்டமிட்டு அவர் கொஞ்ச கூட கணிக்க முடியாதபடி ஒரு நண்பர் தனக்கு தெரிந்த வேறு மொழியில் ஒரு வார்த்தை நினைத்து கொண்டார்கள். விவேகானந்தர் தனக்கு தெரிந்த மிக கடினமான சமஸ்கிருத சுலோகம் ஒன்றை நினைத்து கொண்டார். இப்படி ஆளாளுக்கு ஒன்றை நினைத்து கொண்டு "நாங்க என்ன நினைத்தோம் சொல்லுங்க பார்போம்" என்றார்கள்.

அதற்கு அந்த பாபா நான் அரைமணி நேரம் முன்பு உங்களுக்கு எழுதி கொடுத்த சீட்டை இப்போ எடுத்து பாருங்க என்றார். எடுத்து பார்த்த நண்பர்கள் அதிர்ந்தார்கள். இவர்கள் நினைத்ததைத்தான் அங்கே அவர் அரைமணி நேரம் முன்னவே எழுதி கொடுத்திருந்தார்.

இதை லாஜிக் இல் அடக்கமுடியாமல் விவேகானந்தர் தவித்தார். ஆனால் மனதின் சித்து வேளையில் கர்வமும் ஆர்வமும் கொள்ள கூடாது இந்த விஷயத்தில் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்றும் இது வெறும் ஒரு வித்தை என்றும் குரு நமக்கு உணர்த்த தான் இங்கே அனுப்பி உள்ளார் என்றும் புரிந்து கொண்டார்.

ஒரு முறை தேம்ஸ் நதிக்கரையில் விவேகானந்தர் உலாவிக் கொண்டிருந்த போது அங்கே இளைஞர்கள் சிலர் ஆற்றில் மிதந்து வரும் முட்டை ஓட்டை சுடும் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களை உற்று கவனித்த விவேகானந்தர் அவர்களிடம் துப்பாக்கி கேட்டு வாங்கி அதை சுட்டு பார்த்தார். ஒரு குறி கூட தவறாமல் அனைத்தையும் அடித்ததை பார்த்த இளைஞர்கள், "எத்தனை வருட பயிற்சி அய்யா" என்று கேட்டார்கள்.

"நான் துப்பாக்கி பிடிப்பது இதான் முதல் தடவை" என்றார் விவேகானந்தர்.

அதெப்படி சாத்தியம் என்று திகைத்து போய் கேட்டவர்க்கு "இது ஒன்னும் அற்புதம் அல்ல மனதை ஒருங்கிணைக்க கற்று கொண்டால் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்" என்றார்.

வேகமாக செல்லும் ஒரு ரயிலில் இருந்து கொண்டு வெளியில் உள்ள ஒரு பெயர் பலகையை ஒரு அப்பாவும் பையனும் படிக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள். நீண்ட பெயர்களை பைய்யன் படிக்க முடியாமல் கஷ்டப்படுவான். ஆனால் அந்த ஒரு வினாடி பார்வையில் கடந்து செல்லும் பெயர்களை அப்பாவின் மூளை உள்வாங்கி இருக்கும் அல்லவா. அப்படி அந்த திறன் நம்மை விட மிக அதிக அளவில் கொண்டிருந்தவர் விவேக்கானதார். எந்தளவு என்றால் ஒரு புத்தகத்தின் பக்கத்தை சும்மா பார்த்த மட்டில் அதில் உள்ள அனைத்து தகவலையும் அவர் கண்கள் வாயிலாக மூளை உள்வாங்கும் அளவு.

விவேகானந்தரின் இந்த திறமை எதோ ஒரு அற்புதம் அது தெய்வ சக்தியால் தான் முடியும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் நான் இக்காலத்து ஆட்கள் ஒரு மூணு பேரை அறிமுகம் செய்கிறேன்.

1) "Anne Jones" ஹரி பாட்டரின் Deathly Hallows புத்தகத்தை வெறும் 47 நிமிடத்தில் படித்தவர். (சாதாரண ஆட்களுக்கு மாத கணக்கில் ஆகும்)

2) "Stephen Wiltshire" இவர் ஒரு ஓவியர். சிக்கலான தெருக்கள்.. ரயில்வே ஸ்டேஷன்கள்...அல்லது இயற்கை காட்சியை ஒரு முறை பார்ப்பார் அவளோதான் அதன் அனைத்து தகவல்களும் மூளையால் படம் பிடிக்கப்பட்டு அதை அப்படியே படம் வரைந்து விடுவார்.

3) "Kim Peek" அசாதாரண முறையில் புத்தகம் படிபவர். இவரது இடது கண் புத்தகத்தின் இடது பக்கத்தையும். வலது கண் வலது பக்கத்தையும் தனி தனியாக உள்வாங்கி மூளை அதை ஒரே நேரத்தில் உணர கூடியது.

இவர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. படித்து பாருங்கள்.

இப்போது விவேகானந்தரின் புத்தகம் படிக்கும் தன்மை பற்றி நமக்கு ஓரளவு புரிகிறதல்லவா... சரி அந்த வெளிநாட்டு நண்பர் விவேக்கானதர் அந்த புத்தகம் படித்ததை பார்த்து திகைத்ததற்கு வேறு ஒரு காரணம் இருந்தது என்று சொல்லி நிறுத்தினேன் அல்லவா. அது என்ன என்று இப்போது சொல்கிறேன். அந்த புத்தகம் விவேகானந்தர் சற்றும் அறியாத ஜெர்மன் மொழி புத்தகம்.

"இதை எப்படி நீங்கள் படித்தீர்கள் உங்களுக்கு தான் ஜெர்மன் மொழி தெரியாதே" என்று கேட்டதற்கு "இந்த புத்தகம் வாயிலாக நான் இதை எழுதியவனின் மனதை படித்து கொண்டிருந்தேன்" என்றார் விவேகானந்தர்.

நண்பர் மேலும் திகைத்து "அது எப்படி முடியும்" என்று கேட்டதற்கு...

"அது ஒன்னும் பெரிய அற்புதம் இல்ல.. மனதை ஒருங்கிணைக்க முடிந்தால் இதை யார் வேண்டுமானாலும்... ஏன் நீங்களே கூட பண்ணலாம்" என்றார்.

சரி விவேக்கானதர் அளவு எல்லாம் நாம் போக வேண்டாம். மனதை பயன்படுத்தி நமது அன்றாட வாழ்வை மாற்றி அற்புதம் செய்ய வைக்க முடியுமா... அதற்கென ஏதும் சிந்திக்கும் வழிமுறைகள் உள்ளனவா?

ஆம் உண்டு நாமே செய்ய முடிய கூடிய அற்புதம் அதை பற்றி அடுத்த பாகத்தில் தொடர்ந்து சிந்திப்போம்...






இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண













மனம் எனும் மாய தேவதை! பாகம் 6 - "நான்" அற்ற நொடிகள்




பாகம் 6 : "நான்" அற்ற நொடிகள்

"1729"


    ந்த நம்பரை பற்றி தெரியுமா? கணித மாணவர்களுக்கு நன்கு தெரிந்த எண் இது. இதற்கு பெயர் ராமானுஜம் - ஹார்ட்லி எண். ஏன் அந்த பெயர்?

ஒரு முறை கணித மேதை ராமனுஜம் உடல்நிலை சரி இல்லாதபோது அவரை பார்க்க அவர் நண்பர் ஹார்ட்லி என்பவர் சென்று இருந்தார். (அவரும் ஒரு கணித மேதை தான்) அப்போது, தான் வந்த டாக்சியின் நம்பரே தனக்கு பிடிக்கவில்லை என்றும் ராசியே இல்லை என்றும் ரொம்ப 'டல்' நம்பர் அது என்றும் குறிபிட்டார்.

அதை கேட்ட ராமானுஜம் உடனே மறுத்து இது ஒரு விசேஷமான நம்பர் என்றார்.

"இரண்டு கியூப் நம்பர்களை இருவேறு வழிமுறையில் கூட்டினால் ஒரே விடை வர கூடிய எண்களில் மிக சிறிய எண் இது தான்" என்றார்.

அவர் சொன்ன அந்த இரண்டு வழிமுறை :

1729 = 1³ + 12³ மற்றும் 9³ + 10³ இது தான்.

இப்படி இரண்டு வழிமுறைகளில் கியூப் எண்களை ஒரே விடை வர கூடிய வகையில் கூட்டும் படி நிறைய எண்கள் உண்டு. ஆனால் அதில் மிக சிறியது இந்த 1729 தான்.

ராமானுஜன் இதை சொன்னபோது அவர் என்ன சொன்னார் எதை சொன்னார் என்பதை ஆராய்ந்து கண்டு பிடிக்க ஹார்ட்லி எனும் கணித மேதைக்கே சில வாரம் பிடித்தது என்கிறார்கள். இப்படிப்பட்ட ஓரு விஷயத்தை அந்த நம்பரை பார்த்த மட்டில் ராமனுஜனால் சொல்ல முடிந்தது எப்படி? இதை தர்க்க ரீதியாக யோசித்து காரண காரிய அறிவை பயன்படுத்தி சொல்ல சாத்தியமே இல்லை.

ஐன்ஸ்டைன் சாதாரண மனித மூளைக்கு அப்பாற்பட்டு பல உண்மைகளை வீட்டு அறைகளில் உட்கார்ந்து கொண்டே சொன்னார் என்று சொன்னேனல்லவா அவரைப் போல இன்னோரு வி்சித்திர மனிதன் தான் இந்த ராமானுஜன். காரணம் இவர் கண்டு சொன்ன கணித உண்மைகள் சாதாரன மனித மூளையின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. ஐன்ஸ்டைனின் சார்பியலை இன்று வரை ஆய்வு செய்து கொண்டிருப்பதை போலத் தான் இவர் விட்டு விட்டு போன பல கணக்குகளை இன்னும் அறிஞர்கள் எடுத்து வைத்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். பல விஷயங்கள் இன்றளவும் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. 

போன பாகத்தில் நான் சொன்ன சில எடுத்துக் காட்டுகள் மற்றும் இந்த ராமானுஜன் இவர்களை எல்லாம் பார்த்து 'அப்போ எதையும் யோசிக்காம இருந்தா பல உண்மை அறியலாம் போல' என நினைத்தீர்களேயானால் அதை விட முட்டாள்தனம் வேறு இல்லை.

அப்படியென்றால் அதிகம் சிந்திக்காதபோது தான் அதிக உண்மைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்ற கருத்துப்படி அதிகம் போதை வஸ்து பயன்படுத்துபவன் அதிக பிரபஞ்ச அறிவை அடைவதாக அல்லவா இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நடப்பது இல்லையே.

காரணம் மனம் சஞ்சலம் அற்ற கீற்றாக.. காற்று வீசாத இடத்தில் ஏற்றப்பட்ட அகல் விளக்கு சுடர் போல அசைவற்று ஒருங்கிணைந்து இருப்பதற்கும்..... ஒருவன் யோசிக்கவே முயற்சிக்காமல் சோம்பேறியாக இருப்பது அல்லது யோசிக்கவே முடியாத ஒரு நிலையில் மனம் மயங்கிய நிலையில் அல்லது போதை நிலையில் இருப்பதற்கும் வித்யாசம் உண்டு.

ஒரு விதை பார்க்க கல் போல தான் இருக்கும் ஆனால் கல்லும் விதையும் ஒன்று அல்ல. ஒரு விதை தனக்குள் உயிரையும் ஏகப்பட்ட சாத்தியங்களையும் மேலும் லட்ச கணக்கான மரங்களையும் சுமந்து கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பு. எனவே நாம் பார்த்த சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் பிரபஞ்ச அறிவு என்ற எல்லாம் அறிந்த ஒரு மாபெரும் தகவல் பெட்டகம் உள்ளது அதில் பிரபஞ்சத்தின் அணைத்து பதிவுகளும் உள்ளன. நாம் குறிப்பிட்ட முறையில் முயன்றால் அந்த பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடியும். 

பிரபஞ்ச மகா அறிவு ஒரு பண்பலை அலைவரிசை போல நம்மை சூழ்ந்து இருக்கிறது என்றால் சரியாக பயன் படுத்த தெரிந்தால் நமது மூளை தான் ரேடியோ ரிசிவர்.

அந்த ரேடியோவை டியூன் பண்ண தெரிந்தவர்ளை தான் நாம் ஞானிகள் அல்லது விஞ்ஞானிகள் என்கிறோம். இவர்களை போன்றவர்களை பார்க்கும் போது அவர்களை சுற்றி இருந்தவர்கள் ஆச்சரயத்தில் மூழ்கி போய் 'இதை எல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறீங்க' என்று கேட்டிருக்க மாட்டார்களா?

இந்த கேள்விக்கு ஐஸ்டைன் சொன்ன பதில்

"நான் மற்றவர்களை விட எந்த விதத்திலும் அதிகம் புத்திசாலியாக இருப்பதாய் நினைக்க வில்லை ஆனால் மற்றவர்களை விட நான் அதிகம் ஆர்வம் கொண்டு இருக்கின்றேன் அது தான் ஒரே வித்தியாசம்" என்றார். 

ராமனுஜரிடம் நீங்கள் எப்படி இந்த விடைகளை கண்டு பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஒரு விசித்திரமான பதிலை சொன்னார். 

"நான் கண்ணை மூடினால் நான் வணங்கும் அம்மன் கை தோன்றுகிறது. அது விடையை எழுதுகிறது அதை தான் நான் பார்த்து சொல்கிறேன்" என்றார்.

ராமானுஜன் அதிகம் ஆழமாக யோசித்து போட்ட கணக்கை விட ஓய்வாக இருக்கும்போது போட்ட கணக்குகள் தான் அதிகம்.

இப்படி பிரபஞ்சத்துக்கும் மனித மனதிற்கும் ஒரு தொடர்பு நூல் கயிறு இருப்பதை வரலாறு முழுதும் உள்ள அறிஞர்கள் வாழ்வில் பார்க்கலாம்.

நீங்கள் 'வான்கோ' என்ற ஓவியரை பற்றி கேள்வி பட்டிருக்கலாம். அவரது ஓவியங்களில் மரங்கள் மிக உயரமாக வானத்தை முட்டுவதை போல இருக்கும். குறிப்பாக நட்சத்திரங்களை வரையும் போது அவர் வானில் சுருள் சுருள் வடிவில் மட்டுமே வரைந்தார்.

"நட்சத்திரங்கள் என்ன சுருள் வடிவிலா இருக்கிறது? வானத்தை பாருங்கள் அது சில்லறையை இறைத்தத்து போல அல்லவா இருக்கிறது பிறகு ஏன் எப்போ பார்த்தாலும் இப்படியே வரைகிறீர்கள்?" என்று பல பேர் அவரை கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை என் மனதிற்கு நட்சத்திரதிரத்திற்கு இந்த வடிவம் தான் சரி என்று தோன்றுகிறது" என்றார்.

பிற்காலத்தில் கேலக்சியின் வடிவம் சுருள் தான் என்பதை நாம் கண்டு பிடித்தோம். ஆனால் அந்த உண்மையை அந்த ஓவியரின் மூளை எப்படி உள்வாங்கியது?

அவர் தனது கடைசி காலத்தில் நமது சூரியனை வரைந்தார். அதற்காக தினம் சூரியனை மணிக்கணக்கில் உற்று பார்ப்பார். அவரது நண்பர் அவரிடம் "இதை ஏன் தினம் உற்று பார்த்துகிட்டு இருக்கீங்க ஒரு நாள் பார்த்தது தானே அடுத்த நாளும் இருக்க போகுது" என்று கேட்டதற்கு அவர்..

"அடுத்த நாளா.... நீங்க வேற ஒரு கணத்தில் இருக்கும் இது அடுத்த கணத்திலேயே இருப்பது இல்லை தெரியுமா... இது கணத்திற்கு கணம் மாறி கொண்டே இருக்கிறது இதன் தன்மை என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. அதனால் தான் தினம் தினம் இதை உற்று பார்த்து கொண்டு இருக்கின்றேன்" என்றார்.

பாதி படம் வரைந்த போதே சூரியனை தொடர்ந்து பார்த்து வந்ததால் அவர் பார்வை பறி போனது. மிகுந்த ஆச்சர்ய பட தக்க வகையில் மீதி படத்தை பார்வை இல்லாமலே வரைந்து முடித்தார் வான்கோ. நிச்சயமாக சூரியனை நமது மூளை உள்வாங்கியது போல அவர் மூளை உள்வாங்கி இருக்க வில்லை. அது வேற தளத்தில் சூரியனை உள்வாங்கி கொண்டிருந்தது. அதனால் தான் மீதி ஓவியத்தை வரைய அவருக்கு கண்களின் உதவி தேவை பட்டிருக்கவில்லை.

"கண்ணை வித்து ஓவியம் வாங்கின கதையா" என்று ஒரு பழ மொழியே உண்டு. இவர் வாங்க வில்லை... வரைந்தே இருக்கிறார். 

சரி ...'மனித மனதை பிரபஞ்ச அறிவுடன் இணைக்க இவர்கள் என்ன செய்தார்கள்? அதற்கு ஏதும் வழிமுறை உண்டா? நாம் முயன்றால் அதை செய்ய முடியுமா?'

இந்நேரத்திற்கு இந்த கேள்வி தான் உங்களுக்குள் நிச்சயமாக ஓட தொடங்கி இருக்கும் அல்லவா..?

முடியும் என்கிறார் ஜேம்ஸ் ஆலன்.

இது போன்ற கண்டுபிடிப்புகள் மனித மனதில் உதித்த தருணங்களை எல்லாம் உற்று கவனித்த அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார்.

அதாவது ஒரு விஷயத்தை பற்றி மிக மிக ஆழமாக யோசித்து விட்டு பிறகு அதை பற்றி யோசிக்காமல் விட்டு விடுகிறபோது இந்த உண்மைகள் தோன்றுகின்றன என்றார் அவர்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நீங்கள் ஏதாவது பெயர் நினைவு வராமல் தவித்து இருக்கிறீர்களா? அப்போது மிக கடினப்பட்டு முயன்ற போதும் நினைவுக்கு அந்த பெயர் வராமல் போகும். பிறகு சீ போ என்று விட்டு விட்டு வேறு வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அந்த பெயர் திடீர் என்று நியாபகத்திற்கு வரும்.

அது தற்செயலாக வந்தது அல்ல. முன்பு நீங்க கொடுத்த அழுத்தம் இவ்ளோ நேரம் உள்ளுக்குள்ளே வேலை செய்து கொண்டிருந்துள்ளது.

எனவே நாம் எந்த வேலை செய்தாலும் எந்த துறையாக இருந்தாலும் அது சம்பந்தமான உண்மைகளை பிரபஞ்சத்தில் இருந்து ஈர்க்க ஆலன் நமக்கு ஒரு வழிமுறையை சொல்லி தருகிறார்.

நீங்கள் எந்த பிரச்சனையை தீர்க்க நினைக்கிறீர்களோ அதை பற்றி மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். தொடர்ந்து மிக அழுத்தமாக அந்த சிந்தனை இருக்க வேண்டும். இதற்கு மேல் அதை பற்றி சிந்திக்கவே முடியாது என்கிற எல்லை வரை நீங்கள் அதை பற்றி பல கோணங்களில் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். உங்கள் முயற்சியின் எல்லைக்கு அதை கொண்டு போக வேண்டும்.

பிறகு... திடீரென்று அதை பற்றி மறந்து விட வேண்டும். ஆம் அதை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் வேறு வேலை பார்க்க வேண்டும். திடீரென்று அந்த உண்மை உங்களுக்குள் உதிக்கும் என்கிறார் ஆலன். 

எனவே நாம் பார்த்த விஞானிகள் உண்மை அறிய முயலாமல் வெறும் ஓய்வில் இருந்தவர்கள் அல்ல. அதை அறியும் ஆவலை அதன் எல்லைவரை கொண்டவர்கள். அந்த உண்மை மேல் தீரா தாகம் மற்றும் முடிவில்லா காதல் கொண்டவர்கள்.

இப்போது இந்த விஷயத்தை வேறு வகையில் சொல்கிறேன். அதாவது எந்த ஒரு மனிதனுக்கும் "நான்" என்கிற உணர்வு நிலை இருக்கும். அந்த நான் என்கிற உணர்வு தான் நம்மை எப்போதும் இயக்கி கொண்டு இருக்கும் ஒரு உள் உந்துதல். பல ராஜ்யங்களை சண்டையிட்டு வெல்வது முதல் பக்கத்து வீட்டு காரனை விட நாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பொறாமை வரை உள்ளீடாக இருப்பது அந்த நான் தான். அந்த நான் ஐ தவறானது என்றும் சொல்லி விட முடியாது இந்த உலகில் நாம் நம்மை நிலை நிறுத்தி கொள்ள.. நாம் இயங்க அந்த "நான்" மிக தேவையாக உள்ளது.

மனிதன் மிக மிக சில கணங்களில் தான் அந்த 'நான்' அற்ற நிலையிலும் இருக்கின்றான்.

அந்த சில கணங்களில் மட்டும் தான் அந்த பிரபஞ்ச உண்மைகள் இவன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்த நேரத்தில் மனிதன் ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறான்.

நமது நாட்டின் வேதங்களை இயற்றிவர்கள் யார் என்று பெயர்கள் உள்ளது. அதை கவனித்து பார்த்தால் அதை இயற்றியவர்கள் என்று குறிப்பிடாமல் அதை 'கண்டவர்கள்' என்று பொருள் படும் படி பதிவு செய்து இருக்கிறார்கள். காரணம் அந்த வேத அறிவு தன்னை ஒரு கருவியாக பயன்படுத்தி உண்மைகளை தன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டது என்றும் அந்த அறிவிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர்கள் நம்பினார்கள்.

நீங்கள் கோவில்களில் எல்லாம் சென்றால் அங்கே டியூப் லைட் வாங்கி போட்டவர் பெயர் 'உபயம்' என்று பெரிய கொட்டை எழுத்தில் இருப்பதையும் ஆனால் அதே கோவிலில் அசாத்தியமான சிற்பங்களை செதுக்கிய கலைஞன் தனது பெயரை எங்கேயும் போட்டு கொள்ளாததையும் பார்க்கலாம்.

உலகின் மிக பெரிய கண்டுபிடிப்புகள் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டவை தான் என்பதன் ரகசியம் இது தான்.

ஆர்கிமிடிஸ் நிச்சயம் அந்த ஊரில் ஒரு நல்ல மதிப்பு மிக்க ஆளாக தான் இருந்து இருப்பார். அவர் தெருவில் துணி இல்லாமல் தண்ணீர் தொட்டியில் இருந்து எழுந்து ஓடினார் என்பது இயல்பான நிகழ்வு அல்ல. சாதாரண நிலையில் அவர் நிச்சயம் அந்த காரியத்தை செய்து இருக்க வாய்ப்பில்லை. அந்த கணத்தில் அவர் 'தான் ஆர்கிமிடிஸ்' என்ற உணர்வு நிலையில் இல்லை என்பது தான் உண்மை.

மேரி கியூரி ஆழ்ந்த தூக்கத்தில் கணக்கை பூர்த்தி செய்ததும். ஐன்ஸ்டைன் வீட்டு அறையில் உட்கார்ந்து கொண்டு பிரபஞ்ச அறிவியல்களை புட்டு புட்டு வைத்ததும் ராமானுஜன் சாதாரண மனித அறிவிற்கு அப்பார்பட்ட கணக்குகளை உலகிற்கு வழங்கியதும் இப்படித்தான்.

மனிதனை அந்த மாதிரி சிந்தனை அற்ற... 'தான்' அற்ற நிலையில் வைக்கும் செயலுக்கு பெயர் தான் தியானம்.

மேல் சொன்ன விஷயங்களை பற்றி அறிவியல் மிக குறைவாகத்தான் சிந்தித்து இருக்கிறது. இதை அதிகம் பேசியது ஆன்மிகம் தான்.

ஐஸ்டைனின் கோட்பாடுகளில் அக்கறை கொண்ட அறிவியல் அவை வெளி வந்த மூலம் என்ன என்பதை ஆராய்வதில் அதிக அக்கறை எடுத்து கொள்ளவில்லை.

ஆனால் உலகில் உள்ள எல்லா ஆன்மீக கோட்பாடுகளும் இந்த 'நான்' என்பது அழிந்தால் தனக்குள் வேறு ஏதோ ஒன்று பாய்ந்தோடும் என்ற கருத்தை வலியுறுத்துவதை பார்க்கலாம்.

"குழந்தை போல இருப்பவர்களுக்கு தான் பரலோக ராஜ்ஜியம் சாத்தியம்" என்கிறார் இயேசு. அவர் சொன்ன 'குழந்தை போல' என்பதற்கு பொருள் 'நான்' என்கிற ஈகோ அழிந்த நிலை தான். குழந்தைகளுக்கு தான் ஈகோ இருப்பதில்லை.

தன்னை உணர்தல் என்பதை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்பவர்களிடம் "நான் யார் என்பதை உற்று கவனி" என்ற ஒரு வரி உபதேசத்தை வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருந்தார் ரமணர்.

அந்த நான் அற்ற நிலையில் தான் ஞானம் வருவதாக பெரியவர்கள் சொல்கிறார்கள். ஞானம் வருகிறதோ இல்லையோ ஆனால் உலகின் மிக பெரிய அறிவியல் கருத்துக்கள் பிறந்தது விஞ்ஞானிகள் தாங்கள் "நான்" அற்ற நிலையில் இருந்த போது தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

உலகை புரட்டும் மிக பெரிய விஞ்ஞானத்தை விட்டு விட்டு இப்போது நமது கட்டுரை வாழ்வை புரட்டும் அன்றாட வாழ்க்கை பக்கம் திரும்புகிறது... அதாவது முதல் பாகத்தில் நான் சொன்ன மூளை மற்றும் மனம். இதில் மூளை பற்றிய அலசலை முடித்துவிட்டு இப்போது கொஞ்சம் மனம் பற்றி பேசப்போகிறது.

நாம் நமது வாழ்க்கையை மிக சிறப்பாக வாழ விரும்புகிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கிறோம். புகழ் அடைய நினைக்கின்றனர். சாதிக்க நினைக்கின்றோம். ஆனால் இது எல்லாவற்றிற்கும் நமது மூளையின் அற்புத ஆற்றலை மிக சரியாக தான் நாம் பயன் படுத்துகிறோமா?

பிரபஞ்ச உண்மைகளை மூளை உட்கிரகிக்க சிந்தனை அற்ற ...'நான்' அற்ற நிலை உதவியது போல இதற்க்கு உதவ வழி முறை ஏதும் உள்ளதா? அப்படி பயன்படுத்தி வாழ்கையை செழுமையாக வாழ்ந்தவர்கள் இருக்கிறார்களா?

அடுத்த வரும் பாகங்களில் தொடர்ந்து சிந்திப்போம்...





இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண














மனம் எனும் மாய தேவதை! பாகம் 5 - தர்க்க அறிவும் பிரபஞ்ச அறிவும்

 




பாகம் 5 : தர்க்க அறிவும் பிரபஞ்ச அறிவும்


    ல்பர்ட் ஐன்ஸ்டைன் அவருடைய கோட்பாடுகள் மிக பெரிய அதிசயங்களை ஆச்சர்யங்களை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் ஐன்ஸ்டைன் பற்றி நாம் இன்று வரை கண்டு பிடிக்காத மிக பெரிய ஆச்சர்யம் ஒன்று உண்டு. அது அவர் அந்த உண்மைகளை எல்லாம் எப்படி கண்டுபிடித்தார் என்பது.

அதாவது 'வெளியை வளைக்க... சுருட்ட முடியும்...' 'காலத்தில் பயணிக்க முடியும். காலத்தை ஆளுக்கு தகுந்தாற்போல மாற்ற முடியும்....,' 'பொருளும் ஆற்றலும் ஒண்ணுதான்...' 'வெளியும் காலமும் ஒன்னு தான்.....'

இது போன்ற உண்மைகள் சாதாரண காரண காரிய தர்க்க அறிவால் ஆழ்ந்து சிந்தித்து கண்டு பிடிக்கப்பட்டதல்ல. அப்படி கண்டு பிடிக்க சாத்தியமும் அல்ல. ஐன்ஸ்டைன் கண்டு சொன்ன உண்மைகள் இருக்கே அது பல ஆய்வுகளை மேற்கொண்டு பல கடினமான ஆராய்ச்சிக்கு பின் குறைந்தது இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்கு பின் கண்டு பிடிதிருக்கப்பட வேண்டிய உண்மைகள்.

ஆனால் அதை அவர் வீட்டில் தனி அறையில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் பென்சிலை வைத்து கொண்டு முந்தைய நூற்றாண்டிலேயே கண்டு பிடித்தார். இதை உங்களால் எந்த லாஜிக்கில் அடக்க முடியும் சொல்லுங்கள்?

ஐன்ஸ்டைன் தனது வாழ்நாளில் எந்த ஆய்வு கூடத்திலும் சென்று ஆய்வு செய்து உண்மைகள் சொன்னவர் அல்ல. மாறாக பிரபஞ்ச மகா உண்மைகளை முதலில் சொல்லிவிட்டு அப்புறமாக அதை ஆய்வு செய்து சரி பார்த்து கொண்டவர்.

உதாரணமாக சூரியனுக்கு பின்னால் உள்ள நட்சத்திர மண்டல ஒளி சூரியனின் ஈர்ப்பால் வளைந்து நதி நடுவே உள்ள பாறையை சுற்றி வளைத்து வரும் நீர் போல நம்மை வந்து சேரும் என்ற ஆய்வை அவர் செய்து பார்த்ததற்கு பல ஆண்டுகள் முன்பே அவர் அந்த உண்மையை அறிவித்து இருந்தார்.

இது எப்படி சாத்தியம்?

ஒரு மனிதன் ஆய்வு செய்து உண்மையை கண்டு பிடிப்பது லாஜிக்காக இருக்கிறது. ஆனால் ஒருவன் உண்மையை முதலில் சொல்லிவிட்டு பிறகு ஆய்வு செய்து சரி பார்ப்பது என்ன லாஜிக்?

ஐன்ஸ்டைன் இதை வாழ்நாள் முழுதும் செய்தார். அவருக்கு பின் இன்றைய தேதி வரை அவரது கோட்பாடுகள் பல நூறு முறை பல பேரால் சோதிக்கப்பட்டு உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதை எல்லாம் ஒருவர் வீட்டு அறைக்குள் உட்கார்ந்து சொல்ல முடிந்தது எப்படி?

ஒரு மிக பெரிய உண்மை....

பிரபஞ்ச மகா அறிவை உட்கிரகிக்கும் பேராற்றல் மனித மூளைக்கு உண்டு. இது ஐன்ஸ்டைனுக்கு மட்டுமே நடந்த அனுபவமல்ல. ரொம்ப ஆச்சர்யமான ஒரு உண்மை என்ன வென்றால் உலகில் முக்கால் வாசி கண்டுபிடிப்புகள் இப்படி யோசித்து அறியும் அறிவை தாண்டி வேறு விதத்தில் கண்டு பிடிக்கப்பட்டது தான்.

அம்மையார் மேரி கியூரி அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் பாருங்கள்....

ஒரு நாள் இரவு மேரி கியூரி நீண்ட நேரம் காகிதங்களை புரட்டியபடி முழித்து இருந்தார். ஒரு விடை தெரியாத கணக்கு ஒன்று நீண்ட நேரமாய் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. எவ்வளவோ முயன்றும் அந்த ஆய்விற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அயற்சியில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார். காலை எழுந்தபோது காத்திருந்தது அதிர்ச்சி. அவரது அணைத்து கணக்குகளும் விடை தீர்க்கப்பட்டிருந்தன.

யார் இதை செய்தது என்று அதிர்ச்சியோடு ஜன்னல்களை சரி பார்த்தார் எல்லாமே பூட்டப்பட்டிருந்தன. அப்படியே யாரும் உள்ளே வந்தாலும் மேரி கியுரியாலேயே தீர்க்க முடியாத அந்த பிரச்னையை தீர்த்து இருக்க வாய்ப்பில்லை. பிறகு நிதானமாக அந்த பேப்பர்களை ஆராய்ந்து பார்த்த கியூரி ஒரு உண்மையை கண்டு பிடித்தார்.

அதாவது அந்த கையெழுத்து... அது வேறு யாருமல்ல கியுரியின் கையெழுத்து தான். பிறகு தான் மெல்ல மெல்ல அவருக்கு நியாபகத்தில் வந்திருக்கிறது தான் தூங்கிய பின் தூக்கத்தில் எழுந்தது... அரை குறை தூக்கத்திலேயே நடந்து சென்று அந்த கணக்கை எழுதியது எல்லாம் படிப்படியாக நினைவுக்கு வந்தது. தான் மிகுந்த ஆற்றலோடு தர்க்க பூர்வமாக யோசித்தபோது கிடைக்காத விடை அரைகுறை தூக்கத்தில் எப்படி கிடைக்க முடியும் என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார் கியூரி.

ஃபாசில்கள் எனப்படும் படிவங்களை ஆராயும் ஒரு ஆய்வாளர் அவர். டைனோசர்களுக்கும் முந்திய கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு மீனின் படிவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார் அவர். பிரச்சனை என்ன வென்றால் அந்த படிவம் அவருக்கு முழுதாக கிடைக்கவில்லை பல துண்டுகளாக கிடைத்தது. அதில் தலை எது வால் எது வயிறு எது என்று புரியவில்லை. புதிர் எழுத்து போல மாற்றி மாற்றி பொறுத்தி பார்த்தார் ம்ஹூம் வடிவம் பொறுந்தி வரவில்லை. சரி என்று விட்டு விட்டு தூங்கி விட்டார்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு அதிசயம் அவர் கனவில் அந்த மீன் முழு உடலமைபோடு வந்தது. உடனே எழுந்தவர் ஒரு காகிதத்தில் தான் கனவில் பார்த்த உருவத்தை வரைந்து கொண்டார். பிறகு சாவகாசமாக அடுத்த முறை அந்த படத்தில் உள்ளது போல அந்த மீன் படிவத்தை பொறுத்தி பார்த்தார். மீன் பொறுந்தி விட்டது .ஆஹா மகிழ்ச்சி என மகிழ்ந்தார்.

ஆனால் அதன் பின் ஒரு விஷயம் அவரை உறுத்தியது மிகவும் குழப்பியது. அதாவது அந்த மீன் தனது கனவில் வருவதற்கு என்ன லாஜிக் இருக்கிறது. தான் இது வரை பத்திரிக்கையிலோ அல்லது வேறு எங்காவதோ அந்த உருவத்தை பார்த்திருந்தால் அது மனதில் பதிந்து கனவில் வர வாய்பிருக்குறது அப்படி தானே? ஆனால் அந்த மீன் வாழ்ந்ததோ டைனோசருக்கும் முன்பே. அதன் வடிவத்தை கண்டுபிடித்த முதல் மனிதனே நாம் தான் அப்படி இருக்கும்போது இது எனது கனவில் வந்தது எப்படி என்று குழம்பி போனார்.

பிறகு ஒரு கருத்தை சொன்னார். அதாவது "பிரபஞ்ச அறிவு என்று ஒன்று இருக்கிறது அதற்கு எல்லாமே தெரியும். மனித மூளையால் அந்த பிரபஞ்ச அறிவை தொடர்பு கொள்ள முடியும்."

நீங்கள் தையல் மிஷினை கண்டு பிடித்தவர் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அதை கண்டுபிடிக்கும் போது ஒரு சிக்கல் இருந்தது. துணிக்கு உள்ளே வெளியே போயிட்டு வரும்படி எப்படி வடிவமைப்பது என்று புரியவில்லை. நீண்ட யோசணைக்கு பின் தூங்க போனார். கனவில் ஒரு காட்சி அவரை காட்டு வாசிகள் கடத்தி சென்றார்கள். அவர்கள் வைத்திருந்த ஈட்டியில் மிக வித்தியாசமாக முனையில் ஓட்டை இருந்தது. பொறி தட்டியது போல எழுந்தவர் ஊசியில் முனையில் ஓட்டையை வைத்து மிஷினை சோதித்து பார்த்தார்... வெற்றி.

"யூரேக்கா" என்று தண்ணி தொட்டியில் இருந்து உடலில் துணி இல்லாமல் கத்தி கொண்டு ஓடிய ஆர்கிமிடிஸ் பற்றி நீங்கள் படித்து இருப்பீர்கள். மன்னன் தனது கிரீடத்தில் கலந்துள்ள தங்க கலப்பை கிரீடத்தை சிதைக்காமல் கண்டுபிடிக்கச் சொல்லி இருந்தார். அதை குறித்து இரவு பகலாக மண்டையை போட்டு உடைத்தபோதெல்லாம் விடையை ஆர்கிமிடிஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக எந்த சிந்தனையும் இல்லாமல் ஓய்வாக தண்ணீர் தொட்டியில் மூழ்கியபோது தனது எடைக்கு ஏற்றார் போல தண்ணீர் தொட்டியை விட்டு வெளியே வழிந்து ஊற்றியதை பார்த்தபோது தான் திடீர் என்று அவர் உண்மையை கண்டு பிடித்தார்.

எக்ஸ்ரே வை கண்டு பிடித்த ராண்டஜன் வேறு எதையோ கண்டுபிடிக்கப் போய் தற்செயலாக எக்ஸ்ரே வை கண்டு பிடித்தார் என்று உங்களுக்கு தெரியுமா?

ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டு பிடித்தபோது எந்த அறிவியல் சிந்தனையும் இல்லாமல் கீழே விழும் ஆப்பிளை மரத்தடியில் உட்கார்ந்து ஆசாமி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார் என்பதை நினைத்து பாருங்கள்.

மிக தீவிரமாக தர்க்க அறிவோடு காரண காரியத்தை ஆராய்ந்து கண்டு பிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை விட மனிதன் சிந்தனை ஏதும் இல்லாத நேரத்தில் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் தான் அதிகம். இது நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

பிரபஞ்ச அறிவு என்ற எல்லாம் தெரிந்த அறிவு ஒன்று இருக்கிறது. மனித மூளையால் அதை தொடர்பு கொள்ள முடியும். குறிப்பிட்ட வகை சிந்தனை போக்கை கையாள்வது மூலம் அந்த பிரமாண்ட அறிவு பெட்டகத்தில் இருந்து உண்மைகளை நம்மால் இழுத்து வர முடியும்.

அது என்ன தொழில் நுட்பம்? என்ன மாதிரி செயல்பாடுகள் மூலமாக இந்த மனித அறிவை அந்த பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள செய்ய முடியும்?






இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண